| பாட்டை சத்தமாக வைத்து
கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் நகரில் ஷாப்பிங் செய்ய மைக்கேல்
டன்(வயது 45) என்ற தொழிலதிபர் தன் மனைவியுடன் வந்திருந்தார். அப்போது அதிகளவு சத்தம் போட்டு கொண்டு கறுப்பின வாலிபர்கள் சிலர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். உடனே சத்தத்தை குறைக்கும் படி கூறினார், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். கோபமடைந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியை எடுக்கவே, இதை பார்த்த டன் துப்பாக்கியை பிடுங்கி சரமாரியாக வாலிபரை நோக்கி 10 முறை சுட்டார். இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவத்துக்கு பிறகு டன் அங்கிருந்து தப்பி சென்றார். ஆனால் கண்காணிப்பு கமெரா மூலம் அவரை பொலிசார் பிடித்தனர். இறந்த வாலிபர் டேவிஸ் என்பதும், கைது செய்யப்பட்ட டன் வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
புதன், 28 நவம்பர், 2012
பாட்டு கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொலை??
பொருளாதாரம் திடீரென சரிவடையலாம்: OECD நிறுவனம் எச்சரிக்கை
| கனடாவின் பொருளாதாரம்
வளர்ச்சி நிலையில் உள்ள போதிலும், சில பின்னடைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக OECD
என்ற சர்வதேச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECD சர்வதேச அளவிலான
பொருளாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கனடாவுக்கு அதிர்ச்சியூட்டும் பொருளாதார தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலும் பொருளாதார வளர்ச்சியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதத்தில் கனடாவின் பொருளாதாரம் 15 சதவிகிதம் வளர்ச்சி பெறும். இது 2013ஆம் ஆண்டில் 1.8 சதவிகிதமாகவும், 2014ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.4 சதவிகிதமாகவும் மாறலாம் என்றும் OECDயும், கனடா மத்திய வங்கியும் கருதுகின்றன. இருப்பினும் OECD அமைப்பு, சர்வதேச நாடுகளோடு ஒப்பிடுகையில் கனடாவின் வளர்ச்சி விகிதம் 34 நாடுகளை விட கூடுதலாகவே உள்ளதாக தெரிவித்தது. இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பின்பு உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் சரிவு நிலை தோன்றும் என்றும் எச்சரித்துள்ளது |
வடகொரியாவின் இளம் தலைவர் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர்: ?
| உருண்டை முகத்துடன்
இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர்
என்று சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் தான் இந்த ஆண்டின் செக்ஸியான மனிதர் என
அமெரிக்காவின் “The Onion" அறிவித்துள்ளதாக சீனாவை சேர்ந்த நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது. மேலும், இளமையானவர், அழகானவர், உருண்டை முகம் கொண்டவர், துடிப்பானவர், உறுதியானவர்.. என எல்லா பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக கிம் ஜாங் விளங்குகிறார் என்று கமென்ட்டும் அடித்திருக்கிறது. தனது இணையதளத்தில் 55 பக்கங்களுக்கு கிம் ஜாங்கின் விதவிதமான படங்களையும் வெளியிட்டிருக்கிறது. உண்மையாகவே கிம் ஜாங்குக்கு இப்படியொரு பட்டத்தை The Onion மீடியா நிறுவனம் வழங்கியதா என்பது பற்றி தகவல் இல்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு நடத்தும் பத்திரிகையில் இதுபோன்ற செய்திகள் வருவது இது முதல்முறை அல்ல. அமெரிக்க நாடாளுமன்றத்தை வாஷிங்டனில் இருந்து இடம் மாற்றப் போகிறார்கள், வேறு இடம் பார்த்து வருகிறார்கள் என்று சீன அரசு நடத்தும் பீஜிங் ஈவ்னிங் நியூஸ் இதழில் 2002ம் ஆண்டு பரபரப்பான பொய் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது |
இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின
| இந்தோனேஷியாவின் கிழக்கு
கடற்கரையோரப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலுக்கடியில் 56 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம்
ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின, சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. டுவால் நகரில் இருந்து 157 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கடியில் 12 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், 6.3 ரிக்டர் அளவில் உருவாகும் என்றும் இந்தோனேசிய ஆய்வு மையம் முதற்கட்ட தகவலை வெளியிட்டிருந்தது. இருப்பினும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியா அறிவித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர் |
கார்த்திகை விளக்கீட்டை அனுஷ்டிப்பதற்கு இந்துக்களுக்கு தடை!
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27ம் திகதியன்றே இம்முறை குமாராலய தீபமும் வருவதால்தான் இந்த தலையீட்டையும் தடைகளையும் இந்துக்கள் எதிர்நோக்குவதாக அவர் கூறுகின்றார்.குமாராலய தீப நாளிலும் அதனை அடுத்த சர்வாலய தீப நாளிலும் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுதல் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடு செய்தல் வழக்கம்.
இம்முறை அவற்றைத் தடுக்கும் வகையில் இராணுவத்தினராலும் காவல் துறையினராலும் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து தனது கவனத்திறகு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி காவல் துறை துணை மா அதிபர் ஆகியோரை சந்தித்து நேரில் முறைப்பாடு செய்ய திங்கட்கிழமை சென்றிருந்த போதிலும சந்திக்க முடியாத நிலையில் எழுத்து மூலம் அவர்களின் கவனத்திற்குதான் தெரியபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளுக்கு தடை என்று பாதுகாப்பு தரப்பினர் அறிவித்திருந்தனர்.




