siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 13 டிசம்பர், 2012

O/L பரீட்சை எழுதிய மாணவி உட்பட இருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை

 
 
.
மட்டக்களப்பு மாவட்டத்­தின் இரு வேறு பகுதிகளில் இரு­வர் தூக்கில் தொங்கிய நிலை­யில் சடலமாக மீட்­கப்பட்­டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரி­வுக்­குட்பட்ட மாங்காடு பகுதியில் செவ்வாய்க்­கிழமை பிற்பகல் ஜி.சீ.ஈ. சாதா­ரணதரப் பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்­கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்­டார்.
மாங்காடு விஸ்ணு ஆலய வீதி­யில் உள்ள வீட்டில் வினோ­தினி (வயது - 16) என்ற மாண­வியே இவ்வாறு தூக்­கில் தொங்­கிய நிலையில் சடலமாக மீட்­கப்பட்டார் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சை முடிந்து வீட்டுக்கு­வந்த குறித்த மாணவி உண­வருந்­திய­வேளை­யில் வீட்டில் உள்­ளோர் தமது தோட்டத்துக்குச் சென்­றுள்ளனர். இந்தவேளை­யில் தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிய பெற்றோர் மகள் சடல­மாக தூக்கில் தொங்கு­வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பில் களுவாஞ்­சிக்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்­ட­தைத்தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்­களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது தொடர்பிலான விசார­ணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்­றனர்.
இதேவேளை, பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்­குடாவில் உள்ள விளையாட்டு மைதா­னத்­தானத்துக்கு அருகில் உள்ள மரத்­தில் இருந்து நேற்று புதன்கிழமை காலை இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் சடல­மாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் காஞ்சிரங்­குடாவை சேர்ந்த ப.ஜெகன் (வயது - 22) என அடையாளம் காணப்பட்­டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்பக்­கட்ட விசாரணையில்

மூன்று வயது குழந்தை சினிமா நட்சத்திரம் தீ விபத்தில்

     

இங்கிலாந்து நாட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்த 3 வயது Sophie Firth என்ற சிறுமி, தன்னுடைய உடலில் தீப்பிடித்த காரணத்தால், படுகாயம் அடைந்து, உயிருக்கு 8 நாட்களாக போராடி, பின் பரிதாபமாக இன்று காலை லண்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Sophie Firth என்ற 3 வயது குழந்தை நட்சத்திரம், Emmerdale என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் Angelica King on ITV soap என்ற வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் பல பாராட்டுக்களையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், விடுமுறை தினத்தில், தன் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையில் உடையில், கேஸ் அடுப்பின் தீ பட்டு, பின் உடல் முழுவதும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். எட்டு நாட்களாக மருத்துவர்கள் இரவு பகல் பாராது தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைக்கு பலனளிக்காமல், இன்று காலை லண்டனில் மரணமடைந்தார்.
அவருடைய மரணச்செய்தி கேட்டு, Emmerdale படக்குழுவினர் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவருடைய இழப்பு இங்கிலாந்து சினிமாத்துறைக்கு மட்டுமல்லாமல், ஹாலிவுட் திரைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்

குஷ்பு மார்பில் இந்து மத கடவுள்கள்: புதிய சர்ச்சை???

இந்து மத கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் பதித்த சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ், நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார்.
அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்துக் கடவுள் படங்கள் உள்ளன.
அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார்.
இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்திருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
தெரிந்தே செய்திருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குஷ்பு, ருத்ராட்ச மாலையில் பெரிய பிளாஸ்டிக் தாலியைக் கோர்த்து அணிந்து வந்து சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


16 வயது இளைஞனுடன் செக்ஸ் உறவு வைத்த 38 வயது?)

          
 

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் 38 வயது பெண்ணுக்கு ஒருவர், டீன் ஏஜ் இளைஞனுடன் செக்ஸ் வைத்திருந்த குற்றத்திற்காக 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில், Marie Jane என்ற 38 வயது திருமணம் ஆன பெண், 16 வயது இளைஞன் ஒருவருடன் காதல் கொண்டு, அவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
பின்னர் பிரிஸ்டல் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Marie Janeக்கு நீதிபதி 6 மாத சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மகன் வயதுள்ள இளைஞனுடன் செக்ஸ் உறவு வைத்திருந்த அந்த பெண்ணை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார். இவரை இரண்டு வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய, இவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட Marie Janeக்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் Prosecutor Kenneth Bell, 16 வயது இளைஞனுடன் வெறும் நட்புடன் மட்டுமே பழகியதாக Marie Jane கூறுவதை ஏற்க முடியாது என்றும், அவர் அந்த இளைஞனை பெற்றோரிடம் இருந்து பிரித்து, தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார் என்றும், எனவே அந்த பெண்ணுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வாதாடினார்

பெண்ணுடன் கள்ள உறவு: சிங்கப்பூர் சபாநாயகர் பதவி விலகினார்

பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக புகார் எழுந்ததால், சிங்கப்பூர் நாடாளுன்ற சபாநாயகர் மைக்கேல் பால்மர் பதவி விலகினார். சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தவர் மைக்கேல் பால்மர்.
மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பால்மர், தனது தொகுதி அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்ற உறுப்பினர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், தகாத உறவு வைத்திருந்தால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் என கட்சி தலைவர்கள் விமர்சித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனை தொடர்ந்து தானும் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் பால்மர் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் செய்தது தவறு தான். என்னுடைய ஒழுக்க கேட்டினால் கட்சிக்கு களங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை. எனவே பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.{காணொளி, }

அமெரிக்கா பிரஜை ஒருவர் வடகொரியாவில்

 
வடகொரியாவில் சந்தேகத்தின் பேரில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் கூறுகையில், வடகொரியாவில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்கு உறுதிபட தெரியவந்துள்ளது.
அமெரிக்க பிரஜைகளின் நலனை காப்பதை தவிர எங்களுக்கு வேறெந்த முக்கியத்துவமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடன் அமெரிக்காவுக்கு தூதரக உறவு கிடையாது என்பதால், அந்நாட்டில் உள்ள அமெரிக்க மக்களின் பிரச்னைகளை கையாளும் அதிகாரத்தை அங்குள்ள சுவீடன் தூதரகத்துக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் பய் என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர், நவம்பர் மாத தொடக்கத்தில் வடகொரியாவில் கைதுசெய்யப்பட்டார். ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றிருந்த அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெஸிந்தா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் என்ன உள்ளது?

லண்டனில் மர்மமான முறையில் மரணமடைந்த செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார் இன்று வெளியிடுகின்றனர். பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலையமொன்று அரசு குடும்பத்தினர் போன்று பேசி, இளவரசி குறித்த தகவல்களை சேகரித்தனர்.
இந்த அழைப்பு செவிலியர் ஜெஸிந்தா தான், இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு இணைப்பு கொடுத்தார் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் பயந்து போன ஜெஸிந்தா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணை நடத்தி ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று வெளியிடுகின்றனர்.
அவரது உடலை கர்நாடக மாநிலம் மங்களூருக்கு கொண்டு வருவதற்கு, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஜெஸிந்தா கணவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
குறும்பு தனமான தகவலை ஒலிபரப்பிய, அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் மெல் க்ரெய்க் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோர் தாங்கள் செய்த செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஜெஸிந்தா, இறப்பதற்கு முன்பு குறிப்பு எழுதி வைத்து விட்டு சென்றதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அக்கடிதத்தில் என்ன உள்ளது என்பதை கணவர், ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் அவரது மரணம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார் இன்று வெளியிடுகின்றனர்