| ஜேர்மனியில் உள்ள பான் ரயில்
நிலையத்தில் ஒரு பை நடைபாதையில் கேட்பாரற்றுக் கிடப்பதாகவும் அதில் வெடிகுண்டு
இருக்கலாம் என்று அச்சம் உண்டாவதாகவும் தொலைபேசித் தகவல் கிடைத்தது.
உடனே, வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் படையினர் விரைந்து வந்தனர். அந்தப்
பையிலிருந்த குழாய் வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதற்காக அரைமணி நேரம் அந்த இடத்திற்குள் யாரையும் வரவிடவில்லை. நேற்று மதியம் 2 மணியளவில் பான் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் பல ரயில்கள் ரத்தாயின. ஓர் இளைஞர் நடைபாதையில் ஒரு பெரிய பையை வைத்துவிட்டுப் போனதை சிலர் பார்த்தனர். வெகுநேரமாகியும் அந்தப் பையை எவரும் வந்து எடுத்துச் செல்லாததால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப்பைக்குள் ஒரு குழாய் வெடிகுண்டும், ஒரு கடிகாரமும் இருந்தன. வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததும் மக்கள் அச்சமின்றி நடமாடினர். சிறிது நேரத்தில் வேறோர் இடத்தில் ஒரு காலணிப் பெட்டி அனாதையாகக் கிடப்பதைக் கண்டு அதற்குள் வெடிகுண்டு எதுவும் இருக்குமோ என்று பயணிகள் அஞ்சினர். உடனே பொலிசாரும், வெடிகுண்டுப் படையினரும் வந்து அது வெறும் பெட்டிதான் என்பதை உறுதி செய்தனர். இதனால் கோலோன் செல்லும் ரயில்கள் பான்-பியுல் வழியாகத் திருப்பிவிடப்பட்டது. தடுமாறிய பயணிகள் வாடகைக் கார்களில் ஏறிச் சென்றனர். வெடிகுண்டு இருந்த ரயில்வே கட்டிடத்திற்குள் பொலிசார் யாரையும் அனுமதிக்கவில்லை. |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
செவ்வாய், 11 டிசம்பர், 2012
ஜேர்மனியின் ரயில் நிலையத்தில் குழாய் வெடிகுண்டு?
சுவிஸ் பிரஜையாக மாற விரும்பும் பொப் பாடகர்
| பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த 38 வயது
பாடலாசிரியர் மற்றும் பொப் இசை பாடகரான ஜேம்ஸ் பிளண்ட் வெர்பியரில் La vache (பசு)
என்ற பெயரில் ஓர் உணவகத்தை ஆரம்பித்திருந்தார்.
அங்கு நடந்த பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வெர்பியர் எனது
இல்லமாக தோன்றுகிறது. நான் சுவிஸ் குடியுரிமை பெற்று இங்கு தங்கவே விரும்புகிறேன். எனக்கு உச்சிப்பனிச் சறுக்கு விளையாட்டிலும் சமையலிலும் அதிக ஈடுபாடு இருப்பதால் இந்த இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக உள்ளது என்றார். பிளண்டருக்கு வெர்பியரில் 2007ம் ஆண்டு முதல் ஒரு வசந்த மாளிகை உண்டு. இளங்கோடை காலங்களிலும் இவர் இந்த வீட்டில் வந்து தங்கியிருப்பதை பெரிதும் விரும்புவார். வலாய்சில் உள்ள உச்சிப்பனிச்சறுக்கு விளையாட்டு விடுதிகளில் தங்கி விளையாடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும். இவர் இப்போது தொடங்கியிருக்கும் உணவகம் 2730 மீட்டர் உயரத்தில் அழகான மலைக்காட்சிகளுடன் விளங்குகிறது. முன்னாள் இராணுவ வீரரான இவர், அந்நாட்டின் உச்சிப்பனிச்சறுக்கு விளையாட்டு குழுவிற்கு தலைவராக இருந்தார். இவ்விளையாட்டு போட்டிகளில் வெற்றிகள் பல பெற்றிருக்கிறார் என பிரித்தானிய செய்தித்தாள்கள் இவரை போற்றுகின்றன. இதையடுத்தே கடந்த 2005ம் ஆண்டில் பொப் இசைக்கலைஞராக உருவெடுத்தார். இவருடைய BACk TO BETLAM என்ற பாடல் தொகுப்பு இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது. இவருடைய 3 பாடல் தொகுப்புகளும் 18மில்லியன் பதிப்புகள் விற்றுத்தீர்ந்தன. தற்போதும் கூட ஜேம்ஸ் பிளண்ட் புதிய இசைத்தொகுப்புகளை உருவாக்கி வருகிறார். இந்த புதுவருட இரவில் பசுவைப்போல வேடமணிந்து தனது விடுதியை சுற்றி வரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. |
ஐ.நாவின் சிறப்பு ஆலோசகராக மலாலாவின் தந்தை நியமனம்
| தலிபான்களால் சுடப்பட்ட சிறுமி
மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய், ஐ.நா சபையின் சர்வதேச கல்விக்கான சிறப்பு
ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான சிறப்புத் தூதர் கோர்டன்
பிரெளன் அறிவித்தார். அவர் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலாலாவும், கல்விக்கான பிரசாரத்தில் தந்தையுடன் சேர்ந்து பணியாற்றுவார். 2015ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற மலாலாவின் திட்டத்தை, ஜியாவுதீன் நிச்சயம் செயல்படுத்துவார் என்று தெரிவித்தார். மேலும் மலாலாவின் பிறந்த தினமான டிசம்பர் மாதம் 12ஆம் திகதியை உலகில் அனைத்து சிறுவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய செயல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவர் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. |
ஜப்பானில் மேலுமொரு அணு மின்நிலையம் மூடப்படும் சாத்தியம்
| கடந்த ஆண்டு ஜப்பானில்
ஏற்பட்ட இயற்கை அழிவுகளினால் புகுஷிமா அணுமின் நிலையம் கசிவு ஏற்பட்டு மின்
உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து மற்ற அணுமின் உற்பத்தி நிலையங்களில் தீவிர ஆய்வுப்பணி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திசுரூகா அணுமின் நிலையத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் ஆய்வு செய்த போது இரண்டாவது ரியாக்டர் இருக்கும் இடம் பூமி அதிர்ச்சி ஏற்படும் இடம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 1,160 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அணுமின் நிலையம் நிரந்தரமாக மூடப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என ஜப்பான் அணுமின் உற்பத்திக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இரண்டாவது ரியாக்டர் கடந்த 1987 இல் அமைக்கப்பட்டதாகும் |
யூடியூப்புக்கு பதிலாக ஈரானில் புதிய இணையத்தளம் தொடக்கம்
| இணையத்தில் முஸ்லிம்களுக்கு
எதிராக கருத்துகள் பரப்புவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற
இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளிவருவதாக ஈரான் அரசு
தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இதனையடுத்து யூடியூப் உட்பட பல்வேறு இணையத்தளங்களை ஈரான் அரசு தடை செய்துள்ளது. இதனால் மக்கள் தகவல்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் www.mehr.ir என்ற பெயரில் புது இணையத்தளத்தை ஈரான் அரசு தொடங்கி உள்ளது. இதில் ஈரானியர்களுக்கு தேவையான தகவல்கள், இஸ்லாமிய கலாசாரம், கலைஞர்கள் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இணையத்தை தொடர்ந்து கண்காணித்து வருவோம், சென்சார் செய்வோம் என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |








