Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 2 நவம்பர், 2012

ஏலத்திற்கு வரும் டயானாவின் காரின் விலை என்ன தெரியுமா?

02.11.2012.By.Rajah.பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்படவுள்ளது. இந்தக் கார் 2 லட்சம் அமெரிக்க டொலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிகாகோவில் உள்ள வோலோ ஆட்டோ மியூசியம் இந்த ஏலத்தை வருகிற 9ஆம் திகதி நடத்தவுள்ளது.

மறைந்த இளவரசி டயானாவும்,பிரிட்டன் இளவரசர் சார்லஸசும் 1985ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன் அவரது மனைவி நான்சி ஆகியோரைச் சந்தித்தனர்.

அப்போது இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தால் 1979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது. பின்னர், நிபுணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.1.07கோடி செலவிடப்பட்டுள்ளது.

விஷவாயு மற்றும் வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படாத வகையில் அதிகபட்ச பாதுகாப்புடன் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் நிறம் கொண்ட இக் காரின் ஆரம்ப ஏல விலை 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, டயானா ஆரம்பித்த புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட உள்ளது

பிரசவ அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம்! ?

          
Friday 02 November 2012.By.Rajah.பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு `பிரசவத்திற்கு முன்னான கோழைக்கசிவு' என்று பெயர்.
இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும். இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரை தாரையாக வெளியேறும்.

பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும்.
வலி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்தி வெளியே தள்ள வேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கல் கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று கூட எண்ணத் தோன்றும்.
கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்த வுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும். ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும். இதனால் குழந்தை யோனிக்குள் தள்ளப்படுகிறது.
யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும். இல்லை யென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும்.
தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். இந்த அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடன் மருத்துவமனையை அணுகுவது மிகவும் நல்லது

10 மாத கர்ப்ப காலத்தில் சந்தோஷமா இருக்கணுமா?


 

Friday 02 November 2012 By.Rajah.கர்ப்ப காலம் பத்து மாதம்தான்... ஆனா, தாய்மை என்ற உறவு, காலம் முழுதும் இருக்க கூடியது... அந்த உறவை பெற கர்ப்ப காலத்தில் இருந்தே பெண்கள் தங்களை பாதுகாப்பது அவசியம் என்கிறார் ராக்கி கபூர். இவர், ஆழ்வார்பேட்டையில் ‘த்வி மெட்டர்னிடி ஸ்டூடியோ‘ என்ற கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதோ அவரது பேட்டி...
என் கர்ப்ப காலத்தில் சந்தித்த பிரச்னைகள்தான் இந்த பயிற்சி மையத்தை ஆரம்பிக்க தூண்டியது. குழந்தைபேறு குறித்த கவுன்சிலிங் படிப்பை படித்து இருந்தாலும் என் கர்ப்பகாலத்தில் பல பிரச்னைகளை சந்தித்தேன். உடல் நலம் நன்றாக இருந்த போதும், சில மருத்துவ பிரச்னைகள் என் கர்ப்பகாலத்தை சிக்கலாக்கியது. நான் பட்ட அவஸ்தைகள் மற்ற பெண்களும் படக்கூடாது என்பது தான் இந்த பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கம்.
உடற்பயிற்சி என்றதும் ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்மில் செய்வது போல் இருக்கும் என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். இது அப்படி இல்லை. குழந்தை கருவில் உருவான நாள் முதல் அது வெளியே வரும் வரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், பத்து மாத காலத்தை எவ்வாறு சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி மட்டுமே இங்கு சொல்லித் தருகிறோம்.
கர்ப்பகாலத்தில் பல பெண்களுக்கு முதுகுவலி, மனச் சோர்வு, மனஉளைச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சில பெண்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்பட்டு அதனாலும் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். கர்ப்பகாலத்தில் சமச்சீரான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதே சமயம் சிறிய உடற்பயிற்சிகளும் செய்யலாம்.
உடல் எடை சீராகவும், ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். முதன் முதலில் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு குழப்பங்கள் இருக்கும்.  அந்தக் குழப்பங்களை போக்கி ஒரு தெளிவான பாதையை காட்டுகிறோம்.
இங்கு முக்கிய பயிற்சி மூச்சு பயிற்சி.
குழந்தையின் எடையை கால் தாங்குவதால், கால் தசைகள், வயிற்று பகுதி, இடுப்பு மற்றும் பெல்விக் தசைகள் வலுவாக்கும் பயிற்சியும் அளிக்கிறோம். மேலும் குழந்தைகளை கையாளும் முறை குறித்து கணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். குழந்தையை வசதியாக எப்படி தூக்குவது, உடை மாற்றுவது, அவசர கால நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆண்களுக்கும் சொல்லித் தருகிறோம். இவ்வாறு கூறினார் ராக்கி கபூர்

புகைப்படங்களை அழகான வீடியோவாக மாற்றுவதற்கு

வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2012,By.Rajah.உங்களது விருப்பமான புகைப்படங்களை Slide.ly என்ற தளம் அழகான வீடியோவாக மாற்றி தருகிறது.
இத்தளத்தை ஓபன் செய்ததும், அழகான புகைப்பட வீடியோ காட்சிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு நீங்களும் உருவாக்குவதற்கு, முதலில் பேஸ்புக் தளத்தில் உள்நுழைய வேண்டும்.

அதன் பின் Create New One என்பதை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தெரிவு செய்து கொள்ளவும்.

பிறகு பொருத்தமான பின்னணி இசையை தெரிவு செய்து விட்டால், உங்களுக்கான வீடியோ உருவாக்கப்படும்.

இதனை பேஸ்புக், டுவிட்டர் மற்றும் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் இந்த வீடியோ ஏற்கனவே உள்ள தொகுப்புகளின் பட்டியலில் இணைந்து விடும். இதனை மற்றவர்களும் பார்த்து, கருத்துகளை தெரிவிக்கலாம்.

வெறும் புகைப்படங்களாக பார்ப்பதையும், பகிர்வதையும் விட இது போல புகைப்பட வீடியோ தொகுப்பாக பார்த்து ரசிக்க முடிவது மிகவும் சுவாரஸ்யமானது தான்

உடல் எடை குறைய வேண்டுமா? ஐஸ் கட்டி சாப்பிடுங்க…

By.Rajah.ஐஸ் கட்டியை சாப்பிடுறவங்களா நீங்க? அதனால் ஒரு நன்மை இருக்கிறது. என்னவென்றால், ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் உடலில் இருக்கும் அதிகமான பவுண்டுகள் குறையுமாம். அந்த ஐஸ் கட்டிகள் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைக்க செய்கிறது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
உடல் எடை எளிதில் குறைய…
* எப்போது ஐஸ் கட்டிகளை சாப்பிடுகிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைகிறது. ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையானது இருக்கும். அதில் மேலம் இந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால், உடலில் வெப்பநிலை அதிகரித்து, உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புகள் மற்றும் கலோரியை கரைத்துவிடுகின்றது.
* ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால் வேறு எந்த உணவையும் உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எது வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் உண்டப் பின் கண்டிப்பாக ஐஸ்கட்டிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடல் எடை எளிதாக குறையும்.
* பசியைக் கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறைகிறதோ, அதேப் போல் தான் ஐஸ் கட்டிகளும் அதில் ஒன்று. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே நன்மை தான் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டாலும் கிடைக்கும்.
* ஐஸ் கட்டியும் ஒரு பசியைத் தடுக்கும் பொருள். இதனால் உட்கொள்வதால் உடல் எடையானது விரைவில் குறையும்.
* எப்போதெல்லாம் பசி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பசியானது அடங்கிவிடும். ஆகவே உடலில் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். அதனால் எடையும் குறையும்.
* ஐஸ் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு குடிக்க வேண்டும். அது பற்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆனால் அப்படியே ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பற்கள் வலுவை இழக்கும். ஆகவே அதனை தண்ணீராகத் தான் குடிக்க வேண்டும்.
* எப்போது எடை குறைந்தது போல் உணர்கிறீர்களோ, அப்போது அந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அளவுக்கு அதிகமாக ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால், அது பற்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஐஸ் கட்டிகளை எந்த காரணம் கொண்டும் கடித்து சாப்பிட வேண்டாம். மேலும் ஐஸ் உடலில் இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்திவிடும். ஆகவே எடை குறைய வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான்” என்பதை மனதில் கொண்டு எதையும் உண்ண வேண்டும்