Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 7 மே, 2013

ஹெய்டா ஏரியில் திடீரென செத்து மிதந்த மீன்கள்:



 
கிழக்கு ஜேர்மனியில் துரிங்கியா மாவட்டத்தில் உள்ள ஹெய்டா(Heyda) ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் மீன் பிடிக்கும் ஆர்வலர்கள், இதுவரை சுமார் 25 தொன் எடை அளவில் இறந்த மீன்களை ஏரியிலிருந்து அகற்றியுள்ளனர்.
இதனால் இந்த ஏரியில் யாரும் படகுகளில் பயணிக்க அஞ்சுகின்றனர். ஆனால் இந்த ஏரியில் ஆபத்து அல்லது நோய்த்தொற்று எதுவும் காணப்படவில்லை என்பதால் அரசு அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மீன்களின் இறப்புக்கு காரணம் தெரியாமல் குழம்பி போகியுள்ளனர்.
இது குறித்து இல்மெனோ நகராட்சியின் செய்தித் தொடர்பாளரான எக்கார்டு பேயர்ஸ்மித்(Eckhard Bauerschmidt) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மீன்களின் அழிவுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நச்சுத்தன்மையுள்ள நீர்ப் பாசி படர்ந்து இருந்தால் மீன்கள் இறந்து போக வாய்ப்புண்டு. ஆனால் அந்த விஷப்பாசி இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், இந்த ஏரியின் தண்ணீரைத் தினமும் விஞ்ஞானிகள் இனி பரிசோதிக்கவுள்ளனர். இதன் மூலம் மாற்றங்கள் ஏதேனும் தெரிகிறதா என்று ஆராய்வர். இவ்வாறு ஆராய்வதால் மீன்களின் இறப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

மயோன் எரிமலை வெடிப்பு :,.,


பிலிப்பைன்ஸ் நாட்டில் பல எரிமலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றான மயோன் எரிமலை அலபய் மாகாணத்தில் உள்ளது.
தலைநகர் மணிலாவில் இருந்து 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை இன்று திடீரென வெடித்து புகையையும் சாம்பலையும் வெளியேற்றியது. அப்போது 500 மீட்டர் உயரம் வரை அடர்த்தியான சாம்பல் வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அந்த நேரத்தில் எரிமலையை சுற்றிப்பார்க்க சென்ற 3 சுற்றுலா பயணிகள் இறந்து விட்டதாகவும், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை வெடித்த நேரத்தில் அவர்கள் அந்த மலைச் சரிவில் நின்றதாக கூறப்படுகிறது. மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு சென்றவர்கள் குறித்து தகவல் சேகரிக்கும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
மயோன் எரிமலை சரியான கூம்பு வடிவ தோற்றத்தை கொண்டுள்ளதால் அந்த எரிமலையை காண சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் வருகிறார்கள்.
மிக ஆக்ரோசமான இந்த எரிமலை இது வரை 48 முறை வெடித்து சிதறியுள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் மூத்த புவியியலாளர் இது நீராவியால் ஏற்பட்ட சிறிய வெடிப்பு மட்டுமே, இதனால் மக்கள் வெளியேறத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்
 

வேலைக்குச் செல்லும் கனடா வாழ்//


கடந்த 2008ஆம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார சரிவு இன்னும் முற்றிலும் சரியாகாத நிலையில், இங்கிலாந்து நாட்டிலும் அதன் பாதிப்புகள் இருக்கவே செய்கின்றன.
கனடா லைப் குரூப் இன்சுரன்ஸ் நிறுவனம், பெரும்பான்மையான இங்கிலாந்து மக்களை வடிக்கையாளர்களாகக் கொண்ட ஒரு காப்புறுதி நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் சமீபத்தில் எடுத்த ஆய்வின்படி, பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் சளி, ஜுரம் போன்ற சிறுசிறு பிரச்சினைகளுக்கு விடுப்பு எடுப்பதைத் தவிர்க்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
விடுப்பின் போது சேர்ந்துவிடும் அதிகப்படியான பணிச்சுமை ஒருபுறம் என்றால், தம்முடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் தங்களைப் பற்றி தவறாக நினைக்கக்கூடும் என்ற எண்ணமும் இவர்களை விடுப்பு எடுப்பதிலிருந்து தடுக்கின்றது.
மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் ஜுரம் இருந்த போதிலும், வேலைப்பளுவைக் குறைப்பதற்காக பணிக்குச் செல்லலாம் என்றும், 93 சதவிகிதம் பேர் விடுப்பு எடுப்பதற்கு சளி ஒரு பெரிய காரணமல்ல என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆண்கள் சராசரியாக 3.5 நாட்களும், பெண்கள் 4.4 நாட்களும் விடுப்பு எடுக்கின்றனர்.
ஒருநாள் விடுப்பு எடுப்பது குறித்து கூட யோசிக்க வேண்டியுள்ளது என்று பணிபுரிபவர்கள் கூறுவது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது என்று பால் அவிஸ் என்ற காப்புறுதி அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.
விடுப்பு எடுப்பதால் வேலைப்பணி கூடும் என்பதைத் தவிர, தங்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற எண்ணமே விடுப்பு எடுக்காததின் முக்கிய காரணமாக அவர்களால் குறிப்பிடப்படுகின்றது.
இதனால்தான், 2007ஆம் ஆண்டில் ஐந்து சதவிகிதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம், தற்போது எட்டு சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கின்றது என்று கனடா லைப் காப்புறுதி நிறுவனம் தெரிவிக்கின்றது