siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சுவாசிலாந்து நாட்டில் குடியுரிமை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதி தற்கொலை முயற்சி

13.08.2012.சுவாசிலாந்து அரசாங்கம் குடியுரிமை வழங்க மறுத்தமையால் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
மேபானில் வசிக்கும் நவரத்னம் மதன் (34)  என்பவர் தனது கோரிக்கையினை முன்வைத்து அந்நாட்டு அரசருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.
ஆயினும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
மதன் 2003ம் ஆண்டு சுவாசிலாந்து நாட்டிற்கு வருகை தந்தார். ஆகஸ்ட் 17 2004 ஆண்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இவர் தன்னுடைய மாமாவுடன் வசித்து வருகின்றார். மாமா சுவாசிலாந்தில் தற்பொழுது ஆசிரியராக பணிபுரிகின்றார்.
2007 ம் ஆண்டு முதன் முறையாக குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார்.
மார்ச் 11 2009 தன்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டது.
அக் கடிதத்தில் சுவாசிலாந்து நாட்டிற்கான மதனின் முதலீடு குறைந்தளவில் இருப்பதனால் குடியுரிமை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசர் மாபிக்சா டலாமினின் கையொப்பமும் இடப்பட்டிருந்தது
மதன் எழுதிய கடிதத்தில் தான்நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் தொடர்ச்சியாக காட்டில் வாழ்ந்ததாகவும் தான் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்

ராசி பலன் 13-08-2012



மிகவும் பலன் தரும் ராசி பலன்ஓர் காணொளி கட்சி

பெண்கள் எந்த நேரத்தில் என்ன நகை அணியலாம்!! நிபுணர்கள்

13.08.2012.உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப இன்றைக்கு நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அழகையே மாற்றிவிடும்.
அது ஆபத்தானதும் கூட. எனவே எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம் என்பதை தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளையும், சிறியவர்கள் சின்னநகைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். சீரான நடுத்தர நகைகளை அணியலாம். அது இருவருக்குமே பொருத்தமானது.
வெரைட்டியா போடுங்க
எ‌ப்போது‌ம் ஒரே மா‌தி‌ரியான தங்க நகைகளையே அ‌ணியாம‌ல், மு‌த்து, க‌ல் வை‌த்தது, த‌ங்க நகை எ‌ன்று ‌வித‌விதமாக நகைகளை வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். நா‌ம் செ‌ல்லு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் வகை‌க்கு‌ம், கால நேர‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்றபடி இ‌தி‌ல் ஒ‌ன்றை தே‌ர்வு செ‌ய்து அ‌ணி‌ந்து செ‌ல்லலா‌ம். பாரம்பரிய நகைகள்
பாரம்பரிய உடைகளுடன் பாரம்பரிய நகைகளை அணிந்தால் அது வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும். அவற்றுடன் எங்கு பார்த்தாலும் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. இவை விலை மலிவாக இருப்பதோடு அழகாகவும் ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் கூட அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும் அதிக அளவிலும் அணியலாம்.
பகலில் குறைவான நகை
காலை நேரங்களில் நகைகளை குறைவாகவும், இரவில் அதிகமான நகைகளையும் அணியவேண்டும் அப்பொழுதுதான் நகையின் அழகானது அணிபவருக்கு கூடுதல் அழகு தரும். உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது. எனவே அதற்கேற்ப தேர்வு செய்து அணியவேண்டும். நீண்ட கழுத்து கொண்ட பெண்கள் உயரம் குறைந்த கழுத்து ஒட்டிய நெக்லெஸ் அணிவது அழகாக்கி காட்டும் .
கலந்து அணியக்கூடாது
வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும். முக்கியமான விசயம் தங்க நகைகளை தனியாக அணிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தங்கத்தோடு, வெள்ளி, கவரிங் போன்ற நகைகளை இணைத்து அணியக்கூடாது.
வெளிநாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் அவற்றுடன் மெல்லிய செயின் சின்ன சின்ன ஜிமிக்கியே போதுமானது. அனைத்தையும் விட முக்கியமான விசயம் பொன்னகை அணிவதோடு உதட்டில் புன்னகையும் இருந்தால்தான் அழகை அதிகரித்துக் காட்டும் இல்லையில் வெறும் அலங்கார பதுமையாக மட்டுமே இருக்க நேரிடும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள்.

சினேகா, பரத்துக்கு இந்து மகாசபா கண்டனம்

13.08.2012.தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து மதம் பாரம்பரிய பெருமைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. சேவை மனப்பான்மையுடன் இந்து மக்களுக்காக ஏராளமான பொதுச்சேவைகள் செய்து வருகிறோம். அண்மையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த விழாவொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் பரத்தை மாணவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த விழாவில் பங்கேற்க பரத் ரூ.5 லட்சம் கேட்டாராம். அதிர்ந்து போனோம்.
பரத்தை டெலிபோனில் தொடர்பு கொண்டு, மாணவர்களாகிய ரசிகர்கள்தான் உங்களுக்கு அடையாளம் தந்து உயரத்தில் ஏற்றி வைத்துள்ளனர். கல்லூரி விழாவுக்கு வர பணம் கேட்கலாமா என கேட்டேன். போனை துண்டித்து விட்டார்.
பிறகு நடிகை சினேகாவை அழைத்தோம். அங்கும் இதே பதில்தான் கிடைத்தது. வேறு பல நடிகர்களையும் அழைத்தோம். அவர்களும் பணம் கேட்டார்கள். நடிகர்களை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளைஞர்கள் இனிமேல் விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது

புதுமுகங்கள் நடிக்கும் த்ரில்லர் படம் ‘சௌந்தர்யா’!

13.08.2012.புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் புதிய த்ரில்லர் படம் சௌந்தர்யா, விரைவில் ரசிகர்களை மிரட் வருகிறது.
ஏ.பி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ ‘செ‌ளந்‌தர்‌யா’‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌து‌ உள்‌ளா‌ர்‌ சந்‌தி‌ரமோ‌ஹன்‌.
பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கி‌ல்‌லர்‌ கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த்‌ வி‌னு, சஞ்‌சுகொ‌ட்‌டே‌ரி‌ என்‌று பலர்‌ நடி‌க்‌க, இவர்‌களுடன்‌ மா‌றுபட்‌ட வே‌டத்‌தி‌ல்‌ சி‌ரி‌ப்‌பொ‌லி‌ எப்‌எம்‌எஸ்‌ நடரா‌ஜன்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.
ஆயு‌ர்‌வே‌த வை‌த்‌தி‌யசா‌லை‌யி‌ல்‌ மஜா‌ஜ்‌ வே‌லை‌ செ‌ய்‌யு‌ம்‌ அழகி‌ய இளம்‌ பெ‌ண்‌ செ‌ளந்‌தர்‌யா. அவள்‌ அழகி‌ல்‌ மயங்‌கும்‌ வி‌மல்‌, அவள்‌ தன்‌னி‌டம்‌ அப்‌படி‌ பழகுவா‌ள்‌ இப்‌படி‌ நடந்‌து கொ‌ண்‌டா‌ள்‌ என்‌று இல்‌லா‌த பொ‌ல்‌லா‌த செ‌ய்‌தி‌களை‌ நண்‌பர்‌களுடன்‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள, அந்‌த பொ‌ய்‌ செ‌ய்‌தி‌யை‌ நம்‌பு‌ம்‌ நா‌ன்‌கு இளை‌ஞர்‌கள்‌, செ‌ளந்‌தர்‌யா‌வி‌டம்‌ செ‌ன்‌று தங்‌களது ஆசை‌க்‌கும்‌ இணங்குமா‌று வலி‌யு‌றுத்துகி‌ன்‌றனர்.
அதற்‌கு அவள்‌ சம்‌மதி‌க்‌க மறுக்‌கி‌றா‌ள்‌. இதனா‌ல்‌ ஆத்‌தி‌ரம்‌ அடை‌யு‌ம்‌ அந்‌த நா‌ல்‌வரும்‌ அவளை‌ பா‌லி‌யல்‌ பலா‌த்‌கா‌ரம்‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்.
இதில் சௌந்‌தர்‌யா உயி‌ரிழக்க, பின்னர் ஆவியாக வந்‌து அவர்‌களை‌ எப்‌படி‌ பழி ‌வா‌ங்‌குகி‌றா‌ள்‌ என்‌பதை‌ பு‌தி‌ய ஸ்‌டை‌லி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌,‌ இயக்‌குநர்‌ சந்‌தி‌மோ‌ஹன்‌.
இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு அஜ்‌மல்‌ அஜீ‌ஸ்‌ என்‌பவர்‌ இசை‌யமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர். ஆனை‌மலை‌, ஆனை‌க்‌கட்‌டி‌, தளி‌க்‌குள்‌ளம்‌ பீ‌ச்‌ போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ படமா‌க்‌கி‌யுள்ளாராம் இயக்குநர்.
செப்டம்பரில் இந்தப் படம் வெளியாகிறது

தம்மடிக்க இனி தடையில்லை!

13.08.2012.உலகில் புகைப்பிடிக்கும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதால், பல மாநில அரசாங்கங்களும் பொதுமக்களின் நலன்கருதி புகைப்பிடிக்கும் பழக்கத்தி நிறுத்தக்கோரி மக்களுக்கு அறிவுரை வழங்கியும், தங்களது மாநிலங்களில் புகையிலை பொருட்களை தடை செய்தும் வருகிறது. திரைப்படங்களில் பிரபல நடிகர், நடிகைகள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வருவதால் ரசிகர்களாகிய இளைஞர்கள் சிறு வயதிலேயே அவற்றை கற்றுக்கொண்டு பாதிக்கப்படுகின்றனர் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறிவந்தனர்.
புகையிலை எதிர்ப்பில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து மத்திய அரசும் திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் வரும்போது அதன் பாதிப்பையும் சேர்த்து அறிவிக்க வேண்டும் எனவும் பிரபல நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளை தாங்கள் நடிக்கும் படங்களில் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில் தான் சமூக ஆர்வலர்கள் பலரும் பிரபல ஹீரோக்களின் படங்களில் இது போன்ற காட்சிகள் வரும் போது வழக்கு பதிவு செய்தோ அல்லது அதன் பாதிப்பை எடுத்துரைத்து அந்த
காட்சிகளை படங்களில் இருந்து நீக்கச் செய்து வந்தனர்.
சமீபத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ‘துப்பாக்கி’ படத்தில் கூட இது போன்ற பிரச்சனை வந்தது குறிப்பிடத்தக்கது.பிகைப்பிடிப்பதற்கு தடை என்ற அறிவிப்பைக் கேட்டு பல திரையுலகினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.ஆனாலும் தனது முடிவில் எவ்வித மாற்ற்மும் எடுக்காத மத்திய அரசு திடீரென தனது நிலையை மாற்றி சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்குத் தடையில்லை என
அறிவித்துள்ளது.”கதைக்கு தேவைப்பட்டால் புகைப்பிடிப்பது போன்ற காட்சியை வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் படத்தின் துவக்கத்திலும் இடைவேளை முடிந்து படம் துவங்கும்போதும் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடானது என்ற வாசகம் சிறிய அளவிலும், புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் நேரத்தில் பெரிய அளவிலும் இருக்க வேண்டும்” என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

ராட்டினம் | திரைப்பட விமர்சனம்

13.08.2012.தமிழக சினிமா விமர்சனங்கள் சமீபத்தில் திரைப்படங்களின் தரத்தை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து வருகின்றன. ஒரு கல் ஒரு சினிமா என்ற சாதாரண படத்தை தேவையில்லாமல் எழுதி அப்படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தின. மேலும் வழக்கு எண் 18 – 9 என்ற ஒரு தடவை மட்டும் சலிப்பின்றிப் பார்க்கக்கூடிய படத்தை அளவுக்கு மிஞ்சிய மதிப்பீடு கொடுத்து ரசிகர் எதிர்பார்ப்பை வீழ்த்தின.
எப்போதுமே ஒரு படத்தின் உண்மையான தரத்திற்கு பத்து வீதம் குறைவாகவே விமர்சனம் எழுதப்பட வேண்டும். அப்போதுதான் பார்ப்போர் புள்ளியிட ஓரிடம் இருக்கும். இல்லையேல் ரசிகர் வீணாக புள்ளியை குறைக்க நேரிடும். அந்தவகையில் ராட்டினம் படத்திற்கு தற்ஸ்தமிழில் வெளியான விமர்சனத்தை பத்துவீதம் குறைத்து நோக்கினால் ராட்டினத்தில் மகிழ்வாக சுற்றலாம்.
இதோ தமிழக விமர்சனம் :
நடிப்பு: லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்
ஒளிப்பதிவு: ராஜ் சுந்தர்
இசை: மனு ரமேசன்
பிஆர்ஓ: நிகில்
தயாரிப்பு: ஜே மகாலட்சுமி
எழுத்து – இயக்கம்: கே எஸ் தங்கசாமி
தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.
நாம் பார்த்த அல்லது அனுபவித்த வலியை, அந்தத் தன்மை மாறாமல் திரையில் மீண்டும் பார்க்கும்போது மனசெல்லாம் இனம்புரியாத உணர்வு ஆக்கிரமித்து நிற்கிறது.
எளிமையான கதை, நேர்மையான காட்சியமைப்பு, எந்த இடத்திலும் சினிமாத்தனமில்லாத இயல்பு…இவைதான் ராட்டினத்தின் சிறப்புகள்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை இதற்கு முன் வேறு எந்தப் படத்திலும் இத்தனை சிறப்பாக கதைக்களமாக்கியதில்லை என்பதற்காகவே இயக்குநர் தங்கசாமியைப் பாராட்ட வேண்டும்.
பள்ளி முடித்த ஜெயத்துக்கும் (லகுபரன்) பள்ளியில் படிக்கும் தனத்துக்கும் (ஸ்வாதி) காதல். ஜெயத்தின் அண்ணன் வளரும் இளம் அரசியல்வாதி. அண்ணி லோக்கல் கவுன்சிலர். தனத்தின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மன். தாய் மாமா பெரிய ‘க்ரிமினல்’… லாயர். அரசியல் தொடர்புகள் எக்கச்சக்கம்!
காதலர்கள் இருவரும் அன்பையும் பரிசுகளையும் பரிமாறிக்கொள்வதோடு நில்லாமல், ஒரு முறை திருச்செந்தூர் வரை ஜாலியாக பைக்கில் போகிறார்கள். வரும்போது ஆத்தூர் பாலத்தில் போலீஸ் மடக்கி விசாரிக்கிறது. அதோடு நில்லாமல் பெண்ணின் வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.
பிரச்சினையை பக்குவமாகக் கையாள நினைக்கும் பெண்வீட்டுத் தரப்பு, நேராக ஜெயம் வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லி கண்டித்து வைக்கச் சொல்கிறார்கள். பெண்ணை கொஞ்ச நாள் வெளியூருக்கு அழைத்துப் போய் வைத்திருந்து, மீண்டும் வருகிறார்கள். ஆனால் காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். தனத்தின் அண்ணன் பார்த்துவிட பிரச்சினை வெடிக்கிறது.
பெற்றோரின் வெறுப்பு தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறும் தனம், தன்னை அழைத்துப் போய் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள். குலசை தசரா விழாவில் வைத்து தாலி கட்டுகிறான் ஜெயம்.
அதற்குள் விஷயத்தை இருவீட்டாரும் அரசியலாக்கிவிடுகிறார்கள். ஜெயத்தின் அண்ணன் அசோக்கை, கட்சியின் அண்ணாச்சி அழைத்து எச்சரிக்க, பதிலுக்கு இவரும் கையை உயர்த்த, அது அசோக் கொலையில் முடிகிறது.
விஷயம் கேள்விப்பட்டு கதறிக்கொண்டு புது மனையியுடன் வீடு திரும்புகிறான் ஜெயம். அங்கே விதவை அண்ணி வெறுப்பை உமிழ, இன்னொரு பக்கம் காத்திருக்கும் தனத்தின் வீட்டினர், அவளை தரதரவென இழுத்துப் போகிறார்கள்.
ஜெயம் கட்டிய தாலி என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்!
ஜெயம் – தனம் திருமணம், அசோக் கொலை போன்ற சில காட்சிகள், திருப்பங்களை யூகிக்க முடிந்தாலும் எந்தக் காட்சியிலும், ‘அட இது சினிமாத்தனமா இருக்கே’ என்று சொல்ல முடியாததுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.
லகுபரன், ஸ்வாதி இருவருக்குமே இது முதல் படம் என்றாலும் நம்ப முடியாத அளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு இம்மி கூட மிகைப்படுத்தல் இல்லாத காதலையும் சோகத்தையும் திரையில் பார்ப்பது, நம்மை நாமே பார்த்துக் கொள்வதைப் போல புதிதாக உள்ளது.
தனத்தின் பெற்றோர், அந்த கிரிமினல் லாயர், அரசியல் அண்ணாச்சி, ஜெயத்தின் அண்ணி, குறிப்பாக அண்ணன் வேடத்தில் அசத்தியிருக்கும் தங்கசாமி என அனைவருமே நிஜ பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.
கதை புதிதில்லை… ‘காதல்’ போன்ற படங்களில் பார்த்ததுதான் என்றாலும், தினம் இப்படி ஒரு கதை, சம்பவங்கள் நடந்து கொண்டுதானே உள்ளன. அப்படிப் பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதே கூட திரும்பத் திரும்ப அரங்கேறிய நாடகம்தானே!
படத்தின் முக்கிய பலம் க்ளைமாக்ஸ். ஆனால் இன்னொரு பக்கம் இது சர்ச்சைக்குரியதும் கூட. பள்ளி வயதில் வரும் எல்லா காதலுமே மாறுதலுக்குட்பட்டது என்று சொல்ல முடியாதே. அந்தக் காதலின் தொடர்ச்சி அடுத்தக் கட்டத்துக்குப் போய், வாழ்க்கையில் இணைந்தவர்களை என்னவென்பது!
ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு, மனு ரமேசனின் இசை என தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் சோடை போகவில்லை. பின்னணி இசையில் மண்ணும் மனிதர்களின் மனமும் தெரிகிறது.
புதிய இயக்குநர்களில் தங்கசாமி நம்பிக்கை தரும் படைப்பாளியாகத் தெரிகிறார். வாழ்த்துகள்!
-எஸ் ஷங்கர்

கமல், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ரகசியம்!

13.08.2012.நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கமல்ஹாசன். “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…” பாடல் காட்சியை படம் பண்ணும்போது ஒரு ஷாட் எடுத்து விட்டு அடுத்த ஷாட்டிற்கு தேடினால் ஆள் இருக்கமாட்டான். சினிமா மீது அவருக்கு அப்பொழு‌தே ஆர்வம் அதிகம். அதனால் ஏ.வி.எம். ஸ்டுயோவிற்குள் இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் ஏதாவது ஒரு படத்தை பார்க்க பறந்திருப்பான். உள்ளே படவேலைகள் நடந்து கொண்டிருக்கும். ஏதாவது ஒரு படமோ, வி.ஐ.பி.களுக்காக திரையிடப்படும் ஒரு படத்தையோ பார்க்க குறிப்பிட்ட நபர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இருக்காது. அதனால் சிறுவன் கமல், ஆப்ரேட்டர் ரூமிற்குள் போய் அங்கு இருக்கும் துவாரங்களின் வழியாக படக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பான். அந்த கமலை அவரது சித்தப்பா சந்திரஹாசன்(சாருஹாசனின் தம்பி) தேடிக் கண்டுபிடித்து சூட்டிங் ஸ்பாட்டுகளில் கமலை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வார். சந்திரஹாசன் இருந்ததால், ஏ.வி.எம்., நிறுவனத்தில் பணிபுரிந்த எங்களுக்கு அந்த சிறுவனிடம் வேலை வாங்குபவது சுலபமாக இருந்தது.
அதேமாதிரிதான் நான் இயக்கிய கனிமுத்து பாப்பா படத்தில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய ஸ்ரீதேவியை பார்த்துக்கொண்டு, அவரிடம் வேலை வாங்கிய அவரது தாயார் ராஜேஸ்வரியம்மா. அதுபோல அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கிட்டத்தட்ட ரஜினி மகளாகவே வந்து போன மீனா, அவருடன் எஜமான் படத்தில் அவருக்கே ஜோடியாகவும் நடித்தார். மீனாவுக்கும் அவரது தாயார் ராஜமல்லிகா பெரும் உதவியாக இருந்தார். இதுதான் கமல், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்போது பெரிய நடிகர்களாக ஜொலித்தற்கு காரணமாக அமைந்தது.
இங்கு தாயுள்ளத்துடன் 85 குழந்தைகள் நடனம், அதுவும் பரதம் ஆட காரணமாக இருப்பவர் நிருத்திய தர்ஷன் டான்ஸ் அகடாமியின் குரு உஷா நாகராஜூ. மறைந்த நடனக் கலைஞர் சுந்தரம் அவர்களின் பேத்தியான உஷா நாகராஜூ, கடந்த 13 வருடங்களாக இப்படி ஒரு நடனப்பள்ளியை தொடங்கி பிரமாதமாக நடத்தி வருவதுடன் இதுமாதிரி குழந்தைகள் நடன நாட்டிய நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி வருவதால், பெற்றோர்களான நாமெல்லாம் பிள்ளைகளை அவரிடமே விட்டுவிட்டு நடனம் பயில செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்! இதுமாதிரி குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்லாது அதையும் தாண்டி நடனம், பாட்டு போன்ற பிற கலைகளிலும் ஆர்வம் காட்ட பெற்றோர்கள் உதவினால் அவர்கள் தப்பான வழிகளுக்கு போகும் எண்ணமே வராது. இங்கு ஆடிய குழந்தைகள் அனைவரும் தாளம் தப்பாமல், பிரமாதமாக பரதநாட்டியம் ஆடியதற்கு காரணமான உஷா மற்றும் அவரது நடன பள்ளி ஆசிரியர்களுக்கும் என் பாராட்டுக்கள் என்றெல்லாம் பேசியவர் பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற, அதுவும் மார்கழி இசை-நாட்டிய விழாவாக நடைபெற்ற இவ்விழாவில் காமராஜ் மற்றும் முதல்வர் மகாத்மா படங்களில் காந்தியாக நடித்திருக்கும் காந்தி கனகராஜ்! உரத்த சிந்தனை ஆசிரியர் உதயன்ராம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு நிருத்திய தர்ஷன் டான்ஸ் அகடாமியின் 12வது ஜூனியர் ஆண்டு விழாவில் ஆடிய குழந்தைகளை வாழ்த்தி பரிசளித்தனர். விழாவின் இறுதியின் உஷா நாகரஜூ நன்றி கூறினார்

ஸ்ருதி ஹாசனின் கையில் காதல் சின்னம்

13.08.2012.காதல் சின்னத்தை தன் கையில் டாட்டூவாக வரைந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
பிரபு தேவா பெயரை தனது கையில் டாட்டூவாக போட்டுக் கொண்டார் நயன்தாரா.
அவரைத் தொடர்ந்து பாலிவுட் காதலன் பிரதீக் பெயரை மதராசபட்டினம் கதாநாயகி எமி ஜாக்ஸன் பச்சை குத்திக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசனும் காதலின் சின்னமான ரோஜா மலரை கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்.
டோலிவுட்டில் அவர் நடித்த கப்பர் சிங் படம் ஹிட்டானதை தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
இது பற்றி ஸ்ருதி ஹாசன் கூறுகையில், மக்களுக்கு பயனுள்ள பொருட்கள் பற்றிய விளம்பரங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஒரு பெண் என்ற முறையில் நானும் நிறைய சேலை வாங்குவேன்.
அதனால் தான் சேலை மற்றும் நகை விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறேன்.
ஏனென்றால் ஒரு பொருள் பற்றிய விளம்பரத்தில் நடிக்கும் போது அந்த பொருள் வாங்க நினைக்கும் மக்களுக்கு பிரபலங்கள் நடிக்கும் பொருட்கள் தான் முதல் சாய்ஸாக இருக்கும்.
என் கையில் ரோஜா டாட்டூ வரைந்திருப்பது பற்றி கேட்கிறார்கள். எனக்கு ரோஜா பூ ரொம்ப பிடிக்கும். பெண்மையை குறிக்கும் பூ என்பதால் அதை வரைந்தேன்.
மற்றபடி காதலின் அடையாளமாக இதை வரையவில்லை. இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கிறேன். அவரை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும். புதிய பட குழுவினருடன் இப்படத்தில் பணியாற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார்

’மனைவியாக இருக்க விருப்பமில்லை’ – சினேகா அதிரடி!

13.08கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) ”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் நடந்தது. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா, கார்த்திகா நாயர், அஜ்மல், மகத், லட்சுமிராய் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
சினேகாவும் பிரசன்னாவும் சென்ற வருடமே இவ்விழாவில் கலந்துகொண்டு ஜோடியாக நடந்துவந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்போது காதல் இருந்தது யாருக்கும் தெரியாது. புதுமணத்தம்பதிகளான சினேகாவும்-பிரசன்னாவும் ஆடி மாதமென்பதால் பிரிந்திருப்பது அனைவரும் அறிந்ததே.
இருவரும் பிரிந்திருக்கும் இந்த சமயத்தில் சினேகா ”எனக்கு பிரசன்னாவுடன் மனைவியாக இருக்க விருப்பமில்லை” என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளும் சினேகாவின் பதில்களும் :-
“போன வருடமும் நீங்கள் பிரசன்னாவுடன் ஜோடியாக நடந்து வந்தீர்கள். இப்போது கணவன் மனைவியாக நடந்து வரும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?”
போன வருஷம் நாங்க இந்த நிகழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்.
“பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?”
பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்.
“கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்துல நீங்க இரெண்டு பேரும் ஜோடியா சிறப்பு தோற்றத்துல நடிக்கிறதா பேசிக்கிறாங்களே?”
அதுபற்றி இன்னும் முடிவாகல. பேசிகிட்டு இருக்கோம். முடிவு எடுத்ததும் கண்டிப்பா சொல்றேன்.2012.

கணவனின் 3வது திருமணத்தை நிறுத்திய 2வது மனைவி

13.08.2012.ஏற்கெனவே திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் மனைவி. திருமணத்தை நிறுத்திய போலீஸார், தொடர்புடைய நபர் மற்றும் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சண்முக குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது 28). இவரது கணவர் ஊமைத்துரை. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஏற்கெனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிரச்னை ஏற்பட்டுப் பிரிந்தவர் 2வதாக சண்முகத் தாயை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2009 ல் வெளிநாடு சென்று திரும்பியவர், தன் மனைவி மீது சந்தேகப் பட்டார்.
இதனால் தனியாக இருந்தவர், முதுகுளத்தூர் கீழச்செல்வனூர் சாத்தன் மகள் நாகஜோதியை 3வதாக திருமணம் செய்ய முயன்றார். அதன்படி, அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. 25.04.2012 அன்று காலை திரு உத்தரகோசமங்கை கோயிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் சண்முகத்தாய் அங்கே சென்று நியாயம் கேட்டுள்ளார். அவரை மற்றவர்கள் அடித்து உதைத்து திருப்பி அனுப்பியுள்ளனர். அதனால் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற சண்முகத்தாய், ஊமைத்துரை மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் கொடுத்தார்.
இதனால், கோயிலுக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர் போலீஸார். போலீஸார் அங்கே வருவது தெரிந்ததும், திருமணத்துக்கு வந்திருந்த பலரும் தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர் ஊமைத்துரை, அவரது பெற்றோர், மணப்பெண் நாகஜோதி, அவரது பெற்றோர் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் போலீஸார்

மன்னாரில் இருந்து “யம்மா யம்மா காதல் பொன்னம்மா” (வீடியோ இணைப்பு)

13.08.2012.
யம்மா யம்மா காதல் பொன்னம்மா என்ற பாடலை மன்னாரில் இருந்து இளைஞர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர்.


       

தெனாலிராமனாக வருகிறார் வடிவேலு!

13.08.2012.அரசியல் புயலில் சிக்கியதால், சில காலம் சினிமாவை விட்டே ஒதுங்கிய வைகைப் புயல் வடிவேலு, மீண்டும் களத்தில் குதிக்கப் போவதாக சொல்கிறார். அடுத்து சினிமாவில் நடித்தால், ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை வைத்து, “இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தை இயக்கிய சிம்புதேவன், ஏற்கனவே ஒரு, “ஸ்கிரிப்ட் தயார் செய்து, அதை படமாக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில், தற்போது புதுமுக டைரக்டர் ஒருவர், “தெனாலிராமன் என்ற தலைப்பில், ஒரு கதை சொன்னார். ரொம்ப அருமையாக இருந்தது. அதனால், அந்த படத்திலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளேன். வெகு விரைவிலேயே, இந்த படங்களில் நான் நடிப்பது குறித்த செய்திகள் வெளியாகும். இவ்வாறு கூறியுள்ளார் வடிவேலு

சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் நடிக்கும் 21ம் நூற்றாண்டின் காதலைச் சொல்லும் படம் – நந்தனம்

13.08.2012.சுபா கிரியேசன்ஸ் எஸ். தங்கராஜ் தயாரிக்க… N. C . ஷியாமளன் இயக்கத்தில் செவாலியே சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் – மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்.

காதல் பலவிதத்தில் சினிமாவில் கையாளப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும்…என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம்தான் நந்தனம்.

இன்றைய பெண்களும் சரி பசங்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு மென்மையான காதலை அழகான நேர்த்தியுடன் சிற்சில திருப்பங்களுடனும், இறுதியில் சொல்லப்பட்டிருக்கும் தீர்வும் இன்றைய காதலர்கள் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

செவாலியே சிவாஜியின் பேரன். சிங்கக்குட்டி படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்டவர் சிவாஜி தேவ். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்து அழகு பார்க்கப்பட்டவர். ராம்குமார் அவர்களின் புதல்வன். சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவரின் அடுத்த படம் நந்தனம். நந்தனம் தனக்கு ஒரு காதல் நாயகன் அந்தஸ்த்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார் சிவாஜி தேவ்.

காவலன் நாயகி மித்ரா காவலனுக்குப் பிறகு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தவர் இதன் கதையில் ஒன்றி நடிக்க ஒப்புக்கொண்டார்.

மற்றொரு கதாநாயகனாக கையில் ஒரு கோடி ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க, ஈசனுக்குப் பிறகு ஒரு மிரட்டலான கதா பாத்திரத்தில் நடிக்கிறார் ஏ. எல் அழகப்பன். ஆர் பாலு, ஏ. வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த என். சி. ஷியமலன் முதன்முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி அறிமுகமாகிறார்.

முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச் சி எல் போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில் அனுமதி பெற்று நடைபெற்றது. அன்வர் படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். ஆறு பாடல்கள் படமாக்கப்பட்டு வருகிறது. எல். மோகன் ஒளிப்பதிவு செய்ய, வி. டி. விஜயன் எடிட்டிங் செய்ய சங்கர்தாசின் தயாரிப்பு மேற்பார்வையில் நந்தனம் வேகமாக வளர்ந்து வருகிறது

கொழும்பு கல்கிஸையில் விபசார விடுதி முற்றுகை! அறுவர் கைது!

13.08.2012.விபசார உலகின் முக்கிய தளமாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றதோ என்ற கவலை பலரின் மனதில் எழுந்துள்ளது.

காலி வீதி கல்கிஸ்ஸையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த விபச்சார விடுதியை இயக்கியவரும் அதில் விபச்சாரிகளாக தொழில் புரிந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் பெற்றுக் கொண்ட உத்தரவு ஒன்றிற்கு அமைய நேற்று (11) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஏழு பேரும் கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின் இன்று (12) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

ரூ.5 ஆயிரம் கோடியில் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஹெலிகொப்டர்கள் வாங்க திட்டம்


13.08.2012.

இந்திய கடற்படையை நவீனமயமாக்கும் நோக்கத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 900 ஹெலிகொப்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலக அளவில் ஹெலிகொப்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் போயிங், பெல், சிகோர்ஸ்கை, காமோவ், ஈரோகாப்டர், அகஸ்டர் வெஸ்ட்லேண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இதற்கான டெண்டருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டரின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாகும். முதற்கட்டமாக ரோந்து பணி, தீவிரவாத எதிர்ப்பு, நிவாரண பணி, நீர்மூழ்கி கப்பல் அழிப்பு பணி மற்றும் உளவுப்பணிக்காக 56 ஹெலிகொப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
56 ஹெலிகொப்டர்களுடன் 28 ஸ்பேர் இன்ஜின்கள், பயிற்சி அளிப்பதற்கான சிமுலேட்டர்கள் 3 வழங்க வேண்டும் என டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக கடற்படை தலைவர் நிர்மல் வர்மா தெரிவித்துள்ளார்

நல்லூர் திருவிழாவுக்கு வந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

13.08.2012.

 நல்லூரில் நேற்று நடைபெற்ற கைலாசவாகனத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வரணியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

நேற்றுமாலை 4 மணியளவில் மட்டுவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்தாருடன் வந்துகொண்டிருந்த வேளை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் அதன் சில்லுக்குள் அகப்பட்டு குறித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் திருகோணமலை கக்விசன் வீதியைச் சேர்ந்த திருகோணமலை பிரதேச செயலகத்தில் எழுதுநராகப் பணியாற்றும் திருமதி செந்தில்நாதன் வைதேகி (வயது37) என்ற குடும்பப் பெண்ணே பலியானவர் ஆவார்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்த ஹன்ரர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்ட வேளை வாகனத்திச் சில்லுக்குள் அகப்பட்டே இவர் மரணமாகியுள்ளதாகவும் இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரது கணவன் மற்றும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தமிழர் காவியம் படைக்காமல் ஓயேன்; வைரமுத்து சபதம்

13.08.2012.

 
கவிஞர் வைரமுத்து எழுதிய "மூன்றாம் உலகப் போர்'' என்னும் நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அவர் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அது அவர்களின் பிரச்சினைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கடந்த 4 ஆம் திகதி தேனியில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் என்னும் நூல் திறனாய்வு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விழாவில் அடுத்துப் பேசிய கம்பம் செல்வேந்திரன், மூன்றாம் உலகப் போர். இது கவிஞரின் 36ஆவது நூல்.

புத்தகமாக வெளிவந்த மூன்று மாத காலத்திற்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. எனவே, கபிலன் வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து, ஈழத் தமிழர் காவியம் படையுங்கள் என்று தன் பங்குக்கும் வேண்டுகோள் வைத்தார்.

இவ்விழாவில் இறுதியாக உரையாற்றிய கவிஞர் வைரமுத்து எல்லோரும் மகனிடம்தான் வேண்டுகோள் வைப்பார்கள். ஆனால், என் மகன் என்னிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறான். நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போகமாட்டேன் என்றார்

20000 பொலிஸார் பாதுகாப்பில் மூன்று மாகாண சபைத் தேர்தல்

13.08.2012.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் செயலகத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
குறித்த மாகாணங்களில் தேர்தல் தொடர்பில் சிறிய சம்பவங்கள் சிலவே பதிவாகியுள்ளதுடன், பாரிய வன்முறைகள் நடைபெற்றதாக எந்த ஒரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும் தேர்தல் நடவடிக்கைகள் இதுவரை அமைதியாகவே காணப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
 

.பிறமாவட்டங்களுக்குச் செல்லும் அரச பஸ்களில் உள்ளூர் பயணிகள்; இ.போ.ச. வடபிராந்திய

13.08.2012. 

 
 யாழ். நகரிலிருந்து பிறமாவட்டங்களுக்குச் செல்லும் அரச பஸ்களிலும் சரி பிறமாவட்டங்களிலிருந்து யாழ். நகருக்குவரும் அரச பஸ்களிலும் சரி உள்ளூர் பயணிகள் பயணிக்கமுற்பட்டால் அவர்களை ஏற்றிச் செல்லல் வேண்டும்.

பயணிகளை ஏற்றாமல் சென்று அவர்களுக்கு போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடாது என்று இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்ஹர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ்ப்பாணத்துக்கும் கொடிகாமத்துக்கும் இடையிலான அரச பஸ் போக்குவரத்துப் பணி திருப்திகரமாக இல்லை. அதனால் இடையூறுகளை எதிர்கொள்வதோடு அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் எனப் பலரும் நேர தாமதமாகவே உரிய இடங்களுக்குச் செல்ல வேண்டியநிலை ஏற்படுகிறது.

காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் இரண்டு இடங்களுக்குமான போக்குவரத்தும் குழப்ப நிலையிலுள்ளது. சிலவேளைகளில் பஸ்கள் பணியில் ஈடுபடுவதில் குறித்த நேர முகாமைத்துவம் பின்பற்றப்படுவதில்லை. அதனால் தாம் பாதிக்கப்படுவதாக பயணிகள் முறையிட்டுள்ளனர்.

பஸ்ஸுக்காக காத்திருக்கும் போதுகாலையில் பிறமாவட்டங்களிலிருந்து யாழ். நகருக்கு வரும் அரச பஸ்கள் அநேகமானவை உள்ளூர்ப் பயணிகளை ஏற்றாமல் பயணிக்கின்றன.'
பஸ்கள் பயணிகளை ஏற்றாமலேயே செல்கின்றன.

அதேபோன்று யாழ். நகரில் இருந்து கொடிகாமத்துக்கான இரவு நேர பஸ்சேவை உரிய முறையில் இடம்பெறவில்லை. அவ்வாறு பணிக்கு விடப்படும் பஸ்கள் உரிய நேரத்துக்குப் புறப்படுவதில்லை என்றும் முறைப்பாடு கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் பிறமாவட்டங்களில் இருந்து வரும் அல்லது பிறமாவட்டங்களுக்குச் செல்லும் அரச பஸ்கள் உள்ளூர் பயணிகளையும் ஏற்ற வேண்டும் என்று மேலும் கூறினார்

படையினரின் ஆதரவுடனேயே வேட்பாளர்கள் மீது தாக்குதல்; அரியநேத்திரன் குற்றச்சாட்டு

13.08.2012.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தோருமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

 இவர்களின் அச்_றுத்தல் நடவடிக்கைகளுக்கு படையினரும், பொலிஸாரும் ஆதரவாக உள்ளனர். இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

அத்துடன், நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வன்முறையற்ற சுதந்திரமான ஒரு தேர்தலாக நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையாளரும் பொலிஸாரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இல்லத்தில் நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆட்கள் இருக்கின்றனர்.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தோல்வியை சந்திக்கவுள்ள இவர்கள், எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முதல்நாள் எமது தலைமை வேட்பாளர் துரைராஜசிங்கத்தின் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதிலிருந்து இதுவரைக்கும் 9 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
 
எமது கட்சி வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும்போதே அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கான  துண்டுப்பிரசுரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எமது கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாளர் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆட்கள் இருக்கின்றனர். இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக படையினரும் உள்ளனர்.

இவர்களின் இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு நாங்கள் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை சகிக்கமுடியாத இவர்கள் இதனைச் செய்கின்றனர் என்றார் அவர்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா சீ.யோகேஸ்வரன் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

போர்க் குற்றவாளிகள் மீது உடன் நடவடிக்கை தேவை

13.08.2012.இலங்கையில் நடந்தேறிய இறுதிப்போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இவ்வாறு சென்னையில் நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:

 * இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

 * தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்

 * இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது       ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்

 * இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்

 *இன்றைய இலங்கையில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இராணுவ முகாமாக காட்சியளிக்கிறது இன்றைய தமிழீழம். எனவே தமிழர் பகுதிகளில் வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்

 *தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப இலங்கை அரசை ஐ.நா. வலியுறுத்த வேண்டும்
 அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை   செய்வதில் ஐ.நா. அகதிகள் சபை தலையிட வேண்டும்

 *இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது  அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்

 *அகதிகள் தொடர்பான ஐ.நா. வின் ஒப்பந்தத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்

 *ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் .ஈழத் தமிழர்  பிரச்சனை தெற்காசிய பிரச்சனையாக அறிவிக்கப்பட வேண்டும்

 *தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை  செய்யப்பட வேண்டும்

 *தமிழக மீனவர் படுகொலைக்கு முடிவுகட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்
 தமிழகத்தின் மண்டபம் அல்லது தனுஷ்கோடியில் இந்திய கடற்படை முகாம் அமைக்க  வேண்டும்

 *தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை கண்காணிக்க பன்னாட்டுக் குழு அமைக்க வேண்டும்.

 *இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது
 டெசோ மாநாட்டில் பங்கேற்போரை கண்காணிப்போம் என்ற இலங்கை அரசின் மிரட்டலுக்கு கண்டனம்

 *டெசோ மாநாட்டுக்கு தடை விதித்து இடையூறு செய்த அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம்
 என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன