Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 24 ஏப்ரல், 2013

நிலஅதிர்வுகள்: அதிர்ச்சியில் உறைந்துள்ள ?,


சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக 1,300 முறை சின்னச் சின்னதாக அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கே உள்ள சிசுவான் மாகாணம் லுஷான் கவுன்டியில் யான் நகருக்கு அருகே 2 தினங்களுக்கு முன் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 13 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. 20 நொடிகள் வரை கட்டிடங்கள் அதிர்ந்தன.
தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்டதால் பல கட்டிடங்கள் இடிந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏராளமானோர் வீடுகளை இழந்து சாலையில் தங்கியுள்ளனர். பல இடங்களில் தண்ணீர், மின்சார சேவை முடங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டிவிட்டது.
பலரை காணாததால் அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 11 ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 960 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லுஷான் பகுதியில் இடிபாடுகளில் இருந்து 91 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சின்னச் சின்னதாக ஏற்படும் அதிர்வுகள் 1300 முறை பதிவாகியுள்ளது. இதில் சில அதிர்வுகள் 5.4 ரிக்டர் அளவு வரைகூட பதிவானது. இதனால் நேற்றும் மக்கள் பீதியுடனே காணப்பட்டனர்

அமைச்சருக்கு மர்ம பார்சல்: வடகொரியாவின் மிரட்டலா?


தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின்னுக்கு மர்மப் பொடியுடன் கூடிய மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்-க்வான் ஜின்னுக்கு நேற்று மர்ம பார்சல் ஒன்று வந்தது.
அதில் வடகொரியாவுக்கு எதிரான அவருடைய நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்தும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் ஒரு கடிதம் இருந்தது.
மேலும் அந்த மர்ம பார்சலில் சந்தேகத்துக்குரிய வகையில் வெண்ணிற பொடித் துகள்களும் இருந்தன.
அந்த பொடியில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆராய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பார்சல் அனுப்பப்படுவதற்கு முதல் நாளான நேற்று முன்தினம் (திங்கள்கிழமை), கிம் க்வான்-ஜின்னின் அலுவலகத்துக்கு வெளியே அவருக்கும் தென்கொரிய அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வீசி எறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பகத்தில் போர்ப்பதற்றம் நிலவும் சூழ்நிலையில் எங்களை அச்சுறுத்தும் வடகொரியாவின் மற்றுமொரு முயற்சிதான் இந்தச் செயல் என தென்கொரிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்