siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 7 ஜனவரி, 2013

ரசாயன ஆலையின் கழிவுகள் கலந்ததால், குடிநீர் சப்ளை உடனே?

   

சீனாவில் உள்ள ஒரு ஆற்றில், ஆலையில் இருந்த கசிந்த ரசாயனம் கலந்ததால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. சீனாவின், ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு ஆலையில், குழாய் உடைந்து, "அனிலைன்' என்ற ரசாயனம், சுவாசாங் என்ற நதியில் கலந்தது.

இந்த நதியின் தண்ணீர், சாங்கி நதியில் இணைந்தது. ஹீபி மாகாணத்தில் உள்ள ஹான்டன் நகருக்கு, சாங்கி நதி தண்ணீர் தான், குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் ரசாயனம் கலந்த செய்தியை கேள்விப்பட்ட, ஹான்டன் நகர நிர்வாகம், உடனடியாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தியது.
பூச்சி கொல்லி மருந்து மற்றும் வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படும், "அனிலைன்' ரசாயனம், விஷ தன்மை வாய்ந்ததால், ஆற்று தண்ணீர், அணைக்கு சென்று சேராதவாறு, திசை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மனித உரிமை தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டும்



சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் இன்னும் எட்டவில்லை என்று அந்த நாடு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாருடனும் பேசுவதற்கும் இன்னும் காலம் வரவில்லை என்றும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளாதாக இலங்கையிலுள்ள பிரித்தானியா தூதுவர் ஜோன் ரென்கின் கூறியுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

மனித உரிமை தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு சிறிலங்கா அரசு கௌரவம் அளிக்க வேண்டுமென தனது நாடு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட? !

  


மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மடுக்கரை பகுதி மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.


வெள்ளப் பெருக்கின் காரணமாக மடுக்கரை கிராமம் கடுமையாக பாதிப்படைந்திருந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண குடும்பங்கள் இடம் பெயர்ந்து மடுக்கரை ம.வி பாடசாலையில் தங்கி இருந்தனர்.

மடுக்கரை, பள்ளிமோட்டை, 75 வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மடுக்கரை ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்களில் அதிகளவானவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கும், உறவினர்களுடைய வீடுகளுக்கும் திரும்பிச் சென்றுள்ளனர்.{புகைப்படங்கள்}


 
 
எனினும் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வவரை தமது வீடுகள் தற்போது வரை வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகவும், தாம் தொடர்ந்தும் குறித்த பாடசாலையில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.


இந்த நிலையில் குறித்த பாடசாலையில் உள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தார். இதன் போது மடுக்கரை பாடசாலையில் தங்கியுள்ள குறித்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தாங்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள போது அதிகாரிகள் எம்மை உடன் பாடாசாலையை விட்டு வெளியேருமாறு பணித்துள்ளனர்.






தற்போது இங்கு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளோம். எங்களில் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை தொடர்ந்தும் சில தினங்களுக்கு பாடசாலையிலே தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இப்பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.