Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

ஆபாசக் காட்சிகளைப்போன்று தாமும் வீட்டில் செய்ய நினைத்த?

            
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து பத்து வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத வேளையில் 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மூன்று இறுவட்டுக்களை கண்டெடுத்துள்ளனர். மேற்படி இறுவட்டுக்களை தமது வீட்டிலுள்ள கணனியில் போட்டு பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் பார்வையிட்ட இறுவட்டுக்களில் ஒன்றில் ஆபாசப்படக்காட்சிகள் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் அயல் வீட்டிலுள்ள 10 வயது சிறுவனை அழைத்து தாம் அவ் இறுவட்டுக்களில் அவதானித்த ஆபாசக் காட்சிகளைப்போன்று அச் சிறுவனுடன் நடந்து கொண்டுள்ளனர்.

மேற்படி துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுவன் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

திறந்து பார்த்த பொழுது இந்த அதிர்ச்சி காத்திருந்தது!

     
 

.





தொடர்ந்தும் அச்சுறுத்தவே வடக்கில் இளைஞர்கள் கைது

           
 
இந்த அரசாங்கள் தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை ஏற்படுத்தி இயல்பு வாழ்வினைக் குழம்பும் நோக்குடனேயே வடக்கில் இளைஞர் யுவதிகளை தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றது என தெரிவித்த கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிறிதரன் இதனைக் தடுக்க சர்வதேச நாடுகள் தலையிட்டு தடுத்துநிறுத்த முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
வடக்கில் நடைபெற்றுவரும் கைதுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் கொழும்பு ஊடகத்துக்கு தெரிவிக்கையில்,
வடக்கில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை இராணுவத்தினர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றனர். யாழ்.பல்கலைக் கழக மாணவர்களையும் தாக்கிக் கைதுசெய்துள்ளனர். தமிழர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி அவர்களின் இயல்பு வாழ்வினைக் குழப்பும் நோக்குடனேயே இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.
யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் அபிவிருத்தி என காப்பெற் வீதிகள் மட்டுமே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
இம் மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்த இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் போன்ற எவையுமே வடக்கில் இன்னமும் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் வேலை வாய்ப்புக்கள் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம் மக்களின் இயல்பு வாழ்வினை குழப்பும் நோக்குடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்கின்றனர்.
இதனால் வட பகுதித் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.

முக்கிய தளபதி பலி: அல்கொய்தா இயக்கத்துக்கு பின்னடைவா?

 
அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி படுகொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள வஜிரிஸ்தான் பகுதியே அல்கொய்தா தீவிரவாதிகளின் புகலிடமாக அமைந்துள்ளது.
இங்கு தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கா அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி அபு ஜாயித் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதல்களில் அல்கொய்தா இயக்கத் தளபதியான அபு யாஹ்யா அல் லிபி உயிரிழந்ததை தொடர்ந்து, அவன் இடத்தில் அமர்த்தப்பட்டவன் தான் இந்த அபு ஜாயித்.
அபு ஜாயித், அமெரிக்க தாக்குதல்களில் பலியாகி இருப்பது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.
இது குறித்து வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அறிவோம். அல்கொய்தா இயக்கத்தின் மூத்த தளபதி பலியானதாகவும் எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் பலியானது யார் என்பதை எங்களால் உறுதி செய்ய முடியாது என கூறினர்

போபா புயலின் கோரத் தாண்டவத்துக்கு 600 பேர் பலி: மீண்டும்

 
பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட போபா புயலுக்கு, இதுவரையிலும் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது பிலிப்பைன்சின் வடபகுதியில் 250 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் இப்புயல், மீண்டும் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது மணிக்கு 250 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் தாக்கிய புயலின் தாண்டவத்திலிருந்தே மக்கள், இன்றளவும் வெளிவராத நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.
பல கிராமங்கள் அடியோடு நாசமாகி விட்டதால், நிவாரண பணிக்கு சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் நாடு கேட்டுக் கொண்டுள்ளது{காணொளி, }