Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 16 நவம்பர், 2012

உகண்டா நாட்டிற்கு சுமார் 1.5 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது ?


16.11.2012.கடந்தசிலதினங்களாஇலங்கையில் முகாமிட்டுசுற்றுப்பயணத்தைமேற்கொண்டுள்ள உகண்டாநாட்டுஜானாதிபதிபலஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.போரில்இறந்தஇராணுவச் சிப்பாய்களில் நினைவுத் தூபிக்குச் சென்று வணக்கம் செலுத்தியஉகண்டநாட்டுஜனாதிபதி,பின்னர் மகிந்தரைச் சந்தித்துள்ளார்.
உகண்டாவில் தொழில் நுட்ப்ப நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும், அங்கே இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தி உகண்டா நாட்டவர்களுக்கு பயிற்ச்சி வழங்கவும் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இலங்கை உகண்டா நாட்டிற்கு சுமார் 1.5 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துள்ளது. அரச ஊடகங்கள் இச் செய்தியை பெரிதாக பிரசுரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நிதிநெருக்கடியின் எதிரொலி: ஜேர்மனிக்கு புலம்பெயரும்?

16.11.2012.நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளிலிருந்து மக்கள் ஜேர்மனிக்கு அதிகளவு குடிபெயர்வது தெரியவந்துள்ளது. இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் வருகை புரிந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை விட தற்போது 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் கிரீஸிலிருந்து வந்தவர்கள் மட்டுமே 78 சதவிகிதம் பேர் என்பதும், இது கடந்தாண்டை விட 6900 பேர் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் கல்வி மையங்களில் ஜேர்மனி மொழி படிக்க நிறைய பேர் வருகை புரிந்துள்ளனர்.
பலரும் இந்த புலம்பெயர்வை ஆரோக்கியமானதாக கருதுகின்றனர். வேலையில்லாதவர்களுக்கு வேலையும், ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களும் கிடைப்பதால் இருதரப்பிலும் இந்த புலம்பெயர்வு நன்மையளிப்பதாகக் கூறுகின்றனர்.
ஒருங்கிணைப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான ஜேர்மன் அறக்கட்டளைகளின் நிபுணர் குழுவிற்கு தலைவியாக விளங்கும் குனில்லா ஃபின்க் கூறுகையில், ஜேர்மனி கடந்தாண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதால் ஜேர்மனியும், புலம்பெயர்ந்தோரும் பயனடைகின்றனர் என்றார்.
ஆனால் வேறு சிலர் இதன் காரணமாக ஜேர்மன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று அஞ்சுகின்றனர்.

உறைந்த நிலையில் குழந்தைகள், ரத்த வெள்ளத்தில் ???

16.11.2012.By.Rajah..பிரான்சில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையிலும், ரத்த வெள்ளத்தில் தாயும் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், தன்னுடைய பேரக் குழந்தைகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பொலிஸ் நடத்திய தீவிர வேட்டையில், குளிர்சாத பெட்டியில் இறந்த நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளும், ரத்த வெள்ளத்தில் தாயும் மீட்கப்பட்டனர்.
உடனடியாக மூவரின் உடல்களும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. இதனையடுத்து விசாரணை தீவிரமடையும் என்றும், குழந்தைகளை கொன்றது அவர்களுடைய தந்தையாக இருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

நாவின் சிறப்புப் பிரதிநிதி சிறிலங்காவுக்கு கடும் கண்டனம் !

.          
 
16.11.2012.By.Rajah.சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சிறிலங்கா அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நாவின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் தனித்துவத்துக்கான சிறப்புப் பிரதிநிதி கப்ரியேலா க்னவுல் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்காவின் அரசியலமைப்பின் 107 வது பிரிவின் மூலம் சிறிலங்கா நாடாளுமன்றம், நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

இது சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு என்ற தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்பாடுகளுக்கு எதிராகவும் இது உள்ளது.

சிறிலங்காவில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் மீதான அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் கவலையளிக்கின்றன.

சிறிலங்கா நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பதில் நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளின் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமைவதாக கொள்ள வேண்டி வரும்.

சிறிலங்கா நீதித்துறை அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களோ மறைமுக அழுத்தங்களோ இல்லாமல் அவர்கள் தங்களின் தொழில் ரீதியிலான பணிகளை எந்தவித அச்சமும், முறையற்ற தலையீடும், வெளி அழுத்தங்களும் இல்லாமலும், அனைத்துலக கடப்பாடுகளுக்கு அமைவாகவும் மேற்கொள்ளக் கூடிய சூழலை சிறிலங்கா அரசு உருவாக்க வேண்டும்.

சிறிலங்காவின் நீதித்துறை மீதான தாக்குதல்கள் மற்றும் தலையீடுகள் தொடர்பாக சிறிலங்கா அரசு உண்மையான விசாரணைகளை நடத்துவதில்லை.

அதை செய்தவர்கள் அதற்குப் பொறுப்புக்கூற வைக்கப்படுவதில்லை என்று சுதந்திரமான மனிதஉரிமை நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

சிறிலங்கா நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யமுடியாத தன்மையானது அந்த நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை தாங்கும் முக்கிய தூணாக உள்ளது.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த கொள்கையில் தலையீடுகள் இருக்க வேண்டும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் சங்கடங்களை ஏற்படுத்துகின்றன.

மிகமோசமான நடத்தைகள் அல்லது திறமையற்றதன்மை காரணமாக மட்டுமே நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

அதுவும்கூட முறையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலான நியாயமான வழக்கு விசாரணைகள் நடந்த பின்னரே அவ்வாறு செய்யவேண்டும்.

இந்த வழக்கு நடைமுறைகளின் முடிவுகள் கூட சுயாதீனமான மீளாய்வுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

சுயாதீனமான நீதிபதிகளை பழிவாங்குவதற்கான ஒரு வழிமுறையாக ஒழுங்காற்று நடவடிக்கைகள் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது” என்றும் கப்ரியேலா க்னவுல் கண்டித்துள்ளார்.

இலங்கையில் - 8 லட்சத்துக்கும் அதிகமான கருக்கலைப்புக்கள்

 


16.11.2012.By.Rajah.இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் கடந்த 26 ஆண்டுகளில் சுமார் 8, 81, 077 கருக்கலைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட்டஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதில் 877963 கருக்கலைப்புச் சம்பவங்கள் உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய கருக்கலைப்புச் சம்பவங்கள் மாத்திரைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் சிங்களப் பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் மூலம் சிங்கள இனத்தை இல்லாதொழிக்க சர்வதேச சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சூழ்ச்சித் திட்டத்தில் தமிழ் மக்களும் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர்.

சில வைத்தியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு இந்த முயற்சிக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் 800 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றது.

அவற்றை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கலபொட்டஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை ?


16.11.2012.By.Rajah.அதிகாரப் பகிர்வு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அரசாங்கமே நிறுவியது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆணைக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்து வருவதாக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும், எம்மை விடவும் சில அரசியல் கட்சிகள் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு சட்ட ரீதியான உரிமைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டு தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
நாடு பாரியளவு கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. எதிர்கால தலைமுறையினரே இந்த கடன் பளுவை சுமக்க வேண்டியேற்பட்டுள்ளது.
விசாலமான அமைச்சரவையை நாம் கொண்டுள்ளோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் தி;ட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்