siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பிரான்ஸ் நடத்திய தாக்குதல் தோல்வி: 17 பயங்கரவாதிகள்

பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த உளவாளியை மீட்பதற்காக சோமாலிய பயங்கரவாதிகளுடன் பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் பலன் தரவில்லை. இந்த மோதலின்போது, 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிணைக் கைதியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பிரான்ஸ் தரப்பில் அதன் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த அதிரடி தாக்குதலை பிரான்ஸ் ராணுவத்தின் டிஜிஎஸ்இ ரகசிய பாதுகாப்பு சேவைப் பிரிவு மேற்கொண்டது. இது குறித்து, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன்-வெஸ் லீ டிரியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் நாட்டின் உளவாளி டெனிஸ் அலெக்ஸ் கடந்த 2009ஆம் ஆண்டு சோமாலிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். மூன்றரை ஆண்டுகளாக அவரை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர். பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு வரும் அலெக்ûஸ மீட்பதற்காக, டிஜிஎஸ்இ ரகசிய படையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர் என்றார். எனினும், பிணைக் கைதி அலெக்ஸ் உயிரிழந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ஷெபாப் பயங்கரவாத அமைப்பு, அடுத்த 2 நாள்களில் அலெக்ஸின் தலைவிதி பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு தனது ராணுவ வீரர்கள் மீது எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பது தங்களது வீரர்களை பலிகொடுத்ததிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது என்று ஷெபாப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

கடவுள் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: நடிகர் அஜித்குமார்

ஆங்கிலேயரை விட இந்தியாவில் ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். நடிகர், நடிகைகளுக்கு சேவை வரிவிதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள், உள்ளிட்ட அனைத்து திரைப்பட சங்கத்தினரும் பங்கேற்றார்கள். ஆனால் அப்பொழுது விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இருந்ததால் அஜித் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சேவை வரிவிதிப்பு குறித்து நடிகர் அஜித் அளித்துள்ள பேட்டியில், இரயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே போதும். நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, டாப்-10 பணக்கார நாடுகளில் ஒன்றாகவோ மாறும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர். இந்த உண்மையை நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள். ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர். கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும், என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானிடையே கடும் சண்டை:

எல்லையில் தொடர் பதற்றம் இந்தியா, பாகிஸ்தான் இராணுவ வீரர்களிடையே நேற்றிரவு கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சில ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்களைத் தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். இந்திய வீரர்களை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீண்ட நேரம் நீடித்தது. இரவு 9.45 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டையால் இப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. ஊடுருவல்காரர்களை நோக்கி இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியவுடன் அவர்கள் எல்லைக் கோட்டுப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதாக கர்னல் பால்டா தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது. எல்லையில் இரண்டு வீரர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு இந்திய இராணுவம் கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, எல்லையில் படைகளைகுவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவும் இத்தகைய தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது{புகைப்படங்கள்,}