Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 5 டிசம்பர், 2012

உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த 116 வயது பெண் மரணம்.



உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியாக கருதப்பட்ட பெசி கூப்பர் (வயது 116) அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். கின்னஸ் சாதனை பதிவுகளின்படி 1997ம் ஆண்டு வரை 122 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த ஜீனே கல்மென்ட் என்பவர் உலகில் வயது முதிர்ந்த நபராக கருதப்பட்டார். இவர் பிரான்சு நாட்டில் பிறந்தவர்.

இந்த சாதனைக்கு பிறகு அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை பெசி கூப்பரை, உலகில் வயது முதிர்ந்த நபராக கின்னஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. அப்போது அவருக்கு வயது 115. சில மாதங்களுக்கு முன்னர் வயிற்றில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்காக இவர் அட்லாண்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை பெசி கூப்பர் சிகை அலங்காரம் செய்துக் கொண்டார். பின்னர் தங்கள் குடும்பத்தாருடன் கடந்த ஆண்டு கொண்டாடிய கிருஸ்துமஸ் விழாவை வீடியோவில் பார்த்து ரசித்தார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் பெசி கூப்பருக்கு செயற்கை சுவாசம் அளித்தனர். என்றாலும் பலனின்றி சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார்.
அவரது மணரம் குறித்து பேட்டியளித்த பெசியின் மகன் சிட்னி கூப்பர் கூறுகையில்,  இன்று காலை சிகை அலங்காரம் செய்து கொண்டபோது, அவர் போவதற்கு தயாராக இருந்தது போல் தோன்றியது  என்றார். அமெரிக்காவின் டென்னசீ மாவட்டத்தில் பிறந்த பெசி, முதலாம் உலகப் போரின் போது, டீச்சராக வேலை செய்யும் நோக்கில் ஜார்ஜியா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு 116 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்

மாங்குளத்தில் பொலிசார் மீது மோதிவிட்டு தப்பியோடிய?


கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிவிட்டு தப்பியோடிய தனியார் பஸ்ஸை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் கூறியுள்ளதாக, ஏ- 9 வீதியின் முருங்கன் ஆலயத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது என மேலும் அறியப்படுகிறது. மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ் எங்கே போனது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், சாட்சியங்களை வழங்கியபோதிலும் பஸ் மாயமாக மறைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.
பொலிசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக மேலும் அறிய முடிகிறது. மேற்குறிப்பிட்ட கான்ஸ்டபிள் போதையில் நின்றிருந்தாகவும், அவரே தற்செயலாகச் சென்று பஸ்சுடன் மோதுண்டதாகவும் சில பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்

இனிமேல் அனுமதி பெற்றே நுழைவார்கள் !படைத் தளபதி

     
நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இனிமேல் சிறிலங்கா படையினரோ காவல்துறையினரோ யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையமாட்டார்கள் என்று யாழ். படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வாக்குறுதி அளித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவுடன், நடத்திய 3 மணிநேரப் பேச்சுக்களை அடுத்தே, அவர் நேற்று மாலை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“யாழ்.பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில் பாதுகாப்ப்பில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினரை அங்கிருந்து முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழலிலேயே, யாழ்.பல்கலைக்கழகத்தினுள் சிறிலங்கா படையினர் நுழைய வேண்டியேற்பட்டது.

அதுபோன்று இனிவரும் காலங்களில் சிறிலங்கா படையினரோ, காவல்துறையினரோ பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய மாட்டார்கள்.

அவ்வாறு நுழைய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிர்வாகத்திடம் உரிய அனுமதியைப் பெற்றே நுழைவார்கள்.

மாணவர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்ள வேண்டி ஏற்பட்டமை கவலை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது.

இந்தச் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களில் மருத்துவபீட மாணவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூவரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கின்றனர்.” என்றும் மேலும் தெரிவித்துள்ளார்

நாடு திரும்பிய குடும்பத் தலைவர் - புலனாய்வுப் பிரிவினரால்


இந்தியாவில் தஞ்சமடைந்திருந்து நாடு திரும்பிய குடும்பத் தலைவர் ஒருவரை, சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணை என்ற பெயரில் தினமும் துன்புறுத்தி வருகின்றனர்.

திருகோணமலை, சாம்பல்தீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கோவிந்தன் சிவராசா என்ற குடும்பத் தலைவரையே சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியா சென்ற இவரது கடந்த செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா திரும்பி சொந்த இடத்தில் குடியேறினர்.

இந்தநிலையில், கடந்த ஒக்ரேபர் மாதம் 15ம் நாள் தொடக்கம், தினமும் காலை, மாலை வேளைகளில் இவரது வீட்டுக்கு வரும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர் விசாரணைத் துன்புறுத்தல்களால், குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும் விரக்தியும் அடைந்த நிலையில் உள்ளனர்.

பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி



பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானௌ தீவை போபா புயல் நேற்று தாக்கியதில் 43 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிலிப்பைன்சில் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயல், மின்டானௌ தீவில் நேற்று கரையை கடந்தது.
இதனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நகரான ககாயான் டியோரோ நீரில் மூழ்கியுள்ளது.
41 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்டானௌ நகரில் அருகேயுள்ள கிராமத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.{காணொளி, புகைப்படங்கள்}
இந்த கிராமத்தில் திடீரென வெள்ளம் புகுந்ததால், இராணுவ ரோந்து முகாமை அடித்து சென்றதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கம்போஸ்டெலா பள்ளத்தாக்கு மாகாண ஆளுநர் அர்டுரோ உய் கூறுகையில், 34 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.
நியூ பாட்டன் பகுதியில் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் சென்ற வாகனம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என்றார்.












ரஷ்ய சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது

ரஷ்யாவுக்கு சொந்தமான சரக்கு கப்பலொன்று கடல் சீற்றத்தின் காரணமாக கருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகருக்கு அருகில் உள்ள சிலே என்ற இடத்திலேயே இந்த கப்பல் மூழ்கியுள்ளது.
இந்த கப்பலில் 11 ரஷ்யர்களும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர். இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இதே பகுதியில் வந்த மற்றொரு ரஷ்ய கப்பலும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. இந்த கப்பலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.{காணொளி, புகைப்படம்}
mmm

ஆளில்லா உளவு விமானத்தை கைப்பற்றியது??

 
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சந்தேகம் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ஆனால் அணு சக்தியை ஆக்கப்பூர்வமான விடயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வருகிறோம் என ஈரான் கூறிவருகிறது.
ஈரானின் பேச்சில் நம்பிக்கை இல்லாத அமெரிக்கா அணுசக்தி நிலையம் உள்ள பகுதிகள், கச்சா எண்ணெய் உள்ள பகுதிகளை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்கின்றது.
இந்நிலையில் தற்போது வளைகுடா பகுதியில் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்த சிறிய ரக ஆளில்லா விமானத்தை ஈரான் கடற்படை பிடித்துள்ளது.
எப்போது பிடித்தது, எவ்வாறு பிடித்தது போன்ற தகவலை ஈரான் அரசு வெளியிடவில்லை.
இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், வளைகுடா பகுதியில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் அனைத்தும் சரியாக உள்ளன. எதுவும் காணாமல் போகவில்லை என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இது போன்ற ஒரு விமானத்தை ஈரான் பிடித்து வைத்து கொண்டதும், சமீபத்தில் தங்கள் நாட்டு எல்லையில் பறந்த மற்றொரு விமானத்தை தகர்க்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது(வீடியோ இணைப்பு)