siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 12 டிசம்பர், 2012

புதிய குடிவரவாளர்களை உள்வாங்கும் விடயத்தில் ஆறாவது இடத்தில் கனடா

பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் அங்கம் வகிக்கும் 34 நாடுகளில் கனடா புதிய குடிவரவாளர்களை வரவேற்பதில் ஆறாம் இடத்தில் இருப்பதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது. பாரிஸ் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் அங்கம் வகிக்கும் 34 நாடுகளில் பெரும்பான்மையானவை வளர்ச்சியடைந்த நாடுகளாகும்.
இந்த நாடுகளில் புதிய குடிவரவாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்து இந்தக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கனடாவின் மக்கள் தொகையில் 20 சதவீதமானவர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்களாகவும். இவர்களில் 18 வீதமானோர் கடந்த ஐந்து வருட காலத்திற்குள் வந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
மற்றைய அங்கத்துவ நாடுகளில் இத்தொகை 22 வீதமாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிற்கு வருகை தந்த புதிய குடிவரவாளர்களில் 54 சதவீதம் பேர் பட்டதாரிக் கல்வி கற்றவர்களாகவும் மற்றைய அங்கத்துவ நாடுகளில் சராசரி 31 விழுக்காட்டினர் பட்டதாரிக் கல்வி கற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
2010ம் ஆண்டில் கனடா ஐந்தாவது இடத்தில் இருந்ததும் 2012ல் குடிவரவாளர்கள் தொகையில் கணிசமான முன்னேற்றமேற்படாத காரணத்தால் அது ஆறாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன

விமான நிலையத்தில் இலங்கை மாடலிங் பெண் தற்கொலை?

மாடலிங்க் தொழிலில் உள்ள இலங்கை பெண் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் தற்கொலை செய்ய முயன்ற போது பாதுகாவலர்களால் காப்பாற்றப்பட்டு, பத்திரமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த மாடலிங் பெண், Shamla, தனது மாடலிங் தொழில் பணி காரணமாக சென்ற வாரம் புதுடில்லிக்கு வந்திருந்தார். பின்னர் அவர் தன்னுடைய நாட்டிற்கு திரும்பி செல்வதற்காக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவர் போக வேண்டிய விமானம் ஏற்கனவே கிளம்பிவிட்டது. இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண், விமானநிலைய வளாகத்திலேயே இரண்டு நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.
இவருடைய நிலைய கவனித்த விமான நிலைய பாதுகாவலர்கள் தங்களது உயரதிகார்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இவர் ரகசியமாக கண்காணிக்கப்பட்டார். ஒருசமயத்தில் திடீரென விமான நிலைய மேல் வளாகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது அங்கு மறைந்திருந்த பாதுகாவலர்களால் காப்பாற்றப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் அவர் எதுவுமே பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
பின்னர்தான் அவர் தான் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டதால், மன அழுத்தம் அடைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் பத்திரமாக வேறொரு விமானத்தில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்

நவற்கிரி இணையங்களின்வாழ்த்து 12.12.12.

அன்பு வாசகர்கள் உறவு இணையங்கள் அன்பர்கள் நண்பர்கள் அனை வர்க்கும் வணக்கம் இன்று .12.12.12.ஓர் சிறந்த திகதி அனை வரும் பகமை களை மறந்து அன்புடன் சகல சவ்கரியங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ நவற்கிரி இணையங்களின் நல் வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகு ..நன்றி .{காணொளி,}