siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 26 மார்ச், 2013

பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்லாந்து பெண்ணுக்கு?



தாய்லாந்தைச் சேர்ந்த 43 வயதுப் பெண் இளம்பெண்களைக் கடத்தி சுவிட்சர்லாந்தில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதிபடுத்தபட்டதை தொடர்ந்து பெர்ன் நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்த பெண் 50 இளம்பெண்களை வற்புறுத்தி இத்தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
மேலும் துர்காஉ(Thurgau) என்ற மாநிலத்தில் மூல்ஹீம்(Müllheim) என்ற இடத்தில் தனியாக ஒரு விடுதியையும் நடத்தி வந்துள்ளார்.
இதற்காக இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.
விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பெண்களிடம் தனக்கு அறுபதினாயிரம் ஃபிராங்க் சம்பாதித்துத் தர வேண்டும் என்று இப்பெண் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்து இந்த பெண் கூறுகையில், தன் மீது எந்தத் தவறும் இல்லை, தன்னை ஒரு பகடைக்காயாகத் தான் பயன்படுத்தினார்கள் என்று கூறியதை பெர்ன் நீதிமன்றம் ஏற்க மறுத்து சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
 

தொடரும் இனக்கலவரம்: மக்கள் ஊரை விட்டு ஓட்டம்


மியான்மர் நாட்டின் மெய்திலா நகரில் புத்த மதத்தினர் மற்றும் முஸ்லிம் மதத்தினரிடையே கடந்த புதன்கிழமை முதல் கலவரம் வெடித்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மியான்மரின் மத்தியில் உள்ள கோன் நகரில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் வீடுகள் மற்றும் மசூதிகளை இடித்தும், கொளுத்தியும் நாசமாக்கினர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இறப்பு குறித்த செய்திகளும் கிடைக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை காலிசெய்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். கடந்த வருடம் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்துக்கு 200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.