Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 23 நவம்பர், 2012

வியக்க வைக்கும் காட்சி - கருவறைக்குள் கொட்டாவி விட்ட?

        
 
இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர்.
சிசுவாக நாம் கருவில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.
இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன் செய்து பார்த்தனர். கடைசி ஸ்கேனிங் 36வது வாரத்தி்ல எடுக்கப்பட்டது.
இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர். இப்படிக் கொட்டாவி விடுவதன் மூலம் குழந்தையின் தாடைப் பகுதி நன்கு விரிய வாய்ப்பு கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை கொட்டாவி விடுவது என்பது மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் மூளையை ரிலாக்ஸ் ஆக்கும் முயற்சியாகவும் இதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

16 வயதுப் பெண்ணின் தலையில் அறைந்து ரோட்டில் விழுத்திய ?

    
 
பெண்ணொருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நடைபாதையில் நடந்து செல்லும் போது நபர் ஒருவரின் அதிரடித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

அடிபட்ட அதிர்ச்சியில் குறித்த பெண் விழுந்த இடத்திலேயே மயக்கமாகியுள்ளார்.

இந்தக் காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

கிழக்கு லண்டனின் Plaistow பகுதியில் மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணை அடித்த குறித்த நபர் சாதாரணமாக நடந்து சென்றுள்ளார்.
 

  குறித்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக லண்டன் Scotland Yard பொலிஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

16 வயதுப் பெண்ணைத் தாக்கிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கிழக்கு லண்டனின் Plaistow பிரதேசத்தின் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சிறு காயங்களுடன் குறித்த பெண் தற்போது தேறி வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் லண்டன் பொலிசாரின் குற்றவியல் பிரிவினரின் 020 8217 5890,,,,,ä or 0800 555 111தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்{காணொளி,}

எமக்கு இப்போது அரசியல் தீர்வு ஒன்றுதான் தேவை !


         
 
கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவின் ""சைக்கிள் புதைகுழிகளுக்குள்'' கிடந்து வெயிலிலும் மழையிலும் நனைந்து அந்தச் சைக்கிள்களின் டயர்கள் உருகி உருத்தெரியாமல் போய்விட்டன.
வலிகாமத்தில் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் கோணப்புலம் முகாமில்தான் பவலோஜினியின் வீடு இருக்கிறது. அங்கிருந்து வாரத்தில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் ரவிக்குமார் 95 கிலோ மீற்றர் தூரம் பயணித்து சைக்கிள் புதைகுழிக்குப் போய் வருகிறார்.
2009, போரின் இறுதிக் கட்டத்தில் முல்லைத்தீவின் மிக ஒடுங்கிய நிலப்பகுதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் விடுதலைப் புலிகளும் தள்ளிச் செல்லப்பட்ட பின்னர் அவர்களால் கைவிடப்பட்ட ஒவ்வொரு துண்டு இரும்பையும் சேகரிப்பதற்காகவே ரவிக்குமார் அங்கு சென்று வருகிறார் என்கிறார் பவலோஜினி.
போரின் போது நடத்தப்பட்ட கடும் எறிகணை வீச்சுக்களால் சிதைந்து குப்பையாகிப் போன பஸ்கள், கார்கள், வான்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வீதியோரங்களில் இன்னும் அப்படியே கிடக்கின்றன. ரவிக்குமாரைப் போன்ற இரும்பு சேகரிப்பவர்கள் அவற்றுக்குள் சிறப்பானவையான சைக்கிள்கள் போன்றவற்றை வேட்டையாடி விற்பதற்காக வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.
பவலோஜினியின் வீட்டு முற்றத்தில் குவிந்து கிடக்கும் சைக்கிள் மலையின் நிழலில் நாம் இருந்து பேசிக் கொண்டிருக்கையில், இந்தச் சைக்கிள்களை கிலோ 49 ரூபா படி வாங்குவதற்கு முஸ்லிம் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்கிறார் பவலோஜினி. இவற்றை நாமே கொழும்புக்கு எடுத்துச் சென்றால் பழைய இரும்புச் சந்தையில் கிலோ 65 ரூபா வரைக்கும்கூட விற்கக்கூடியதாக இருக்கும். ஆனால் போக்குவரத்துச் செலவைப் பற்றித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் மேலும் சொல்கிறார்.
கோணப்புலம் முகாமில் இருக்கும் ஏனைய பலரும்கூட இதே தொழிலில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்னர், தனது அயல் வீட்டுக் குழந்தைகளுக்குத் தானே உணவூட்டினார் என்கிறார் பவலோஜினி. அவர்களின் பெற்றோர்கள் பழைய இரும்பு தேடி புதைகுழிக்குப் போன நிலையில் இரண்டு நாள்களாகத் திரும்பி வராமையே அதற்குக் காரணம்.
முல்லைத்தீவில் குவிந்து கிடக்கும் இந்தப் பழைய இரும்புக் குவியல்கள், போர் எவ்வளவு கொடூரமாக நிறைவுக்கு வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. அது மட்டுமல்ல, கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்த போர் மற்றும் முரண்பாடுகளில் இருந்து வெளியேவர யாழ்ப்பாண மக்கள் எவ்வளவு தூரம், கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி சிக்கல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
போருக்குக்குப் பின்னரான யாழ்ப்பாணம், அது முன்னர் இருந்த மாதிரியிலிருந்து மிக வித்தியாசமானதாக இருக்கிறது. இரவு நேரத்தைப் போர்த்தியிருந்த இருளும் பயமும் இப்போது அங்கில்லை, சோதனை நிலையங்களில் நின்றபடி டோர்ச்சு வெளிச்சத்தைப் பீச்சியடித்து வீதியை மறிக்கும் சிப்பாய்கள் இல்லை, பெரும் வெடிச் சத்தத்துடன் விழுந்து வெடிப்பதற்கு முன்னர் தலைக்கு மேலாகக் கூவிக் கொண்டு செல்லும் எறிகணைகளும் இப்போது இல்லை.
இப்போது சோதனைச் சாவடிகள் இல்லை. ஒப்பீட்டளவில் இராணுவத்தினரின் பிரசன்னமும் குறைந்துவிட்டது. இரவு வேளைகளிலும் கடைகள் திறந்திருக்கின்றன. எல்லா நேரங்களிலும் மக்கள் வீதிகளில் நடமாடுகிறார்கள். வீதிகளை நிறைத்திருந்த சைக்கிள்கள் மற்றும் பெற்றோல் தட்டுப்பாட்டால் மண்ணெண்ணெயில் ஓடிய மொறிஸ் மைனர் கார்கள் என்பன எல்லாம் மறைந்து இப்போது வீதிகளை இயல்பான வாகனங்கள் நிறைத்துள்ளன.
இந்த மாற்றங்களுக்குள் ஒன்றாகத் துரையப்பா விளையாட்டு அரங்குக்கு முன்பாக (தபால் தலைமையகத்தின் அருகில்) பெரிய உல்லாச விடுதி ஒன்று முளைத்துள்ளது. அதன் உரிமையாளர் திலக் தியாகராஜா, இன்று யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய தனியார் முதலீட்டாளர். தியாகராஜா யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிய போது அவருக்கு வயது 17. ஐக்கிய இராச்சியத்தில் அவர் இப்போது வாழ்கிறார்.
42 அறைகளைக் கொண்ட அவரது விடுதியான டில்கோ தியாகராஜா மற்றும் அவரது மனைவியான கோகிலா ஆகியோரின் பெயர்களின் ஆங்கில முதல் எழுத்துக்களைச் சேர்த்ததே டில்கோ என்ற பெயர் இப்போது எதிர்பார்ப் பின் குறியீடாக நின்று கொண்டிருக்கிறது. குறைந்தது தியாகராஜா சொல்வதைப் போன்று யாழ்ப்பாண மக்கள் இழந்துவிட்ட பெருமைகளை மீட்டு எடுக்கும் எதிர்பார்ப்பின் குறியீடாகியிருக்கிறது.
அமைதியை அடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வேலைகளை உருவாக்குவதும் உள்ளூர்த் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதும்தான் என்கிறார் 56 வயதான விடுதி உரிமையாளர். அவர் லண்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மாறி மாறி தனது வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அங்கே, லண்டனுக்கு வெளியே அவரது வீடான சிங்வெல்லில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது மனைவி இரு பிள்ளைகளும் அங்கேயே இருக்கிறார்கள்.
அவரை வெளிநாட்டுக்கு ஓடவைத்த 1970களின் இலங்கையின் நிலைமையை நினைவுபடுத்திப் பார்க்கையில். தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைகளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது நோக்கம் என்கிறார் அவர்.

உடையார்கட்டு பிரதேசத்தில் இருவரது சடலங்கள் மீட்பு !

          
 
முல்லைத்தீவு உடையார்கட்டு குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருவரது சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உடையார்கட்டைச் சேர்ந்த எஸ். கோணேஸ்(வயது35), எஸ்.சின்னவன்(வயது40), ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (புதன் கிழமை) மாலை குளத்தில் நீராடச் சென்றுள்ளனர்.
எனினும் இருவரும் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடியுள்ளதுடன், நேற்று காலை முதல் குளத்திலும் சுழியோடிகள் மூலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரது சடலங்களும், நேற்று மாலை நீரிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றது. எனினும் இறப்பு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தகவல்கள் எவையும் தெரியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சடலங்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள எம்.பி வேலை பார்த்த பெண் ஒருவரின் மார்பை

         
 
லண்டன் விம்பிள்டன்னில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில், வேலை பார்த்த பெண் ஒருவரின், மார்பை எட்டிப் பிடிக்க முனைந்தார் என்ற குற்றத்துக்காக முன் நாள் இலங்கைத் தூதரும் எம்.பியுமான, ரியூட குணசேகர கடந்த மே மாதம் கைதாகியிருந்தார். உடல் நோவைக் குறைக்க தசைகளை மசாஜ் செய்து விடும் பெண்ணோடு இவர் தகாத முறையில் நடந்துகொண்டது உறுதிசெய்யப்பட்டது.
அத்தோடு விம்பிள்டன் நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்து, தீர்ப்பும் வழங்கியுள்ளது இதில் வியப்பான விடையம் என்னவென்றால், பெரும் செல்வந்தரான இவர் மீது நீதிபதி மேலதிக விசாரணை ஒன்றை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது தான் ! பட்ட காலிலேயே படும் என்பார்கள் ! அது போல 2 வது வழக்கும் இவர்மீது பதிவாகி இருக்கு என்றால் பாருங்களேன் !

77 வயதாகும் ரியூட குணசேகர ஒரு மூத்த இலங்கை இராசதந்திரி ஆவர். இவர் விம்பிள்டன் பகுதியில் வசித்து வருகிறார். போலந்து நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக இருந்த இவர், 2 பிள்ளைகளின் தகப்பனுமாவார்.
இவருக்கு பல வர்த்தக நிலையங்கள் கொழும்பில் உள்ளது என்று கூறப்படுகிறது. அத்தோடு இவர் பெரும் செல்வந்தரும் ஆவார். கடந்த மே மாதம் இவர் சுவீடிஷ் மசாஜ் எடுப்பதற்காக ஒரு நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே அவரைப் படுக்கவைத்து, ஒரு பெண் இவர் உடல் நோவைப் போக்க மசாஜ் செய்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில், அப் பெண்ணோடு சில்மிஷங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார் ரியூட குணசேகர. இதனையும் அவர் பொறுத்துக்கொண்டுள்ளார். ஆனால் இறுதியில் எட்டி மார்பைப் பிடிக்க முனைந்தவேளை, அப் பெண் அங்கே உள்ள ஆபத்து மணியை அடித்துள்ளார். இதனையடுத்து நிலைய காவலாளிகள் உள்ளே நுளைந்து குணசேகரவை பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்றில், குணசேகர தாம் அப்பெண்ணைத் தொட முயற்ச்சிக்கவில்லை என்றும் அப்பெண்ணே தன்னிடம் மேலதிகப் பணத்தைக் கோரியதாகவும் கூறினார். ஆனால் இந்தப் பம்மாத்து வார்த்தைகளை பிரித்தானிய நீதிபதிகள் ஏற்க்க மறுத்துவிட்டனர். குறிப்பிட்ட பெண்ணையும், மசாஜ் சென்ரன் பாதுகாப்பு ஊழியரையும் விசாரித்த நீதிபதிகள், இறுதியில் குணசேகர குற்றவாளி என அறிவித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண்ணுக்கு 1,000 பவுன்சுகள், நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் எனவும், பிரித்தானிய நீதிமன்றத்துக்கு மேலும் 1,200 பவுண்டுகளை தண்டமாகக் கட்டவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனிடையே தன்னிடம் வக்கீல் வைத்து வாதாடப் பணம் இல்லை என்று, குணசேகர கூறி, நீதிமன்ற திணைக்களத்திடம் இருந்து(லீகல் ஏய்ட்) பெற்றுள்ளார். இவர் வழக்கை வாதாட, சுமார் 4,170 பவுண்டுகளை அத் திணைக்களம் வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மக்கள் வேலை செய்து, தாம் உழைக்கும் சம்பளத்தில் வரிப்பணத்தைக் கட்டி வருகின்றனர். இதில் ஒரு பகுதி நீதிமன்ற திணைக்களத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிப் பணத்தில் இருந்து 4,170 பவுண்டுகளை இவருக்கு ஏன் கொடுக்கவேண்டும் என்று, நீதிமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பெரும் செல்வந்தரும், பிசினஸ் தாதாவுமான குணசேகரவுக்கு ஏன் இவ்வாறு மக்கள் நிதியில் இருந்து பணம் வழங்கப்படவேண்டும் என்று அரச தரப்பு வக்கீல் கேள்வி எழுப்பினார்.
அதிர்ந்துபோன நீதிபதிகள், இது குறித்து பிறிதொரு தனிப்பட்ட விசாரணை நடத்துமாறு பொலிசாருக்கும் வருமானத் துறைக்கும் கட்டளையிட்டுள்ளனர். மொத்தத்தில் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் குணசேகர. இலங்கை எம்.பி யின் அட்டகாசம் என்ற தலைப்பில், பல உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு மேலும் கிடைத்திருக்கும் ஒரு சாட்டை அடி ஆகும். சிங்களவர்கள் தமிழர்களை மட்டுமல்ல வெள்ளை இனத்தவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர். ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியே இப்படி என்றால், இலங்கை இராணுவம் எப்படி இருக்கும் ? என்று இனை வெள்ளை இனத்தவர்களும் ஊகிக்க முடியும் அல்லவா