Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 3 ஏப்ரல், 2013

வெளிநாட்டு இளம் பெண்கள் இந்தியா செல்ல தடை ?


இந்தியாவில் தொடரும் பாலியல் புகார்களால் வெளி நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பெண் சுற்றுலா பயணிகளின் வருகை மிக கடுமையாக வீழ்ச்சி அடைத்துள்ளது.
அண்மை காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை, தனது கணவருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சுவிஸ் பெண் கற்பழிப்பு, ஆக்ராவில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சித்தது என்று தொடர்ந்து பெண்களுக்கு எதிரான செய்திகள் தினம் தினம் இந்திய ஊடகத்தில் இடம் பிடிக்க தொடங்கின.
எனவே பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா போன்ற மிகப் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அதுவும் குறிப்பாக இளம் பெண்கள் இந்தியா செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தி வருகின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டினர் பலர் தங்கள் இந்திய பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்டு இருந்த விடுதிகள் மற்றும் சுற்றுலா முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் இந்திய வருகை சுமார் 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
 

மாலியின் போர்ப் பயிற்சிக்கு உதவும் சுவிஸ் ,.,


ஐரோப்பிய ஒன்றியம், மாலி ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க சுவிஸ் ராணுவத்தின் உதவியை நாடியபொழுது சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்து பின்னர் உதவுவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் புர்கால்டெர்(Burkhalter) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மாலியின் தலைநகரான பமாகோஷில் முகாமிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய ராணுவப்பயிற்சியில் சுவிஸ் வீரர்களும் இனி கலந்து கொண்டு மாலி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை மதிக்கும் சுவிஸ் வீரர்கள் இந்தப் பயிற்சியின்பொழுது துப்பாக்கி எடுத்துச் செல்லமாட்டார்கள். மற்றும் ராணுவ ஆயுத பயிற்சி அளிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து ஐநூறு வீரர்கள் மாலிக்கு வரவேண்டும் என்று இந்தக்குழு எதிர்ப்பார்க்கின்றது