Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியானுக்கு எதிராக போராட்டம்

அமெரிக்காவின் கவர்ச்சி புயல் கிம் கர்தஷியான் பஹ்ரைனுக்கு வருகை புரிந்துள்ளதை கண்டித்து, பெரும் போராட்டம் வெடித்துள்ளது. கிம் கர்தஷியானுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இவர் அரபு நாடான பஹ்ரைனுக்கு வருகை புரிந்துள்ளதை, அங்குள்ள பழமைவாதிகள் கண்டித்துள்ளனர்.
மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் கூடி கிம்முக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து விரைந்து வந்த கலவரத் தடுப்பு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரை கலைத்துள்ளனர்.
இவர் பஹ்ரைனின் ரிபா நகரில், மில்லியன்ஸ் ஆப் மில்க் ஷேக்ஸ் என்ற கிளையை கிம் கர்தஷியான் திறந்து வைப்பதற்காக வந்திருந்தார்.
திறப்பு விழாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இந்தக் கலவரம் நடந்தது. கூட்டத்தினரை அப்புறப்படுத்திய பின்னர் பலத்த பாதுகாப்புடன் கிம் அழைத்து வரப்பட்டார்.{புகைப்படங்கள், }






பாதை இடிந்தது! உள்ளே சிக்கிய கார்கள் எரிகின்றன! மூவர் பலி

ஜப்பானில் டோக்கியோ நோக்கி செல்லும் tunnel பாதை ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில், உள்ளே சில கார்கள் சிக்கிக் கொண்டன. இந்தக் கார்களையும், அதற்குள் உள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன. இந்த tunnel வாயில் ஊடாக புகை வெளிவந்து கொண்டிருப்பதால், உள்ளே சிக்கிக் கொண்ட கார்கள் தீப்பிடித்து எரிகின்றன என ஊகிக்கப்படுகிறது.
Sasago tunnel என்ற இந்த மோட்டார் பாதை, சுவோ எக்ஸ்பிரஸ்-வே பாதையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த விபத்து நடந்தது. தலைநகர் டோக்கியோ நோக்கிச் செல்லும் பாதை மிகவும் போக்குவரத்து நெருக்கடியானது என்ற போதிலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிக கார்கள் இல்லை.
சுமார் 5 கார்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும், மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஜப்பானிய டி.வி. சேனல், கியோடோ நியூஸ் தெரிவிக்கிறது{காணொளி, புகைப்படங்கள்}.







ஜனாதிபதியின் உதவியாளர் எதிர்க்கட்சியில் இணைகிறார்

 
எகிப்தில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் ஜனாதிபதி முகமது முர்சியின் ஆலோசகராகவும், உதவியாளராகவும் இருந்த சமீர் மொர்கோஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில், எதிர்க்கட்சியான தேசிய சால்வோன் இயக்கத்தில் சேர இருப்பதாக அதன் தலைவர் அகமது சயீத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து சமீர் மொர்கோஸ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

நிலநடுக்கம்: கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பியதால் அதிர்ச்சி

 
நியூசிலாந்து அருகே பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுகளில் சர்வதேச நேரப்படி இன்று காலை 6.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 66 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதன் காரணமாக வழக்கத்தைவிட அதிக உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின.
இதனால் சுனாமி ஏற்படும் என பொதுமக்கள் அஞ்சினர். ஆனால் அது போன்ற எச்சரிக்கைகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
எனவே, பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை