siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்


வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,
 
கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் ஏலத்தில் வெள்ளைப்பூண்டு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்த வர்த்தகரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகரை விடுதலை செய்ய ஐம்பது லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. எனினும் கப்பமாக கோரப்பட்ட பணத்தில் ஏற்கனவே 30 லட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளைப்பூண்டு கொள்கலனை 15 லட்ச ரூபாவிற்கு குறித்த வர்த்தகர் ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.
இவ்வாறு துறைமுகத்தில் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மீள் ஏலத்தில் விட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுவினர் இவ்வாறு மீள் ஏலத்தை நடத்தி வருகின்றனர். மீள் ஏலத்தில் பொருட்களை கொள்வனவு செய்வோரே அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். மீள் ஏலத்தில் ஈட்டப்படும் வருமானத்தை பாதாள உலகக் குழுவினர் பெற்றுக் கொள்வர்.
மாளிகாவத்தை போதிராஜா மாவத்தைக்கு அருகாமையில் வெள்ளைப்பூண்டு கொள்கலன் மீள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திலும் குறித்த தமிழ் வர்த்தகரே அந்த வெள்ளைப்பூண்டு கொள்கலனைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதற்காக அவர் ஏழரை லட்ச ரூபா மேலதிகமாக ஏலம் கோரியுள்ளார். ஏழரை லட்ச ரூபா பணம் கையில் இல்லாத காரணத்தினால் பணத்தை எடுத்து வரச் சென்ற போது இனந்தெரியாத நபர்கள் கடத்தியுள்ளனர்.
கடத்தப்பட்ட வர்த்தகர் கப்பத் தொகையை குறைக்குமாறு விடுத்த கோரிக்கையை கடத்தல்காரர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி, குறித்த கப்பத் தொகை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வர்த்தகர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடத்தலில் ஈடுபட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

திருகோணமலை ஆண்டான்குளம் பகுதியில் நில அபகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்



வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,


திருகோணமலை ஆண்டான்குளம் பகுதியில் உள்ள மக்கள், திட்டமிட்டு தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மிகந்தபுர சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறிப்பிட்ட சில குழுவினரால் போலியான காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, தங்களது சொந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு தவறும் பட்சத்தில், சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பகுதியில் 154 குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்த நிலையில் இந்த பகுதியில் தமது காணிகள் உள்ளன என்பதற்கு ஆவனங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் 15,000 சிறைக் கைதிகள்!



வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,


இலங்கையில் தண்டப்பணம் செலுத்த முடியாத 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறைவாசம் அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் துறை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் பல்வேறு சிறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டவர்கள் பலரால் அதனை செலுத்தமுடியவில்லை.

அவ்வாறான 15, 336 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது சிறையில் உள்ள மொத்த கைதிகளில் அறைவாசி பங்கு என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குற்றச்சாட்டின் கீழேயே இலங்கையில் அதிகமான சிறைக்கைதிகள் சிறையில் இருப்பதாகவும் சுட்டிக்காப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானியக் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை

வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012
இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பிரித்தானியா, மிகவும் அவதானமாக இருக்கும்படி புதிய பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்தப் பயண எச்சரிக்கைக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுற்றாலும், இலங்கயில் தேசியவாதம் எழுச்சி கண்டுள்ளது. இதன்விளைவாக, மேற்குலக எதிர்ப்பு- குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பு வாதம் வலுவடைந்துள்ளது.

இது பிரித்தானியத் தூதரகம் மற்றும் ஏனைய இராஜதந்திர சுற்றுப்புறங்களில் எதிர்ப்பு வன்முறை போராட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தப் போராட்டங்கள் பொதுவான பிரித்தானிய சமூகத்தை நோக்கியதாக இருந்தாலும், நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதும்,இலங்கை அரசாங்கம் பரந்தளவிலான தீவிரவாத எதிர்ப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதுடன், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளது.
அதிகளவிலான இராணுவத்தினர் நாடுமுழுவதிலும் நிலை கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறைந்த விலையில் இனி எச்.ஜ.வி நோயிலிருந்து விடுதலை பெறலாம்

16.08,2012.எச்.ஜ.வி(HIV) நோய் குறித்து பேசல்(Basel) பல்கழைக்கழகம் தற்போது ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆய்வில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய மருந்துக்களை நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்துவதால், நோய்கள் சமநிலையில் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளன.
எச்.ஜ.வி வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து 90சதவீதம் குணமடைந்திருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
எச்.ஜ.வி நோயினால் பாதிக்கப்பட்ட 2005 முதல் 2009 ஆண்டு வரை உள்ள 16000 நோயாளிகள் இந்த ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் மது அருந்தியவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் என எச்.ஜ.வி நோயுடன் சேர்த்து மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து நீக்கப்பட்டனர். முற்றிலும் எச்.ஜ.வி வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என 1957 பேர் மட்டும் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதலில் ரெட்ரோ வைரஸ்(antiretroviral therapy) சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை சுவிஸ்சட்லாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பல்கழைக்கழகங்களான பேசல், பெர்ன், ஜெனிவா, லாசென், லுகான்னோ, செட் கெலென் மற்றும் சூரிக்ச் (Basel, Bern, Geneva, Lausanne, Lugano, St Gallen and Zurich) ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் நோயிலிருந்து 90 சதவீதம், அனைத்து நோயாளிகளும் குணமடைந்திருப்பதாக சர்வதேச மருத்துவ காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆய்வின் தலைவர் பேட்டிகே (Manuel Battegay) கூறுகையில், முந்தைய ஆய்வுகளை விட தற்போதைய ஆய்வு நல்ல பலனை தந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அதிக விலை கொடுத்து வாங்கும் மருந்துக்களின் அதே பலனை இந்த பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய மருந்துக்கள் குறைந்த விலையில் தருகின்றன.
இதனால் அனைத்து வகுப்பினராலும் மருந்துகளை வாங்கவும் நோயிலிருந்து குணமடையவும் இந்த ஆய்வு உதவுகிறது என தெரிவித்துள்ளார்