siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 18 அக்டோபர், 2012

வறுமையிலும் சாதித்த ஈழச் சிறுமி!

         
Thursday 18 October 2012 NBy.Rajah.
கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறாள் தமிழினி என்ற சிறுமி. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்று வரும் தமிழினி கடந்த புலமை பரீட்சையில் 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருக்கிறார்.
மாவட்டத்தில் இந்த பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பலர் இருக்க வெட்டுப்புள்ளியான 146 புள்ளிகளை பெற்ற இந்த தம்ழினியை பற்றி ஏன் எழுதவேண்டும்? தமிழினியின் வாழ்க்கை பெரும் துயரத்தில் மிதக்கிறது. அவளது வாழ்வில் இந்தப் புள்ளிகள் ஒரு சாதனையாகின்றன.
தமிழினியின் தந்தை தனபாலளை யுத்தம் இந்த உலகை விட்டு அழித்துவிட்டது. தாய் புவனேஸ்வரி வறுமையினால் வெளிநாட்டில் உழைப்பதற்காக இந்த நாட்டை விட்டே சென்று விட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு கொடிய இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை உடையார்கட்டு இருட்டுமடு என்ற இடத்தில் நடந்த செல் தாக்குதல் ஒன்றில் தந்தையார் இறந்துபோக தாய் மூன்று குழந்தைகளுடன் மெனிக்பாம் சென்று பின்னர் மீண்டும் கிளிநொச்சியில் மீள்குடியேறியவர்
ஆனால் தமிழினியின் தாயார் இப்பொழுது மலேசியாவில் வீட்டுப்பணிப்பெண்னாக இருக்கிறார். தனது மகள் தமிழ்நிலாவுக்கு (வயது 03) இதயநோய் காரணமாக அவருக்கு சிகிசை அளிப்பதற்கு நான்கு இலட்சம் ரூபா தேவைப்படுகிறகு என மருத்துவர்கள் தெரிவிக்க அந்த பணத்தினை சம்பாதிக்க அவர் வீட்டுப்பணிப்பெண்ணாக மலேசியா சென்று இப்பொழுது று மாதங்கள் ஆகின்றன.
கணவனை இழந்த அந்த இளம் பெண் தனது மகளை எப்படியென்றாலும் நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மூத்த பிள்ளை பத்து வயதான தமிழினியுடன் ஏழு வயதான தமிழ்ராஜ், மூன்று வயதான தமிழ்நிலா ஆகிய மூன்று குழந்தைகளையும் தனது சகோதிரியின் பராமரிப்பில் விட்டுவிட்டு சென்றுள்ளார் அவரது சகோதரி ஆதாவது தமிழினியின் சித்தி கிளிநொச்சி நகரிலுள்ள உள்ள ஒரு தனியார் புத்தக கடையில் வேலை செய்கின்றார் அந்த வருமானத்தில்தான் இந்த மூன்று குழந்தைகளும் தமிழினியின் சித்தி மற்றும் அம்மம்மா ஆகியோர் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்
இவர்களுக்கு அரசின் எந்த உதவிகளும் கிடைக்க வாய்ப்பே இல்லை. இவர்கள் குடியிருக்கும் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கு பின்புறமாக உள்ள அரச காணிகளில் வசிக்கிறார்கள்.
இவர்கள் குடியிருக்கும் குடிசையிலிருந்து 25 மீற்றர் தொலைவில் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களால் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மின்சார நிலையம் உள்ளது. இவர்களது குடிசைக்கு மேலாக உயர்வலு, குறைவலு என மின்கம்பிகளும் மின்கம்பங்களும் செல்கிறது. ஆனால் இவர்களது வீட்டுக்கு இதுவரை மின்சாரம் இல்லை என்பதே சோகம்.
சொந்த காணி இல்லை. சொந்த வீடு இல்லை. வீட்டில் கிணறு இல்லை, இருக்கு என்று சொல்வதனை விட இல்லை என்று சொல்வதற்கே ஏராளாம் துயரங்கள் உள்ளன. அப்பா உழைத்து சிறுக சிறுக சேகரித்த சொத்துக்களும் அப்பாவோடு உடையார்கட்டோடு யுத்த்தில் அழிந்துவிட்டன. இப்படியான சோகமான வரலாற்று பின்னணியை கொண்ட ஏதுவுமற்ற வீட்டில் வசிக்கும் இடிந்த குடும்பததின் மூத்த பிள்ளையே தமிழினி,
இப்படி ஒரு சூழலில்தான் தமிழினியின் கதை முக்கியமாகிறது. தமிழினி நெருக்கடியான நிலைமையிலேயே தனது கல்வியினை தொடர்ந்துள்ளார் தொடர்கிறாள். ஒரு பிள்ளைக்கு படிப்பதற்கு என்ன அடிப்படை வசதிகள் தேவையோ அவை அனைத்தும் அற்ற நிலையிலேயே தம்ழினி படிக்கிறாள்.
ஒழுங்கான வீடு இல்லை. வீட்டில் கதிரை மேசைகள் இல்லை. மின்விளக்குகள் இல்லை. இப்படி ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று இல்லை ஏதுவுமில்லாத ஒரு சூழலிலேயே தமிழினி தனது தரம் ஜந்து பரீட்சையில் தோற்றி மாவட்ட வெட்டுப்புள்ளியான 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துளாள்.
பெருபாலான நேரங்களில் தமிழினியே வீட்டு வேலைகளையும் கவனிக்கவேண்டிய நிலைமையும் உண்டு. அயல் வீட்டுக்குச் சென்று குடிப்பதற்கு, குளிப்பதற்கு துவைப்பதற்கு என தண்ணீர் பெற்றுவருவது முதல் தனது ஆடைகளை துவைத்து சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளுடன் இதய நோயினால் பாதிக்கப்பட்ட தங்கையின் தேவைகள், தம்பியின் தேவைகளையும் கவனிக்க வேண்டும்.
பத்து வயதிலேயே பக்குவமாய் எல்லாப் பணிகளையும் செய்து தானும் தனது கல்வியினை தொடர்ந்து சித்தியடைந்த இந்தப் பிள்ளை உண்மையிலேயே பாராட்டுக்குரியவள். தந்தை இல்லாத சோகம் தாயின் அரவணைப்பு இல்லாத ஏக்கம் வறுமையின் தாக்கம் இவற்றுக்கு மத்தியில் தமிழினி இந்த வெற்றியைச் சாதித்திருகிறாள்.
எனவே உதவிகள் என்பது இவர்களை போன்றவர்களுக்கே தேவைப்படுகின்றது. தந்தை இல்லாத குடும்பம். இதய நோயினால் பாதிக்கப்பட்ட தங்கை. அதற்காக நான்கு இலட்சம் ரூபாவுக்கு தாய் நாட்டை விட்டுச் சென்ற தாய். இப்படியான குடும்பத்தில் கல்வியை இறுக்கமாகப் பிடித்த தமிழினி நம்பிக்கை தரும் சிறுமி.

கொடுமைக்கார கிராமம் ஒன்று கொதிப்படைந்து செய்த கொடுமை



18.10.20123..By.Rajah.மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் துப்ரஜபூர். இங்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கடந்த 6 மாதமாக மாந்தீரிக வேலைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த அப்பகுதி கிராம கங்காரு சபை அந்த மூன்று பெண்களுக்கும் பல முறை அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ஒரு இளைஞர் இறப்புக்கு காரணம் அவர்களின் சூன்யவேலை என்று அந்த கிராமத்தினர் கருதியுள்ளனர். இதனால் கொதிப்படைந்த அவர்கள், கடந்த திங்களன்று இரவு தாயார், மகள் மற்றும் அவர்களது உறவுக்கார பெண் என மூன்று பேரையும் ஒரு பொது இடத்தில் நிறுத்தி உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர்.மூன்று பெண்களும் இறந்து கருகிய நிலையில் அங்கு ஒரு மறைவிடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர்.பின்னர் இச்செய்தி போலீசாருக்கு தெரியவர அந்த பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அந்த கிராமத்தினர் தலைமறைவாகியுள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர்

விரைவில் தயாராகிறது பசங்க பார்ட்-2

 Thursday, 18 October 2012, By.Rajah.
இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான எஸ்.டி.விஜய் மில்டன் தமிழில் நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காதல் படம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 படம் வரைக்கு இவர்களது வெற்றி கூட்டணி தொடர்ந்தது.
ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் மில்டன் சிறந்த படைப்பாளியாகவும் திகழ்ந்துள்ளார்.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கிய மில்டன், தற்போது தன்னுடைய சொந்த தயாரிப்பில் பசங்க படத்தின் இரண்டாம் பாகமாக பசங்க பார்ட்-2 வை இயக்க உள்ளார்.
பசங்க படத்தின் இயக்குனர் பாண்டியராஜன் இந்த படத்திற்கு வசனம் எழுத உள்ளார். இந்த படத்துக்காக சமீபத்தில் பசங்க படத்தில் நடித்த அதே கதாபாத்திரங்களை வைத்து டெஸ்ட் ஷூட்டு எடுத்துள்ளார்.
அவர்களும் சிறப்பாக நடிக்க மில்டனுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதனையடுத்து படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளாராம்

தமிழ் படங்களில் நடிக்கிறேனா? வித்யாபாலன் கோபம்

 Thursday, 18 October 2012.By.Rajah.
கரண் ஜோடியாக வடிவுடையான் இயக்கும் படத்தில் வித்யாபாலன் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்தன.
இத்தகவலை அப்பட வட்டாரங்களே தெரிவித்திருந்தன. இது பற்றி அறிந்து கொதித்து போயிருக்கிறார் வித்யாபாலன்.
அவர் கூறுகையில், அடிக்கடி இதுபோல் செய்திகள் வருகிறது. ஏற்கனவே ஒரு தமிழ் படத்தில் நான் நடிக்கப் போவதாக செய்தி வெளியானது. என் படத்தை வைத்து விளம்பரம் கூட செய்திருந்ததாக அறிந்தேன்.
அப்போதே அந்த படங்களில் நான் நடிக்கவில்லை என மறுத்தேன். இப்போது இன்னொரு படம்(கரண் படம்) பற்றி சொல்கிறார்கள்.
தமிழில் எந்த படத்திலும் நடிக்க என்னிடம் யாரும் பேசவில்லை. இப்போதைக்கு இந்தியில் பிசியாக நடித்து வருகிறேன்.
வேறு மொழிகளில் கவனம் செலுத்த நேரமில்லை. தமிழ் உள்பட எந்த மொழியிலும் நான் நடிப்பேன். ஆனால் நல்ல கதை அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்

பாலிவுட்டில் காஜல் அகர்வாலின் புதிய படம்

 Thursday, 18 October 2012, By.Rajah.
கொலிவுட்டில் மாற்றான், துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது பாலிவுட்டில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
மும்பைவாசியான காஜல் அகர்வால், பாலிவுட் பட உலகில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவான 'க்யுன் ஹோ கயா நா' படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.
அதற்கு பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்தார்.
அஜய் தேவ்கன் உடன் இணைந்து இந்தி 'சிங்கம்' படத்தில் காஜல் நடித்தார்.
கொலிவுட்டின் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் ஆகியோருடன் 'மாற்றான்', 'துப்பாக்கி' படங்களில் நடித்த காஜல் சரியான பாலிவுட் வாய்ப்புக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த வருடம் வெளியாகும் 'ஸ்பெஷல் ச்சப்பிஸ்' என்ற பாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

சுவாரஸ்யமான கதைகளில் நடிக்க விரும்பும் ரம்யா நம்பீசன்

Thursday, 18 October 2012,By.Rajah.
குள்ளநரிக்கூட்டம் நாயகி ரம்யா நம்பீசன், கொலிவுட்டில் சுவாரஸ்யமான கதைகளில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
தமிழில் நடிப்பது குறித்து கூறியதாவது, எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
சுவாரஸ்யமான கதைகளில், என் நடிப்பு திறமைக்கு தீனி போடுகிற கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்பினேன்.
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் சொன்ன கதை, திரைக்கதை பிடித்ததால் 'பிட்ஸா'வில் நான் நடித்தேன்.
இதில் கொமெடி, ஆக்சன், த்ரில், ரொமான்ஸ் எல்லாம் இருக்கும் என்கிறார் 'பிட்ஸா' நாயகி ரம்யா நம்பீசன்.
இவர் மலையாளத்தில் சுமார் 20 படங்களிலும், தெலுங்கில் நான்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன்: எஸ்.தாணு

 Thursday, 18 October 2012, By.Rajah.
ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன் என்று மனம் நெகிழ்ந்து போயுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.
பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர் எஸ்.தாணு.
யார் படத்தில் தொடங்கி இப்போது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் வரை அவரது பிரமாண்டம் தொடர்கிறது.
ஆனால் இவருக்கும் இடையில் சில சறுக்கல்கள் வந்தன. இருந்தும் அதை எல்லாம் முறியடித்து இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு துப்பாக்கி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார்.
துப்பாக்கி படத்தை பற்றி பல செய்திகள் வந்தாலும், அதில் நடித்த விஜய் பற்றியும், அவர் செய்த உதவியை பற்றி தான் இன்றைய கோடம்பாக்கம் முழுவதும் ஒலித்து கொண்டு இருக்கிறது.
அப்படி என்ன செய்தார் விஜய் என்று கேட்கிறீர்களா...?
துப்பாக்கி படம் தொடங்கிய பிறகு தாணு அவர்களுக்கு நிதி நெருக்கடி வந்ததாம்.
எங்கே தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் பணப்பிரச்னையில் சிக்கி படப்பிடிப்பு நின்றுபோய்விடுமோ என்று நினைத்த விஜய், தாணுவின் நிலையை புரிந்து கொண்டு அவரை வரவழைத்து ரூபாய் எதுவும் நிரப்பப்படாத காசோலை ஒன்றை கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள் என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம் தாணு.
இதுப்பற்றி தாணுவிடம் கேட்டபோது, சிவாஜி படத்தில் ரஜினி நடித்த போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கி கொண்டு நடித்தார்.
படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் தனக்குரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டார்.
அந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்தவர் ரஜினி. அவருக்கு பிறகு விஜய்யிடம் அந்த மனப்பாங்கு இருக்கிறது என்று மனம் நெகிழ்ந்து போனாராம்

இந்திய ராணுவம் வழங்கும் பயிற்சிகள் சூப்பர்

Thursday 18 October 2012.By.Rajah.சேர்ட்டிபிகேட் கொடுத்துள்ள இலங்கை இராணுவம். இந்திய ராணுவம் வழங்கும் பயிற்சிகள் சூப்பர்” என்று சேர்ட்டிபிகேட் கொடுத்துள்ளது இலங்கை இராணுவம். இந்தியாவின் பல பகுதிகளில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்தபோது, இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் நாட்டில் எமக்கு பயிற்சி கொடுக்கப்படுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்காக, எமக்கு வழங்கப்படும் பயிற்சியின் தரத்தில் இந்தியா எந்த குறையும் வைக்கவில்லை. நவீன பயிற்சி முறைகளுடன் கூடிய இந்தப் பயிற்சி, எமது இராணுவ நிபுணத்துவத்தை உயர்ந்த தரத்தில் பேணுவதற்கு உதவுகிறது.
இந்தியா வழங்கும் அதி உன்னத பயிற்சி காரணமாக, இந்த ஆண்டுமுதல் இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு இந்திய மத்திய அரசிடம் இருந்து எமக்கு ஒப்புதல் கடிதம் கிடைத்துள்ளது.
இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிக்கும், இந்த ஒத்துழைப்பு 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது” என்றும் கூறியுள்ளார்

 

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிரித்தானியாவுக்குள் நுழைய

 Thursday 18 October 2012 By.Rajaj.முற்படும் இலங்கையர்களுக்கு பத்து வருட சிறை! போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் இலங்கையர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் பத்து வருட காலத்துக்கு பிரித்தானியாவுக்கு பயணத்தை மேற்கொள்ள முடியாதபடி தடைவிதிக்கப்படும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் நெற்று (17) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

நேர்மையான முறையில் பிரித்தானியாவுக்குள் நுழையும் மாணவர்கள் தொழில் பெறுவோர், பயணிகள் ஆகியோரைத் தமது நாடு மிக நேர்மையான முறையில் வரவேற்கிறது. எனவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகராலயம், போலியான விபரங்கள் கொண்ட ஆவணங்களுடன் தமது நாட்டுக்குள் பிரவேசிக்கும் எவரையும் ஏற்றுக் கொள்ளவே மாட்டாது என்றும் கூறியுள்ளது. அத்துடன் பிரித்தானியாவுக்கான விசாக்களைப் பெற்றுக் கொள்வதற்கான எந்தவொரு ஆலோசகரையும் தாம் இலங்கையில் நியமிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மக்களின் பெருமளவான

Thursday  18  October  2012 By.Rajah. காணிகள் படையினர் ஆக்கிரமிப்பு! இடமின்றி தவிக்கும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலே சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன், பல வர்த்தக நிலையக் கட்டடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் கமநலச் சேவை நிலையத்தின் முன்பாகவுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை இயங்கிய காணியும், அதனைச் சூழவுள்ள பத்துக் குடும்பங்களின் காணிகளும், புதுக்குடியிருப்புச் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக சுமார் பதினைந்து ஏக்கர் காணிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள், பொதுமக்களின் வாழ்விடங்கள் என்பவற்றை இலங்கை ராணுவத்தின் 682 ஆவது படைப்பிரிவு பயன்படுத்தி வருகின்றது.
இதேவேளை புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலப்பகுதியை இலங்கை ராணுவத்தின் 68 ஆவது படைப்பிரிவு பிடித்துவைத்துள்ளது. இதைவிட  புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் அறுபது ஏக்கர் நிலப்பகுதியையும் இலங்கை ராணுவத்தின் 683 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்துள்ளது.

இவ்வாறு பொதுமக்களுக்குச் சொந்தமான மேற்படி 875 ஏக்கர் காணி ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் இந்தக் காணிகளின் உரிமையாளர்கள் மீள்குடியமர முடியாமலும் வாழ்வாதாரச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியாமலும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதேவேளை புதுக்குடியிருப்புப் பிரதேச மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை விடுத்துள்ளதுடன், இது தொடர்பாக மனுக்களையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கைக்கு எதிரான எந்தக் கேள்விகளுக்கும்




Thursday  18  October  2012 By.Rajah.
பதிலளிக்க தயார்! மகிந்த சமரசிங்க  வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐநா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்க தயாராக உள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு செயலாளர்  கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பான நான்கு அறிக்கைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குக் கிடைத்துள்ளது.
வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இந்த நான்கு அறிக்கைகளும் பேரவையினால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
30 அரசசார்பற்ற நிறுவனங்கள், இலங்கை  மனிதஉரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்கா அரசாங்கம், மற்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆகியன தயாரித்த அறிக்கைகளே இவையாகும்.
இந்த நான்கு அறிக்கைகளும் ஜெனிவா கூட்டத்தில் ஆராயப்பட்டு, ஒரு அறிக்கையாகத் தயாரிக்கப்படும்.
இந்தப் பணியை இந்திய, பெனின், ஸ்பெய்ன் நாட்டுப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவுள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே வரும் 1ம் நாள் பூகோள கால மீளாய்வுக் கூட்ட விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்க இலங்கை  தயாராக உள்ளதாக, இலங்கை  வெளிவிவகார அமைச்சு செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு இதற்காக ஜெனிவா செல்லவுள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்டாப் வழங்கினார் ஜெயலலிதா!



Thursday  18  October  2012 By.Rajah.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
 இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 2011-2012 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கான பொது விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார்.
 அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் வரையறுக்கப்படாத நிதி ஒதுக்கீட்டிலிருந்து தங்களின் தேவைக்கேற்ப ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி, பிரிண்டர் மற்றும் இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை வாங்கிட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்படி மடிக்கணினிகள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டது.இந்த மடிக்கணினிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார்ள்.
 மடிக்கணினிகளை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் கோரிக்கையினை ஏற்று மடிக்கணினி வழங்கிய முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
 இந்த நிகழ்ச்சியில்,சட்டப்பேரவைத் தலைவர்,நிதியமைச்சர்,நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், அரசு தலைமை கொறடா,தலைமைச் செயலாளர்,
 சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது