Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 8 ஜனவரி, 2013

துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல்!

அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் எச்எம்ஏஎஸ் அன்சாக், நேற்று நல்லிணக்க அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்ட ஜோன் ஸ்ராவிரிடிஸ், மேற்கு கடற் பிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரால் ரோஹான் அமரசிங்கவை மேற்கு கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இருவருக்குமிடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்த விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது [புகைப்படங்கள்]
எச்எம்ஏஎஸ் அன்சாக் ஒரு போர்க்கப்பலாகும். இது கடற்படை ஹெலிகொப்டரை ஏற்றிச் செல்லக்கூடியது. 118 மீற்றர் நீளமுடைய இக் கப்பலில் 29 அதிகாரிகளும் 163 படையினரும் வருகை தந்துள்ளனர். எதிர்வரும் 9ம் திகதி வரை இது இலங்கையில் தரித்திருக்கும். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல விசேட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர் என இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோன்று நேற்று முன் தினம் இரு ஜப்பானிய கப்பல்களும் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது

18 மில்லியன் தரம் குறைந்த போலி காண்டம்கள். சுகாதாரத்துறை??

இங்கிலாந்து முழுவதும் சுமார் 18 மில்லியன் போலி காண்டம்கள் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தேவையில்லாத கர்ப்பங்களும், பால்வினை நோய் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இங்கிலந்து அரசின் சுகாதாரத்துறை அதிகாரி நேற்று விடுத்த ஒரு எச்சரிக்கை அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் தரம் குறைவாக உருவாக்கப்பட்ட போலி காண்டம்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதை உபயோகிப்பவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், மேலும் தேவையில்லாத கர்ப்பங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற போலி காண்டம்களை கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்து, காண்டம் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களில்தான், இவ்வகையான போலி காண்டம்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இங்கிலாந்து குடும்ப கட்டுப்பாடு அலுவலகம் தெரிவித்துள்ளது. Durex போன்ற தரமான நிறுவனத்தின் காண்டம்களை மட்டுமே உபயோகிக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள குடும்ப கட்டுப்பாடு அலுவலகம், போலி காண்டம்களை இனம் கண்டு, தவிர்க்குமாறு அறிவித்துள்ளது. மேலும் காண்டம் இறக்குமதி குறித்து புதிய வகையான சட்டதிருத்தம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது

பாணிபூரி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? ஜாக்கிரதை!

  

இந்திய மாநிலமான மகாராஷ்டிரத்தில் பாணிபூரி விற்கும் நபர் தான் பயன்படுத்தும் பாத்திரத்தில் சிறுநீர் பிடிப்பதையும், பின்பு