தாய்லாந்தைச் சேர்ந்த 43 வயதுப் பெண் இளம்பெண்களைக் கடத்தி சுவிட்சர்லாந்தில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதிபடுத்தபட்டதை தொடர்ந்து பெர்ன் நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்த பெண் 50 இளம்பெண்களை வற்புறுத்தி இத்தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
மேலும் துர்காஉ(Thurgau) என்ற மாநிலத்தில் மூல்ஹீம்(Müllheim) என்ற இடத்தில் தனியாக ஒரு விடுதியையும் நடத்தி வந்துள்ளார்.
இதற்காக இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.
விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பெண்களிடம் தனக்கு அறுபதினாயிரம் ஃபிராங்க் சம்பாதித்துத் தர வேண்டும் என்று இப்பெண் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்து இந்த பெண் கூறுகையில், தன் மீது எந்தத் தவறும் இல்லை, தன்னை ஒரு பகடைக்காயாகத் தான் பயன்படுத்தினார்கள் என்று கூறியதை பெர்ன் நீதிமன்றம் ஏற்க மறுத்து சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.