siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

எமக்கு இலவசமாகக் கிடக்கும் ஓர் தகவல்.


நமக்கு இலவசமாக கிடைக்கும் ஒரே வைட்டமின் “வைட்டமின் டி”. இதை நாம் நேரடியாக சூரிய ஒளியிலிருந்து பெறலாம்...

தினமும் காலையில் 10 நிமிடம் வெய்யில் குளியல் செய்தால் போதும். அன்றைய நாளுக்குத் தேவையான வைட்டமின்-டியை நம்முடய உடல் கிரகித்துவிடும்...!

கடவுளின் மகிமை பற்றிய அருள் மொழி

தான் கடவுள்கிட்ட கேட்டோம்,
கடவுளும் தந்தாரு.
ஆனால்! கடவுள் உங்ககிட்ட கேட்டாரா அவர்கிட்ட இல்லன்னு பிறகு ஏன் ,காணிக்க

வியாழன், 24 ஜனவரி, 2013

இலங்கையின் ஆதி குடிகள் தமிழர்கள் தான்

ஆ1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது .தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்

புதன், 23 ஜனவரி, 2013

கவலையில் அமெரிக்க, கனடா, பிரிட்டன் பெண்கள்

மூதாதையர்களை விட, நவீன கால பெண்கள் மிகவும் பலவீனமாக உள்ளனர்; குறைவாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாதது போன்றவைதான் இதற்கு முக்கிய காரணம்' என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் மருத்துவ அறிவியல் துறையின் பேராசிரியர் கிராண்ட் டாம்கின்சன் கூறியதாவது: பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு உடல் வலிமை குறைந்துவிட்டது. சாதாரண உடற்பயிற்சியான உட்காருதல், எழுதல் போன்றவை கூட, 8 முதல் 10 சதவீதம் குறைந்துவிட்டது. 1985ம் ஆண்டு வரை, உடல் வலிமையில் எந்தவிதமான பிரச்னைகளும் இருந்ததில்லை, அதற்குப் பின், உடல் எடை கூடியுள்ளதே தவிர, உடல் பலம் கூடவே இல்லை. நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. குறிப்பாக, பெண்களே இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். லண்டனை சேர்ந்த முட நீக்கியல் நிபுணர் சமி மார்கோ கூறுகையில், " பெண்கள் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் ஆனால், அதற்கேற்ற பலம் அவர்களிடத்தில் இல்லை' என்றார்.பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சி மற்றும் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் கென் பாக்ஸ் கூறியதாவது:உடல்பலம் குறைவுதான் பெரும்பாலான நோய்களின் பிறப்பிடமாக உள்ளது. எலும்பு முறிவு, மூட்டுவலி, முதுதண்டு வலி போன்ற உபாதைகளுக்கு இதுவே மூலகாரணம். தங்களின் உடலை மெலிதாக வைத்துக் கொள்ளவே பெண்கள் விரும்புகிறார்கள். இதனால், அதிகமாக சாப்பிடுவதில்லை, உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு இது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்

விண்வெளியில் இருந்து நேரடியாக உரையாடிய Chris Hadfield

டொரண்டோவில் தனது பெயரில் இயங்கும் பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேர்களுடன் நேரடியாக உரையாடினார் Chris Hadfield என்னும் விண்வெளி வீரர். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.தனது பெயரில் டொரண்டோ அருகில் இயங்கும் Chris Hadfield Public School மாணவர்களுடன் நேரடியாக விண்வெளியில் இருந்து உரையாடும் சம்பவம் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார் Chris Hadfield.பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகன்ற திரையில் திடீரன Chris Hadfield உருவம் தெரிந்து, அவர் பேச ஆரம்பித்தவுடன் மாணவ மாணவிகள் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளித்தார் விண்வெளி வீரர்ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வகுப்புக்கு ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரிடம் வரிசையாக தங்களுடைய வானவியல் சந்தேகங்களை குறித்த கேள்விகளை கேட்டனர்ஆறாம் கிரேடு படிக்கு ஒரு மாணவி "புவியீர்ப்பு இல்லாத விண்வெளியில் உடல் எடையை அதிகரிக்காதவாறு இருக்க எவ்வகை முயற்சிகளை செய்தீர்கள்" என்ற கேள்விக்கு பதிலளித்த விண்வெளி வீரர், "தினமும் இரண்டு மணிநேரம் கடுமையான உடற்பயிற்சி செய்து, உடல் எடை சீராக வைத்திருக்கிறேன்" என்று கூறினார். மேலும் விண்வெளியில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது என்றும் மேல்பகுதி எது? கீழ்பகுதி எது? என்றே தெரியாமல் மிதந்து கொண்டிருப்பதால், இரத்த ஓட்டம் சீராக இருப்பது.{புகைப்படங்கள்}
தடைபடுகிறது என்றும் அதற்காக சிறப்பு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: சிறுமி பரிதாப மரணம்

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தோனேஷியாவின் பாண்டா ஏஸ் கடலோர நகரில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் நொறுங்கின, இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதேபோன்று கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு, இந்தோனேஷியா, இலங்கை மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது தாயகத்திலும் 2013 முதல் வாகன சாரதிகளுக்கு ??


அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை அடுத்தவருடம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸாருக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சாரதிகளின் கவனயீன்மை காரணமாக இந்த வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது. அதாவது தற்போது நாளொன்று 8 பேர் வீதம் இறக்கின்றனர்.
இதனையடுத்து மேற்படி திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும். அதாவது 24 மாதத்திற்குள் சாரதி ஒருவர் 24 புள்ளிகளை பெறுவார் எனின் 12 மாத காலத்திற்குள்ள குறித்த சாரதியின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும்.
மீள வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு நன்னடத்தை காலம் வழங்கப்பட உள்ளதோடு இக்காலத்தில் 6 புள்ளிகள் பெற்றால் நன்னடத்தை காலம் மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கப்படும்.
24 மாத காலத்தினுள் 24 புள்ளிகளைவிட குறைவாகப் பெறும் சாரதி ஒருவர் அடுத்த வருடத்தில் புள்ளி எதுவும் பெறாவிட்டால் அந்த புள்ளிகளில் 6 குறைக்கப்படும். அதற்கு அடுத்த வருடத்திலும் புள்ளிகள் எதுவும் பெறாவிடின் அவரின் சகல புள்ளிகளும் நீக்கப்படும்.
சாரதி பயிற்சி வகுப்பு நடத்தும் ஒருவர் 24 மாத காலத்தினுள் 12 புள்ளிகள் பெற்றால் அவரின் அனுமதி பத்திரம் 12 மாதங்களுக்கு ரத்துச் செய்யப்படும்.
  1. சாரதிகள் பெறும் புள்ளிகள் பற்றிய விபரம் ஒவ்வொரு மாதமும் 10 திகதிக்கு முன்னர் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றமும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும். அவை கணனியில் உட்படுத்தப்பட்டு புள்ளிகள் கணிப்பிடப்படும். 18 புள்ளிகளை தாண்டியதும் அது குறித்து கடிதம் மூலம் சாரதிக்கு அறிவிக்கப்படும்

ஒரு பில்லியின் டொலர் செலவில் வளரும் கூகுளின் தலைமை ?

இணைய உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனமாது சுமார் 1 பில்லியின் டொலர் செலவில் தனது தலமை அலுவலகம் ஒன்றினை லண்டனில் உருவாக்கிவருகின்றது. 2.4 ஏக்கர் பரப்பளவுடைய பிரதேசத்தில் 7 மற்றும் 11 தட்டுக்களை கொண்ட தொடர்மாடிக்கட்டிடங்களின் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவருவதுடன் இக்கட்டுமானப்பணிகளை 2016ம் ஆண்டளவில் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளது. இதேவேளை கூகுள் நிறுவனத்திற்கென லண்டனின் Victoria மற்றும் St Giles High Street பிரதேசங்களில் ஏலவே இரண்டு அலுவலகங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

திங்கள், 21 ஜனவரி, 2013

மனிதரின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் பூனைகள்:

மெஸ்சினா பல்கலைக் கழகம்,அறிவுள்ள விலங்குகளில் பூனையும் ஒன்று. அவை தன்னை வளர்ப்பவர்களின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் நன்கு கவனித்து அதை அப்படியே பிரதிபலிக்கின்றன. அதாவது தனக்கு ஒதுக்கப்பட்ட உணவை சாப்பிடுவது, உறங்குவது, கழிவறை செல்வது போன்றவற்றை ஒழுங்காக செய்கின்றன. மேலும் உணவு பொருள் வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடித்து சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதுபற்றிய ஆய்வை மெஸ்சினா பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் குளூசெப்பே பிக்சியோனி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். பூனைகளை 2 பிரிவுகளாக்கி அவற்றின் ஒரு பிரிவை சிறிய வீட்டிலும், மற்றொரு பிரிவை பெரிய வீட்டிலும் வளர்த்தனர். அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து சிறப்பாக பராமரித்தனர். அவற்றுடன் அவைகளை வளர்ப்பவர்களை எப்போதும் உடன் இருக்கும்படி செய்தனர். அவற்றில் சிறிய வீட்டில் வளர்ந்த பூனைகள் தன்னை வளர்க்கும் எஜமானர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தன. அவை தன்னை வளர்த்தவர்களின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் அப்படியே பிரதிபலித்தன. அதே நேரத்தில் பெரிய வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளிடம் சிறிய வீட்டில் வளர்ந்த பூனைகளின் செயல்பாடுகளில் பாதி அளவே இருந்தது. இதன் மூலம் பூனைகள் தங்களை வளர்ப்பவர்களின் செயல்பாடுகளை பிரதிபலிப் பவையாக இருப்பது தெரிகிறது

மீண்டும் மாலியைக் கைப்பற்றுவோம் பிரான்ஸ் அறிவிப்பு

வடக்கு மாலியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலி வந்து இறங்கிய பிரான்ஸ் இராணுவம் முழுமையாக இந்நாட்டை கைப்பற்றுவோம் என்று அறிவித்தது. முன்பு மாலி ஃபிரான்சின் குடியிருப்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. இன்னும் சில வாரங்களில் மாலி முழுவதும் எங்களின் கட்டுபாட்டில் கொண்டு வருவதே இத்தாக்குதலின் இலட்சியம் என்று பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லீ டிரியான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாலியின் வடபகுதியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸ் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. விமானத்தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்த அல்கொய்தா போராளிகளும் கூட்டாளிகளும் டயாபெலி நகரை விட்டு வெளியேறினர். பிரெஞ்சு படைகள் நியோனோ நகரத்தில் புதிய ராணுவத்தை அமைத்துள்ளது. இந்நகரம் தெற்கே 40 மைல் தொலைவில் உள்ளது நேற்று பிரெஞ்சுப்படைவீரா்கள் எவ்விதத்தாக்குதலிலும் ஈடுபாடமல் ஓய்வெடுத்தனர். நீண்ட போருக்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருப்பதாக தளபதி ஃபிரட்ரெக் தெரிவித்தார். இன்னும் பல தகவல்கள் தேவைப்படுவதாகவும் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். டயாபலி நகரை விட்டுக் கிளம்பிய ஹமீது டோங்காரா பொதுமக்களில் ஒருவர்கூட இந்த போரில் கொல்லப்படவில்லை நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை என்று விவரித்தார். ஏனென்றால் பிரெஞ்சுப்படைகளின் தாக்குதல் தொடங்கியதும் போன திங்களன்று அக்கிம் படைகள் டயாபலி நகரை நோக்கி வந்தன. அப்போது அங்கிருந்த மக்களிட் நாங்கள் முஸ்லீம்கள் நாங்கள் அல்லாஹவின் பெயரால் இங்கு வந்திருக்கிறோம் யாரையும் துன்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்ததை டுங்காரா நினைவுபடுத்தினார். அக்கிம் படைகள் டயாபலி நகரில் உள்ள மருந்துகடைகளில் புகுந்து அங்கிருந்த மருந்துகளை அள்ளிச்சென்றன. மக்களில் ஒருவரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்தனர் மீறி வந்த ஒருவரை சுட்டு தள்ளியதாக டங்காரா கூறினார். அபுபக்கர் மய்கா(35)என்பவர் இந்த தாக்குதல் பற்றிக்கூறும்போது, அல்ஜீரியர் லிபியா நாடுகளைச் சேர்ந்த துவாரெக் இனத்தவரே பெரும்பாலும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறினார். இவர்கள் அனைவரும் முகத்தை மூடியிருப்பதால் அவர்களின் மொழிவழக்கை வைத்துதான் அவர்களை இனம்பிரித்தறிய முடியும் என்றார். மாலி படைகளைச் சோ்ந்த தளபதி செய்யது சொகோபா பொதுமக்களும் கலகக்கார்களுடன் கலந்திருப்பதால் இசுலாமியத் தீவிரவாதிகளைத் தனித்து வீழ்த்துவது கடினம் என்றார்

உலகை சுற்றி வந்தவர் படகு பழுதடைந்ததால் தவிப்பு.

கடல் வழியாக உலகை தனிநபராக வலம் வரும் பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் படகு பழுதடைந்து கடலில் சிக்கித் தவித்த பிரஞ்சுக்காரர் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவருகே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அலெய்ன் தெலோர் என்ற இந்த படகு பாய்மரப் படகு மாலுமியை பயணிகள் கப்பல் ஒன்று ஞாயிறன்று மீட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பயண பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். தனி நபராக உலகைச் சுற்றி பாய்மரப் படகில் வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அலெய்ன் டெலார்ட் சென்ற படகு மூன்று நாட்களுக்கு முன் பழுதடைந்திருந்தது அவருடைய படகின் பாய்மரக் கம்பம் முறிந்துவிட அவர் தனது முயற்சியைக் கைவிட வேண்டி வந்தது. டாஸ்மேனியாவிலிருந்து கடலில் ஐநூறு கடல் மைல்களுக்கு அப்பால் இவர் நின்றிருந்ததால், ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இவருக்கு உணவு, குடிநீர், உயிர்காப்பு மிதவை உடுப்பு ஆகியவற்றைக் கொடுக்க முடிந்திருந்தது என பிபிசி செய்தியாளர் நிக் பிரையண்ட் குறிப்பிடுகின்றார். 63 வயதான அலெய்ன்னுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அவர் மனத்தளவிலும் பெரிய பாதிப்பு எதுவும் அவருக்கில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அலெய்னுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அண்டார்டிகா கண்டத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஓரியன் என்ற கப்பலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து அந்தக் கப்பல் ஐம்பது மணி நேரம் பாதை மாறி பயணித்து இவரைக் காப்பாற்றியுள்ளது. பிரான்சிலிருந்து கிளம்பி அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றி தனி நபராக பாய்மரப் படகில் வலம் வரும் வெண்டீ குளோப் ரேஸ் என்ற போட்ட்யின் பாதையில் அலெய்ன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஆனால் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் படகுப் போட்டியில் முறைப்படி பதிந்துகொண்டு அலெய்ன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கவில்லை

வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள்

இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது. முதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இரவுக்கு அடுத்த இரவுதான் உண்மையான முதலிரவாக அமையும். முதல் இரவில் எப்படியெல்லாம் நமது மனைவியை சந்தோஷப்படுத்தலாம், குஷிப்படுத்தலாம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்டமிடல் எதுவும் இருப்பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும். முதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. இதுதான் ஒரே உபாயம் என்றில்லை… இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இது… முதலிரவின்போது, பொதுவாக ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன்தான் பெஸ்ட். காரணம், ஏற்கனவே புதுப் பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்கத்தில் இருப்பார், இறுக்கமாகவும் இருப்பார். எனவே எடுத்ததுமே ‘கெளபாய், டாகி’ என்று போகாமல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன்தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன்தான் பெரும்பாலான தம்பதிகளுக்குப் பிடித்தமானதும் கூட, எளிமையானதும் கூட. மேலும் தனது மனைவியின் முகத்தில் தெரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடியும் என்பதால் அவரது முக பாவனைக்கேற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதான் நல்லது. அதேபோல 69 பொசிஷனும் கூட ஒரு ஜாலியான, எளிமையான விஷயம். இருவருக்கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளைமேக்ஸை எளிதில் அடையவும் இது உதவும். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதான். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசமயம், இருவரும் முழுமையான ஆர்கஸத்தை எட்ட இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மாதிரி சின்னச் சின்னதான பொசிஷன்களை சூஸ் செய்வதே முதலிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியும் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந்த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிறகு நீங்கள் விதம் விதமான பொசிஷன்களை செய்து பார்க்கலாம்… அதுவரை இப்படி லைட்டான ஐட்டங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

திரு மண நாள் நல் வாழ்த்து லோவி றயி

இன்று 19.01.2013.திருமண நாள் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நன் நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றானர் .இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவர்களை ஸ்ரீ நவற்கிரிமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.{காணொளி}

உடனடியாக இடம்மாற்றம் செய்யும் பணிகள்!

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்குச் சார்பாகச் செயற்பட்ட நீதிதுறையைச் சார்ந்தோர் மற்றும் உயர்நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இந்த இடமாற்றம் விரைவில் இடம்பெறவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் முதற்கட்டமாக முன்னாள் பிரதம நீதியரசருக்கு நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக இடம்மாற்றம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். சிராணி பண்டாரநாயக்கா பிரதம நீதியரசாகவிருந்த இறுதிக் காலத்தில் அவரால் இடமாற்றம் செய்யப்பட்ட 21 நீதிபதிகளின் இடமாற்ற உத்தரவினை மொஹான் பீரிஸ் புதிய பிரதம நீதியரசாகப் பதவியேற்றவுடன் ரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இணையத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி

இலங்கை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் இணையத்தளத்தின் மீது 'கேம் ஓவர்' தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை. இலங்கையின் பத்திரிகை ஒன்று அவருடன் இந்த விடயம் தொடர்பில் கேட்டபோது, இல்லை, அவ்வாறு இருந்தால் தாம் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த இணையத்தளம் கடந்த 17ம் திகதியில் இயங்கமாலுள்ளது. எனினும் இலங்கை கணணி அவசர மாற்றுநடவடிக்கை குழு, தமக்கு இது ஊடுருவல் குறித்த முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்துள்ளது. ஊடகங்களின் மூலமே தாம் இது தொடர்பான செய்தியை அறிந்துகொண்டதாக அந்தக்குழு குறிப்பிட்டுள்ளது

வெள்ளி, 18 ஜனவரி, 2013

தங்கச்சுரங்கத்தை கைப்பற்ற இரு பிரிவினரிடையே பயங்கர மோதல்.

சூடான் நாட்டில் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்றுவது தொடர்பாக இரு பழங்குடியினப் பிரிவினரிடையே நடைபெற்ற மோதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்டின் நெசிர்கி இது குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: டார்பர் பகுதியில், ஜெபர் அமிர் எனுமிடத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெனி ஹுசைன் மற்றும் அபல்லா என்ற இரு பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி 5 முதல் 9ஆம் தேதி வரை மோதல் உச்சகட்டத்தில் நடைபெற்றது. இதில், 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். சில கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், வசிப்பிடத்தை விட்டு வெளியேறி விட்டனர். கடந்த 10 ஆண்டுகளாகவே சூடானில் வன்முறை நிகழ்ந்து வருகிறது. பழங்குடியினரின் மோதல், வன்முறையை அதிகரிக்கச் செய்திருக்கிறது. துப்பாக்கி ஏந்திய போராட்டக்காரர்கள், சாலைகளில் தடையை ஏற்படுத்தியுள்ளனர். ஐ.நா. பார்வையாளர்களை அப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. இருப்பினும், கடந்த சில நாள்களாக வன்முறை கட்டுக்குள் இருக்கிறது. டார்பரில் செயல்படும் ஐ.நா- ஆப்பிரிக்க கூட்டமைப்பு உதவி மையம் சார்பில் 75 ஆயிரம் கிலோ எடையுள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உலக உணவுத் திட்டத்தின் வாகனங்கள் அப்பகுதிக்குச் செல்ல போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சூடான் வன்முறையால் 2003ஆம் ஆண்டில் இருந்து சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றார் மார்டின் ந

வியாழன், 17 ஜனவரி, 2013

கடவுளை சாந்தப்படுத்துவதாக கூறி 100 அடி எரிகல் பள்ளத்தில்மீட்பு!

அரிசோனாவில் கடவுளை சாந்தப்படுத்துவதாக கூறி, எரி கல்லால் உருவான 100 அடி பள்ளத்தில் குதித்த இந்தியரை, 8 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மீட்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூனியன் சிட்டியைச் சேர்ந்தவர் பர்மிர்ந்தர் சிங் (28). இவர் கடந்த 11ம் தேதி, திடீரென அரிசோனாவுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு எரி கல்லால் உருவான கருதப்படும் சுமார் 100 அடி ஆழ பள்ளம் ஒன்று உள்ளது. அன்று மாலை 4 மணி அளவில் பள்ளத்தின் மேற்பகுதியில் பர்மீந்தர் நின்று குதிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர் ஒருவர் பர்மீந்தரை அங்கிருந்து நகரும்படி எச்சரித்தார். ஆனால், அதைக் கேட்காமல் திடீரென அந்த பள்ளத்தில் பர்மீந்தர் குதித்தார். இதனையடுத்து அந்த ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மீட்பு படையினருடன் அங்கு விரைந்து வந்தனர். அப்போது பலத்த காற்றுடன் பனி கொட்டியது. எரிகல் பள்ளத்துக்குள் இறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. பேரிடர் மேலாண்மை, அவசரகால குழு உள்ளிட்ட 3 குழுக்களைச் சேர்ந்த 30 பேர் பர்மீந்தர் சிங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக அவர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் எரிகல் பள்ளத்தை ஒட்டிய பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து பல முறை குரல் கொடுத்தபோது, இரவு 8.22 மணி அளவில் பர்மீந்தர் சிங் உயிருடன் இருப்பது தெரியவந்தது. உறை பனியுடன் கூடிய சுழல் காற்றில், மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள், பர்மீர்ந்தர் சிங் சுமார் 100 அடி ஆழத்தில் விழுந்துள்ளார் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் சாப்பிடுவதற்காக உணவு, குடிநீர், சிறிய வாக்கிடாக்கி, குளிரை தாங்கிக் கொள்ளும் உடை, பிளாஷ் லைட் ஆகியவற்றை கயிற்றின் உதவியுடன் அவருக்கு அனுப்பினர். தொடர்ந்து 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர் வெளியே மீட்கப்பட்டார். ‘எதற்காக எரிகல் பள்ளத்தில் குதித்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, ‘கடவுளை சமாதானப்படுத்துவதற்காக எரிகல் பள்ளத்தில் குதித்தேன்' என்று பர்மீந்தர் சிங் கூறினார். இதைக் கேட்டு நொந்து போன மீட்பு படையினர், காயமுற்றிருந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பொலிகை பாடசாலைகாணவளர்ச்சியின் அழைப்பு

பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கான நிதி உதவியை இந்த பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் புலம் பெயர்ந்து வாழும் பொலிகை மக்கள் மற்றும் பழைய மாணவர்களிடம் வேண்டுகோளாக விடுத்திருந்தது. இதற்கமைய சுவிஸ் நாட்டில் இருந்து இயங்கும் பொலிகை உறவுகள் ஒன்றியம் சுவிஸ் நாட்டில் வசித்து வரும் பொலிகை மக்களின் பங்களிப்புடன் பாடசாலைகாண இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.சுவிஸ் நாட்டில் வாழும் எம் உறவு களை இந்த பொலிகை உறவுகள் ஒன்றியத்தினருக்கு உங்களின் ஆதரவையும் பங்களிப்பையும் கொடுத்துவழப்பீரகவும் உங்களுடன் இணைந்து நவற்கிரிஇணையங்களும் ஆதரவை தெரி விக்கின்றோம் வாழ்க வளர்க..,.,. நன்றி ,.,.-

புதன், 16 ஜனவரி, 2013

கடலின் மத்தியில் ஒரு அதிசய வீடு!

Tanah Lot எனப்படுவது இந்தோனேசியாவின் பாலி கடற்கரைப்பகுதியில் காணப்படும் மிகப்பெரிய பாறையாகும். இப்பாறையானது இயற்கையிலேயே அழகிய வீடுபோன்று தென்படுவதுடன் மேலும் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க வாசலாக தற்போது திகழ்கின்றது.[புகைப்படங்கள்,]

வெலிஓயா புதுக்காடு பாடசாலை

அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வெலிஓயா புதுக்காடு இலக்கம் இரண்டு பாடசாலையில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் இந்தப்பாடசாலையில் கல்விகற்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அட்டன் - வட்டவளை பிரதான பாதையில் செனன் தோட்டத்துக்கு அருகிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்தப் பாடசாலையில் தரம் ஐந்து வரை வகுப்புக்களை உள்ளதோடு 80 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். சீடா திட்டத்தின் மூலம் கட்டிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதும் உரிய பராமரிப்புக்கள் இடம் பெறாத காரணத்தினால் இந்தப்பாடசாலை நாளுக்கு நாள் பாழடைந்து வரும் நிலையை அடைந்துள்ளது. வகுப்பறை கட்டிடங்களிலுள்ள கதவுகள், சாளரங்கள், தரை என்பன சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ஆசிரியர் விடுதிகள் பாழடைந்துள்ளன. மலசலக்கூடங்களின் கதவுகள் அகற்றப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகள் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே இந்தப்பாடசாலையின் மாணவர்கள் கல்விக் கற்று வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இந்தப்பாடசாலையில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கி சென்ற போதும் இதுவரை எந்த உதவிகளும் கிடைக்கவில்லையென பெற்றோர் கூறுகின்றனர். இந்தப்பாடசாலையில் தற்போது கடமையாற்றும் அதிபர் வருகை தந்து குறுகிய காலமென்பதால் இந்தப்பாடசாலையைச் சிறந்த சுற்றாடல் உள்ள பாடசாலையாக மாற்றிக்காட்டப்போவதாக கருத்துத் தெரிவித்தார். இந்த நிலையில் தோட்டக்குடியிருப்புக்கு அருகிலுள்ள இந்தப்பாடசாலையை முன்னேற்றுவதற்கு பெற்றோரின் அக்கறையும் தேவையென சுட்டிக்காட்டப்படுகின்றது. இதே வேளை அட்டன் கல்வி வலய அதிகாரிகள் இந்தப்பாடசாலைக்கு விஜயம் செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

பாகிஸ்தான் பிரதமரை கைது செய்ய கோர்ட் உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர், ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள 2010-ம் ஆண்டு அவர் நீர் ஆதாரம் மற்றும் எரிசக்தி துறையின் மந்திரியாக பதவி வகித்தார் அப்போது தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்குவதற்கு 3.7 மில்லியன் டாலர்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்ப லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ராஜா பர்வேஸ் அஷ்ரப், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 15 பேரை கைது செய்யும்படி, தலைமை நீதிபதி இப்திகார் முஹம்மத் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்

ஆக்ரோஷமாக பதிலடி கொடுங்கள்: இந்திய தளபதி

காஷ்மீரில், பாகிஸ்தானிய இராணுவம் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறு இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை யுத்தமிட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் காஷ்மீர் பகுதியில் நடந்த மோதல்களில் இந்தியச் சிப்பாய்கள் இருவரும் பாகிஸ்தானியச் சிப்பாய்கள் இருவரும் கொல்லப்பட்டிருந்தனர். காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பதற்றங்களைத் தணிப்பதற்கும் பாகிஸ்தானிய இராணுவம் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறும் இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.

பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி பாலியல்!

தனிமையிலிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முகமூடியணிந்திருந்த நபரை பதுளைப் பொலிஸார்; நேற்று கைது செய்துள்ளனர். பதுளைப் பகுதியைச் சேர்ந்த உடுவரை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுவரை என்ற இடத்தின் வீடொன்றில் ஏனையவர்கள் மரண வீடொன்றிலிருந்தமையினால் 58 வயது நிரம்பிய இரு பிள்ளைகளுக்கு தாயாரான மேற்படி பெண் மாத்திரமே வீட்டிலிருந்துள்ளார். அவ்வேளை உறவினர் போன்று குரல் கொடுத்து, அந்நபர் கதவைத் தட்டிய போது கதவைத் திறக்க, கத்தியை காட்டி பயமுறுத்தி அப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தப்பிச் சென்றுள்ளார். காட்டப்பட்ட கத்தியை அப்பெண் பிடிக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக அப்பெண் காயத்திற்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். குறித்தப் பெண் செய்த முறைப்பாட்டினையடுத்து உடுவரையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தைத்திருநாளை ஆனையிறவில் கொண்டாடிய

தைத்திருநாளை கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகசூரிய ஆகியோர் நேற்று யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். யாழ். ஆனையிறவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். இதன்போது, கிளிநொச்சி சென். திரேசா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும், அம்பாறை மாவட்ட இசை கலைஞர்களின் ‘முகமூடி தயாரிப்பு’ எனும் தொனிப்பொருளிலான நாடகமும் இடம்பெற்றன. இதேவேளை, ஆனையிறவு இராணுவ முகாமிற்கு அருகாமையில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா மற்றும் இராணுவ தளபதிகள் என பலர் கலந்துகொண்டனர்

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

உங்கள் அணை வர்க்கும் எமது உறவுகள் இணையங்கள் சார்பாவும் நவற்கிரி இணையங்களின் இனிய தை பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் எமது உள்ளத்தை கவர்ந்த அன்பு இணைய வாசகர்களுக்கும் வேஸ்புக்மூலம் உள் இணைந்து எம் இணையத்தின் வளர்சிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் உரித்தாகுக,,,,,நன்றி

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பிரான்ஸ் நடத்திய தாக்குதல் தோல்வி: 17 பயங்கரவாதிகள்

பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த உளவாளியை மீட்பதற்காக சோமாலிய பயங்கரவாதிகளுடன் பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் பலன் தரவில்லை. இந்த மோதலின்போது, 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிணைக் கைதியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பிரான்ஸ் தரப்பில் அதன் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த அதிரடி தாக்குதலை பிரான்ஸ் ராணுவத்தின் டிஜிஎஸ்இ ரகசிய பாதுகாப்பு சேவைப் பிரிவு மேற்கொண்டது. இது குறித்து, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன்-வெஸ் லீ டிரியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் நாட்டின் உளவாளி டெனிஸ் அலெக்ஸ் கடந்த 2009ஆம் ஆண்டு சோமாலிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். மூன்றரை ஆண்டுகளாக அவரை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர். பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு வரும் அலெக்ûஸ மீட்பதற்காக, டிஜிஎஸ்இ ரகசிய படையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர் என்றார். எனினும், பிணைக் கைதி அலெக்ஸ் உயிரிழந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ஷெபாப் பயங்கரவாத அமைப்பு, அடுத்த 2 நாள்களில் அலெக்ஸின் தலைவிதி பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு தனது ராணுவ வீரர்கள் மீது எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பது தங்களது வீரர்களை பலிகொடுத்ததிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது என்று ஷெபாப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

கடவுள் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: நடிகர் அஜித்குமார்

ஆங்கிலேயரை விட இந்தியாவில் ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். நடிகர், நடிகைகளுக்கு சேவை வரிவிதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள், உள்ளிட்ட அனைத்து திரைப்பட சங்கத்தினரும் பங்கேற்றார்கள். ஆனால் அப்பொழுது விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இருந்ததால் அஜித் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சேவை வரிவிதிப்பு குறித்து நடிகர் அஜித் அளித்துள்ள பேட்டியில், இரயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே போதும். நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, டாப்-10 பணக்கார நாடுகளில் ஒன்றாகவோ மாறும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர். இந்த உண்மையை நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள். ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர். கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும், என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானிடையே கடும் சண்டை:

எல்லையில் தொடர் பதற்றம் இந்தியா, பாகிஸ்தான் இராணுவ வீரர்களிடையே நேற்றிரவு கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சில ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்களைத் தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். இந்திய வீரர்களை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீண்ட நேரம் நீடித்தது. இரவு 9.45 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டையால் இப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. ஊடுருவல்காரர்களை நோக்கி இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியவுடன் அவர்கள் எல்லைக் கோட்டுப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதாக கர்னல் பால்டா தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது. எல்லையில் இரண்டு வீரர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு இந்திய இராணுவம் கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, எல்லையில் படைகளைகுவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவும் இத்தகைய தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது{புகைப்படங்கள்,}

சனி, 12 ஜனவரி, 2013

மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுடன் உயிர் வாழும் அதிசய பிரிட்டன் மனிதர்.

பிரிட்டனில் உள்ள ஒருவர், தன்னுடைய உடலில் 15 இடங்களில் உடைந்த எலும்புகளுக்காக 34 இடங்களில் அறுவை சிகிச்சை செய்ததோடு, மாரடைப்பு நோயையும் சந்தித்து, சிறுநீரக கோளாருடன் அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறார். அவரது உடலில் செயல்பாடுகளைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். Terry White என்ற 67 வயது பிரிட்டன் மனிதர், தன்னுடைய இடுப்பில் ஆறு இடங்களில் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடலின் பல்வேறு இடங்களில் உடைந்துள்ள 15 எலும்புகளை ஒன்று சேர்ப்பதற்காக 34 முறை அறுவைசிகிச்சை செய்துள்ளார். இதுமட்டும் போதாது என்று அவருக்கு அடிக்கடி மாரடைப்பும் வருமாம். இதுவும் போதாதென்று சிறுநீரகமும் வேலை செய்யாமல் பழுதடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். இவருக்கு செய்யப்பட்ட 34 அறுவை சிகிச்சைகளில் 21 அறுவை சிகிச்சை மிகவும் கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று மேஜர் அறுவை சிகிச்சைகள் 10 நாட்கள் இடைவெளியில் மட்டுமே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் அனைத்து வெற்றி பெற்றதற்கு அவருடைய தன்னம்பிக்கையே பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

மாணவர்களின் வீட்டு முகவரிகள் பெறப்பட்டு, அவர்களது

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். தங்களது வீட்டு முகவரிகள் இந்த அநாமதேய நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்தும் இவ்வாறு கிடைத்துள்ள முகவரியால் எதிர்காலத்திலும் தாங்கள் அச்சுறுத்தப்படலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். மாணவர்களின் முகவரியினை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்தக் குழு செயற்ப்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது அரசியல் செல்வாக்குடைய குழு ஒன்றினாலே இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என மாணவ்ர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது வீட்டு முகவரிகள் எவ்வாறு கிடைத்தன? அவ்வாறு அவர்களுக்கு வழங்கியது யார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளை குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் சார்ந்த விடயங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 11 ஜனவரி, 2013

மனைவியின் தொலைபேசி அழைப்பை கேட்டு பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்ததால்

இத்தாலி செல்வதற்காக, விமானத்தில் அமர்ந்திருந்த நபர், மனைவியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால், பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தார். பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது குஜராத் மாவட்டம். இந்த பகுதியை சேர்ந்தவர் பைசல் அலி; வேலை நிமித்தமாக, இத்தாலிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக, நேற்று முன்தினம், லாகூர் விமான நிலையத்திற்கு சென்று, விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் புறப்படுவதற்கு முன், இவர் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கணவன் வெளிநாடு செல்வதை விரும்பாத மனைவி, தொலைபேசியிலேயே கதறி அழுதார். இதனால், மனம் உருகிய பைசல் அலி, விமானத்திலேயே, தன் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்தார். இது குறித்து, விமான ஊழியர்கள் விசாரித்த போது, "நான் வெளிநாடு செல்வதை மனைவி விரும்பவில்லை. அவள் அழுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, இத்தாலி செல்லும் முடிவை கைவிட்டு, பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தேன்' என்றார். விமான நிலையத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேறிய, பைசல் அலியை அனுமதிக்க, விமான நிலைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதன் பின், அவர், தான் கிழித்தெறிந்த பாஸ்போர்ட்டை எடுத்து வந்து, அதிகாரிகளிடம் காட்டினார். இதையடுத்து, அவரை, அதிகாரிகள், வெளியே செல்ல அனுமதித்தனர்

வேகமாக பரவி வரும் காட்டுத் தீ: வீடுகள் எரிந்து நாசம்

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளன. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 150க்கும் அதிகமான ஹெக்டேர் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது.
இதனால் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதுடன், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில், ஹெலிகாப்டர்கள் மற்றும் 20 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காட்டுத் தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 185 பேர் உயிரிழந்தனர், அதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை மிக மோசமான இயற்கை சீற்றமாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்: 115 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று தொடர்ச்சியாக நடந்து குண்டுவெடிப்பு சம்பவங்களில் 115 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குவெட்டாவை தலைநகராகக் கொண்ட தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தலைவிரித்தாடி வருகின்றன.
இங்கு தான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால், தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பில்லியர்ஸ் அரங்கொன்றில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 85 பேர் வரை கொல்லப்பட்டனர், இதனால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன.
குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

வியாழன், 10 ஜனவரி, 2013

பூமகள் சனசமூகநிலையம் இணையத்துக்கு அனுப்பிய பதில்

சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினருக்கு உங்கள் இணையத்தில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினருக்கு எழுதிய செய்தி படித்தோம் அதற்கு பதிலலளிக்கும் முகமாக நீங்கள் எமது கிராமத்தில் மேற்கொண்டுவரும் நற்பணிகளை அறிவோம் ஆதலால் எமது பூமகள் சனசமூகநிலையம் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது கிராமமுன்னேறத்துக்குஆகவும் கிராம மக்களின் முன்னேறத்துக்குஆகவும் நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துடன்இணைந்து இனி வரும் காலங்களை வளமானதாக்க முடிவு செய்துள்ளோம் ஒற்றுமையே உயர்வு தரும் பின்குறிப்பு :நன்றி உங்களின் பதில் கடிதத்துக்கு காலமறிந்து நீங்கள் எடுத்த முடிவால் இந்த இணையமும் சிறுப்பிட்டி மேற்கு (தாய்) ஒன்றியமும் பெரு மகிழ்வு கொள்கின்றது.இதற்க்கான வெளிப்படையான எமது பதில் மிக மிக விரைவில் இணையத்தில் பதிவிடப்படும். பதிவிட்ட கணமே செயல் பாட்டிலும் இறங்கும். நன்றி செயல்பாட்டுடன் கூடிய ஒற்றுமையே நீண்ட கால பலனை நம் உறவுகளுக்கும் எமக்கும் நிறைவைதரும். சிறுப்பிட்டி மேற்கு லண்டன் கிளை ஒன்றியத்தினரே உங்களுக்கான காலம் இன்னும் இரண்டு நாட்க்களே சிந்தித்து கிராம நலன் கருதி உங்களின் முடிவை இணைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்

38 மாணவர்கள் பயணித்த பள்ளிப் பேருந்தில் தீ

உச்சிப்பனிச் சறுக்கு விளையாட பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்குக் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்து யூரி மாநிலத்தில் திடீரென தீப்பிடித்தது. உடனே ஓட்டுநர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி 38 மாணவர்களையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டார். உடன் சென்ற 7 பெரியவர்களும் எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பினர். கோத்தார்டு குகைப்பாதைக்குள் நுழையும் இடத்தில் கடந்த 8ம் திகதி அதிகாலை 5 மணியளவில் A2 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக யூரி மாநிலப் பொலிசார் தெரிவித்தனர். கோட்ஹார்டு தீயணைப்புப் படை வீரர் தீயை அணைத்தனர். 12000 ஃபிராங்க் மதிப்பிலான பொருட்சேதம் இத் தீவிபத்தில் ஏற்பட்டுள்ளது. பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 20 அன்று கோட்ஹார்டு குகைப்பாதையில் காரும் சரக்குப் பெட்டக வண்டியும் மோதியது குறிப்பிடத்தக்கது

அதிர்ச்சியில் உறைந்து போனது மூதூர் பிரதேசம்!



மகளின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தாய் நேற்று அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்தத் தாயுடன் இணைந்து மூதூரும் சோகத்தில் உறைந்துபோனது.

மூதூர் ரிஸானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள்; நம்ப மறுத்தாள். ரிஸானாவின் தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர்.
ரிஸானாவின் தாய், தந்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்கள் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத இந்தத் துயரச் சம்பவம் நேற்று இலங்கைக்கு அறியக் கிடைத்தபோது நாடே சோகத்தில் மூழ்கியது.
ரிஸானாவின் சொந்த ஊரான மூதூர் பிரதேசம் கதறியழுதது. உறைந்து போய்நின்ற ரிஸானாவின் தாய் துடியாய் துடித்தாள். தன் கையால் மார்பில் அடித்துக் கதறினாள்.
15 வருடங்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தனது அன்பு மகளின் மரணம் இவ்வாறு அமைந்துவிட்டதே என எண்ணி விம்மினாள்.
ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுவிட்டதை அறிந்த மூதூர் தொகுதி மக்களும், ஏனைய பிரதேச மக்களும் ரிஸானாவின் வீட்டை நோக்கி அலையாகத் திரண்டனர்.
பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனாஸாத் தொழுகைகளும் நடத்தப்பட்டன. ரிஸானா விரைவில் விடுதலையாவாள் என்று போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை ரிஸானாவின் இல்லத்தில் திரண்ட மக்கள் சாபம் உண்டாகட்டும் எனக் கூறி திட்டித் தீர்த்தனர்

வராத மாணவியை பள்ளியிலிருந்து நீக்கலாம். அமெரிக்க கோர்ட்

           
 

அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்' நடைமுறைக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், அடையாள அட்டையில், "மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப முறைப்படி, மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

வகுப்புகள் துவங்குவதற்கு முன்னும், மணி அடித்த பிறகும், வராத மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அவர்களது வருகை பதிவேட்டில், "பிரசன்ட்' அல்லது, "ஆப்சென்ட்' போடப்படுகிறது. கடந்த, 2005ம் ஆண்டே, கலிபோர்னியா மற்றும் ஹூஸ்டன் மாகாணங்களில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில், இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
மாணவர்கள் கழிப்பறையில் இருந்தாலும், அவர்கள் சாப்பிடும் மதிய உணவில், என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன என்பதெல்லாம், "மைக்ரோ சிப்' மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. "இந்த நடைமுறையினால், எங்கள் தனிமை பாதிக்கப்படுகிறது' என, ஆன்ட்ரியா என்ற மாணவி, கோர்ட்டில் மனு செய்துள்ளார். "பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை, கிறிஸ்துவ மதப்படி தவறானது' என, ஆன்ட்ரியாவின் பெற்றோரும், கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், "அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, "மைக்ரோ சிப்' பள்ளி வளாகத்துக்குள் தான் வேலை செய்யும். ஆன்ட்ரியா சொல்வது போல, கழிப்பறையில் கூட, இந்த, "மைக்ரோ சிப்' சிஸ்டம் வேலை செய்வது சங்கடமாக இருந்தால், அடையாள அட்டையை கழற்றி வைத்துச் செல்லலாம்' என்றனர்.
இந்த மனுவை விசாரித்த டெக்சாஸ் கோர்ட் நீதிபதி ஆர்லேண்டோ கார்சியா, தீர்ப்பில் கூறுகையில், ""பள்ளியில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, "மைக்ரோசிப்' அடையாள அட்டையை அனைத்து மாணவர்களும் அணிந்து வரும் போது, ஆன்ட்ரியா மட்டும் எதிர்ப்பது ஏற்க முடியாது. இந்த நடைமுறையை ஆன்ட்ரியா பின்பற்றாவிட்டால், அவளை, பள்ளியிலிருந்து, நீக்க நிர்வாகத்துக்கு உரிமை உண்டு,'' என்றார்

புதன், 9 ஜனவரி, 2013

பூமியைப் போலவே 1700 கோடி கிரகங்கள்! {காணொளி}

அதிர்ச்சித் தகவல் பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்கள் கூறுகின்றனர். நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது. அப்படியான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர். ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, திரவ வடிவில் நீர் வேண்டும். ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுணர்கள் நிச்சயம் கண்டறிவார்கள் என்று பிபிசியிக் அறிவியில் துறை செய்தியாளர் கூறுகிறார் [காணொளி]

தாதியொருவரை பாலியலுக்கு அழைத்த சிங்கள மருத்துவர் கைது!

சிங்கப்பூர் ஷெங்கி பொது மருத்துவமனையொன்றில் தாதியொருவரை பல தடவைகள் பாலியல் வன்முறையாக தீண்ட முட்பட்ட இலங்கை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் அவர் குறித்த தாதியை பாலியல் ரீதியாக அணுக முட்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சேனக லியனகே எனப்படும் 37 வயதான மருத்துவர் 26 வயதான சிங்கப்பூர் தாதியை நேற்று முன்தினமும் இவ்வாறு பலவந்தமாக அணுகியதாக தாதி முறையிட்டதை அடுத்து மருத்துவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் மருத்துவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை திறனுடன் மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சின் செயலாளரை தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், அண்மையில், இடம்பெற்ற சில சம்பவங்களின் போது, சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவு செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்படவுள்ளது. விசாரணை என்ற பேரில் மருத்துவர்களுக்கு எதிராக பழிவாங்கல் இடம்பெற்றுள்ளன. இதனால் தற்போதுள்ள விசாரணைக் குழுவை களைக்க வேண்டும். எந்தவொரு குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளையும் ஒருவருடத்திற்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.