Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 3 செப்டம்பர், 2012

குடும்பத் தகராற்றினால் குடும்பத் தலைவர் தற்கொலை

03.09.2012.BY.rajah.
கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராற்றின் காரணமாக குடும்பத் தலைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்டத்தரிப்புப் பகுதியில் நேற்று முந்தினம் இடம் பெற்றுள்ளது.

பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான சுந்தரமூர்த்தி புஸ்பராசா (வயது 40) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் நஞ்சருந்திய நிலையில் சங்கானை வைத்திய சாலையில் நேற்று முந்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர் வண்டிக் கட்டண உயர்வால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது

03.09.2012.BYrajah
சுவிட்சர்லாந்தில் கடந்த 2004ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக இப்போது பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் மத்திய தொடர் வண்டித்துறை புதுப்பிக்கப்பட்டது. அதன்பின்பு இந்த முதல் ஆறு மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 1.6 சதவீதம் குறைந்துவிட்டது.
பயணிகளால் கிடைக்கும் வருமானமும் 65 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் அளவிற்கு அதாவது மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது.
இதற்குக் காரணம் மத்திய தொடர்வண்டித் துறை, சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட நெருக்கடியால் பயணிகள் அதிகமாக சுவிஸ்சுக்கு வரவோ, போகவோ இல்லை என்றும் உள்ளூர் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி எதுவுமில்லை எனவும் கூறியுள்ளது.
சுவிஸ் செய்தி நிறுவனத்திடம் இக்கருத்தை தொடர்வண்டித்துறை சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ரெட்டோ சார்லி கூறினார். நுகர்வோர் அமைப்புகள் கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தன.
போக்குவரத்து மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கான சுவிஸ் அமைப்பினைச் சேர்ந்த பிரான்சிஸ்கா ட்யூஷெர், கட்டண உயர்வினால் மக்கள் தொடர்வண்டிகளை விடுத்து தங்கள் கார்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.
போக்குவரத்து அமைச்சர் டோரிஸ் லியுதார்ட் இனி பொதுப் போக்குவரத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று ட்யூஷெர் கேட்டுக்கொண்டார்.
மேலும் கட்டண உயர்வு இதே நிலையில் தொடர்ந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் கட்டண உயர்வு 20 சதவீதமாகி விடும். இதனைத் தவிர்த்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர் வண்டித்துறையின் செய்தித் தொடர்பாளரான சார்லி, அரைக்கட்டணச் சீட்டுக்கும் பொதுப் பயணச்சீட்டுக்கும் கட்டண உயர்வு இருந்தபோதும் தமது விற்பனையில் குறையவேயில்லை. எனவே பயணிகள் ஆதரவில் மாற்றம் காணப்படவில்லை என்றார்.
இவர், எதிர்வரும் 2030ம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 45 சதவீதம் உயர்ந்துவிடும் என்று உறுதிபடத் தெரிவித்தார்

வடமராட்சியில் தண்ணீர் பாத்திரத்தினுள் வீழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபச் சாவு

03.09.2012.BY.rajah-2 வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்று தண்ணீர்ப் பாத்திரத்தினுள் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ். வடமராட்சிப் பிரதேசத்தின் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
(1)மாலை 4.00 மணியளவில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தில் வீட்டின் வெளியே இருந்த நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் தலைகீழாக வீழ்ந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
குழந்தையைக் காணவில்லை எனத் தேடிய பெற்றோர் தண்ணீர்ப் பாத்திரத்தில் குழந்தை வீழ்ந்து கிடப்பதை அறிந்து வைத்தியசாலைக்கு கொண்டு ஓடியும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
தவநேசன் அகிம்சியன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது

பிறந்து ஆறே நாட்களில் குழந்தையின் விரல்கள் துண்டிக்கப்பட்ட பரிதாபம்

03.09.2012.BY.rajah.பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்களான குழந்தை ஒன்றின் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவரின் கவனயீனத்தின் காரணமாக இந்த குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கப்படுகிறது

அறிவியல், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சவுதி பெண்கள்

03.09.2012.BY.rajah.அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் சவுதி அரேபிய பெண்கள் சிறந்து விளங்குவதால் தான் அவர்களுக்கு உலகளாவிய ரீதியில் சுதந்திரம் கிடைத்துள்ளது என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
யுனஸ்கோ வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி சமார்பாட்னி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மேற்கத்திய நாட்டு பெண்களை காட்டிலும் சவுதி அரேபிய பெண்கள் அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அதிக அளவில் பட்டம் பெறுகின்றனர்.
சவுதி அரேபியாவில் 40 சதவிகித மருத்துவர்கள் பெண்களே. அறிவியல் படித்த பெண்களில் பலருக்கு சிறந்த மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

மரபணு சோதனை மூலம் தலைமயிர், கண்கள் நிறங்களை அறியலாம்

03.09.2012.BY.rajah.
குற்றம் நடக்கும் இடங்களில் கிடைக்கும் மரபணுக்கள் குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறத்தை கண்டுபிடிக்க உதவும்


குற்றம் நடந்துள்ள இடமொன்றிலிருந்து கிடைக்கும் டிஎன்ஏ மரபணுப் பொருட்களைக் கொண்டு சந்தேகநபர் ஒருவரின் தலைமயிர் மற்றும் கண்களின் நிறங்களை கண்டறிய கூடிய தடயவியல் பகுப்பாய்வு முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிடைக்கின்ற டிஎன்ஏ தகவல்களைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது போகின்ற பட்சத்தில், குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறங்களை கண்டறிய முடிவதன்மூலம் சந்தேகநபர்கள் பற்றிய முக்கிய தரவுகள் கிடைக்கும் என்று இந்த சோதனை முறையைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் குழுவினர் நம்புகின்றனர்.
உதாரணத்துக்கு, ஒரு குற்றச்செயல் தொடர்பில் பலர் மீது சந்தேகம் ஏற்படுகின்றபோது, அவர்களில் பிரதான சந்தேகநபர்களை குறிப்பாக ஊகித்து வரையறை செய்வதற்கு இந்த சோதனை முறை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
journal Forensic Science International என்ற சஞ்சிகையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள genetic profiling என்கின்ற, மரபணுத் தகவல்களை சேகரிக்கின்ற பகுப்பாய்வு முறையில் குற்றம் நடந்த இடத்திலிருந்து கிடைக்கின்ற டிஎன்ஏ மரபணுப் பொருட்களை சந்தேக நபரிடமிருந்து கிடைக்கின்ற அல்லது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற மரபணுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நடைமுறையே உள்ளது.
அதாவது காவல்துறையால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கின்ற சந்தேகநபர்களில் ஒருவரிடம் அல்லது டிஎன்ஏ களஞ்சியத்தில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற டிஎன்ஏ தரவுகளிலிருந்து தான் இந்த பகுப்பாய்வுமுறை சாத்தியப்படுகிறது.
ஆனால் ஹைரிப்ளக்ஸ் என்ற இந்த புதிய தொழிநுட்பம் சந்தேகநபர்கள் எவரும் சிக்காதிருக்கின்ற சந்தர்ப்பத்திலும் உதவக்கூடியது என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மான்ஃப்ரட் கேய்ஸர் சுட்டிக்காட்டுகிறார்.
டிஎன்ஏ தரவுகளைத் தரக்கூடிய பொருட்கள் மிகக் குறைவாக கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் தடயவியல் ஆய்வாளர்கள் பெரும் நெருக்கடியில் இருக்கின்றபோது இந்த தொழிநுட்பம் பெரும் பயனாக அமையும் என்று அவர் கூறினார்.
வழமையான தடயவியல் ஆய்வில் டிஎன்ஏ தரவுகளை சேகரிக்க பயன்படும் பொருட்களின் அளவை விட மிகக்குறைவான பொருட்களைக் கொண்டே தெளிவான தகவல்களை திரட்ட முடியும் என்று நெதர்லாந்திலுள்ள ரோட்டர்டாம் எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தைச் சேர்ந்த பேராசியர் கேய்ஸர் தெரிவித்தார்.
மூன்று ஐரோப்பிய சமூகங்களிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டு இந்த ஹைரிப்ளக்ஸ் தொழிநுட்பத்தின் மூலம் ஆய்வாளர்கள் அவர்களின் தலைமயிரின் நிறங்களைக் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேபோல கண்ணின் நிறத்தையும் இவர்களால் கண்டறியமுடிந்துள்ளது.
phenotypes என்கின்ற, டிஎன்ஏவைப் பெறக்கூடிய பொருட்களின் மூலம் தலைமயிர் மற்றும் கண்ணின் நிறங்களை முன்கூட்டியே கண்டறிவது பற்றி இன்றைய நவீன தடயவியல் துறை தீவிரமாக ஆராய்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட்

தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை முளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் எச்சரித்துள்ளன.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களில் குறைந்த மட்ட குழுவினர் வாராந்தம் சராசரியாக எந்தவிதமான சாக்லேட்டும் சாப்பிடுவதில்லை. ஆனால் உயர் குழுவில் உள்ளவர்கள் வாரம் 63 கிராம் சாக்லேட் சாப்பிடுபவர்கள்.
இறுதியாக இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்களில் அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்கள், சாக்லேட் சாப்பிடாதவர்களை விட பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு 17 வீதம் குறைவாகும்.
நரம்பியல் குறித்த சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாக்லேட்டில் காணப்படுகின்ற ஃபிளவொனொயிட்ஸ் என்னும் பதார்த்தமே இதற்கு காரணம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவ்ரான, சுவீடனின் கரோலின்ஸ்கா கற்கைகள் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சுசானா லார்சன் கூறியுள்ளார்.
இதயம் சம்பந்தமான நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக இந்த ஃபிளவொனொயிட்ஸ் செயற்படுகிறது.
இரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்பின் அடர்த்தியை குறைப்பதன் மூலம் இந்த ஃபிளவொனொயிட்ஸ் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.
டார்க் சாக்லேட்தான் இதய நோய்களுக்கு உகந்தது என்று கடந்த காலங்களில் கூறப்பட போதிலும், பால் சாக்லேட்டுகள்தான் சிறந்தது என்று இந்த ஆய்வு தற்போது கூறுகிறது.
ஏனைய வகை சாக்லேட்டுக்களை ஓரளவு உண்பதும் நல்ல பயனைத் தரும் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.
ஆனால், இந்த விடயம் குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும் அதேநேரத்தில், இந்த ஆய்வு முடிவையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டால் அது உடலுக்கு நஞ்சாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அத்துடன் சாக்லேட்டில் அதிகமாக சீனியும் கொழுப்பும் சேர்க்கப்படுவதும் உகந்ததல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!

03.09.2012.BY.rajah.ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி “இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும்.
அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்!
மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்…ப வெரி சிம்பிள்! “இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப
உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர் இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா “கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.
வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் “அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள். இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.
சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.
இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல். முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.
இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள். செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.
இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், “எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.
இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள். “கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்
.
இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார். இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

20 வினாடிகளில் விமானமாக மாறும் கார்

03.09.2012.BY.rajah.சொந்தமாக விமானம் வாங்கி அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழும்.
இனிமேல் அது பற்றிய கவலை வேண்டாம். கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமானமாக மாற்றி பயணம் செய்யலாம். இதை அமெரிக்க ஏரோ நாட்டிக்கல் பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
சாலைகளில் 4 சக்கரங்களில் செல்லும் இந்த காரின் பட்டன்களை அழுத்தினால் 20 வினாடிகளில் அது விமானமாக மாறிவிடும். டயர்கள் உள்ளிழுக்கப்பட்டு இறக்கைகள் விரியும். அதன் மூலம் விண்ணில் பறக்கலாம்.
2 பேர் மட்டுமே அமர்ந்து இதில் பயணம் செய்ய முடியும். இந்த சூப்பர் ஜெட் விமானத்தில் 500 மைல் தூரம் வரை பறக்கலாம்.
பின்னர் இதை தரையிறக்கும் போது மீண்டும் காராக மாற்றலாம். இதன் விலை ரூ.1 கோடியே 55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பம்

03.09.2012.BY.rajah.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. சுமார் 800 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு உள்ளக விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடு தளம் உள்ளிட்ட பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. 1700 மீற்றர் நீளத்திலான விமான ஓடு பாதை ஒன்றும், விமானத் தரிப்பிடம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது

கடலில் மிதந்து வந்த போத்தலில் மதுபானம் இருப்பதாக அருந்திய இளைஞன் உயிரிழப்பு

03.09.2012.BY.rajah.
மன்னார், வங்காலைக் கடலில் மிதந்துவந்த போத்தல் ஒன்றில் மதுபானம் இருப்பதாக எண்ணி அதனை எடுத்து அருந்திய 4 இளைஞர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார், வங்காலைக் கிரமாத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டன.
வங்காலைக் கடற்கரைக்கு கடந்த புதன்கிழமை சென்றிருந்த இந்த 4 இளைஞர்களும் கடலில் இருந்து மிதந்துவந்து கரையொதுங்கிய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த மதுபான போத்தல் ஒன்றைக் கண்டெடுத்துள்ளதாகவும் இதில் வெளிநாட்டு மதுபானம் காணப்படுவதாக எண்ணி அந்தப் போத்தலில் காணப்பட்ட திரவத்தை எடுத்து இவர்கள் அருந்தியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த திரவத்தை அருந்திய பின்னர் இந்த 4 இளைஞர்களில் சிலர் வாந்தி எடுத்தபோதிலும், அவர்கள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை எனவும் இருப்பினும் இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இவர்கள் அருந்தியதாகக் கூறப்படும் திரவத்தின் வெற்றுப் போத்தல் வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அது மதுபானம் அல்ல எனவும் அவர்கள் அருந்திய திரவம் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும்போது பயன்படுத்தும் ஒருவகை மருந்து எனவும் தெரியவந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

மக்களின் காணிகளில் இராணுவ முகாம்கள்: அதிர்ச்சியில் முல்லைத்தீவு மக்கள்

03.09.2012.BY.rajah.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பறிபோவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆங்காங்கு உள்ள மினி காவலரண்கள் அகற்றப்பட்டு பெரியளவிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுசுட்டான் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அதனை அண்டிய காணிகள், கற்சிலைமடுவில் சிவன் ஆலய வளாகமும் அதனை அண்டிய மக்களின் காணிகளும், முத்துஐயன்கட்டு தட்டையர் மலைப்பகுதியில் தனியாரின் காணிகளும், புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் சங்க வளாகமும் அதனை அண்டிய காணிகளும், கேப்பாபுலவு மக்களின் இருப்பிடங்களும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுப் பெரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் மக்கள் தமது காணிகளை இழந்து வருகின்றனர். மேலும் காணிகள் சுவீகரிக்கப்படும் ஏதுநிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாரம்பரிய தமிழ் மக்களின் பூர்விக இடமான முல்லைத்தீவில் இவ்வாறு பெருமளவு காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுகின்றமை இங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன.
மேலும் பெரியளவில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றமை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்காக 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபா வசூல்

03.09.2012.BY.rajah.
 
யாழ். மாவட்டத்தில் கடந்த எட்டு மாத காலப் பகுதிக்குள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களிடமிருந்து 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மதுவரித் திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.
அனுமதியின்றி அரச சாராயம் விற்றமை, வயது குறைந்தோருக்கு புகைபொருள் விற்றமை, சட்ட விரோதமாக கள் விற்பனை செய்தமை போன்ற குற்றத்துக்காக 362 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது இந்தத் தண்டம் அறவிடப்பட்டது என யாழ்.மாவட்ட மதுவரித் திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் சட்டவிரோத மதுபான உற்பத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும், தீவகப் பகுதிகளில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், அரச சாராயம் பதிவு செய்யப்படாமல் விற்பனை செய்த விற்பனையாளர்கள், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் புகைபொருள் விற்பனை செய்தவர்கள், சட்டவிரோதமாக வீடுளில் வைத்து கள் விற்பனை செய்தவர்கள் என யாழ். மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களின் தேடுதல் நடவடிக்கைகளின் போது இனங்காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம், அரியாலை, நல்லூர், கல்வியங்காடு, ஆனைக்கோட்டை, ஐந்துசந்தி, வண்ணார்பண்ணை ஆகிய பிரதேசங்களில் மதுவரித் திணைக்களத்தின் சட்டக் கோவைகளுக்கு அப்பால் மது மற்றும் சிகரெட் விற்பனைகள் அதிகம் இடம்பெறுகின்றன.
எனினும் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களால் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் இருந்து கடந்த எட்டுமாத காலப் பகுதிக்குள் 362 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த மாதம் மட்டும் 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றத்துடன் தொடர்புடைய 362 பேரும் யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது என தெரிவித்தா

பிறந்த நாள் வாழ்த்து.. விமல்ராஜ்

02.09.2012.BY.rajah. விமல்ராஜ் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தொடர்தும் உமது இணையபணிகள் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள் அன்புடன் நவற்கிரி இணைய ங்கள்