siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

யாழ்ப்பாணத்தைப் பார்க்கப் போனவர்களின் எண்ணிக்கை 12.5 மில்லியன்

31.08.2012.BY.rajah
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் 12.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
2009 ஜுலை மாதத்துக்குப் பின்னரே, 12.5 மில்லியன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
இந்த மாதத்தில் [ஓகஸ்ட்] மட்டும் சுமார் 1இலட்சம் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
கடந்த வாரம் வரையில் யாழ்.நகருக்குள் 10 ஆயிரம் வாகனங்கள் நுழைந்துள்ளன.
இந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்ததற்கு பாடசாலை விடுமுறை, நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா என்பனவே காரணம் என்று சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் காரைநகர் கசூரினா கடற்கரை, கீரிமலை, யாழ் நூலகம். யாழ்.கோட்டை, யாழ்.தொடருந்து நிலையம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு விரும்புகின்றனர் என்றும் சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.
அதேவேளை, வெளிநாட்டுக் கடவுச்சீட்டைக் கொண்டுள்ள 31,500 பேர் இந்த ஆண்டில் மட்டும் வடபகுதிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்கிலீஷ் விங்கிலீஷ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஸ்ரீதேவி

 Friday, 31 August 2012, BY-rajah.
பாலிவுட்டில் உருவான இங்கிலீஷ் விங்க்லீஷ் படம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் விரைவில் வெளியாகிறது.
இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி இதில் இல்லத்தரசியாக நடித்துள்ளார்.
கொலிவுட் பட நடிகை ப்ரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் வருகிறார். பாலிவுட் நட்சத்திர நாயகன் அமிதாப் பச்சன், தல அஜித் இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்கள்.
படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். கெளரி ஷிண்டே படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை பிவிஆர் திரையரங்கில் இங்கிலீஷ் விங்கிலீஷ் பட ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தயாரிப்பாளர்- பாலிவுட் இயக்குனர் பால்கி, ஸ்ரீதேவி, படத்தின் இயக்குனர் கௌரி ஷிண்டே, ப்ரியா ஆனந்த் ஆகியோர் படத்தை பற்றி பேசினர்.
ஆங்கிலம் தெரிந்தவர்களை சமூகம் மேலானவர்களாக பார்க்கிறது. ஆங்கிலம் தெரியாதவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். ஆங்கிலம் தெரியவில்லையே என்று நினைப்பவர்களை பற்றிய படம் இது என்று குறிப்பிட்டார் தயாரிப்பாளர் பால்கி.
ப்ரியா ஆனந்த் கூறுகையில், நான் ஸ்ரீதேவி அம்மாவின் ரசிகை. அவருடைய நடிப்பை பார்த்து வியந்துள்ளேன். அவருடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.
படத்தின் நாயகி ஸ்ரீதேவி கூறுகையில், பல வருடங்களுக்கு பிறகு நான் நடித்த படம் இந்தி, தமிழ் மொழிகளில் வெளியாகிறது. பால்கியின் தயாரிப்பில் முதன் முதலாக பெண் இயக்குனர் கெளரி ஷிண்டே உடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்தப்படம் எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
நான் தொடர்ந்து தமிழ் படங்களை ரசித்து வருகிறேன். தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்ததை என்னால் எப்போது மறக்க முடியாது.
தமிழில் நல்ல கதை, பொருத்தமான கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன். ரஜினி, கமல்ஹாசன் இருவருடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

14 வயது சிறுவனுடனான உறவின் மூலம் குழந்தை பெற்ற 20 வயது பெண்

31.08.2012.BY-rajah.
அமெரிக்காவில் 14 வயதுப் சிறுவனுடன் உறவு வைத்தது மட்டுமன்றி அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த 20 வயதுப் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பெண்ணின் பெயர் பிரிட்டானி வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த குழந்தையை தற்போது பிரிட்டானியின் தாயார் பராமரித்து வருகிறார்.
ட்ந்
சம்பந்தப்பட்ட சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அந்தப் பையனுடன் பிரிட்டானி கடந்த டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் உறவு வைத்து வந்துள்ளார். இருவரும் விருப்பத்துன்தான் உறவு கொண்டுள்ளனர். தனது வீட்டுக்கு அருகில்தான் இருவரும் தனிமையில் சந்தித்து உறவு கொண்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது அந்தப் பையன் கூறுகையில்,எனது சம்மதத்துடன்தான் இந்த உறவு நீடித்தது. இருவரும் மனம் ஒத்துப் போய்தான் இதில் ஈடுபட்டோம். பிரிட்டானி கர்ப்பமடைந்தது எனக்குத் தெரியும். அவர் வைத்தியரிடம் சென்றபோது நானும் உடன் போனேன் என்று கூறியுள்ளான்.

சம்மதத்துடன் நடந்த உறவு என்றாலும் கூட பென்சில்வேனியா சட்டப்படி சிறுவனுக்கு 14 வயதுதான் ஆகிறது என்பதால் இதை சட்டப்படி ஏற்க முடியாது என்பதால் பிரிட்டானி கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர் சிறிலங்காக் கடற்படையினரால் கைது

31.08.2012.BY-rajah.கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர்கள் சிறிலங்காக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ம் நாள் முதல் நேற்று வரையான காலப்பகுதியில், சிறிலங்காக் கடற்படையினரால் 468 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கடந்த 25ம் திகதி, திருகோமலைக் கடற்பரப்பில் வைத்து 65 தமிழர்கள் 36 சிங்களவர்களும், வடக்கு கடற்பரப்பில் மணற்காடு பகுதியில் 19 தமிழர்கள், இரண்டு சிங்களவர்கள் என மொத்தமாக 122 பேர்களும்,

26ம் திகதி கிழக்கு கடற்பரப்பில் வைத்து 52 தமிழர்களும், 28ம் திகதி பேருவள கடற்பரப்பில் 64 தமிழர்களும் 02 சிங்களவர்களும் சிலாபம் கடற்பரப்பில் 59 தமிழர்களும், 22 சிங்களவர்களுமாக மொத்தம் 147 பேர்களும்,

நேற்றுமுன்தினம் வடக்கில் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 60 தமிழர்களும் ஒரு சிங்களவரும், அதேநாள் கிழக்கு கடற்பரப்பில் வைத்து 57 தமிழர்களும், 4 சிங்களவர்களும், ஒரு முஸ்லிமுமாக மொத்தம் 123 பேர்களும்,

நேற்றையதினம், மட்டகக்ளப்பில் 24 பேருமாக இதுவரை கடந்த வாரத்தில் மட்டும் 468 பேர்கள் தம்மால் கைது செய்யப்பட்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை குறிப்பிட்டுள்ளது

இராணுவத்திடம் சிக்கிய கிளிநொச்சி முருகன்! தீர்த்தோற்சவத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் மக்கள் விசனம் { புகை படங்கள் இணைப்பு

 
 

வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.

 
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்த்தோற்சவம். இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற முன்னான காலங்களில் கந்தப்பெருமான் தீர்த்தம் ஆடுவதற்கு பரிவாரமூர்த்திகள் சூழ, பிரதான வீதியூடாக புறப்பட்டு கரடிப்போக்கு சந்தியில் மூன்றாம் வாய்க்கால், புரவிப்பாஞ்சான் ஊடாக சென்று கிளிநொச்சி குளத்தில் தீர்த்தம் ஆடுவது வழக்கம்.

தற்போது பரவிப்பாஞ்சான் கிராமம் முற்றுமுழுதாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த நிலையில் இன்று கிளிநொச்சி கந்தப்பெருமான் பரவிப்பாஞ்சான் ஊடாக சென்று
தீர்த்தம் ஆடுவதற்கு இராணுவத்தோடு கலந்துரையாடப்பட்டு ஏற்பாடாகியது.
ஆனால் தீர்த்தோற்சவத்திற்கு கந்தப்பெருமான் கோவில் வாசலில் புறப்பட்டு பொழுதிலேயே எங்கும் இராணுவப் பச்சையே நிறைந்திருந்தது. முருகப்பெருமான் இராணுவத்தால்
சூழப்பட்டிருந்தார்.
பார்க்க மிகவும் அசிங்கமான தோற்றமாக காணப்பட்டது. இந்து சமய கோவில் பண்பாடுகளையே அசிங்கப்படுத்துவதாக அமைந்தது. எண்ணற்ற எமது மக்களை கொன்ற கொலை பாதகர்கள் முருகப்பெருமானின் திருத்தலத்தையும் அசிங்கப்படுத்தினர்.
ஏராளம் பேர் இன்று முருகப்பெருமானின் பின்னால் சென்ற தீர்த்தமாட செல்வதற்கு தயாராக இருந்தபோதும் தங்கள் பெண் பிள்ளைகளின் நலன்கருதி செல்லாது தவிர்த்துக் கொண்டனர்.
கந்தப்பெருமான் முன்பு பல தடவை பல்வேறு காரணங்களுக்காக கோவில் கிணற்றில் தீர்த்தமாடியதை சிலர் நினைவு கூர்ந்தனர். பல பக்தர்கள் விசனப்பட்டனர்.
இந்து சமயம் தொடர்பாக இருக்கின்ற அமைப்புகள் இந்து ஆலயங்களில் இராணுவத்தரப்பால் செய்யப்படுகின்ற அசிங்கங்கள் பற்றி கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எதுவுமற்று கோவில் பண்பாடு சீரழிந்து வருகின்றது.
கிளிநொச்சி முருகன் ஆலயத்திலும் கோவிலுக்கு நமது பெண்கள், ஆண்கள் எப்படி வரவேண்டுமென்று பிரசங்கம் பண்ணியவர்களுக்கும் ஆறுமுகநாவலரைப் பற்றி வரலாறு சொல்கின்றவர்களும் கந்தப்பெருமானின் தீர்த்தோற்சவத்தில் இராணுவ சீருடையுடன் நிரம்பி வழிந்த படையினர் தொடர்பாக என்ன சொல்லப் போகிறார்கள்.
புத்த கோவிலுக்குள் இவர்கள் இப்படி நாகரிகமற்ற முறையில் செல்வார்களா! என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க இந்திய கடலோர கண்காணிப்பு

 
 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.
இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு புதிதாக ராஜ்கிரன் என்ற கண்காணிப்பு கப்பல் அறிமுக விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடல் வழியாக கடத்தல், அன்னிய நாட்டு மோசடிகளை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் இலங்கை கடற்படையிடமிருந்து இந்திய மீனவர்கள் நலன் காத்தல் போன்ற பணிகளில் கடலோரகாவல் படை ஈடுபட்டு வருகிறது.
இந்த பணிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புதிய கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
ராஜ்கிரண் என்ற பெயர் கொண்ட புதிய கப்பலை கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் உலக தரத்துக்கு வடிவமைத்துள்ளது.
50 மீட்டர் நீளமும், 300 டன் எடையும் கொண்ட ராஜ்கிரண் கப்பல் மூலம் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையிலும் பணி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
பொதுவாக, 16 கடல் மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த கண்காணிப்பு கப்பல் இலங்கை கடல் எல்லை உள்ளடங்கலாக, 1500 கடல்மைல் பரப்பளவு உள்ள பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு

 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY.rajah.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
மேலும் தோட்டாக்கள் தாக்கியதில் சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னல்கள் நொறுங்கின. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொலிசார் சூப்பர் மார்க்கெட்டை சுற்றி நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கியுடன் வந்த மர்ம ஆசாமி உள்ளிட்ட 3 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

செவிப்பறை வெடித்து இளைஞன் பலி : ஹெட் போனால் வந்த வினை

31.08.2012.BY-rajah.
நற்பிட்டிமுனையில் கடந்த புதன்கிழமை (29.08.2012) இரவு ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் செவிப்பறை வெடித்து உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அகமட் லெப்பை ரிப்னாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் தனது லெப்டொப்பில் ஹெட்போனூடாக பாடல் கேட்டுக்கொண்டு வேலை செய்துகொண்டிருந்துள்ளார். பின்னர் ஹெட் போனுடேயே உறங்கியிருக்கிறார்.

மறுநாள் காலையில் சில மணிநேரம் கழித்தும் அறையிலிருந்து எழுந்து வெளியே வராமையினால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது காதில் இரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்

அடியவர்களின் குறை தீர்க்கும் சந்நிதியான்[ புகை படங்கள் இணைப்பு ]

31.08.2012.BY-rajah.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ செல்வச்சந்நிதி முருகன் தேரேறி வந்தான்!  
வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 14ம் நாளான நேற்று வியாழக்கிழமை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் வடம்பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம்வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அடியார்களின் இன்னல்களை அழிக்கும் அன்னதானக் கந்தன் அலங்காரத்துடன் ரதோற்சவத்தில் வலம்வந்த காட்சிகள் இதோ!
என்றும் நின்மதி தரும் சந்நிதி முருகன் அனைவர்க்கும் என்றும் அருள் புரிவர் ஓம் சரவணபவ ஓம் சாந்தி நவட்கிரிஇணையம்