Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

குழந்தை வரம் வேண்டுமா? “லிப் டு லிப்” வாழைப்பழ வரம் தரும்???


குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சி அளிக்கிறார் சாமியார் ஒருவர்.
கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள சாமியார் ஒருவர் குழந்தை வரம் தருகிறாராம்.
இதற்காக தன்னை நாடி வரும் பெண்களுக்கு வித்தியாசமான முறையில் வரம் தருகிறார்.
அதாவது சாமியாரிடம் வரும் பெண்கள், வாழைப்பழத்தை சாமிக்கு காணிக்கையாக படைப்பார்கள்.
அப்போது அதை எடுத்து சாப்பிடும் சாமியார் நன்றாக மென்று அதை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார்.
இந்த சேவைக்கு கவாள சேவை என்று பெயராம். குறிப்பாக இந்த வரம் எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானாம்.
ஆண்களுக்கு எலுமிச்சை கனியை வாயில் வைத்து சாமி துப்புவாராம், அதை ஆண்கள் துண்டில் கேட்ச் பிடிக்க வேண்டுமாம்
 

விஷம் கொண்ட 53 ராஜநாகங்கள் பறிமுதல் ??

கொடிய விஷம் கொண்ட 53 ராஜநாகங்கள் பறிமுதல்
கொடிய விஷம் கொண்ட காரில் கடத்தப்பட்ட 53 ராஜநாகங்கள் வியட்நாமில் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ராஜ நாகங்கள் 5.5 மீட்டர் நீளம் வளரக்கூடியவை.
அதிக விஷம் உள்ள இந்த பாம்புகளை வியட்நாம் நாட்டினர் இறைச்சிக்காகவும், மருத்துவத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
கடந்த வாரம் தலைநகர் ஹனோய் அருகே, சென்ற காரை பொலிசார் சோதனையிட்ட போது, அதில் 53 ராஜநாகங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். ராஜநாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது