siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 25 ஜூலை, 2012

பூவின் மகரந்த துகள் கேன்சரை தடுக்கும் ஆய்வில் தகவல்


 
தேன் சேகரிக்கும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்த துகள்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம் அளிக்கும் என்கின்றனர் இங்கிலாந்து டாக்டர்கள். தேனீக்கள் பல பூக்களிலும் அமர்ந்து தேன் சேகரிக்கின்றன. அப்போது, அவற்றின் கால்களில் பூவின் மகரந்த தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன.

அடுத்த பூவில் உட்காரும்போது, தூள்கள் அந்த மலரில் விழுகின்றன. இவ்வாறு பூ இனப்பெருக்கத்துக்கு தேனீக்கள் உதவிகரமாக இருக்கின்றன. இடம் விட்டு இடம் போகும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்த துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி டாக்டர் சாரா ஷெங்கர் கூறியிருப்பதாவது:

தீங்கு ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களால் நமது செல்கள் பாதிக்கப்படுகின்றன. நல்ல செல்கள் அழிந்து தீய செல்கள் அதிகரிப்பதுதான் கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. ஃப்ரீ ரேடிகல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் தடுக்கின்றன. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் மலர்களின் மகரந்த துகள்களில் அதிகம் உள்ளன.

மகரந்த துகள்களை காய்கறி அல்லத பழ சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து தற்போது லண்டனில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.

அலர்ஜி இருப்பவர்கள் தவிர்த்துவிடலாம். மகரந்த துகளின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக ஆய்வு நடத்தினால், அதன் அரிய குணங்கள், நோய்களை தீர்க்கும் குணங்கள் பற்றி தெரியவரும். இவ்வாறு சாரா கூறினார்

மைதா-ரவா சோமாஸ்

 

 

மேல் மாவிற்கு:
மைதா - அரை கப்;
ரவை பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்;
உப்பு - கால் டீஸ்பூன்;
நெய் - 1 டீஸ்பூன்;
பொரிப்பதற்கு - தேவையான அளவு எண்ணெய்.

பூரணத்திற்கு:
ரவை - அரை கப்;
துருவிய கொப்பரைத் தேங்காய் -அரை கப்;
பொடித்த அல்லது பொடியாக நறுக்கிய முந்திரி - 15;
சர்க்கரை - அரை கப்;
ஏலக்காய்த்தூள் - சிறிது; நெய் - அரை கப்.
திராட்சை - 5;
மேல் மாவிற்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசைந்து கெட்டியாக ஈரத்துணியில் மூடி வைக்கவும். நெய்யில் ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய் சேர்த்து வறுத்துக்கொண்டு ஆறியதும் ஏலக்காய்த்தூள், சர்க்கரைத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன அப்பளமாகத் தட்டி நடுவில் இந்த பூரணத்தை வைத்து தண்ணீர் தொட்டு மடித்து விருப்பமான வடிவத்தில் மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இதை இரண்டு நாட்களுக்குமுன் கூட செய்து வைக்கலாம்.

ஜோதிட முதல்பக்கம்இன்றைய ராசி பலன்கள் - 7/26/

மேஷம்

மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

ரிஷபம்

ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந் தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மிதுனம்

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். நட்பு வட்டம் விரியும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கடகம்

கடகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

சிம்மம்

சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப் பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனஉளைச்சல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

விருச்சிகம்

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள்
வரக்கூடும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி
வெல்லும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

தனுசு

தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
சிறப்பான நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில்
புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். குடும்பத்தில் உள் ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. முன் கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பேச்சில் இங்கிதம்
தேவைப்படும் நாள்

வவுனியாவில் பெண் தொழிலதிபர் சடலமாக மீட்பு

 _
25.07.2012.வவுனியா கோவில்குளத்தில் உள்ள விடுதியொன்றிலிருந்து பெண் தொழிலதிபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், தெஹிவளை, வவுனியா ஆகிய இடங்களில் ‘வி கெயார்’ என்ற பெயரில் அழகுக்கலை நிலையத்தினை நடத்திவந்த கேதாரலிங்கம் விசாகினி (31) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

வவுனியா ஹோட்டலுக்கு நேற்றிரவு இளைஞர் ஒருவருடன் விசாகினி தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த இளைஞரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இரவுப்பொழுதில் அவருடன் தங்கியிருந்ததாகவும் காலையில் விழித்துப்பார்த்தபோது விசாகினி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்ததாகவும் அந்த இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சுன்னாகத்தில் 28 ஆம் திகதி பொலிஸாரின் நடமாடும் சேவை

 _
25.07.2012.சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் சேவை எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பெறுமதியான ஆவணங்களை தொலைத்தவர்களுக்கான பொலிஸ் முறைப்பாடுகள் செய்தல் ,வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பயிற்சிகள், மருத்துவ சேவை உட்பட பல்வேறு சேவைகளும் இடம் பெறவுள்ளன.

உடுவில் பிரதேச செயலகத்தைச சேர்ந்த ஜே.185 உடுவில் மத்தி வடக்கு ஜே.186 உடுவில் வடக்கு ஜே.195 சுன்னாகம் வடக்கு ஜே.196 சுன்னாகம் தெற்கு ஜே.197 சுன்னாகம் கிழக்கு ஜே. 198 சுன்னாகம் மத்தி ஜே.199 சுன்னாகம் மேற்கு ஜே. 200 கந்தரோடை ஜே. 202 ஏழாலை தென்மேற்கு கிரம அலுவலர் பிரிவுகளைச் சோந்த மக்களைக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவர் இல்ல அதிகாரி கைது _

_
25.07.2012.மாவனெல்லை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள் ஐவரையும்; எம்பிலிப்பிட்டிய எஹலியகொட பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்;கியிருந்த சிறுமிகள் ஏழு பேருமாக 12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவர் இல்லப் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத் துர்நடத்தைக்கு துணை புரிந்ததாகக் கூறப்படும் பெண் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இவர்கள் இருவரும் இன்று மாவனெல்லை நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்பட்டனர்.

சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கையை அடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்

மஞ்சட் கடவையை தவிர்க்கும் பாதசாரிகள் சட்டத்தின் பிடியில்

 _
25.07.2012பாதசாரிகள் பாதையைக் கடக்கும் போது வீதி விபத்துக்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு பொலிஸ் தலைமையகம் பல சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது.

பாதசாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், வீதி விபத்துக்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகவும் பாதசாரிகள் பாதையை மஞ்சள் கோட்டினூடாகவே கடக்க வேண்டுமென்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றை மீறி வேறு இடங்களில் பாதையைக் கடக்க முயன்றால் அவரைக் கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

பேஸ்புக் மீதான தடையைத் தளர்த்தும் ஈரான்?

 _
25.07.2012.பேஸ்புக் சமூகவலையமைப்பின் மீதான தடையைத் தளர்த்தும் நடவடிக்கையை ஈரான் சிறிது சிறிதாக ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இணையக்குற்றங்களைத் தடுத்தல், பாலியல் சம்பந்தமான விடயங்களைத் தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக பேஸ்புக்கின் உதவியை நாடும் பொருட்டே அதன் மீதான தடை தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக அந்நாட்டு பொலிஸார் பேஸ்புக்குடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஈரானியர்களால் பேஸ்புக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாலியல் மற்றும் விபச்சாரம் தொடர்பான பக்கங்களை அகற்றும் நடவடிக்கையையும் ஈரான் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

ஈரானில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பேஸ்புக் மீது தடை ஏற்படுத்தப்பட்டது.

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அங்கு ஏற்பட்ட அமைதியின்மைக்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையத்தளங்கள் பங்களிப்புச் செய்ததாக குற்றஞ்சாட்டியே ஈரான் பேஸ்புக் மீது தடை விதித்தது.

ஈரானிய சமூக ஆர்வலர்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்தியே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்தமை குறிப்பிடத்தக்கது

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு

_
25.07.2012மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக மக்கள் கலை அரங்கின் தலைவரும் ஆசிரியருமான ஹெலன் வரவேற்புரையும், கவிஞர் சு.முரளிதரன் தலைமையுரையையும், கலாநிதி .ந.இரவீந்திரன் ,பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆய்வு நோக்கு எனும் தலைப்பில் சிறப்புரையும், லெனின் மதிவாணம் நினைவுப்பதிவுரையும், மல்லியப்பு சந்தி திலகர் நினைவுப்பகிர்வும், மலையக மக்கள் கலை அரங்கின் சார்பில் ஆசிரியர் வே.இராமர் கவிதை வாசிப்பும் இடம்பெற்றன.


மேலும் கலாநிதி.ந.இரவீந்திரன் மற்றும் மலையக மக்கள் அரங்கக் குழுவினர் பேராசிரியர்.கா.சிவத்தம்பிக்கு மரியாதை செலுத்ப்பட்டதோடு, இந்த நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் பரிசுபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை முன்னாள் கல்வி பணிப்பாளர் திரு.நாகலிங்கம் வழங்கிவைத்தார்

யாழ். நல்லூர் கொடியேற்றம் இன்று (பட இணைப்பு)

_
25.07.2012.
வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் கொடியேற்ற நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அடியார்களின் அரோகரா ஒலியுடன் இடம்பெற்றது.

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல் காணப்பட்டார்கள். கொடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கப்பிரதட்ணம் செய்ததுடன் பெண்கள் அடிஅழித்தார்கள்.

ஆலயச் சுற்றாடலில் பொலிசாரும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் பலரும் சேவையில் ஈடுபட்டிருந்தார்கள்.
___

'அப்பனே வைரவா' இறுவட்டு வெளியீடு(பட இணைப்பு)

 _
25.07.2012.யாழ். சுதுமலை அருள்மிகு எச்சாட்டி வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் வருடாந்த மகோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு திருப்பதி என்டர்டெய்ன்மென்ட் தினேஸ் ஏகாம்பரத்தால் வெளியீடு செய்யப்பட்ட அருட்பாடல்கள் அடங்கிய 'அப்பனே வைரவா' இசை இறுவட்டு அண்மையில் ஆலயத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் ஓய்வுநிலை மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
___

மன்னார் ஊடகவியலாளர்கள் மூவர் சீ.ஐ.டி யினரால் விசாரணை

 _
25.07.2012.மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து மன்னாருக்கு வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) பொலிஸார் மன்னார் ஊடகவியலாளர்கள் மூன்று பேரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூன்று பேருக்கும் தனித்தனியே அவர்களுடைய தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்திய ஒருவர் தாம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருந்து கதைப்பதாகவும் கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து வருகைதந்துள்ளதாகவும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு அமைய காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரை குறித்த 3 ஊடகவியலாளர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் கோந்தைப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் விடுதியில் விசாரணைகள் இடம் பெற்றன.

குறித்த அதிகாரிகள் தம்மை 4 ஆம் மாடியில் இருந்து வருகை தந்த சீ.ஐ.டி என அடையாளப்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது கடந்த 18 ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் முழுமையான வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு சம்பவ தினம் ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்காட்சிகளையும் சீ.ஐ.டி யினர் பெற்றுக்கொண்டனர்.

ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் காலை 10.30 மணிமுதல் 1.30 மணிவரையுமான 3 மணித்தியாலங்களும், ஊடகவியலாளர்களான ஏ.ரி.மார்க் மற்றும் என்.ஜெ.பெலிஸ்டஸ் பச்சக் ஆகியோர் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையுமான 4 மணி நேரமும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

பிரான்சில் சூரிய மின் சக்தியில் இயங்கும் விமானத்தின் பயணம் தொடக்கம்

புதன்கிழமை, 25 யூலை 2012
சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் சோலார் விமானம், தென்மேற்கு பிரான்சில் உள்ள டோலோஸ் விமான நிலையத்தில் தனது பயணத்தை தொடங்கியது. இந்த விமானம் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் வழியாக சென்று, வடக்கு ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டின் தலைநகரத்தை சென்றடையும்.
உருவத்தில் பெரியதாகவும், எடையில் குறைவாகவும் காணப்படும் இந்த விமானம் 12,000 சோலார் செல்களுடன், நான்கு மின்சார இயந்திரங்களை கொண்டுள்ளது.
விமானி பெட்ராண்ட் பிக்கார்ட் இந்த விமானத்தை ஓட்டிச் சென்றார். இவர் ஏற்கெனவே சூடான காற்றை பலூனில் நிரப்பி, அதன் உதவியுடன் உலகை பறந்த படியே சுற்றி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் மற்றொரு விமானியான ஆண்டிரி போர்ஷ்பெர்கும் சென்றார்.
தற்போது சூரிய சக்தியால் இந்த விமானம் சென்றது ஓர் ஒத்திகை போல அமைகிறது. 2014ஆம் ஆண்டில் இந்த விமானத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கி, சூரிய சக்தியால் உலகம் முழுக்கச் சுற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஓய்வூதியம் பெறுவதற்காக தந்தையின் சடலத்தை மறைத்து வைத்திருந்த நபர்

 
புதன்கிழமை, 25 யூலை 2012தந்தை இறந்ததை மறைத்து கடந்த ஏழு மாதங்களாக, அவருடைய ஓய்வூதியத்தை பெற்று வந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பீஜிங் நகரை சேர்ந்தவர் லீ. இவருடைய தந்தை கடந்த ஜனவரி மாதம் இறந்துள்ளார்.
ஆனால் லீ தன் தந்தை தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு, வெளியே சென்று விட்டதாக பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே லீ வீட்டிருந்து துர்நாற்றத்துடன் தண்ணீர் வருவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
உடனே அவர்கள் வந்து பார்த்த போது, லீயின் தந்தையின் உடல் அழுகிய நிலையில் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக, அவரது இறப்பை தெரிவிக்காமல் மறைத்து வைத்து, முறைகேடாக ஓய்வூதியத்தை பெற்ற லீ கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின்: ஜேர்மன் நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை

 
புதன்கிழமை, 25 யூலை 2012ஸ்பெயின் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வது குறித்து, ஜேர்மன் நிதியமைச்சர், ஸ்பெயின் நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் இந்த நாடுகளை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க, உலக வங்கியும், ஐரோப்பிய வங்கியும், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடுமையான சிக்கன நடவடிக்கைகளான மானியங்கள் ரத்து, சம்பள குறைப்பு, ஆட் குறைப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு வங்கிகளில், போதுமான நிதி இல்லாததால் சில வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் இந்த நெருக்கடியை சமாளிக்க 300 பில்லியன் யூரோ தேவைப்படுகிறது.
இதனையடுத்து பொருளாதார மீட்பு நிதியை ஸ்பெயினுக்கு வழங்குவது குறித்து, ஜேர்மன் நிதியமைச்சர் உல்பகேங்க், ஸ்பெயின் நிதியமைச்சர் லூயிஸ் டி குயின்டோசை நேற்று சந்தித்து பேசினார்.
ஸ்பெயின் நாடு கடந்த 10 ஆண்டுகளில் வாங்கியுள்ள கடனுக்கான வட்டி 7.59 சதவீதம் அதிகரித்துள்ளது. மேட்ரிட் நகர பங்கு சந்தை 5 சதவீதம் குறைந்துள்ளது.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதால் உலக வங்கி, ஐரோப்பிய வங்கி உள்ளிட்டவை விதிக்கும் நிர்பந்தத்தை ஏற்று பொருளாதார மீட்பு நிதியை பெற ஸ்பெயின் முன்வந்துள்ளது.

இரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை படம் பிடித்த நபருக்கு தண்டனை

 
புதன்கிழமை, 25 யூலை 2012,இரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை படம் பிடித்த நபருக்கு தண்டனைபேருந்தின் கதவில் இரகசிய கமெரா பொருத்தி, குட்டை பாவாடை அணிந்து வரும் மாணவிகளை படம் பிடித்த ஓட்டுநருக்கு, 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் டகுயா கோஸ்(வயது 48). இவர் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்தவர்.
பேருந்தில் மினி ஸ்கர்ட் போன்ற யூனிபார்ம்(குட்டை பாவாடை) அணிந்து வரும் பள்ளி மாணவிகளை இரகசியமாக கமெராவில் படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பேருந்தின் கதவில் யாருக்கும் தெரியாத வகையில் கமெராவை பொருத்தி உள்ளார் டகுயா. பேருந்தில் மாணவிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் படம் பிடித்துள்ளார். மேலும் 10 வயதுக்கு குறைந்த மாணவிகளை மட்டும் கமெராவில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து டகுயாவை பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு மணி நேரத்துக்கு மேல் ஓடக்கூடிய வீடியோவையும் கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் டகுயாவுக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து டகுயா மேல்முறையீடு செய்தார். அப்போது இவரது வக்கீல் வாதிடுகையில், பேருந்து ஓட்டுநர் டகுயா, அவமானமான விஷயத்தை செய்துவிட்டோம் என்பதை இப்போது உணர்ந்துவிட்டார். அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் எந்த மாணவிக்கும் சமூகத்துக்கும் அவர் தீங்கு இழைக்கவில்லை. மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கமும் அவருக்கு இல்லை. எனவே டகுயாவை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.
எனினும் டகுயாவுக்கு 7 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் சிறையில் இருந்து அவரை விடுவித்து மனநல சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஒண்டோரியாவில் வீடுகளின் விலை உயர்வு

புதன்கிழமை, 25 யூலை 2012கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் வீடு விற்பனை விலை கடந்த நான்கு வருடங்களில் 17 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. The Municipal Property Assessment Corporation எடுத்த ஆய்வின் மூலமே இத்தகவல் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் கடந்த Jan. 1, 2008 ஆம் ஆண்டிலிருந்து Jan. 1, 2012 ஆண்டு வரையான நான்கு ஆண்டு காலத்தில் வீடுகளின் விலையில் ஏற்றம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒண்டோரியாவில் வீடு வாங்கும் நபர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியளிக்க கூடிய செய்தியாக இல்லாவிடினும், டொரண்டோ போன்ற நகரங்களின் வீடு விலையைக் காட்டிலும் குறைவாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விலை எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ச்சி அடையலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒண்டோரியோவில் ஒரு வீட்டின் விலை கடந்த Jan. 1, 2008 ஆம் ஆண்டில் $350,000 என்று இருந்தது. அந்த விலை Jan. 1, 2012 $409,500 என்ற விலையில் உள்ளது. அதாவது சரியாக 17 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

மன நோயாளியிடம் சிக்கிய சிறுவன் கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்பு

 
புதன்கிழமை, 25 யூலை 2012பிலிப்பைன்சில் மன நலம் குன்றிய நபர் ஒருவரிடம் சிக்கித் தவித்த 9 வயது சிறுவன், கடும் போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். பிலிப்பைன்ஸ் நாட்டின் குயிசான் நகரில் ரெய்மர் பார்பரன் என்ற பெண், தனது 9 வயது மகன் மார்க் ஜேசன் பினீடாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மனநிலை பாதித்த சிறுவன், மார்க் ஜேசனை திடீரென பிடித்து இழுத்து, கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து(ஐஸ் கத்தி) கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தனது குழந்தை கத்தி முனையில் உயிருக்குப் போராடுவதை அறிந்து சாமர்த்தியமாக செயல்பட்டார். அந்த மனநிலை பாதித்த சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து என்ன வேண்டும் என்று கேட்டுப் பார்த்தார். ஆனால் அச்சிறுவனோ கத்தியை மார்க் ஜேசனின் கழுத்தில் அழுத்தியபடியே வைத்திருந்தான்.
அப்போதும் சாந்தமாக இருந்த தாய், சிலுவையைக் காட்டி, என் குழந்தையை விட்டுப் போ என கூறியுள்ளார். அதற்கும் அச்சிறுவன் அசையாமல், குழந்தையின் கழுத்தை இன்னும் வேகமாக நெரித்தான்.
இதனால் பயந்து போன அந்த தாய், இப்பிரச்சினையில் பொலிசார் தலையிட அனுமதித்தார். இதையடுத்து பொலிசார் அவனுடன் சாமர்த்தியமாக பேசி, குழந்தையை மீட்டனர். இருப்பினும் குழந்தையின் கழுத்தில் லேசான காயங்கள் இருந்ததால், உடனடியாக அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
இரவு 11 மணியளவில் பிடிபட்ட குழந்தை, மறுநாள் காலை 7.30 மணிக்குத் தான் மீட்கப்பட்டான். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவனைக் கைது செய்தனர்.

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: ஒருவர் பலி

 
புதன்கிழமை, 25 யூலை 2012,இந்தோனேஷியாவில் இன்று இரு இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்தோனேஷியாவின் தென்மேற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள சிம்யூலு தீவில் கடலுக்கு அடியில் 45 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவானது.
இந் நிலநடுக்கத்தால் சிம்யூலு தீவை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக குலுங்கின என்றும் ஆனால் உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட வில்லை என அவுஸ்திரேலியா வானி‌லை மையம் தெரிவித்துள்ளது.
இதே போன்று தென்மேற்கு சுமத்ராவிலுள்ள மேற்கு கடற்கரையின் மடோன் தீவுப்பகுதியிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்க அதிர்ச்சியில் ஒரு பலியானார்.

பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு: சீனாவில் தொடரும் அவலம்

25.07.2012.மக்கள் தொகை பெருகி வருவதால், ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தையே போதும் போன்ற கட்டுப்பாடுகளை சீனா அரசு விதித்துள்ளது. இதனை மீறி ஒரு சில தம்பதிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப குழந்தைகள் பெற்று வருகின்றனர்.
சட்டத்தை மீறி அதிக குழந்தை பெற்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு அபராதம் செலுத்த முன்வந்தும் அப்பாவி தம்பதியின் 3-வது குழந்தையை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளனர் அரசு ஊழியர்கள். இச்சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவில் உள்ள தாஜி என்ற கிராமத்தைச் சேர்ந்த பான் சுன்யான் என்ற 31 வயதான பெண்ணுக்குத் தான் அந்தக் கொடுமை நடந்துள்ளது.
3-வது குழந்தைக்கு தாயான அந்தப் பெண், 8 மாத கர்ப்பமாக இருந்த போது, உள்ளூர் அதிகாரிகள் அவரை பிடித்து, தனி அறையில் 2 பெண்களுடன் சேர்த்து அடைத்து வைத்தனர்.
பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய ஒப்புக்கொண்டதாக கட்டாயப்படுத்தி விரல் ரேகை மூலம் ஒப்புதல் பெற்றனர். அப்போது அவருக்கு ஒரு நர்ஸ், ஊசி மூலம் மருந்து செலுத்தியுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் குழந்தை இறந்தே பிறந்தது.
அக்குழந்தையின் உடல் முழுவதும் கறுப்பு மற்றும் நீல நிறமாக இருந்ததாக குழந்தையின் தாய் பான் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதுபற்றி பானின் கணவர் வூ லியாஞ்சி கூறுகையில், 3-வது குழந்தை பெறுவதற்கான அபராத தொகையை நான் செலுத்தி விட்டேன். அதன்பிறகும் கருக்கலைப்புக்கு அதிகாரி உத்தரவிட்டார் என்றார்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று வழக்கு தொடர்வதற்காக பெய்ஜிங் சென்றார் வூ லியாஞ்சி.
ஆனால் அதிகாரிகளால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சந்தேகமடைந்த அவர், வழக்கு போடும் எண்ணத்தை கைவிட்டுள்ளார். ஆனால் இணையத்தளம் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
இந்த மோசமான சம்பவத்தினால் மிகவும் மனமுடைந்த அந்த தம்பதியர், அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை.
நாங்கள் ஏறத்தாழ இறந்துவிட்டது போல் உணர்கிறோம். வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டோம் என்று வேதனையுடன் அவர்கள் கூறுகின்றனர்.
இச்சம்பவத்தை அடுத்து சீனாவில் ஒரு குழந்தை திட்டத்திற்கு எதிரான விமர்சனங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
அதற்குப் பதிலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய கொள்கையை உருவாக்கவும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்

இந்தியாவில் இருந்து மிகப்பெரிய வர்த்தகப் பட்டாளம் இலங்கையை நோக்கி!

 
புதன்கிழமை, 25 யூலை 2012
இந்திய வர்த்தகர்களை உள்ளடக்கிய ஒரு உயர் மட்டக்குழு, அடுத்த வாரம் இலங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக, இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 க்கு மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தற்போது 105ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தகம் அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் என்ற பகுதியினரே இலங்கை வர்த்தகக் கண்காட்சியில்கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்லும் இரகசியம் அம்பலம்

 
புதன்கிழமை, 25 யூலை 2012
தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இரகசியம் அம்பலமாகியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு எதிரான சட்ட மூலம் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்தே அதிகளவான இலங்கைத் தமிழர்கள், அவுஸ்திரேலியா நோக்கிப் படையெடுத்து வருவதாகக் குறப்பிடப்படுகிறது.
இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு நான்கு புலி ஆதரவு அமைப்புக்கள், அந்நாட்டு செனட் சபையிடம் உதவி பெற்றுக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் 1300 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் படகு மூலம் கிறிஸ்மஸ் தீவை அடைந்து இனச்சுத்திரிப்பு, அரசியல் தஞ்சம் ஆகிய வசனங்களை மட்டும் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் திருமலையிலும், 8 பேர் மன்னாரிலும் கைது

 
புதன்கிழமை, 25 யூலை 2012
திருகோணமலை, சல்லிசம்பல் தீவு கடற்பரப்பு வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை ஆண் மற்றும் பெண் ஆகியோர் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிவேக கட்டளை 15 என்ஜின் பூட்டப்பட்ட படகு மற்றும் உயிர் பாதுகாப்பு அங்கி 7, என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, படகுமூலம் இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் இலங்கையர் எட்டுப் பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் அடங்குகின்றனர். இவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியா வரும் அகதிகளை கட்டுப்படுத்தக் கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

 
புதன்கிழமை, 25 யூலை 2012
இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தக் கூடாது என, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்று பணிப்பாளர் பில் லின்ச் த மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து அகதிகள் வருகின்றமையை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவை கண்டனத்துக்கு உரியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அகதிகளுக்கு தடை விதிக்கப்படுவது என்பது, அகதி அந்தஸ்த்து கோருதல் உள்ளிட்ட சர்வதேச உரிமை மீறலாக கணிக்கப்படும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை அகதி அந்தஸ்த்து கோரிய நிலையில் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடுகடத்தப்படுவதும், பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றவர்கள் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு ஆளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஆட்கடத்தல் என்பது, சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு முரணானது என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்தர மாணவர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளால் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு தெரிவித்துள்ளனர்.
முதல்கட்டமாக 150 மாணவர்கள் இந்த முறைபாட்டை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சிவ பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரில் இரண்டு புடவைகள் கடைகள் எரிந்து நாசம் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் நாசம்



 
புதன்கிழமை, 25 யூலை 2012,
யாழ்.நகரிலுள்ள நடைபாதை புடைவைக் கடைகள் இரண்டு இன்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளதால் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ஆயினும் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
குறித்த கடைகளிலுள்ள மின்னொழுக்கு இவ்விபத்திற்கு காரணமாயிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும் இதனை உறுதி செய்ய முடியவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மட்டு. காத்தான்குடி இளைஞர் ஒருவர் சவுதியில் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞரொருவர் சவூதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த பதுர்தீன் முகம்மது நிப்றாஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
இவ் இளைஞர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார்.
ஜித்தா நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிவந்த இவர், அக் ஹோட்டலின் 5 வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் கூறினர்.
சடலம் ஜித்தா நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்

மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

 
25.07.2012.
இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, சுற்றுலா விசாக்களின் மூலம் இலங்கையர்கள், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக இரண்டு லட்ச ரூபா வழங்கியதாக 20 இலங்கையர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொழில் வாய்ப்பு இன்றி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறித்த இலங்கையர்கள், உயர்ஸ்தானிகராலயத்தில் சரணாகதி அடைந்துள்ளனர்.
எனவே மலேசியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கையர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடைய த.தே. கூட்டமைப்பின் வேட்பாளர் கைது

 
புதன்கிழமை, 25 யூலை 2012
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் சட்டவிரேோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சுரேஷ்குமார் என்பவரே நேற்றிரவு திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்

சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து பாகிஸ்தான் இலங்கையுடன் பேச்சு!– அதிர்ச்சியில் இந்தியா

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
திருகோணமலை, சம்பூரில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து இலங்கையுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமையானது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் சவுத் புளொக்கிற்கு கிடைத்துள்ள இந்தச் செய்தி இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஆதரவுடன், இலங்கையில் தலையீடுகளை அதிகரிக்கும் பாகிஸ்தானின் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்தத் தந்திரோபாயமாகும்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா கடந்தவாரம் புதுடெல்லியில் இருந்தார்.
அவர், இலங்கையில் பாகிஸ்தானின் அண்மைய நகர்வுகள் குறித்த விபரங்களை உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
கொழும்புடன் பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவாக்கவும் பாகிஸ்தான் முனைகிறது.
இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வைத்துக் கொள்வதற்கு, தமிழ்நாட்டில் உள்ள தமது பங்காளிக்கட்சியின் எதிர்ப்பை காங்கிரஸ் கூட்டணி அரசு எதிர்கொள்ளும் நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் சத்தமின்றி இலங்கைக்குள் நுழைந்துள்ளது.
அதேவேளை, பாகிஸ்தானின் உதவியுடன் ரி-55 டாங்குகளின் இயந்திரங்களை மறுசீரமைத்தல், மற்றும் டாங்குகளின் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் சூட்டுக் கட்டுப்பாட்டுக் கருவிகளை நவீனமயப்படுத்துவது குறித்தும் சிறிலங்கா கலந்துரையாடியுள்ளது.
கொழும்புக்கு எந்தவொரு பாதுகாப்பு உதவிகளையோ அல்லது தளபாடங்களையோ வழங்கக் கூடாது என்று சென்னைப் பங்காளிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கையின் பாதுகாப்புத்துறைக்குள் பாகிஸ்தான் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்த அழுத்தத்தினால் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ளப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை எதிராக இந்தியா வாக்களித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்தியா ரூடே மேலும் குறிப்பிட்டுள்ளது

வவுனியா ஹோட்டல் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
வவுனியாவில் ஹோட்டலொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிலதிபரான கேதாரலிங்கம் விசாகினி (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

விற்பனையில் சாதனை படைத்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்

25.07.2012.சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்தில், 1 கோடிக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. போட்டி நிறைந்த உலகில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பின்பு, எத்தனையோ ஸ்மார்ட்போன்களும் வெளியாகிவிட்டன.
ஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில்நுட்பத்தினையே குறிக்கிறது.
இதனையடுத்து சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
கடந்த மே மாதம் 3ஆம் திகதி லண்டனில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

கணனியின் வேகத்தினை அதிகரிப்பத​ற்கு

கணனியின் வேகத்தினை அதிகரிப்பத​ற்கு
25.07.2012.கணனி ஒன்றின் செயற்படு வேகத்தினை அதிகரிப்பதற்கு வன்பொருட்களின் திறனை மாற்றியமைத்தல், ஒழுங்கான வைரஸ் ஸ்கானிங், தேவையற்ற கோப்புக்களை நீக்குதல் போன்ற பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. அதேபோல கணனியின் பிரதான நினைவகமாகத் திகழும் RAM இனை எப்போதும் சுமையற்றதாக வைத்திருப்பதனூடாகவும் கணனியின் வேகத்தினை அதிகரிக்க முடியும். இதற்கு Refresh செய்யும் முறை ஒன்றும் காணப்படுகின்றது.
தவிர Notepad இன் உதவியுடனும் RAM இனை சுத்தமாகப் பேண முடியும். அதற்கு பின்வரும் முறைகளைப் கையாள்க.
முதலில் கணனியின் My Computer எனும் பகுதிக்கு சென்று Tools(Windows xp எனின்) அல்லது Organize(Windows 7 எனின்) என்பதை தெரிவு செய்க.
தொடர்ந்து Folder and Search ஒப்சனிற்கு சென்று View tab இனுள் காணப்படும் Hide extension for Known File Type என்ற தெரிவினை Uncheck செய்து OK செய்க.
தற்போது Notepad இனை ஓப்பன் செய்து Mystring=(80000000) என டைப் செய்து RAM. Vbe எனும் பெயருடைய கோப்பாக Save செய்யவும்.
பின்பு உங்கள் கணனியின் வேகம் மந்தமாகின்ற சந்தர்ப்பங்களில் குறித்த கோப்பினை ஓப்பின் செய்தால் போதும் RAM சுத்தம் செய்யப்பட்டு கணனியின் வேகமானது 80 வீதத்தினால் அதிகரிக்கும்
25.07.2012எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும். இதற்கு முதலில்,
1. Windows XPஆக இருந்தால், XP -->கிளிக் programs--> Run.
Windows 7 ஆக இருந்தால், programs---> search box---> Type Run.
2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும்.
3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth
4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி, பின்னர் BandWidth என்ற இடத்தில் 20 ஐ 0 என மாற்றம் செய்யவும்