Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 27 டிசம்பர், 2012

மத்திய அரசை வெளுத்து வாங்கிய ஜெயலலிதா. பிரதமர் அதிர்ச்சி.

 
மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். அவருடைய பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 10 நிமிட பேச்சு: கடந்த ஆண்டு நடைபெற்ற இதே கூட்டத்தில் தமிழக அரசு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைக் கூட பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதன் மூலம் மாநில அரசுகளின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களை வகுக்கும் மத்திய அரசு, மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்துகிறது. இப்படி செய்தால் எவ்வாறு வறுமை ஒழியும்? மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு சிறு கோரிக்கைகளும், தேவைகளும் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு கோரிக்கை வைத்தும், அதனை பல முறை நினைவுப்படுத்தியும், இதுவரை ஒரு பதில் கூட மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு அனுப்பப்படவில்லை.
தமிழகத்தில் நடைபெற வேண்டிய பல்வேறு கட்டமைப்புப் பணிகள், மத்திய அரசின் நிதியுதவி சரிவரக் கிடைக்காமல் காலதாமதம் ஆகின்றன. காவிரியில் இருந்து தண்ணீரை தமிழகத்துக்குக் கிடைக்க வகை செய்யும் பணியிலும், இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காக்கும் பணியிலும் மத்திய அரசு தோல்வியையே அடைந்துள்ளது. அரசு கேபிள் டிவியை, டிஜிட்டல் மயமாக்க எத்தனையோ முறை விண்ணப்பித்தும், மத்திய அரசு இதுவரை ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களின் டிவி நெட்வொர்க் பயன்பெற வேண்டும் என்பதே காரணமாக உள்ளது.
எப்போதுமே வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்க எண்களில் நிர்ணயிக்க வலியுறுத்துவது வழக்கம். ஆனால் எப்போதையும் விட 9% இருந்து இந்த ஆண்டு 8.2% ஆக வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. நேரடி பணப் பரிமாற்ற திட்டம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்த இயலாது என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. குறிப்பாக உணவுப் பொருள் மானியத்துக்கு இது ஏற்றதாக அமையாது. ஆதார் திட்டத்தில் உள்ள குறைபாடுகளால், அதன் லட்சியம் நிறைவேற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்தியாவில் நதிநீர் பங்கீடு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எப்போதும் போலவே 12வது திட்ட ஆவணத்திலும் அதுபற்றிய ஒரு விவரமும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறை குறித்து பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும், இதுவரை மத்திய அரசு சார்பில் நேர்மறையான பதில் இல்லை. எனவே, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார். ஜெயலலிதா பேசிய 10வது நிமிடத்தில் மணி அடிக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டால் அதிருப்தி அடைந்து வெளிநடப்பு செய்தார். மேலும் தாம் கொண்டு வந்த அறிக்கையை முழுவதும் படித்ததாக பதிவு செய்து கொள்ளுமாறு கூறிவிட்டு விருட்டென வெளியேறிவிட்டார் ஜெயலலிதா

பின்லேடனிமே ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பாகிஸ்தான் அரசு அதிகாரி.


சர்வதேச தீவிரவாத தலைவர்... அமெரிக்காவையே மிரட்டிய கும்பலின் மூலகர்த்தா... என்று உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த மனிதரான ஒசாமா பின்லேடனிடமே, பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ரூ.50,000 லஞ்சம் பெற்றது, அவரது டைரி குறிப்பில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தேடி, அமெரிக்க ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ரகசிய பங்களாவில் தங்கியிருந்த அவரை கடந்த ஆண்டு மே 2ம் தேதி, அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். பின்லேடன் தங்கியிருந்த ரகசிய பங்களாவை, இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். பின்னாளில் இதை நினைவிடம் ஆக்கி பிரச்னை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தாலேயே இந்நடவடிக்கையை பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

14 அடி உயரச் சுற்றுச்சுவர், இரும்புவேலியுடன் கூடிய 3 மாடி பங்களாவை இடிக்கும் பணியின்போது, பின்லேடனின் டைரி மற்றும் 1,30,000 ஆவணங்கள் கிடைத்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டைரியில் இருந்த ஒரு குறிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் உருது பத்திரிகையான ஜங் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

அபோதாபாத் பங்களாவை கட்டுவதற்கு, கிராம நிர்வாக அதிகாரி அனுமதி வழங்கவில்லை. அவரிடம் வலியுறுத்தி கேட்ட நிலையில், ரூ.50,000 கேட்டார். அதன்படி, அவருக்கு ரூ.50,000 தரப்பட்டது. ஆளானப்பட்ட பின்லேடனிடமே ரூ.50,000 பெற்ற அந்த கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் பின்னாளில் கைது செய்துள்ளனர். வீட்டை கட்டுவது யார் என்ற எந்த விவரமும் தெரியாமல், லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வீட்டை கட்ட அந்த கிராம நிர்வாக அதிகாரி அனுமதி அளித்துள்ளார். பாகிஸ்தான் அதிகாரிகள் சகஜமாக லஞ்சம் வாங்குவது பின்லேடனு க்கு நன்றாக தெரிந்துள் ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

மோசடி செய்த இந்தியருக்கு 45 ஆண்டுகள் தண்டனை?


அமெரிக்க பங்குச்சந்தை உள்வணிகத்தில் ஈடுபட்டதாககுற்றம்சாட்டப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியரும் ஹெட்ஜ் நிதிய மேலாளருமான மேத்யூ மர்டோமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மர்டோமா மீது, நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வரும் ஜனவரி முதல் வாரம் வழக்கு தொடரப்பட்ட உள்ளது.
அல்ஸீமர் எனப்படும் மறதி நோய்க்கு மருந்து தயாரிப்பு குறித்து டாக்டரின் அறிக்கையை அறிந்து கொண்டார் மர்டோமா. இதனால் ரூ.1,518 கோடி ஹெட்ஜ் நிதியம் நஷ்டமடையும் எனத் தெரிந்து கொண்டு அதை தவிர்க்கும் முயற்சியில் விதிகளை மீறி அவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவருக்கு ரூ. 27.50 கோடி ரொக்க ஜாமீன் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மர்டோமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.27.50 கோடி அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்று தெரிகிறது. மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும்.
பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக அமெரிக்க பங்குச் சந்தையும் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது