Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 22 நவம்பர், 2012

அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை

            )
கனடா மொன்றியலில்யாழ்.அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின்தாய்வாகனத்துடன்எரித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடையயாழ்.அனலைதீவைசேர்ந்தவிக்னேஸ்வரன் யோகராணிஎன்பவர்வாகனத்துடன்சேர்த்து எரிக்கபட்டுள்ளதாகமொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவதினம்காலை9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.
எரியூட்டப்பட்ட 2 உடல்களில் ஒன்று ஆண் மற்றையது பெண்ணினுடையதும் என்பதும், இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்பதும் ஆனால் முன் விரோதமே கொலைக்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது

சதி திட்டம் தீட்டியவர்களை மத்திய அரசு விட்டுவைத்துள்ளது!சீமான்

          

 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்டசந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்கமத்தியகாங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனநாம்தமிழர்கட்சிதலைவர்சீமான்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
மும்பை தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டு விட்டதால் மும்பை தாக்குதல் வழக்கு முடிந்து விட்டதாக மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் சிண்டே கூறி இருப்பது வியப்பாக உள்ளது.
தாக்குதலுக்கான சதி திட்டத்தை தீட்டியவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுகின்றனர். அவர்களை பற்றி வாக்கு மூலம் அளித்த அஜ்மல் கசாப்பை மத்திய அரசு அவசரமாக தூக்கிலிட்டு உள்ளது.
இதற்கு முன் பல தாக்குதல்களை நடத்தி உள்ள லஸ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றனர். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மேற்கொண்ட முயற்சி என்ன?
எய்தவன் இருக்க அம்பை மட்டும் தூக்கில் போடுவதால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் நிகழாமல் தடுத்திட முடியுமா? குற்ற செயலில் ஈடுபட்டவர்களை தண்டித்து விட்டு அதோடு வழக்கை முடித்து விடுவது சதிகாரர்களை தப்ப விடும் நடவடிக்கை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் குற்றச் செயலில் தொடர்பற்றவர்களான முருகன, சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது.
தங்கள் தலைவரை சதித் திட்டம் தீட்டி கொன்றவர்கள் யார் என்பதை விசாரித்து நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு காங்கிரஸ்காரர் கூட அக்கறையுடன் குரல் எழுப்பவில்லை.
சதிகாரர்கள் அதிகாரத்துடன் உலவி வருகின்றனர். இப்படி சதிகாரர்களை விட்டு குற்றச் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களை தூக்கிவிட்டு கொள்வதால் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து விடமுடியாது. மரண தண்டனை என்பது மனிதாபிமான மற்ற தண்டனை. இவ்வாறு அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கை காதலியை மணக்க இந்திய மேஜருக்கு

        
 
இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்தியஇராணுவமேஜருக்குநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. செலவுத் தொகையாக 75,000 ரூபாவை அறிவிட்டுக்கொண்டு அவரை இராணுவ சேவையிலிருந்து விடுவிக்குமாறு கர்நாடகா மேல் நீதிமன்றம் இந்திய இராணுவத்துக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின்ராஜினாமாகடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ் குமார் என்பவரே இந்த வழக்கைத் தாக்கல் செய்தவராவார். இராணுவ சமிக்ஞை படைப்பிரிவில் அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாலும் இலங்கைப் பெண்ணுடன் இவருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலுமே அவரது ராஜினாமாவை ஏற்க முடியாதுள்ளது என இந்திய இராணுவம் அறிவித்திருந்தது.


இருப்பினும், விகாஸ் குமாரின் ராஜினாமாவை இராணுவம் மறுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பினை எதிர்த்து இந்திய இராணுவம் மேன்முறையீடு செய்திருந்தது.


மேஜர் விகாஸ் குமாரின் காதலியான இலங்கைப் பெண் அனிலா ரணமாலி குணரத்ன, பெங்களூரில் முதுமாணிப் பட்டக் கற்கை நெறியொன்றை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், இவர்கள் ஈவரும் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருந்தனர்.


இந்திய இராணுவ சட்டப்படி, வெளிநாட்டுப் பிரஜையொருவரை இந்திய இராணுவத்தில் உள்ள ஒருவர் திருமணம் செய்ய முடியாது. இதனாலேயே விகாஸ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.


இந்நிலையில், வழக்கை விசாரித்த கர்நாடகா மேல்நீதிமன்றம், வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய இராணுவ மேஜரிடமிருந்து செலவுத் தொகை அறவிட்டு அவரை இராணுவத்திலிருந்து விடுவிக்குமாறு பணித்தது

ஆப்கானில் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அதாவது 2001ஆம் ஆண்டிலிருந்து தூக்கு தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கற்பழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் போன்றவற்றிற்காக தூக்கிலிடப்பட்டதாக அரசு கூறியுள்ளது.
மேலும் அங்கு இன்னும் 250 தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த செயலுக்கு மனித உரிமை அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏமனில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்து: 10 பேர் பலி


{ புகைப்படங்கள்,}ஏமனில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அருகே உள்ள விமான தளத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது.
அப்போது இயந்திரம் பழுதானதால் அருகே உள்ள அல்-ஹசாபா பகுதியில் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

கிரிக்கெட் விளையாடுவாரா போல்ட் !

    
ஒலிம்பிக் போட்டிக்கு பின், கிரிக்கெட் அல்லது கால்பந்து போட்டிகளில் விளையாடுவது குறித்து உசைன் போல்ட் முடிவு செய்ய உள்ளார்.
ஜமைக்காவின் "மின்னல் வேக' வீரர் உசைன் போல்ட், 26. கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் 100, 200 மற்றும் 4*100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று சாதித்தார்.
தடகளப் போட்டியில் அசத்தி வரும் இவர், கிரிக்கெட் அரங்கில் காலடி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் "பிக் பாஷ்' டுவென்டி-20' தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்ய போவதாக கூறப்பட்டது. இதற்காக சமீபத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்னுடன், போல்ட் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு பின் கால்பந்து விளையாட ஆர்வமாக இருப்பதாக திடீரென கூறினார். இதனால் உசைன் போல்ட், கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது கால்பந்து போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது
இதுகுறித்து உசைன் போல்ட் ஏஜன்ட் ரிக்கி சிம்ஸ் கூறுகையில், ""உசைன் போல்ட் தற்போது தடகளப் போட்டியின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர், அடுத்த ஆண்டு மாஸ்கோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார். தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் தான் கிரிக்கெட் அல்லது கால்பந்து போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு செய்வார். அதாவது வரும் 2016ல் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பின் முடிவு செய்வார்,'' என்றார
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் மீடியா மானேஜர் ஜெஸ் குக் கூறுகையில், ""பிக் பாஷ் தொடரில் போல்ட் விளையாட, கடந்த இரண்டு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் இவர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருவதால், இம்முறை பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அடுத்த தொடரில் பங்கேற்பது குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.