Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன்!


கிளிநொச்சியில் 4 வயதுச் சிறுமி மீது சிங்கள காமுகன் ஒருவன் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான். கிளிநொச்சிக்கு வரும் சிங்கள முஸ்லீம் வியாபாரிகள் அப்பாவி தமிழ் மக்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிவதாகவும், அம்மக்களிடம் கொள்ளையடித்து செல்வதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள இராணுவத்தினர் அவர்களுக்கு துணையாக இருப்பதால் யாரும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முதல் காரைநகருக்கு வந்த முஸ்லீம் இரும்பு வியாபாரிகள் ஊனமுற்ற தமிழ் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள முஸ்லீம் காடையர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது தமது அட்டகாசத்தை காட்டி வருகின்றனர்.

கிளிநொச்சியில் 4வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ள போதிலும் இவன் சிங்களவன் என்பதால் விரைவில் விடுதலை செய்யப்படுவான்

அனர்த்த பிரதேசங்களைப் பார்வையிட்ட??



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தின் பனிச்சங்கேணி பாலம் பெருக்கெடுத்து வீதி முற்றாக தடைப்பட்ட நிலையில் வாகரைப் பிரதேசத்தின் திருமலை எல்லை பகுதி வெருகல் மகாவலி கங்கை பெருக்கெடுத்த நிலையிலும், பொலநறுவை பாராக்கிரம சமூத்திரம் பெருக்கெடுத்து கதிரவளி, புச்சாக்கேணி, அம்பந்தனாவெளி, வாகரை, தட்டுமுனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, கண்டலடி, பால்ச்சேனை, பனிச்சங்கேணி, காயான்கேணி, இறாலோடை, ஆலங்குளம், மாங்கேணி, மாவடிஓடை, மதுரங்கேணிக்குளம், கட்டுமுறிவு, தோணிதாட்டமடு, வாகரை மத்தி உட்பட்ட பல இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது{புகைப்படங்கள்,}.


இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்விடங்களில் சிலவற்றுக்கு சென்று பார்வையிட்டார். அதாவது கதிரவெளி, அம்பந்தனாவெளி, பால்சேனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, வாகரை மத்தி, தட்டுமுனை, பெல்லடிமடு. பனிச்சங்கேணி, மாவடிஓடை, மாங்கேணி, காயான்கேணி ஆகியவற்றை பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கல் சார்பாக வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுலநாயகியுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் உரையாடி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை வாகரைப் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக சமைத்த உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகளை புரியுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் அவசர வேண்டுகோள் விடுத்தார்.


ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி

இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ஜியார்ஜியோ நெபோலிடனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனாதிபதியை சந்தித்த மரியோ மான்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொடர்ந்து காபந்து அரசின் பிரதமராக நீடிக்குமாறு மரியோ மான்டியை கேட்டுக்கொண்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக இரு அவைகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகிய மரியோ மான்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சியில் இருந்த கடந்த 13 மாத காலகட்டம் மிகவும் கடினமாகவும், வசீகரமாகவும் இருந்தது. நான் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை, அடுத்து பொறுப்பேற்கும் தலைவரும் முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறேன்.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளும் முயற்சியில் சர்வதேச அளவில் நம்பகமான நாடாக இத்தாலி மாறியுள்ளது என்றார்.
மரியோ மோன்டியின் அரசுக்கு அளித்த ஆதரவை முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சி திரும்பப் பெற்றது. இதையடுத்து, பெரும்பான்மை பலத்தை இழந்த மாண்டி தானாகவே முன்வந்து ராஜினாமா செய்து விட்டார்

சட்ட விரோதமாக நுழைய முயன்ற 11 பேர் சுட்டுக் கொலை

ஈரான் நாட்டு எல்லைக்குள் சட்ட விரோதமாக கடக்க முயன்ற 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியிலிருந்து வந்த 11 பேர் ஈரான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றனர்.
அப்போது அப்பகுதியிலிருந்து மறைந்திருந்த மர்ம கும்பலொன்று 11 பேரையும் சுட்டு கொன்று விட்டனர்.
இந்த சம்பவத்துக்கு இதுவரையிலும் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து ஈரான், துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக பலரும் நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு தாக்குதலில் அமைச்சர் உட்பட 9 பேர் பலி


பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பாகிஸ்தானில் பேஷ்வார் மாகாணத்தின் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் பேஷ்வார் மாகாண அமைச்சரும், அவாமி தேசிய கட்சியின் முன்னணி தலைவருமான பஷீர் பிலவ்ர் கலந்து கொண்டார்.
அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3 முறை பஷீர் பிலவ்ருக்கு தெஹ்ரீக்- இ- தலிபான் பாகிஸ்தான் இயக்கம் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு அந்த இயக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்றும் தகவல் துறை அமைச்சர் இப்திகார் ஹுசைன் கூறியுள்ளார்{புகைப்படங்கள்,}.





வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி?

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜான் கெர்ரியை ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார். தற்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருக்கும் ஹிலாரி கிளிண்டன் தீவிரமான வயிற்றுத் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்.
அவர் இப்பதவியில் இருந்து ஜனவரி மாதம் ஓய்வு பெறப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கெர்ரியை ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்தார்.
இப்பதவிக்கு ஜான் கெர்ரி தான் மிகச் சிறந்த தெரிவு என ஒபாமா பாராட்டினார்.
69 வயதாகும் கெர்ரி, ஒபாமாவுக்கு வெளிவிவகாரத்துறை விவகாரங்களில் ஆலோசனை தரக்கூடிய நெருங்கிய நண்பராகவும், வெளிவிவகார செனட் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
ஒபாமா இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள முதல் நியமனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது