Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 8 டிசம்பர், 2012

அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று!- ஐ.நா குழுவிடம்


 
யுத்தம் நிறைவுபெற்றிருந்த நிலையில், நாட்டில் ஜனநாயகமும், நல்லிணக்கமும் ஏற்படும் என தமிழர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அத்தனையும் பொய்யாக்கப்பட்டுள்ளதாக ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிடம் யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தெரியப்படுத்தியுள்ளனர்.
நியூயோர்க்கிலுள்ள ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று காலை யாழ்.ஆயர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதில் ஜப்பான், தென்னாபிரிக்கா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு மேலும் குறிப்பிடப்பட்டதாவது. நாட்டில் சகலரும் சமமானவர்களாக கணிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை கிடையாது. ஏற்றத்தாழ்வுகளும் வேற்றுமைகளும் அதிகரித்திருக்கின்றன.
மேலும் தற்போது தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களின் மூலம் அரசாங்கம் ஏதோவொன்றை மறைத்து வைத்துக்கொண்டு செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
மக்களுடைய மனங்களை வெல்லாமல், யுத்த வெற்றியின் களிப்பில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஆபத்தானவை ஒவ்வொருவரும் தங்களது தனித்துவங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏது நிலைகள் வேண்டும். ஆனால் அது இல்லை.
அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது. இராணுவத்தினரின் அதிகளவு பிரசன்னத்தை தமிழர் தாயகப் பிரதேசங்களில் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பில் ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பில் ஜனாதிபதியுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் பேசியிருக்கின்றோம். தற்போது எமது விஜயத்தின் முக்கிய நோக்கம் தமிழர்களுடைய மனோநிலையை அறிவதே.
எனவே இது குறித்து நாம் அக்கறையுடனிருக்கின்றோம் என குறிப்பிட்டனர். மேலும் இந்த குழுவினர் இன்று காலை யாழ்.அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர் ஆகியோரை யாழ்.நகரில் சந்தித்து பேசினர்.

இதேவேளை, தமிழர்களின் பகுதியில் மேற்கொள்ளப்படும் அரசினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் கேள்விகேட்ட தென்னாபிரிக்க பிரதிநிதி, தழிழர்கள் அவர்களது சொந்தக் காணியில் குடியிருக்க அனுமதிக்காமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சந்திப்பில் இலங்கையின் ஜ.நா பிரதிநிதி, பாலிதகோஹன்ன உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்{புகைப்படங்கள்காணொளி,}
.
 

முதலாம் ஆண்டு நினைவுதினம் சின்னத்தம்பி நவரத்தினம்



சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பிநவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்இன்று
அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
வந்தாரை வரவேற்க்கும் வள்ளல் நீ
வற்றாத உன் வள்ளல் குணமண்ணா.
மங்கையின் அன்பு மணாளன் நீ
பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ.
நீ மறந்து ஒராண்டு போனதென்ன.
உனை நித்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஒராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
நவரத்தின அண்ணாவின் ஒராண்டு நினைவு நாளில் அவரது நினைவில் தவித்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை சிறுப்பிட்டி இணையயமும் நவற்கிரி இணையங்களும் தெரிவித்துகொள்கின்றது
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
                       

 

இராணுவ ஆட்சியே காரணம் !தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை, கைது செய்யப்பட்டமை மற்றும் அச்சுறுத்தப் பட்டமை போன்ற சம்பவங்கள் வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியினாலேயே நிகழ்ந்தன.
இதனாலேயே பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் குழம்பியுள்ளன. இதனைத் தடுக்க அரசு நட வடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு ஐக்கிய நாடுகள் தூதுக்குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும், ஜப்பா னின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும் இடையே கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையால் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு எல்லாம் மூலகாரணம் வடக்கில் தொடர்ந்தும் நிலவும் இராணுவ ஆட்சியே. இதனை நீக்கி சுமுகநிலை ஏற்படுத்துவதற்கு அரசு எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
இதனை நாம் ஐ.நா. குழுவுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியதுடன் நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிடுமாறும் கேட்டுள்ளோம். இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளும்