Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

திரு மண நாள் நல் வாழ்த்து லோவி றயி

இன்று 19.01.2013.திருமண நாள் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நன் நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றானர் .இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவர்களை ஸ்ரீ நவற்கிரிமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.{காணொளி}

உடனடியாக இடம்மாற்றம் செய்யும் பணிகள்!

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்குச் சார்பாகச் செயற்பட்ட நீதிதுறையைச் சார்ந்தோர் மற்றும் உயர்நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இந்த இடமாற்றம் விரைவில் இடம்பெறவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் முதற்கட்டமாக முன்னாள் பிரதம நீதியரசருக்கு நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக இடம்மாற்றம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். சிராணி பண்டாரநாயக்கா பிரதம நீதியரசாகவிருந்த இறுதிக் காலத்தில் அவரால் இடமாற்றம் செய்யப்பட்ட 21 நீதிபதிகளின் இடமாற்ற உத்தரவினை மொஹான் பீரிஸ் புதிய பிரதம நீதியரசாகப் பதவியேற்றவுடன் ரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இணையத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி

இலங்கை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் இணையத்தளத்தின் மீது 'கேம் ஓவர்' தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை. இலங்கையின் பத்திரிகை ஒன்று அவருடன் இந்த விடயம் தொடர்பில் கேட்டபோது, இல்லை, அவ்வாறு இருந்தால் தாம் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த இணையத்தளம் கடந்த 17ம் திகதியில் இயங்கமாலுள்ளது. எனினும் இலங்கை கணணி அவசர மாற்றுநடவடிக்கை குழு, தமக்கு இது ஊடுருவல் குறித்த முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்துள்ளது. ஊடகங்களின் மூலமே தாம் இது தொடர்பான செய்தியை அறிந்துகொண்டதாக அந்தக்குழு குறிப்பிட்டுள்ளது