| ஜப்பான் சுரங்க பாதையில்
ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானின் யமனாஷி மாகாணம் சுவோ எக்ஸ்பிரஸ் சாலையில் சசாகோ என்ற சுரங்க பாதை
உள்ளது. முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்க பாதையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். விடுமுறை நாளான நேற்று காலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சுரங்க பாதையின் நடுவில் மேற்கூரை திடீரென இடிந்து கார்கள் மீது விழுந்தது. இதனையடுத்து அடுத்தடுத்த வந்த வாகனங்கள் சுரங்க பாதைக்குள் மோதி தீப்பிடித்தன. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பொலிசார் சுரங்க பாதைக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதற்கிடையில் தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உள்ளே சிக்கிய வாகனங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது இன்று அதிகாலை மேலும் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுரங்க பாதையை பராமரிப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் தான் சுரங்க பாதையை முழுவதுமாக சோதனை செய்தோம். அப்போது எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.{காணொளி, புகைப்படங்கள்} |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
திங்கள், 3 டிசம்பர், 2012
ஜப்பான் சுரங்க பாதை விபத்து: பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது
மாவீரர் நெப்போலியனின் கடிதம் ஏலம்
| மாவீரன் நெப்போலியன் தனது
வெளிவிவகாரத்துறை அமைச்ருக்கு எழுதிய கடிதம் சுமார் 2 லட்சத்து 43 ஆயிரத்து 500
அமெரிக்க டொலர்களுக்கு(2,43,500 டொலர்) ஏலம் போனது.
பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் ரஷியப் படையெடுப்பின் போது, கடந்த 1812ஆம் ஆண்டு
தனது வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹுயூகஸ் பெர்னார்ட் மாரெட்டுக்கு எழுதியுள்ள
கடிதத்தில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள க்ரெம்ளின் மாளிகையை 22ஆம் திகதி காலை 3
மணிக்கு தகர்ப்பேன் என்று சூளுரைத்துள்ளார். சங்கேத வடிவில் எழுதப்பட்ட இக்கடிதம் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டது. இதனை பாரிஸைச் சேர்ந்த கடிதங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்தது. எதிர்பார்க்கப்பட்டதை விட 10 மடங்கு அதிக தொகைக்கு இக்கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மாவீரன் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டை கடந்த 1804ஆம் ஆண்டு முதல் 1815ஆம் ஆண்டு வரை ஆண்டார். தனது 51வது வயதில் செயின்ட் ஹெலினா தீவில் உள்ள சிறையில் உயிர் துறந்தார்{புகைப்படங்கள்,} |
பாகிஸ்தானில் இராமர் கோவில் இடிப்பு: இந்துக்கள் போராட்டம்
| பாகிஸ்தானின் கராச்சி பகுதியில்
உள்ள இராமர் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள்
போராட்டம் நடத்தினர்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பல கோவில்கள்
இடிக்கப்பட்டன. இந்நிலையில் கராச்சியின் சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ராம பிரான் கோவில இடிக்கப்பட்டது, மேலும் அக்கோவிலை சுற்றியுள்ள இந்துக்களின் வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினர். அத்துடன் கோவிலில் சிலைகள் மீது அணிவிக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை கட்டுமான நிறுவனத்தினர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற இந்துக்களை சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் இந்துக்கள் இணைந்து கராச்சி பிரஸ் கிளப் அருகே நேற்று போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அப்பகுதி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தி உள்ளனர்{புகைப்படங்கள், } |









