siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 4 மே, 2013

செயற்கை உறுப்பு சிகிச்சையில் புதிய ஊழல்


பிரான்சில் இடுப்பெலும்பு, மூட்டு எலும்பு பொருத்துவதில் ஐரோப்பியத் தரம் வாய்ந்த செயற்கை உறுப்புகளை வாங்கிப் பொருத்துவதில்லை என்ற உண்மை தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
செயற்கை மார்பகம் பொருந்தியதில் தரமான உள்ளீட்டை(சிலிகான் ஜெல்களை) வைக்கத் தவறியது குறித்து வழக்கு ஒன்று நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது சுமார் 650 பேருக்கு ஐரோப்பியத் தரச் சான்றிதழ் பெறாத செயற்கை உறுப்புகளை இடுப்பிலும், கால் மூட்டிலும் பொருந்தியது தெரியவந்தது.
தற்பொழுது இந்த நோயாளிகள் அனைவரையும் திரும்பப் பரிசோதித்து இந்த உறுப்புகள் முறையாக செயல்படுகின்றனவா என்று அறிய மருத்துவர்களிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ஐரோப்பியத் தரச் சான்றிதழ் பெறாததால் இந்த உறுப்புகள் மோசமானவை என்று கூற இயலாது. இவற்றால் நோயாளிக்கு எந்த இடர்ப்பாடும் கிடையாது என்று
 

வணிக வளாக விபத்து: பலி எண்ணிக்கை 509ஆக..


 வங்கதேச தலைநகர் தாகாவில் எட்டு அடுக்கு கட்டிடம் நொறுங்கி விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 509ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசத்தின் தாகா நகரில் ராணா பிளாசா என்ற பெயரில் எட்டு அடுக்கு வணிக வளாகக் கட்டிடம் பத்து நாட்களுக்கு முன் நொறுங்கி விழுந்தது.
இதில் ஏராளமானவர்கள் புதையுண்டனர், 2500 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 509ஆக உயர்ந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தில் 300 கடைகளும், ஐந்து ஜவுளி நிறுவனங்களும், ஒரு வங்கி கிளையும் செயல்பட்டு வந்தன.
முதலில் ஐந்து மாடியாக இருந்த இந்த கட்டிடம் முறைகேடாக எட்டு மாடி கட்டடமாக உயர்த்தப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்கிய நகராட்சி இன்ஜினியர்கள், இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
கடைகள், அலுவலகங்கள் மட்டுமே செயல்படுவதற்கு ஏற்ற இந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக ஐந்து ஜவுளி மில்கள் இயங்கியுள்ளன.
அதிசக்தி கொண்ட ஜெனரேட்டர்கள் இந்த ஆலையில் இயங்கியதால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதை மீறி மேலும் மூன்று மாடிகளை கட்டிய இன்ஜினியர் அப்துர் ரசாக் கானை பொலிசார் கைது செய்தனர்.
இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இந்த கட்டிடத்தின் உரிமையாளர் சோகல் ராணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்
 

பேரழிவை ஏற்படுத்த சகோதரர்கள் திட்டமிட்டது அம்பலம் ,,

 
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சகோதரர்கள், சுதந்திர தினத்தன்றும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின்போது 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தமர்லான் சர்னேவ்(வயது 29) என்பவர் தப்பி ஓட முயன்றபோது ஏப்ரல் 18ஆம் திகதி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதே நாளில் ஜோகார் சர்னேவ்(வயது 19) என்பவரை பொலிஸார் கைது செய்தனர். இவ்விருவரும் செசன்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் என விசாரணையில் தெரிய வந்தது.
ஜோகாரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ஆம் திகதி வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது என முதலில் தீர்மானித்திருந்தது தெரியவந்துள்ளது.
எனினும் எதிர்பார்த்த காலத்துக்கு முன்னதாகவே வெடிகுண்டு தயாராகி விட்டதால் முன்கூட்டியே தாக்குதலை நடத்தியதாக ஜோகார் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று பாஸ்டன் நகரிலும் நடைபெறுவது வழக்கம். ஆனால், எந்த நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டனர் என்ற தகவல் தெரியவில்லை.
குக்கர் மூலம் வெடிக்கச் செய்த அந்த வெடிகுண்டை தமது குடியிருப்பில் வைத்தே தனது சகோதரர் தமர்லான் தயாரித்ததாக ஜோகார் கூறியுள்ளார். பின்னர் தாக்குதல் நடத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதற்காக பாஸ்டன் நகரம் முழுவதும் நோட்டம் விட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஜோகார் மீது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது