siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 10 மே, 2013

அழகிகளை கண்டுகொள்ளாத இளவரசர் ஹாரி


இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்காவுக்கு வந்துள்ளதை அடுத்து, அவரது ரசிகைகள் குஷியாகி உள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அவர் ஹாலோ டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சிக்கு சென்றார்.
கேபிடல் ஹில்லில் உள்ள ரஸல் செனட் அலுவலக கட்டிடத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் ஹாரியை காண ஏராளமான இளம் பெண்கள் வந்திருந்தனர்.
ஆனால் அவர் பெண்கள் பக்கம் திரும்பாமல் வியட்நாம் போர் வீரர் செனடர் ஜான் மெக்கெய்னிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்.
மெக்கெயினின் மனைவி சிண்டி ஹாலோ டிரஸ்ட் உறுப்பினர் ஆவார்.
ஹாரி கன்னிவெடிகளை கண்டுபிடிக்கும் டிடெக்டர்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
ஹாலோ டிரஸ்ட் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அந்த டிரஸ்ட் மூலம் இதுவரை உலகம் முழுவதும் 1.4 மில்லியன் கன்னிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரி கடந்த முறை அமெரிக்கா வந்த போது பெண்களுடன் ஹோட்டல் அறையில் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின
 

30 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு


 ஸ்காட்லாந்தில் 30 மாடி குடியிருப்பு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் 1960ம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் ரெட் ரோட் எனும் பெயரில் ஆறு 30 அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன.
கட்டிடம் பழசாகி விட்டதால் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, ஆறு கட்டிடங்களையும், ஒவ்வொன்றாக இடிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அதன் படி கட்டிடங்களில் குடியிருந்த, 4,700 பேர் வேறு குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
அதன் பின் 88 கிலோ எடை வெடி மருந்தின் மூலம் ஒரு கட்டிடம் தகர்க்கப்பட்டது. மற்ற கட்டிடங்களும் ஒவ்வொன்றாக விரைவில் தகர்க்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

வெப்பமயமாவதால் சுவிஸ்ஸில் மாறும் தட்பவெப்ப ,,


சுவிட்சர்லாந்தில் மீட்டியோ சுவிஸ்(Meteo Swiss) எனப்படும் வானிலை அறிவிப்பு மையம், இன்னும் ஐம்பதாண்டுகளில் கோடைக்காலம் 80 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வானிலை அறிவிப்பு மையம் கூறுகையில், தற்பொழுது மலைப்பகுதியில் 50 நாட்களும், மேட்டு நிலப்பகுதியில் 65 நாட்களும் மட்டுமே கோடைக்காலம் நிலவி வருகின்றன.
உலகம் வெப்ப மயமாவதால், சுவிஸ் தட்ப வெப்ப நிலை மத்திய தரைக் கடல் பகுதியைப் போல மாறி விடும். எனவே எதிர்வரும் 2060ம் ஆண்டில் ஜுரா மலையின் சமவெளிப் பகுதியில் கோடைக்காலம் கூடுதலாக ஒரு மாதம் அதிகரித்து விடும்.
இதே போன்று ஆல்ப்ஸ் மலைகளின் பனிப்பொழிவு, வருடத்திற்கு 110 நாட்கள் என்ற நிலை மாறி 80 நாட்களாகக் குறைந்து விடும்.
இதனைத் தொடர்ந்து மேட்டு நிலங்களில் சராசரியாக ஒரு மாதம் பெய்யும் பனி ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் பத்து நாட்கள் மட்டுமே பெய்யும் என்று தெரிவித்துள்ளது