siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 3 அக்டோபர், 2012

பெயரைக் கேட்டு சுட்டுக்கொன்ற



Wednesday03October2012.By.Rajah.
தீவிரவாதிகள். நைஜீரியாவின் 46 மாணவர்கள் பலி. நைஜீரியா நாட்டின் வட பகுதியில் அடமாவா மாநிலத்தில் முவி நகரில் பாலிடெக்னிக் மாணவர்கள் தங்கி இருக்கும் ஒரு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கத்தியாலும் வெட்டினார்கள்.

இதில் 46 மாணவர்கள் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர்கள் ராணுவ உடை அணிந்து இருந்ததாகவும், ஒவ்வொரு மாணவரையும் பெயரை கூறும்படி கேட்டு அவர்கள் சுட்டதாகவும், சில மாணவர்களை விட்டு விட்டதாகவும் அந்த பாலிடெக்னிக்கின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்
         

பாலியல் தொந்தரவுகளை தவிர்க்க மகளிருக்கான

 Wednesday03October2012.By.Rajah. பிரத்யேக இரயில்கள். இந்தோனேஷிய அரசு அதிரடி.
நெரிசல் மிகுந்த ரயில் தடங்களில் மகளிருக்கான பிரத்யேக ரயில்களை இந்தோனேசிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பொது ரயில்களில் பயணிக்கும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக எழுந்த புகார்களால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலை நாட்களில் தலைநகர் ஜகார்த்தாவுக்கும் தெற்கேயுள்ள போகாருக்கும் இடையே 8 சிறப்பு ரயில்கள் விடப்படும்.
இளஞ்சிவப்பு நிற பேனர்கள் மற்றும் சின்னங்களுடன் இந்த ரயில்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும் நேரத்தில் ரயில்களில் பிராயணம் செய்யவது பாதுகாப்பாக இல்லை என்று இந்தோனேசியப் பெண்கள் புகார் கூறியிருந்தனர்.
ரயில்களில் பெண்களுக்காக சில பெட்டிகளை ஒதுக்கும் நடைமுறை இரு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.
ஆனால் அது போதுமானதாக இல்லை என்று சில பிரயாணிகள் கருதுகின்றனர்            

வளர்த்த பன்றிகளுக்கே இரையானாரா விவசாயி? அமெரிக்காவில் பரபரப்பு.

Wednesday 03 October 2012.By.Rajah.அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் விவசாயி ஒருவர் அவர் வளர்த்த பன்றிகளால் கொல்லப்பட்டு உணவனாதாகக் கூறப்படும் சம்பவத்தைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
70 வயதான டெர்ரி வான்ஸ் கார்னர் என்ற இந்த விவசாயி, கடந்த புதன் கிழமையன்று , அவரது பன்றிப் பண்ணையில், அவர் வளர்த்து வரும் பன்றிகளுக்குத் தீனி போட சென்றவர் திரும்பி வரவில்லை என்று தெரிய வருகிறது.
அவரது உறவினர் ஒருவர்,பன்றிகள் வளர்க்கப்படும் வேலியிடப்பட்ட வளைவுக்குள், அவரது பொய்பல் செட் மற்றும் அவரது உடலில் சில துண்டுகளைக் கண்டார். அவரது உடலின் பிற பாகங்கள் உண்ணப்பட்டுவிட்டிருந்தன.
அவர் ஒருக்கால் திடீரென்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது பன்றிகளால் அவர் தடுக்கி வீழ்ந்து பின்னர் அவைகளால் சாப்பிடப்பட்டிருக்கலாம் என்று விசாரித்து வரும் அதிகாரிகள் கூறினர்

கொழும்பில் பாடசாலைச் சிறுமிகள்


Wednesday03October2012.By.Rajah. முன்னிலையில் தினமும் நிர்வாண போஸ் கொடுத்து வந்த நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு உள்ளார்.
இவரின் பெயர் அமித ரொஷான். ஹொரணவைச் சேர்ந்தவர். எஜமானனின் வாகனத்தில் தினமும் ஸ்ரீமாவோ பாலிக வித்தியாலயத்துக்கு வருவார்.
மாணவிகளை காண்கின்றபோது வாகனத்தை நிறுத்தி ஹோர்ன் அடிப்பார். சிறுமிகள் திரும்பிப் பார்ப்பார்கள்.
அப்போது வாகனத்தில் இருந்தபடியே கீழாடையை நீக்கி பிறப்புறுப்பை காட்டுவார். இவரின் செய்கையை கண்டு சிறுமிகள் வெட்கப்பட்டுச் சிரிக்கின்றமை வரை ரொம்பவே குஷிப்படுத்தி விடும்.
இவரின் அநாகரிக நடவடிக்கை குறித்துப் பாடசாலையின் பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருந்தன.
இது வரை காலமும் இவர் பாதுகாப்பு ஊழியர்களிடம் அகப்படாமல் இலாவகமாக தப்பி வந்திருக்கின்றார். ஆயினும் நேற்று முன் தினம் வசமாக மாட்டிக் கொண்டார்.
பாதுகாப்பு ஊழியர்கள் இவரை கறுவாக்காட்டுப் பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் கையளித்தனர்.
கறுவாக்காட்டுப் பொலிஸார் இவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கினர்.
நீதிமன்றம் இவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போட உத்தரவிட்டு உள்ளது

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன்

          
 
Wednesday03October2012.By.Rajah. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம்! இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் இத்திட்டம் ஆரம்ப வைபவம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதன்போது இப்பகுதியில் ஜந்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொது சந்தைக் கட்டிடமும் இவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பொது மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
பொது மக்கள் எவரும் குடியிருக்காத இப்பகுதியில் இந்திய வீட்டுதிட்டம் வழங்கப்படவுள்ளது என்று கூறி அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராணுவத்தினரது ஏற்பாட்டில் பொது மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தனி பஸ்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இது தவிர, இந்நிகழ்வில் வரவேற்புக்காக அழைத்துவரப்பட்ட பெண்கள் கட்டாயப்படுத்தி நீல நிலத்திலான சேலை அணிவிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு பொது மக்களின் கைகளிலும் இந்திய - இலங்கை கொடிகளை கட்டாயப்படுத்தியே வழங்கியதாகவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஸ மதுவில் மயங்கி இருந்தாரா?
இந்நிகழ்வுகளுக்கு முன்னர் மடுவில் நடைபெற்ற இந்திய வீட்டுதிட்ட நிகழ்வின் பின்னர் கிளிநொச்சி பகுதியிலுள்ள இராணுப்வபடை முகாமிலேயே இவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடாகியிருந்ததோடு யாழ். இராணுவத் தலைமையகத்திற்கும் விஜயம் செய்திருந்ததாக தெரியவருகின்றது.
இவைகளைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஸ வழமைக்கு மாறான செயற்பாடுகளை மேற்கொண்டதைக் காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சந்தைக் கட்டிடத்தை திறக்கும் படி பசில் ராஜபக்ஸவை அழைத்த போது அவர் அமைச்சர் டக்ளஸ் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்டவர்களை திறக்கும்படி அழைத்து விட்டு கைகட்டி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இறுதியாக சந்தை கட்டிடத்தினை நாடா வெட்டி மட்டும் திறந்து வைத்ததோடு இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர் உரையாற்றாமல் மிக வேகமாக நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வந்த வேகத்தில் திரும்பி சென்றுள்ளார்.