24.09.2012.By.Rajah.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு இன்று(24:09:2012) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் பல்லாண்டு காலம் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றது[ tamil old songs 1970.Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
திங்கள், 24 செப்டம்பர், 2012
பிறந்த நாள் வாழ்த்து,.உதயன் [ காணொளி,]
24.09.2012.By.Rajah.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு இன்று(24:09:2012) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் பல்லாண்டு காலம் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றது[ tamil old songs 1970.அன்று கல்விக்குப் பெயர்போன யாழ். இன்று களவுக்கு ?
24.09.2012.By.Rajah.யாழ். மாவட்டத்தில் போலியான தங்க ஆபரணங்களை வங்கியில் அடகு வைத்து பண மோசடியில்
ஈடுபடுவோர், படப்பகலில் சங்கிலியை அறுப்போர், இரவில் வீடு புகுந்து களவெடுப்போர் என
பல திருட்டுச் சம்பபவங்கள், அதிகரித்துள்ளது. இது தொடர்பில் பல முறைப்பாடுகள்
கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன்
தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ். நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் போலியான தங்க ஆபரணங்களை அடகு வைத்து 1,50,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் கொழும்பு மட்டக்குளியைச் சேர்ந்தவர். இதேவேளை மானிப்பாய் தனியார் வங்கியில் 2,23,000 ரூபாவுக்கு போலியான தங்க ஆபரணங்களை அடகு வைத்தமை தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களைத் தேடிவருவதாகவும் கூறினார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள இலங்கை வங்கி ஒன்றில் போலியான தேசிய அடையாள அட்டையை சமர்பித்து 5 தடவைகள் வங்கியில் தங்க ஆபரணங்கள் அடகு வைத்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த 5 தடவையும் 5,49,000 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிகள் தொடர்பாக வங்கிகளை விளிப்பாக தங்கள் சேவையை பொதுமக்களுக்கு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாக்கிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்ப்பது ஈழத் தமிழர்களா ?
24.09.2012.ByRajah.கடந்த திங்கட்கிழமை திருச்சியில் வைத்து கைதான அன்சாரி என்னும் நபரிடம் இருந்து,
இந்திய இராணுவ ரகசியங்கள் இருந்த செய்தி பற்றி அறிந்திருப்பீர்கள். அடிக்கடி
கொழும்பு சென்றுவரும் அன்சாரி, இந்தியாவில் விசாகபட்டினத்தில் உள்ள அணு நீர்மூழ்கி
கப்பல் தளம், ஊட்டியில் உள்ள இராணுவத்தளம், மற்றும் இந்தியாவின் அணு சக்தி
குறித்தும் பல தகவல்களை படு சிம்பிளாகத் திரட்டியுள்ளார். இந்தியாவின் இராணுவ
ரகசியங்கள் அன்சாரி போன்ற சதாரண நபர்களால் திரட்டப்படக்கூடிய வகையிலா அமைந்துள்ளது
என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இச் சந்தர்பத்தை பயன்படுத்தி இலங்கை அரசு, ஈழத்
தமிழர்களையும் இதில் கோர்த்து விட்டுள்ளது. அதாவது இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான்
தூதர் இந்தியாவை உளவுபார்க்கிறார் என்ற செய்தியை தமிழ் ஊடகங்களே பெரிதும்
வெளியிட்டன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை அரசு தற்போது ஈழத் தமிழர்களை
குறிவைத்து தாக்கியுள்ளது.அதாவது இலங்கை, இந்தியாவை உளவுபார்க்கும் ஒரு களமாக மாறியுள்ளது என்ற, உண்மை நிலையை மறைக்க.... இலங்கை முயற்சிக்கிறது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் ஈழத் தமிழர்களை கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகள் சந்திப்பதாகவும், அவர்களில் சிலருக்கு பணம் கொடுத்து அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புவதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் அரசு சார் பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இதனை அப்படியே காப்பியடித்து செய்திவெளியிட்டுள்ளது ரைம்ஸ் ஒப் இந்தியா. இதனால் இந்தியாவில் தற்சமயம் தங்கியுள்ள ஈழ அகதிகளும், மற்றும் இந்தியா- இலங்கைக்கு அடிக்கடி சென்றுவரும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகவுள்ளனர். ரைம்ஸ்-ஒப்- இந்தியாவின் இச்செய்தியானது, இந்திய உளவுத்துறையை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி விடும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது.
கொழும்பில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள புத்திஜீவிகளும் நன்கு திட்டமிட்டு இப்பரப்புரையை இலங்கையில் மேற்கொண்டுள்ளனர். இதனை ஏதாவது ஒரு இந்திய ஊடகம் செய்தியாகப் போடாதா என்று அவர்கள் எதிர்பார்த்தவேளை, இதனை ரைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ளது சிங்களவர்களுக்கு குதூகலம் தரும் செய்தியாக அமைந்துள்ளது. பல வருடங்கள் ஊடகத்துறையில் அனுபவமிக்க ரைம்ஸ் ஒப் இந்தியா போன்ற ஊடகங்கள், ஆதாரம் இல்லாத இதுபோன்ற செய்திகளை அதுவும் சிங்களப் ஊடகம் வெளியிட்ட செய்தியை எவ்வாறு பிரசுரிக்கிறார்கள் ? இச் செய்தி தொடர்பாக இந்திய மத்திய அரசும், கியூப் பிரிவு பொலிசாரும் விழிப்புடன் இருப்பது நல்லது. இலங்கை அரசின் மற்றுமொரு திட்டமிட்ட நடவடிக்கை இதுவாகும் என்பதனை இவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்
சாட்டை - சடுதியில் தவறவிட்ட அடி ...
24.09.2012.By.Rajah.பிரபல இயக்குனர்கள் மற்ற இயக்குனர்களை வைத்து தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் " சாட்டை " ... அதற்காக இப்படத்தை காதல் , பசங்க வரிசையில் சேர்த்து விட முடியாது , ஆனால் முதல் படத்திலேயே ஒரு கருத்தாழம் மிக்க கதையை சொல்ல முற்பட்டதற்காக அறிமுக இயக்குனர் அன்பழகனை பாராட்டலாம் ...
நம்மவர் ஸ்டைல் கதை , இப்படத்தில் கல்லூரிக்கு பதில் அரசு மேல்நிலை பள்ளி , மாணவர்களுக்கு பதில் உடன் பணிபுரியும் சக ஆசிரியர்களையும் சேர்த்து ஒரு ஆசிரியர் திருத்துவது மட்டும் மாறுதல் ...
திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் தயாளன் ( சமுத்திரக்கனி ) , அங்கோ ஏ.ஹெச்.எம் சிங்கம்பெருமாள் ( தம்பி ராமையா ) தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் சும்மா சம்பளம் வாங்கிக் கொண்டு படிப்பு உட்பட அனைத்திலும் பள்ளியை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கிறார்கள் , இதை தட்டிக் கேட்க முடியாத நிலைமையில் இருக்கிறார் ஹெச்.எம் ஜூனியர் பாலையா ( இதற்கு தேவையான விளக்கம் எதுவும் படத்தில் இல்லை ) ... தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியை சமுத்திரக்கனி எப்படி மாற்றிக்காட்டுகிறார் என்பதை மாணவர் பழனி
( யுவன்) , மாணவி அறிவழகி ( மகிமா ) இவர்கள் இடையேயான காதல் , தம்பி ராமையாவின் வில்லத்தனம் , மாணவன் பாண்டியின் காமெடி மற்றும் பாசிடிவ் சாங் உட்பட பல சினிமாத்தனங்களை கயிறாக திரித்து சாட்டையை கொடுத்திருக்கிறார்கள் ...
சமுத்திரக்கனி தயாளனாகவே நம் மனதில் பதிகிறார் ... முக பாவங்கள் குறைவெனினும் அதை தன் குரலால் சமன் செய்கிறார் ... இவர் தன்னம்பிக்கை வசனங்கள் பேசும் போது தியேட்டரில் கைதட்டல்கள் கிடைத்தாலும் படம் நெடுக அதையே செய்வதால் போரடிக்கறது ... ஒரு விதமான ஹீரோயிஸத்துக்குள் இவர் கேரக்டரை புகுத்தாமல் தவிர்த்திருந்தால் இன்னும் அழுத்தமாகவே நம் மனதில் பதிந்திருப்பார் ...
இவருக்கு நிகரான கதாபாத்திரம் தம்பிராமையாவினுடையது ... மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார் ... தன்னிடம் கடன் வாங்கி விட்டு வட்டி தராத ஆசிரியர்களை கலாய்ப்பது , ஆசிரியர்கள் மீட்டிங்கில் சமுத்திரக்கனியை மடக்குவது என்று ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் போக போக ஓவர் ஆக்டிங் செய்து நிறையவே வெறுப்புமேற்றுகிறார் ... காமெடி அல்லது குணச்சித்திரமான கேரக்டராக இவரை வடிவமைக்காமல் சமுத்திரக்கனியை கொலை செய்யப் போகும் அளவிற்கு பக்கா வில்லனாக மாற்றியது சாட்டையின் சறுக்கல் ...
+2 மாணவன் பழனியாக வரும் யுவனின் முகம் குழந்தைத்தனமாகவும் , தாடி , மீசை மற்றும் அவர் கண்களில் காட்டும் கோபம் இவைகளெல்லாம் ஓட்ட வைத்தது போல ரொம்ப செயற்கையாகவும் இருக்கின்றன ... புதுமுகம் மகிமா அழகாக மட்டுமல்லாமல் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் ... படிப்புக்காக இவர் மன்றாடும் காட்சிகள் அருமை ... கடைசியில் வழக்கம் போல இவரும் காதல் வயப்படுவது போல காட்டாமல் இருந்திருந்தால் இவர் கேரக்டருக்கு இன்னும் மெருகேறியிருக்கும் ...
ப்ளாக் பாண்டி , ஜூனியர் பாலையா , குட்லக் லக்ஷ்மன் ,சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருப்பவர் இப்படி படத்தில் நிறைய பேர் பொருத்தமாகவே நடித்திருக்கிறார்கள் ... இமானின் இசையில் பழைய நெடி இருந்தாலும் பாடல்கள் யுவபாரதியின் வரிகளோடு சேர்ந்து கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன ...
பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலை , மாணவர்களிடையே நண்பன் போல பழகி அவர்களின் குறைகளை கலையாமல் அதை ஊதி பெரிதாக்கும் அவர்களுடைய போக்கு , தற்போதைய முன்னேற்றங்களுக்கு ஏற்றபடி தங்களை மேம்படுத்திக்கொள்ளாத பள்ளி நிர்வாகம் போன்றவற்றை சாட்டை கொண்டு விளாசியிருக்கிறார் இயக்குனர்... அதேநேரம் அரசு கெடுபிடிகளால் மாணர்வகளை சமாளிக்க முடியாமல் திணறும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலையையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் ...
படம் நன்றாக ஆரம்பித்து பிறகு சமுத்திரக்கனி மேல் காமுகன் பழி விழுந்து அவரை மக்கள் அடித்து துரத்துவது , ஒரு போட்டியில் கூட கலந்து கொண்டிராத ஒரு பள்ளி மாவட்ட அளவிலான சேம்பியன் பட்டம் வெல்வது , சாகக்கிடக்கும் சமுதிரக்கனிக்காக மாணவர்கள் பாடுவது , அவர் மனைவி பாசிட்டிவாக பேசுவது , மிகைப்படுத்தப்பட்ட தம்பி ராமையா கேரக்டர் இவைகளெல்லாம படத்தை சாட்டை கொண்டு அடிக்கின்றன ... நாடக , சினிமாத்தனங்களை தவிர்த்து ஒரு நேர்மையான நிகழ்வாக படத்தை இயக்குனர் பதிவு செய்திருந்தால் நிச்சயம் எழுந்து நின்று சல்யூட் அடித்திருக்கலாம்
மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள்!
24.09.2012.By.Rajah.உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.
இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.
இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்
தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி?
24.09.2012.By.Rajah.நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.
உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.
1. தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் :ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு ஒப்பான கருத்து இது. இதற்குச் சரியாகப் பதில் சொல்வது கடினம். அதுபோல்தான் தூக்கமும். தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருநாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறுமணி நேரத் தூக்கம் அவசியம். இந்த நேரம் குறைந்தால், இதய நோய் அல்லது கான்சர் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.
தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை ‘டயரி’யில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன்படி எழுந்திருக்கும் _ தூங்கும் நேரத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நோட் பண்ணுவது அவசியம். தூக்க ஊக்கிகள் பயன்படுத்தாமல் தூக்கம் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.
2. பிற்பகல் விழாவில் போர் அடிக்கும் பேச்சைக் கேட்டவுடன் தூக்கம்.இது இயல்பாக வருவதுதான். ஆனால் ஒரு சிலருக்குத் தூக்கம் வராது. இமைகள் மூடியிருப்பது போல் தோன்றும். ஆனால், தூக்கம் கண்களைத் தழுவாது. தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் இருந்தாலும், மீதியிருக்கும் ஒருமணி நேரத்தை உடல் ஈடு செய்ய விரும்பும். சிலர் அதனை ஈடு செய்யும் விதமாகப் பகலில் குட்டித் தூக்கம் போடுவார்கள். இருப்பினும் நாள்பட்ட தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால், டயாபடீஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.
3. தூக்கமின்மை இருந்தால், சீக்கிரம் படுக்கச் செல்ல வேண்டும்.
பொதுவாக தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள். தூக்கம் வரவில்லையே என்பதற்காகப் படுக்கை அறைக்குச் செல்லவே சிலர் விரும்புவதில்லை. நமக்குத்தான் தூக்கம் வருவதில்லையே என்ற எரிச்சல். இது தவறு. மாறாக தூக்கமின்மைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.
மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு டென்ஷன்... உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்குப் பொதுவான காரணங்கள்.
என்ன செய்யலாம்?வழக்கத்தை விட, ஒரு மணிநேரம் ‘லேட்’டாகப் படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக எண்களை மனதிற்குள் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது...
சுவாரஸ்யமில்லாத புத்தகங்கள் படிப்பது..,
படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதன்மூலம் தசைகள் இலகுவடையும். உடல்சூடு குறையும்.
தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
குட்டித் தூக்கம் : தூக்கமின்மை இருப்பவர்களுக்கு அவ்வப்போது ‘குட்டித் தூக்கம்’ வரும். இதனால் ஓரளவு சமாதானம் அடையலாம். இரவு ‘ஷிஃப்’டில் வேலை செய்பவர்களுக்கு, தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் குட்டித் தூக்கம் போடுவதில் தவறில்லை. அதற்காக, பலமணி நேரம் ‘குட்டித் தூக்கம் போடாமல் இருப்பது நல்லது.
தூக்கமின்மை இருந்தும், பணிகள் பாதிப்பதில்லை :இரவில் இரண்டு மணி நேரத் தூக்கம் பாதித்தால், மறுநாள் உடலில் அசதி ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. பெரிய இயந்திரங்களை இயக்குபவர்களாக இருந்தால், முடியாமல் போகும். டூ வீலர் அல்லது கார்களை ஓட்ட முடியாது. அதனால் ஆபீஸ் போவதற்கு நண்பர்களின் உதவியைக் கேட்கலாம்.
தொடர்ந்து ஒருவாரம் வரை இப்படியே இருந்தால், உடல் சூடு அதிகரிக்கும். அதைத் தவிர்ப்பது முக்கியம்.
வாரத்தின் இறுதி நாட்களில் தான் தூக்கம் வருகிறது.
சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் ஒரு குட்டித் தூக்கம் மட்டும் போடுவது உண்டு. தூக்கமின்மை பாதிப்பு இருப்பவர்கள் தவிர, மற்றவர்களுக்கு இந்த ‘பிராக்டீஸ்’ மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
எத்தனை வேலைப்பளு இருந்தாலும் முடிந்தவரை தினமும் இரவில் தூங்குவது அவசியம். வேறு வழியில்லை என்றால், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிப்பது முக்கியம்.
படுக்கப் போகும் முன்பு உடற்பயிற்சி :உடற்பயிற்சி காலையில் செய்யலாம். படுக்கப் போகும் முன்பு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இந்த ‘பிராக்டீஸ்’ செய்வதுண்டு. இருப்பினும், தூக்கத்துக்கும், ‘பெட் டைம்’, உடற்பயிற்சிக்கும் சம்பந்தமில்லை. தேவையேற்பட்டால், இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு எளிய உடற்பயிற்சி செய்யலாம். இருப்பினும் முடிந்தவரை காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது.
தூக்கம் வருவதற்கான மாத்திரைகள் எடுப்பது :தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன்பு மாத்திரைகள் எடுப்பது நல்லது. தவறில்லை. ஆனால், டாக்டர்கள் அட்வைஸ் அவசியம். ஒருசில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக பக்க விளைவுகள் (வாந்தி, தலைவலி, சோர்வு) ஏற்படும். அதனால் கவனம் தேவை.
தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாதல் :
இது ஆபத்து.
இரவில் லேட்டாகத் தூங்கி அதிகாலையில் எழுவது :
நேரமில்லை. நான்கு மணிநேரம் மட்டுமே தூங்க முடியும் என்ற நிலை இருந்தால், இரவில் லேட்டாக (இரண்டு மணி) தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழலாம். இரண்டு மணி வரை தூக்கம் வருவதற்குரிய வழிகளில் இறங்கலாம். (போரடிக்கும் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது இப்படி...)
தூக்கமின்மை இருப்பவர்கள் டாக்டரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். குறிப்பாக,
ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் :தூக்கமில்லாமல் இருந்தால், காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். கால்களில் நமைச்சல் இருக்கும். ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை டெஸ்ட் செய்வது முக்கியம்.
மூச்சு விடுவதில் சிரமம் :தூங்கும் போது மூச்சுவிட சிரமப்படுவார்கள். குறட்டைச் சத்தம் அதிகம் கேட்கும். உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.
மனச்சோர்வு :இரவில் தூங்காமல் இருந்தால் மறுநாள் உடல், மன சோர்வு ஏற்படும்.
தைராய்டு சுரப்பதில் பிரச்னை :இந்த அறிகுறி தெரிந்தால் உடனே டாக்டரிடம் செல்வது அவசியம். தைராய்டு ஸ்டுமுஹேங் ஹார்மோன் அளவு அதிகமிருந்தாலும் தூக்கம் வராது.
உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.
1. தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் :ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு ஒப்பான கருத்து இது. இதற்குச் சரியாகப் பதில் சொல்வது கடினம். அதுபோல்தான் தூக்கமும். தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருநாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறுமணி நேரத் தூக்கம் அவசியம். இந்த நேரம் குறைந்தால், இதய நோய் அல்லது கான்சர் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.
தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை ‘டயரி’யில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன்படி எழுந்திருக்கும் _ தூங்கும் நேரத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நோட் பண்ணுவது அவசியம். தூக்க ஊக்கிகள் பயன்படுத்தாமல் தூக்கம் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.
2. பிற்பகல் விழாவில் போர் அடிக்கும் பேச்சைக் கேட்டவுடன் தூக்கம்.இது இயல்பாக வருவதுதான். ஆனால் ஒரு சிலருக்குத் தூக்கம் வராது. இமைகள் மூடியிருப்பது போல் தோன்றும். ஆனால், தூக்கம் கண்களைத் தழுவாது. தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் இருந்தாலும், மீதியிருக்கும் ஒருமணி நேரத்தை உடல் ஈடு செய்ய விரும்பும். சிலர் அதனை ஈடு செய்யும் விதமாகப் பகலில் குட்டித் தூக்கம் போடுவார்கள். இருப்பினும் நாள்பட்ட தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால், டயாபடீஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.
3. தூக்கமின்மை இருந்தால், சீக்கிரம் படுக்கச் செல்ல வேண்டும்.
பொதுவாக தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள். தூக்கம் வரவில்லையே என்பதற்காகப் படுக்கை அறைக்குச் செல்லவே சிலர் விரும்புவதில்லை. நமக்குத்தான் தூக்கம் வருவதில்லையே என்ற எரிச்சல். இது தவறு. மாறாக தூக்கமின்மைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.
மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு டென்ஷன்... உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்குப் பொதுவான காரணங்கள்.
என்ன செய்யலாம்?வழக்கத்தை விட, ஒரு மணிநேரம் ‘லேட்’டாகப் படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக எண்களை மனதிற்குள் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது...
சுவாரஸ்யமில்லாத புத்தகங்கள் படிப்பது..,
படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதன்மூலம் தசைகள் இலகுவடையும். உடல்சூடு குறையும்.
தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
குட்டித் தூக்கம் : தூக்கமின்மை இருப்பவர்களுக்கு அவ்வப்போது ‘குட்டித் தூக்கம்’ வரும். இதனால் ஓரளவு சமாதானம் அடையலாம். இரவு ‘ஷிஃப்’டில் வேலை செய்பவர்களுக்கு, தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் குட்டித் தூக்கம் போடுவதில் தவறில்லை. அதற்காக, பலமணி நேரம் ‘குட்டித் தூக்கம் போடாமல் இருப்பது நல்லது.
தூக்கமின்மை இருந்தும், பணிகள் பாதிப்பதில்லை :இரவில் இரண்டு மணி நேரத் தூக்கம் பாதித்தால், மறுநாள் உடலில் அசதி ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. பெரிய இயந்திரங்களை இயக்குபவர்களாக இருந்தால், முடியாமல் போகும். டூ வீலர் அல்லது கார்களை ஓட்ட முடியாது. அதனால் ஆபீஸ் போவதற்கு நண்பர்களின் உதவியைக் கேட்கலாம்.
தொடர்ந்து ஒருவாரம் வரை இப்படியே இருந்தால், உடல் சூடு அதிகரிக்கும். அதைத் தவிர்ப்பது முக்கியம்.
வாரத்தின் இறுதி நாட்களில் தான் தூக்கம் வருகிறது.
சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் ஒரு குட்டித் தூக்கம் மட்டும் போடுவது உண்டு. தூக்கமின்மை பாதிப்பு இருப்பவர்கள் தவிர, மற்றவர்களுக்கு இந்த ‘பிராக்டீஸ்’ மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
எத்தனை வேலைப்பளு இருந்தாலும் முடிந்தவரை தினமும் இரவில் தூங்குவது அவசியம். வேறு வழியில்லை என்றால், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிப்பது முக்கியம்.
படுக்கப் போகும் முன்பு உடற்பயிற்சி :உடற்பயிற்சி காலையில் செய்யலாம். படுக்கப் போகும் முன்பு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இந்த ‘பிராக்டீஸ்’ செய்வதுண்டு. இருப்பினும், தூக்கத்துக்கும், ‘பெட் டைம்’, உடற்பயிற்சிக்கும் சம்பந்தமில்லை. தேவையேற்பட்டால், இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு எளிய உடற்பயிற்சி செய்யலாம். இருப்பினும் முடிந்தவரை காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது.
தூக்கம் வருவதற்கான மாத்திரைகள் எடுப்பது :தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன்பு மாத்திரைகள் எடுப்பது நல்லது. தவறில்லை. ஆனால், டாக்டர்கள் அட்வைஸ் அவசியம். ஒருசில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக பக்க விளைவுகள் (வாந்தி, தலைவலி, சோர்வு) ஏற்படும். அதனால் கவனம் தேவை.
தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாதல் :
இது ஆபத்து.
இரவில் லேட்டாகத் தூங்கி அதிகாலையில் எழுவது :
நேரமில்லை. நான்கு மணிநேரம் மட்டுமே தூங்க முடியும் என்ற நிலை இருந்தால், இரவில் லேட்டாக (இரண்டு மணி) தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழலாம். இரண்டு மணி வரை தூக்கம் வருவதற்குரிய வழிகளில் இறங்கலாம். (போரடிக்கும் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது இப்படி...)
தூக்கமின்மை இருப்பவர்கள் டாக்டரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். குறிப்பாக,
ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் :தூக்கமில்லாமல் இருந்தால், காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். கால்களில் நமைச்சல் இருக்கும். ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை டெஸ்ட் செய்வது முக்கியம்.
மூச்சு விடுவதில் சிரமம் :தூங்கும் போது மூச்சுவிட சிரமப்படுவார்கள். குறட்டைச் சத்தம் அதிகம் கேட்கும். உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.
மனச்சோர்வு :இரவில் தூங்காமல் இருந்தால் மறுநாள் உடல், மன சோர்வு ஏற்படும்.
தைராய்டு சுரப்பதில் பிரச்னை :இந்த அறிகுறி தெரிந்தால் உடனே டாக்டரிடம் செல்வது அவசியம். தைராய்டு ஸ்டுமுஹேங் ஹார்மோன் அளவு அதிகமிருந்தாலும் தூக்கம் வராது.
கேளுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்:
24.09.2012.By.Rajah.[ காணொளி]/or do still you want to use your parallel
universe hypothesis and wishful thinking as the facts and data? Like you do all
the time, "அமெரிக்காவிலே மிகவும் விரைவாகப் பெருகிவரும் மதம் இஸ்லாம்"
"கத்தோலிக்கப்பாப்பரசர் கூறுகிறார், இஸ்லாம் விரைவாகப் பெருகிவரும் மதம்"
கட்டுப்படுத்தமுடியவில்லை... பெருகிவரும் மதத்தை அல்ல; சிரிப்பை எனக்கு..... தரவுகளைத் தந்து பேசுங்களேன்; விட்டுவிட்டு, உங்கள் கூட்டத்தைப் பின்னூட்டங்களிலே "ஆமா! ஆமா!" என்று வில்லுப்பாட்டு விதூஷகர்போல சொல்லும் பொய்களுக்கெல்லாம் ஆமா போடவைக்காமல்.
"கத்தோலிக்கப்பாப்பரசர் கூறுகிறார், இஸ்லாம் விரைவாகப் பெருகிவரும் மதம்"
கட்டுப்படுத்தமுடியவில்லை... பெருகிவரும் மதத்தை அல்ல; சிரிப்பை எனக்கு..... தரவுகளைத் தந்து பேசுங்களேன்; விட்டுவிட்டு, உங்கள் கூட்டத்தைப் பின்னூட்டங்களிலே "ஆமா! ஆமா!" என்று வில்லுப்பாட்டு விதூஷகர்போல சொல்லும் பொய்களுக்கெல்லாம் ஆமா போடவைக்காமல்.





