Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 5 ஜனவரி, 2013

ஆடுகளத்தை விட்டு வெளியெறும் திட்டமில்லை: சிங்கப்பூரில் பெட்ரர் பேட்டி

ஸ்விஸ் டென்னிஸ் வீரர் ஃபெட்ரர் ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகளில் விளையாடப்போகும் வழியில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இன்னும் பல வெற்றிக் கோப்பைகளைப் பெற ஆவலாக இருக்கிறேன். நீண்டகாலம் விளையாட வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். இப்போது என்னை எதிர்த் விளையாடும் இளைஞர்களைக் கண்டு நான் வியக்கிறேன் என்றார்.

17 கிராண்ட் ஸ்லாம் போட்களில் வெற்றிவாகை சூடி உலகளவில் டென்னிஸ் விளையாட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரோஜர் ஃபெடரர் "என்னால் முடிந்தவரை அதிககாலம் ஆடுகளத்தில் தாக்குப் பிடிப்பதையே விரும்புகிறேன்".

நான் அதிக வருடங்கள் டென்னிஸ் விளையாடக் காரணமே நான் அந்த விளையாட்டை விரும்புவதுதான். இத்தனை ஆண்டுகாலம் இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் மங்கி மறைந்துவிடுவேன் என்று கூறுகிறார்கள். டென்னிஸ் உலகை விட்டு நான் மறைந்து போக எனக்கு 80,90 வயது ஆகிவிடவில்லை.

லண்டனில் 2012ல் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் 2008ல் பீஜிங்கில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் தங்கப்பதக்கமும் பெற்ற ஃபெடரர், அடுத்துவருடம் 2016ல் ரியொவில் நடக்கும் போட்டிகளில் விளையாடுவார். அப்போது அவருக்கு 35 வயதாகிவிடும்.

இந்த வயதில் டென்னிஸ் வீரர்கள் ஓய்வை விரும்பி ஆடுகளத்தை விட்டு வெளியேறுவதுதான் வழக்கம், ஆனால் ஃபெடரர் புதிது புதிதாக வரும் இளைஞர்களுடன் களத்தில் மோதவே ஆசைப்படுகிறார்.

எனக்கு வயதாகி விட்டதாக நான் கருதவில்லை. இளமையாகவே உணர்கிறேன். டென்னிஸ் கடைசிவரை என்கூட வராது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் சிறப்பான முறையில் டென்னிஸ் ஆடுவதையே விரும்புகிறேன் என்றார்.

கொலைவெறியனே பிரிட்டிஷ்- ஈராக்கியர் கொலைக்கும்?

 
சுவிஸில் சில தினங்களுக்கு முன்பு தெருவில் சென்ற 3 பெண்களை கொலை செய்தவனுக்கு மற்றொருமொரு கொலையில் தொடர்பிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். பிரெஞ்சு காவல் துறை, ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் சுற்றுலாவுக்கு வந்திருந்த பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற ஈராக் பொறியாளரை கொலை செய்தவனும் சுவிஸில் சில தினங்களுக்கு முன்பு தெருவில் சென்ற 3 பெண்களை கொலை செய்தவனுக்கு மற்றொருமொரு கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மாநிலத்திற்கு அருகில் உள்ள பிரெஞ்சுப் பகுதியான ஹாட்- சேவோய் கிராமத்தின் பொலிசார், அல்- ஹில்லி குடும்பத்தாரின் கொலை விசாரணைக்கு தங்களுடன் ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொண்டனர்.
கொலை வெறியனிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மிகப் பழமையானதாகும். குறிப்பாக அது வரலாற்ற பழமை வாய்ந்த இராணுவ துப்பாக்கி என கூறப்படுகிறது.
இது தவிர இன்னொரு துப்பாக்கியும் இவனிடம் இருந்ததாகவும் இவை எப்படி இவனுக்கு கிடைத்தது என பொலிசார் விசாரிக்கின்றனர்.
2005ம் ஆண்டில் இவன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே இவனிடமிருந்த துப்பாக்கி பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது

ஒரு தாயிடம் குழந்தை பால் குடிக்கும்போது??




எந்தக்தகப்பனும் இப்படி ஒரு கொலையைச் செய்யமாட்டான்!
இரத்மலானையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், தான் காதலிக்கும் பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவே இந்த படுகொலையை செய்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர் தகவல் தொழில்நுட்பப் பாடநெறியொன்றைக் கற்கிறார், இவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது கடந்த ஒரு மாத காலமாகக் காதல்வயப்பட்டிருந்தார், [புகைப்படங்கள்]




அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் இக்கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டுக் காதலியைத் திருமணம் செய்திருக்கலாமே என்று கேட்டதற்கு, மனைவியை விவாகரத்துச் செய்தால் தனது நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால் விவாகரத்தை நாடவில்லை என்று சந்தேக நபர் கூறினார்” எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக உறவினர்களுக்குக் காட்டிக் கொண்டு மிகவும் சூட்சுமமான முறையில் இக்கொலைகளை சந்தேகநபர் செய்துள்ளார் எனப் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் தனது சாட்சியத்தில் தெரிவித்தவை என்று பொலிஸார் கூறியதாவது:

மனைவி நித்திரையிலிருந்த அறைக்குச் சென்று அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் சந்தேகநபர். அப்போது மனைவி கத்தியுள்ளார். இந்தச் சத்தத்தைக் கேட்ட மூன்று வயது மகன் பாட்டி.. பாட்டி… என்று சத்தமிட்டவாறு அறையிலிருந்து ஓட முயற்சியுத்துள்ளார்.

அவரையும் பிடித்துக் கட்டிலில் போட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் சந்தேகநபர்.

கட்டிலில் நித்திரையிலிருந்த ஒரு மாத வயதுப் பாலகனை மனைவியின் மார்பு அருகே பால் குடிப்பது போல் படுக்க வைத்துள்ளார். ஒரு தாயிடம் குழந்தை பால் குடிக்கும்போது எந்தக் தகப்பனும் இப்படி ஒரு கொலையைச் செய்யமாட்டான் என்று விசாரணையைத் திசை திருப்புவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார்.



 
குழந்தையை மனைவியின் மார்போடு சேர்க்கும்போதே அவர் இறந்திருந்தார். கட்டிலைச் சுற்றி நுளம்பு வலையை விரித்து அதற்குத் தீ வைத்துள்ளார், அதற்குமுன் மெழுகுதிரி ஒன்றையும் தீப்பெட்டியையும் கட்டிலிற்கு அருகில் வைத்துள்ளார்.

மெழுகுதிரியைப் பற்றவைக்க முயற்சிக்கையில் தீப்பற்றிக் கொண்டதாக மற்றவர்களை நம்பவைக்கவே இவ்வாறு செய்துள்ளார் என்றனர்.

இக்கொலையில் சந்தேகநபரின் தாயோ வேலைக்காரியோ சம்பந்தப்படவில்லை எனப் பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொலையான பெண்ணும் சந்தேகநபரும் பல வருடங்களாகக் காதலித்தபின் 2003ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார்கள்.

இக்கொலை சம்பந்தமாக கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.

உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபட முடியும்



உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபட முடியும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. உடற்பயிற்சி யால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்க மருத்துவ நிபுணர் கிறிஸ்டின் கார்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு ரிப்போர்ட் டில் கூறியிருப்பதாவது:

உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு ஆகியவை ஆரோக்கியத்துக்கு அடித்தளம் அமைக்கும். நோய் தாக்குதல் உள்ளவர்கள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே இத்தகைய பழக்கங்களை மேற்கொள்வது நோயின் தீவிரத்தை குறைக்கும். ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் உரிய உடற்பயிற்சிகளை ஒழுங்காக செய்வதால் ஆஸ்துமா தீவிரத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.

பொதுவாக ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் உடற்பயிற்சி செய்ய தயங்குவார்கள். மூச்சு விடுவதில் சிரமம் உள்ள இவர்கள் உடற்பயிற்சி செய்தால் மூச்சு திணறல் அதிகரிக்கும் என்று நினைப்பதே இதற்கு காரணம்.

ஆனால், அது உண்மையில்லை. டாக்டர்களின் ஆலோசனைப்படி, சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்படுத்தாத உடற்பயிற்சிகளை அவர்கள் செய்யலாம்.
இது ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருந்தாலும் போகப்போக பழகி விடும். அப்போது ஆஸ்துமாவின் தீவிரம் குறையத் தொடங்குவதை அவர்கள் உணரலாம். உடலுக்கு போதிய பயிற்சி அளிக்காவிட்டால், உடல் பருமன் போன்ற பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்

கொள்ளைச் சம்பவங்களில் சுமார் 20 லட்சத்துக்கு மேல்?



யாழ். குடாநாட்டில் கடந்தவாரம் இடம்பெற்ற திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் சுமார் 20 லட்சம் ரூபா, நகைகள் உட்பட 21 லட்சத்து 11 ஆயிரத்து 810 ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளன என்று யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.


நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்தவாரம் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்களில் திருட்டு, கொள்ளை என 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 4 முறைப்பாடுகள் 19 லட்சத்து 65ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் தொடர்பானவை.

அதிக அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன. வீடு உடைத்து இந்தத் திருட்டுகள் இடம்பெற்றுள்ளன.

யாழ். கஸ்தூரியார் வீதியில் கடந்த 20ஆம் திகதி வீடு உடைத்து 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் உடைமைகள் திருடப்பட்டுள்ளன. காரைநகர் மடத்தடி வீதியில் கடந்த 20ஆம் திகதி 2 லட்சத்து 25ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன.

யாழ். முனீஸ்வரன் வீதியில் கடந்த திங்கட்கிழமை வீதியால் சென்றுகொண்டிருந்த பெண் அணிந்திருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் தெஹியந்தக்கண்டியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டது. அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

யாழ். நாவலர் வீதியில் வீடு உடைத்து 24ஆயிரத்து 130ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளன. சங்கானையில் கடந்த 27ஆம் திகதி 8ஆயிரம் ரூபா பெறுமதியான சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
கரம்பன் சண்முகநாதன் பாடசாலையில் இருந்து டி.வி.டி. பிளேயர், வயர்கள் உட்பட 53ஆயிரத்து 680 ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளன. அளவெட்டி மேற்கில் கடந்த 28ஆம் திகதி தேவாலாயம் ஒன்றிலிருந்து 28ஆயிரம் ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளன.

இளவாலை பண்டத்தரிப்பில் கடந்த திங்கட்கிழமை 23ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சி திருடப்பட்டுள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்