| உலகின் வயதான நபராக ஜப்பானை
சேர்ந்த ஜிரோமோன் கிமுரா(வயது 115) என்பவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் கியோடாங்கோ நகரில் வசித்து வருபவர் ஜிரோமோன் கிமுரா. இவர் கடந்த
1897ஆம் ஆண்டு 19ஆம் திகதி பிறந்தார். இதற்கு முன்னதாக உலகின் மிக வயதான பெண்மணி என அங்கீகரிக்கப்பட்டு இருவாரங்களே ஆன நிலையில், டினா உயிரிழந்தார். டினாவை விட தற்போது அங்கீகரிக்கப்பட்ட கிமுரா 15 நாட்கள் மட்டுமே வயதில் குறைந்தவர். இது குறித்து கியோடாங்கோ நகர மேயர் யாசுஷி நகயாமா கூறுகையில், ஜிரோமோன் கிமுரா இந்த நகரத்தின் பெருமை என்று தெரிவித்தார். இவருக்கு 14 பேரக்குழந்தைகள், 25 கொள்ளுப் பேரன்- பேத்திகள், 13 எள்ளுப் பேரன்- பேத்திகள் உள்ளனர். |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
புதன், 19 டிசம்பர், 2012
உலகின் வயதான நபராக ஜப்பானின் கிமுரா அங்கீகாரம்
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று சாதனை படைத்தார் ராணி
| பிரிட்டன் ராணி
இரண்டாம் எலிசபெத் அமைச்சரை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு, சாதனை படைத்தார்.
பிரிட்டன் அரசர்கள் மிக முக்கியமான காலகட்டத்தில் மட்டுமே அமைச்சரவை கூட்டத்தில்
கலந்து கொள்வர். இந்நிலையில் இரண்டாம் எலிசபெத், லண்டனில் டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமர் டேவிட் கமரூன் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பிரதமருடைய இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் விவாதித்தார். எலிசபெத் அரியணை ஏறிய வைர விழாவையொட்டி நடந்த கொண்டாட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும் அமைச்சர்கள் சிலர் அரசிக்கு அன்பளிப்புகளை வழங்கினர். பிரிட்டிஷ் அமைச்சரவை கூட்டத்தில் எலிசபெத் அரசி கலந்து கொண்டது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது எலிசபெத்தின் தந்தை நான்காவது ஜார்ஜ் மன்னர் பிரிட்டிஷ் அமைச்சரவையை கூட்டி விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |




