siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 22 அக்டோபர், 2012

நல்லடக்கம் செய்யப்பட்டவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு´'

         
Monday 22 October 2012.By.Rajah .திரும்பிய சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
களுத்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த சடலமொன்றை தமது தந்தையின் சடலம் என பிள்ளைகள் அடையாளம் கண்டு, அதனைப் பொறுப்பேற்று இறுதிக் கிரியைகள் செய்துள்ளனர்.
நல்லடக்கம் செய்து இரண்டு வாரங்களின் பின்னர் குறித்த நபர் உயிருடன் வீடு திரும்பியுள்ளார். குறித்த நபர் களுத்துறை, கட்டுகுருந்த கரையோரத்தில் முன்னர் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து லாகொஸ்வத்த என்னும் பிரதேசத்தில் குறித்த நபருக்கு வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது. வேலைக்குச் செல்வதாகத் தெரிவித்து சென்ற தந்தையை சில நாட்களாக காணாதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, சுனாமியினால் அழிவடைந்த தமது பழைய வீட்டுக்கு அருகாமையில் நஞ்சருந்தி நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிள்ளைகளுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.
தமது பழைய வீட்டிற்கு அருகாமையில் நஞ்சருந்தி உயிரிழந்தவர் தமது தந்தையாகவே இருக்கும் எனக் கருதிய பிள்ளைகள், சடலத்தைப் பொறுப்பேற்று இறுதிக் கிரியைகளை மேற்கொண்டுள்ளனர்.
இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் ஊர் திரும்பிய நபர், தமது படம் ஒட்டப்பட்ட மரண அறிவித்தல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உறவினர் வீடொன்றுக்கு சென்றிருந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்

டொரண்டோ: நடைபாதையில் தனியாக சென்ற பெண்ணிடம் செக்ஸ்


Monday22October2012By.Rajah. சில்மிஷம் செய்த 15 வயது சிறுவன் கைது டொரண்டோவில் 15 வயது சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் செக்ஸ் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.
டொரண்டோவின் Bloor and Christie area என்ற பகுதியில் சென்ற சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நடைபாதையில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். Youth Criminal Justice Act விதிகளின்படி சிறுவன் மைனராக இருப்பதால், அவனுடைய பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால் அவன் மேல் மொத்தம் 14 கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டொரண்டோ காவல்துறை அதிகாரி Bill Blair திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை தெரிவித்த அவர், இந்த சிறுவன் செய்த குற்றத்திற்கு சிறுவனை மட்டும் குறைகூற முடியாது என்றும், அவன் வளர்க்கப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுகிறது என்றும், இதுபோன்ற குற்றங்களை தடுக்க, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டியது அவர்களது கடமை என்றும் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை திங்கட்கிழமை மாலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்        

கனடா: 5.5 மில்லியன் கிலோகிராம் ஈகோலி வைரஸ் பாதித்த

.
Monday 22 October 2012  மாட்டிறைச்சியை அழிக்க CFIA உத்தரவு.   கனடாவின் அல்பெர்ட்டா கம்பெனியில் ஈ கோலி பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி அனைத்தும் அழிப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. The Canadian Food Inspection Agency இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அல்பெர்ட்டா கம்பெனியில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த ஈகோலி பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி, மற்றும் உற்பத்தியாகி விற்பனையாகாமல் இருக்கின்ற மாட்டிறைச்சி அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து அழிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டூள்ளதாக CFIA செய்திதொடர்பாளர் Lisa Gauthier ஆணையிட்டுள்ளார்.
Brooks plant மற்றும் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள 5.5 மில்லியன் கிலோகிராம் மாட்டிறைச்சியை அதிக வெப்பத்தில் வைத்து ஈகோலி கிருமியை கொல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு பரிசோதித்த மாட்டிறைச்சி மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.thedipaar.com
அமெரிக்காவில் இருந்து மட்டும் 1.1 மில்லியன் கிலோகிராம் மாட்டிறைச்சி திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதுபோக மீதி எவ்வளவு ஈகோலி மாட்டிறைச்சி இருப்பில் உள்ளது என்பதை இன்னும் சரியாக கணக்கிடவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனைவியின் மர்ம உறுப்பை வெட்டி கொலை


  Monday 22 October 2012 .By.Rajah.செய்த கொடூர கணவன்! மர்ம உறுப்பு வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் பலாங்கொடை - மேல் பலாங்கொடை தோட்ட வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை பொலிஸாருக்கு இன்று (22) காலை 06.05 அளவில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் பலாங்கொடை மேல் தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய வெள்ளசாமி பரமேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரே அவரை மர்ம உறுப்பில் வெட்டி கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பலாங்கொடை நீதவான் மரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
       

உலக அழகி போட்டியில் இலங்கையருக்கு 3ம் இடம்

 
திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[புகைப்படங்கள்]
உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார்.
உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார்.
opup

இலங்கையில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்?

 
 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயற்படாத நிலையில், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் முழுமையாக இடம்பெறவில்லை.
இந்த நிலையத்துக்கு பொறுத்தமான மசகு எண்ணெய் இருப்பு குறைவடைந்தமையே இதற்கான காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது மசகு எண்ணெயின் இருப்பு நிறைவடைந்துள்ள நிலையில, அடுத்த மாதம் அளவில் எரிபொருட்களை விநியோகிக் முடியாத நிலை ஏற்படும் என்று சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் அடுத்தமாதம் ஈரானில் இருந்து நான்கு கப்பல்களில் மசகெண்ணெயை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சி வர்த்தகரின் 50 இலட்சம் பெறுமதியான பொருட்களை

 
 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah.
 கையாடிய பொலிஸ் அதிகாரிகிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், தன்னிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை மோசடி செய்தார் எனக் கூறி, கிளிநொச்சியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையம் ஒன்றை இ.ஜெயசிங்கம் என்பவர் நடத்திவருகிறார். கடந்த ஓகஸ்ட் மாதம் சகோதரி ஒருவரின் மரணச் சடங்குக்காக அவர் கொழும்பு சென்றுள்ளார். அப்போது சந்தேகத்தின் பேரில் குறித்த வர்த்தகர் ஜாஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர் அவ்வாறு விளக்கமறியலில் இருந்த சமயத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவருடன் குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த குறித்த பொலிஸ் அதிகாரி வர்த்தகரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
"உனது கணவர் எங்களிடம் வாங்கிய கடனை தராமல் ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். எனவே கடன் பெறுமதிக்குரிய பொருள்களைத் தரவேண்டும்''. என்று வர்த்தகரின் மனைவியிடம் கூறியதுடன், அவரைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர் வர்த்தகரின் மனைவியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து, குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த சுமார் ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை எடுத்துச் சென்றுள்ளார்.
இம்மாத முற்பகுதியில் குறித்த வர்த்தகர் விடுதலையானார். அதன் பின்னர் அவருக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்தது. இது பற்றி அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸார் அவரை அச்சுறுத்தியதுடன் முறைப்பாட்டை ஏற்கவும் மறுத்துவிட்டனர்.
அதன் பின்னர் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் தனக்குச் சொந்தமான ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை மோசடி செய்துள்ளனர் எனத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட வர்த்தகர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

அம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்! -

 
திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012.,By.Rajah. [ புகைப்படங்கள்,]
ஒலுவில் கடலில் 7,000 பாரை மீன்கள்! பெறுமதி ஒரு கோடி ரூபாஅம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப் பாலமுனை பகுதியில் இரு இராட்சத சுறாக்கள் கடந்த வியாழக்கிழமை மீனவர்களிடம் சிக்கின.
கடலுக்குச் சென்றிருந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களின் வலையிலேயே இச் சுறாக்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 02 சுறாக்களும் சுமார் 1000 கிலோகிராம் எடையுடையவை என்று கூறப்படுகிறது.
இந்தச் சுறாக்கள் சுமார் 03 லட்சம் ரூபாவுக்கு விற்பனையாகியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒலுவில் பிரதேச கடற்றொழிலாளிக்கு ஒரே தடவையில் 7,000 பாரை மீன்கள்!
ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலாளி ஒருவருக்கு சொந்தமான தோணிகளுக்கு ஒரே தடவையில் சுமார் 7,000 பாரை மீன்கள் சிக்கின.
ஒவ்வொன்றும் 6 முதல் 7 கிலோ கிராம் எடையுடைய இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரதேச வரலாற்றில் இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டமை இதுவே முதல் தடவை என இங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர்.
சாதாரண நாட்களில் 7 கிலோகிராம் எடையுடைய பாரை மீனொன்று சுமார் 2,000 ரூபாவுக்குக் குறைவில்லாமல் விற்கப்படும் நிலையில் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலேயே விற்கப்பட்டன.
                                                                             
 
pup

போஸ்னியாவில் இரும்பு பாலம் திருட்டு: மக்கள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,Ba.Rajah.{புகைப்படங்கள்],
போஸ்னியா நாட்டில் இரும்பு பாலத்தை திருடி சென்றவனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது பிராக்கோ. விளைநிலங்கள் சூழ்ந்த இப்பகுதியில் ஆற்றை கடக்க இரும்பு பாலம் ஒன்று இருந்தது.
80ஆம் ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த வாரம் காணாமல் போனது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர்.
வழக்கமாக கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகளை திருடும் நபர் ஒருவர் மீது பொலிசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
29 வயதுடைய அந்த திருடனின் வீட்டுக்கு வெளியே திருடப்பட்ட பாலம் இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த திருடனை பொலிசார் கைது செய்தனர். கழிவு நீர் கால்வாய் மூடிகளை திருடி வந்த திருடன் பெரிய தொகையை சம்பாதிக்கும் நோக்கில், இரும்பு பாலத்தையே பெயர்த்து எடுத்து சென்றதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தியர் தீக்குளிப்பு

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து திபெத்தை சேர்ந்த நபர் தீக்குளித்து உயிரிழந்தார். சீனாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கான்ஸீ மாகாணத்தை சேர்ந்த லாமோ கியாப்(வயது 27) என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா திபெத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்று கூறியபடியே தீ வைத்து கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த நபரொருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை சுமார் 60 திபெத்தியர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர்.
திபெத் விடுதலை இயக்கத்தை சேர்ந்த இயக்குனர் பிரிக்டென் கூறுகையில், சீனாவின் நடவடிக்கையை சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வு காண வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்

பிரிட்டன் முன்னாள் பிரதமரின் கார் ஏலம்

 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[புகைப்படங்கள்],
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய லேண்ட் ரோவர் கார் ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது. சர்ச்சிலின் 80ஆவது பிறந்தநாளின் போது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இக்கார் அவருக்கு பரிசளிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ்ஷயரில் இக்கார் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இங்கு ஏலம் விடப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்கால வாகனங்களில் சர்ச்சில் பயன்படுத்திய கார் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.
குவைத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குவைத்தில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 50 இடங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமான ஊழல் புகார்களை கூறி வந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நசீர் முகமது பதவி விலகினார். இருப்பினும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பல மாதங்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை. நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி, தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது.
இதையடுத்து 7ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரபு நாடுகளிலேயே குவைத் நாடாளுமன்றம் தான் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றமாக உள்ளது.
குவைத் அரச குடும்பத்தினர் அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஈராக்கிலிருந்து வாபஸ் பெற்ற அமெரிக்க இராணுவம், ஈரானை ஒடுக்க குவைத்தை தன் படைத்தளமாகப் பயன்படுத்தி வருகிறது.
துபாய், தோகா போன்றவை பொருளாதாரத்தில் முன்னேறியவையாக உள்ளன. ஆனால் குவைத் இன்னும் முன்னேற்றமடையாமல் உள்ளதாக எதிர்க்கட்சியினர் கண்டித்து உள்ளனர்

ஈரானுடன் பேச்சுவார்த்தையா? அமெரிக்கா மறுப்பு

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அணு ஆயுத திட்டம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும், ஈரானும் கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் தொடங்கிய போது முதலில் நடத்தப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரை பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தரப்பும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் நகல்கள், அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய சிறிய குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளதுடன், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் டாமி வீட்டர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையல்ல.
எனினும் ஈரானின் அணு ஆயுதத் திடடம் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா நிர்வாகம் தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்

அழகு நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[காணொளி,புகைப்படங்கள்,]
அமெரிக்காவில் பிரபல அழகு நிலையம் ஒன்றில் மர்ம மனிதன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர், 7 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் புரூக்பீல்டு ஸ்கொயர் என்ற ஷாப்பிங் மால் உள்ளது.
இந்த மாலுக்கு புகுந்த மர்ம மனிதன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாயினர், 7 பேர் காயமுற்றனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் அந்த இடத்திலேயே இருப்பதாக தகவல் கிடைத்ததும், விரைந்த வந்த பொலிசார் சுற்றி வளைத்தனர். இருப்பினும் அந்நபர் தப்பி சென்று விட்டார்.
6 அடி உயரமுள்ள கருப்பின இளைஞர் ஒருவரின் செயலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே மில்வாக்கி நகரில் உள்ள குருத்வாராவில் பக்தர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். திரையரங்கிலும் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது.
இரவு நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.