siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 13 நவம்பர், 2012

ஜப்பான் வலதுசாரிகளுடன் கூட்டு சேரும் தலாய்லாமா?

      13.11.2012. By.Rajah. திபெத்தில் சீன ஆதிக்கத்தை எதிர்த்தும், தலாய் லாமாவை ஆதரித்தும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஒரு வாரமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சீனாவின் ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் அந்நாட்டை ஆளக்கூடிய எதிர்கால தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சர்வதேச சமூகத்தின் கவனத்தை இந்த தேர்தல் ஏற்பாடுகள் ஈர்த்துவரும் வேளையில், திபெத்தியர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள், உலக ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்துடன் உலா வருகின்றன.
இதுவரை 8 பேர் தீக்குளித்து உயிர் இழந்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு எல்லாம் தலாய் லாமாவே காரணம் என்று குற்றம் கூறிவந்த சீன அரசாங்கம், இன்று வெளிப்படையாக தலாய்லாமாவை குற்றம் சாட்டியுள்ளது.
சீனா உரிமை கோரும் சர்ச்சைக்குரிய தீவு, ஜப்பானுக்கு சொந்தமானது என்னும் கருத்துக்கு தலாய்லாமா ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து நேற்று சீன வெளியுறவு துறை மந்திரி ஹாங்லி கூறியதாவது:-
மதத்தை காரணம் காட்டி சீனாவை இரண்டாக உடைக்க நினைக்கும் தலாய்லாமாவின் உண்மை நிறம் இப்போது வெளிப்பட்டு உள்ளது.
சீனாவை உடைக்கும் தனது கொள்கைக்காக ஜப்பானிய வலதுசாரிகளுடன் கூட அவர் சேர்ந்துக் கொள்ளக்கூடும். அவரது செயல், சீன மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கியுள்ளது.
தலாய் லாமாவின் பிரிவினைவாத செயல்களுக்கு ஊக்கம் அளிக்கும் நாடுகளையும், தனி நபர்களையும் சீனா கடுமையாக எதிர்க்கின்றது
இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையின் கொலைக்களங்கள் - குறுந்திரைப்படம் !

      By.Rajah.{,காணொளி}, இலங்கையின் இறுதிப்போரின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் படுகொலைகளை வைத்து தயாரிக்கப்பட்ட “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற திரைப்படத்தை மையப்படுத்தி பிரித்தானியாவின் பட்டதாரி மாணவர்கள் நால்வர் குறுந்திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.
இதில் ஒரு குறுந்திரைப்படத்தை தயாரித்த கிறிஸ்டினா பிச்சி என்பவர், தாம் குறுந்திரைப்படத்தை தயாரித்த போது எந்த கட்டத்தையும் தேவையற்றது என்று தவிர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தயாரிக்கப்பட்ட நான்கு குறுந்திரைப்படங்களும் லண்டனில் உள்ள சர்வதேச ஆவணப்பட கண்காட்சியின் போதும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன.
அதனை பெருமளவானோர் பார்த்ததாக குறுந்திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்