siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

நெடுந்தீவு கடற்பரப்பில் மின்னல் தாக்கி கடற்படை வீரர் மரணம்

நெடுந்தீவு கடற்பரப்பில் கடமையில் இருந்த வேளை மின்னல் தாக்கியதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அலுகேன வீதி, பாதுக்க பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.லஹிரு என்பவரே உயிரிழந்தவராவார். இறந்தவரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா சொல்லும் ஐடியா??

ஸ்ரீ ராமஜெயம் படத்தில் சீதாபிராட்டியாக நடித்து ஆந்திராவின் நந்தி விருதை வென்ற நயன்தாரா, சிறந்த நடிகையாக உருவாவது குறித்து பேசியுள்ளார். மேலும் இது குறித்து, ஸ்ரீ ராம ஜெயம் படத்தில் நடித்ததை தெய்வீக அனுபவமாக உணந்தேன். என் கலை வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகுமென நயன்தாரா தெரிவித்தார். சீதா தேவியாக நடித்ததால் நந்தி எனக்கு கிடைத்துள்ளது. சீதா கதாபாத்திரமாக ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதை நினைத்து பெருமையடைகிறேன். எவ்வளோவோ சர்ச்சைகள் வந்த போதும் பாலகிருஷ்ணா, தயாரிப்பாளர் சாய் பாபு, இயக்குனர் பாபு இவர்களின் ஆதரவாலும் ஒத்துழைப்பாலும் என்னால் சீதாவாக நடிக்க முடிந்தது. நான் மீண்டும் சீதாவாக நடிப்பேன் என்றும் எந்தவித இந்திய புராணப் பாத்திரங்களையும் ஏற்று என்னால் நடிக்க முடியும். கமர்சியல் படங்களில் மட்டுமின்றி நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதால் சிறந்த நடிகையாக உருவாக முடியும் என்கிறார் நயன்தாரா.

கனடா: நயாகராவில் 5 வயது பெண் குழந்தையை

     Tuesday 16 October 2012 .By.Raja.. கடித்து குதறிய நாய்களின் கூட்டம்.
நயாகரா நகரில் வெள்ளிக்கிழமை இரவில் நாய்களின் கூட்டம் ஒன்று ஐந்தே வயதான குழந்தையை கடித்து குதறியது. அதனால் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கவலையுடன் தெரிவிக்கின்றன.

நயாகராவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தங்கள் வீட்டின் முன் இருந்த சிறிய நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை அங்கு வந்த பெரிய நாய்களின் கூட்டம் ஒன்று திடீரென கடித்து குதறியது. இதனால் கதறி அழுத குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றினார்கள். பின்னர் 911 தொலைபேசி மூலம் காவல்துறையினருக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை அருகிலுள்ள Welland County General Hospital  மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் நிலைமையை கவலையுடன் பார்த்த மருத்துவர்கள் தற்போது எதுவும் உறுதியாக கூற முடியாத நிலையில் குழந்தை இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


நயாகரா தெருவில் அதிகமாக நாய்கள் நடமாடிக் கொண்டிருப்பதாகவும், அவைகள் தெருவில் நடந்து போகும் மனிதர்களை பல சமயங்களில் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால், இதுகுறித்து மாகாண நிர்வாகம் சீரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.{Monday 15 October 2012 }

அமெரிக்க பல்கலை பேராசிரியர்களுக்கு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.அமெரிக்காவை சேர்ந்த, ஆல்வின் ரோத், லாய்டு ஷெப்லே ஆகியோருக்கு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், ரசாயனம், மருத்துவம் ஆகிய துறைகளில், சாதனை படைப்பவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம் ஆகிய துறையை சார்ந்த நிபுணர்களுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான பரிசு, ஐரோப்பிய யூனியனுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஆல்வின் ரோத், லாய்டு ஷெப்லே ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை கழகத்தின், பொருளாதார பேராசிரியராக இருப்பவர் ஆல்வின் ரோத். கலிபோர்னியா பல்கலை கழக பேராசிரியர் ஷெப்லே. "நிலையான வினியோகம் மற்றும் சந்தை விற்பனை நடைமுறை' குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியை பாராட்டி, இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது

தலிபான்களால் சுடப்பட்ட மாணவி சிகிச்சைக்காக



Tuesday  16  October  2012 By.Rajah..லண்டன் பயணம்
தலிபான்களால் சுடப்பட்ட, பள்ளி மாணவிக்கு, லண்டனில் சிகிச்சையளிக்கப்படுகிறது. பாகிஸ்தானின், பழங்குடிகள் அதிகம் வசிக்கும், ஸ்வாட் மாவட்டத்தின், மிங்கோரா நகரை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய், 14. அமைதி குறித்து, பல்வேறு பேச்சுப் போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் மலாலா.

பள்ளி மாணவியான மலாலா, கடந்த வாரம், பேருந்தில் வீட்டுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள், மலாலாவை இரண்டு முறை சுட்டனர். இதில், தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அறுவை சிகிச்சை மூலம், இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. இருப்பினும் மலாலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேல்சிகிச்சைக்காக, மலாலா, நேற்று லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட் அளித்த ஏர் ஆம்புலன்ஸ் மூலம், மலாலா, லண்டன் சென்றார். அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது, பாதுகாப்பு காரணங்களையொட்டி, ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

உடல்நல சிகிச்சைக்காக சீனா சென்ற கம்போடிய

 

Tuesday16October2012.ByRajah. மன்னரின் தந்தை மரணம்
கம்போடிய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான நரோத்தம் சிகானுக் (90) சீனாவில் காலமானார்.
திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக, கம்போடிய அரசு தெரிவித்துள்ளது.
சிகானுக் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக, சீனாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

மக்களின் அன்பையும், பெருமதிப்பையும் பெற்ற முன்னாள் மன்னர் நரோத்தம் சிகானுக்கின் உடலை கம்போடியாவுக்குக் கொண்டு வர, அவரின் மகனும் தற்போதைய மன்னருமான நரோத்தம் சிகாமணி சீனா விரைந்துள்ளார் என்று கம்போடிய துணைப் பிரதமர் நிக்புன்ச்சேய் தெரிவித்துள்ளார்.

1922ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பிறந்த நரோத்தம் சிகானுக், 1941 முதல் 1955ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1993 முதல் அக்டோபர் 2004ஆம் ஆண்டு வரையும் மன்னராகப் பொறுப்பு வகித்தார்.

கொலையானதாக கூறப்பட்ட சிறுவன் காதலியுடன்

Tuesday  16  October  2012 By.Rajah
ஆஜர் - பரபரப்பு : பீகாரில் "பந்த்' நடத்திய எதிர்க்கட்சிகளுக்கு மூக்குடைப்பு பீகாரில், மதுபானி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, அங்கு நேற்று நடந்த, "பந்த்'தின் போது, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர், ராம்விலாஸ் பஸ்வான் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில், இந்த, "பந்த்'திற்கு காரணமான, படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன், காதலியுடன், டில்லி கோர்ட்டில் ஆஜரானதால், பரபரப்பு ஏற்பட்டது.
வன்முறை : பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள, மதுபானி நகரைச் சேர்ந்த, சுபாஷ், 17, ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற, பள்ளிச் சிறுவன், கடந்த மாதம், மர்மமான முறையில், படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைக் கண்டித்து, அந்தப் பகுதியில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தின்போது வன்முறை நிகழ்ந்தது.

வன்முறையாளர்களைக் கலைக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இரண்டு பேர் இறந்தனர்.
இதைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகள், லாலு பிரசாத்தின், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை, நேற்று, "பீகார் பந்த்' நடத்தின. இதனால், தலைநகர் பாட்னாவில், போக்குவரத்து பாதிப்பு இல்லை; ஆனால், பிற பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது.
மாநிலத்தின், வடக்கு மாவட்டங்களான, கயா, மதுபானி, தர்பங்கா, ஆரா, ஜஹானாபாத் மற்றும் போஜ்பூர் போன்ற இடங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை; கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; பஸ் போக்குவரத்து, முற்றிலும் முடங்கியது.
சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன; பயணிகள் ரயில், பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட, லாலு பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில், பீகாரில் நேற்று, எதிர்க்கட்சிகள் நடத்திய, "பந்த்'திற்கு காரணமான, படுகொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட சிறுவன் சுபாஷ், காதலி, மணீஷா, 16, ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) டில்லி கோர்ட்டில் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தினான்.
விசாரணை : தன்னை யாரும் கொலை செய்யவில்லை என்று கூறிய அவன், காதலியுடன் ஓடிப்போன தகவலையும் தெரிவித்தான். அந்தச் சிறுவனிடமும், அவனின் காதலியிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "எந்த விவகாரம் கையில் கிடைக்கும்; அதன் மூலம் பிரச்னையை ஏற்படுத்தி, மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்யலாம்' என்ற, எண்ணத்தில், நேற்று பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, "பந்த்' நடத்திய, எதிர்க்கட்சிகளுக்கு, சிறுவன் கோர்ட்டில் ஆஜரான விவகாரத்தால் மூக்குடைப்பு ஏற்பட்டது. சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும், அரசியல்வாதிகள் போராட தயங்க மாட்டார்கள் என்பது, நேற்றைய சம்பவம் மூலம், உறுதியாகியுள்ளது