siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இறப்பு தகவல். திருமதி சுப்பிரமணியம் பூபதி


       
       
 
               பிறந்த இடம்:சிறுப்பிட்டி                         வாழ்ந்த இடம்:யேர்மனி
                                                          
       தாயின் மடியில் ,15.06.1939                மண்ணின், மடியில் ,17.04.2013
தமிழீழம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்ட்டில்  வதிவிடமாகவும் கொண்டிருந்த .சுப்பிரமணியம் பூபதி அவர்கள் 17.04.2013 புதன்கிழமை காலை 2.மணியளவில் காலமானார்.

இவர் காலம் சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும் காலம்சென்ற அப்பாக்குட்டி.சோதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும். பரமேஸ்வரியின் அன்புச்சகோதரியும். காலம்சென்ற கந்தசாமியின் மைத்துனியும் இராஜேஸ்வரி.குமாரசாமி .தேவராஜா ஜெயகுமார் தவராஜா.தவேஸ்வரியின் அன்பு தாயாரும். கந்தசாமி.காலம்சென்ற தர்மசீலன் .பேற்றா. சுதந்தினி.விஜயகுமாரி. பவானி. ஆகியோரின். மாமியாரும்..நித்யா.அரவிந்.மயூரன் . ஹிசான் .டிலக்ஷன். ஆகியோரின் அம்மம்மாவும்.சந்திரா.யானா. சன். சாமி. சுதேதிகா. தேவிதா. தேனுகா. தேவதி. சுதர்சினி.சுதர்சன். சுமிதா.மசேல்.றொபின். ஜுலியான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்.காலம் சென்றவர்களான. சின்னையா. பாலசிங்கம். சோதிப்பிள்ளை. ஆகியோரின் சகலியும்

காலம் சென்றவர்களான. சின்னத்துரை.இராசம்மா. பொன்னம்மா. நல்லையா.ஆகியோரின் மைத்துனியும் ராணி. சின்னக்கிளி. சோதிப்பிள்ளை .சுப்பிரமணியம் . காலம் சென்ற செல்வநாயகம் வள்ளிப்பிள்ளை. பூரணம்.சின்னக்கிளி. நகுலேஸ்வரி. காலம் சென்றபரா. சரசு .கோடீஸ்வரன் .கிருஸ்ணகுமார்.சுமதி.சாந்தலிங்கம்.ஆகியோரின் மாமியாரும்.

மகேந்திரன். காலம் சென்றவசந்தி சாந்தகுமாரி.ஸ்ரீகண்ணதாசன். நவரத்தினம். இராசதுரை.ஆகியோரின் பெரியம்மாவும் ஆவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 22.04.2013 திங்கள்கிழமை காலை.11.மணிமுதல் மாலை 3மணிவரை பின்வரும் (Wischlinger Weg 66 44379 Dortmund ) முகவரியில் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.

தகவல் பிள்ளைகள்`"  தொடர்புகளுக்கு:
. இராசேஸ்வரி-0231-379266-015211968487

 குமாரசாமி- 0304352235-015735631003

தேவராசா- 02315331577 (017649433890)

ஜெயகுமார் 0231-15064059-(015213677989)

தவராசா. 0231.9868697 (015256099405)

தவேஸ்வரி 02501-985835 ( 015739114878)  

 அன்னாரின்பிரிவால் துயர்  உறும்அனைவர்க்கும்எமது கண்ணீர்அஞ்சலி இந்த துயரத்தை உறவு இணையங்களும் அறியத்தருவதோடு அன்னாரின்ஆத்ம சாந்திக்காய் இறைவனைவேண்டுகிறது,
 

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன,,,,

,,,,,

பிரிட்டனில் நியூ கேஸ்டில் நகரில் அமைந்துள்ள மேயர் இல்லத்தில் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய பிரிட்டன் நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மறைவிற்கு பிறகும் இந்த பரிசு பதக்கம் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையும் திருடர்கள் கொண்டு சென்றுவிட்டது உள்ளூர் மக்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருமைக்குரிய நோபல் பதக்கத்தை எடுத்தவர்கள், உடனடியாக அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நியூ கேஸ்டல் நகர்வாசி ஒருவர் கூறியுள்ளார்
 

வரி ஏய்ப்புக்கு உதவிய சுவிஸ் அதிகாரிகள்: வழக்கு?


சுவிஸ் வங்கியாளர் ஸ்டீபன் பக்கும்(Stefan Buck), சுவிஸ் சட்டதரனி எட்கார் பல்ட்சரும்(Edgar Paltzer) அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்ற அமெரிக்கப் பணக்காரர்கள் பலருக்கும் சதி செய்து உதவி செய்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் சட்டத்துறை, இவர்கள் மீது சதி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நியுயார்க் நகரில் பதிவானது.
இது குறித்து அமெரிக்க சட்டதரனி அலுவலகம் தனது ஊடகக் குறிப்பில், பால்ட்சரும், பக்கும் தமது தொழில் திறமையால் அமெரிக்க வாடிக்கையாளர்களை வரி செலுத்த விடாமல் அரசை ஏமாற்றி சதி செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வரி ஏய்ப்புக்காக சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய வங்கியான UBS, அமெரிக்கச் சட்டத்துறைக்கு 780 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது.
இதேபோன்று சுவிட்சர்லாந்தின் மிகப்பழைய வங்கியான வெஜிலின்(Wegelin) நிறுவனம், வசதிபடைத்த அமெரிக்கர்களின் வரி ஏய்ப்புக்கு உதவியதற்காக 58 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது. ஆனால் பால்ட்சரும், பக்கும் இன்னும் கைது செய்யப்படவில்லை. 56 வயது பால்ட்சர் இரு நாட்டுக் குடியுரிமையும் பெற்றவர். 32 வயது பக் சுவிஸ் குடிமகன் ஆவர்.
இருவரும் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் தான் வசிக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை இவர்களுக்கு கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது