Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 9 ஜனவரி, 2013

பூமியைப் போலவே 1700 கோடி கிரகங்கள்! {காணொளி}

அதிர்ச்சித் தகவல் பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்கள் கூறுகின்றனர். நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது. அப்படியான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர். ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, திரவ வடிவில் நீர் வேண்டும். ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுணர்கள் நிச்சயம் கண்டறிவார்கள் என்று பிபிசியிக் அறிவியில் துறை செய்தியாளர் கூறுகிறார் [காணொளி]

தாதியொருவரை பாலியலுக்கு அழைத்த சிங்கள மருத்துவர் கைது!

சிங்கப்பூர் ஷெங்கி பொது மருத்துவமனையொன்றில் தாதியொருவரை பல தடவைகள் பாலியல் வன்முறையாக தீண்ட முட்பட்ட இலங்கை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் அவர் குறித்த தாதியை பாலியல் ரீதியாக அணுக முட்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சேனக லியனகே எனப்படும் 37 வயதான மருத்துவர் 26 வயதான சிங்கப்பூர் தாதியை நேற்று முன்தினமும் இவ்வாறு பலவந்தமாக அணுகியதாக தாதி முறையிட்டதை அடுத்து மருத்துவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் மருத்துவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை திறனுடன் மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சின் செயலாளரை தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், அண்மையில், இடம்பெற்ற சில சம்பவங்களின் போது, சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவு செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்படவுள்ளது. விசாரணை என்ற பேரில் மருத்துவர்களுக்கு எதிராக பழிவாங்கல் இடம்பெற்றுள்ளன. இதனால் தற்போதுள்ள விசாரணைக் குழுவை களைக்க வேண்டும். எந்தவொரு குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளையும் ஒருவருடத்திற்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.