Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 12 மே, 2013

7 கோடி ஆண்டுகள் பழையான டைனோசரஸ் ?


மங்கோலியா நாட்டிலிருந்து 7 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்கள் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டன.
இந்நிலையில் மங்கோலியா அரசு, டைனோசரஸ் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்தது.
இதனையடுத்து மங்கோலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தி வரப்பட்ட 10க்கும் மேற்பட்ட டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்களை கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஒரு நாட்டின் கலாச்சார நலனை கொள்ளை அடிப்பவர்களையும், சதிகாரர்களின் செயலையும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
நாளை நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் இவைகள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவரின் போட்டோ 30 இலட்சத்துக்கு ஏல விற்பனை..!


சீனாவின் மாபெரும் தலைவர் மாவோ ஷெடாங். சீன கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இவர் மரணம் அடைந்து 27 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் இவரது அரிய போட்டோ சீனாவில் நேற்று ஏலத்துக்கு விடப்பட்டது.
அதை பலர் போட்டி போட்டு கூடுதல் தொகைக்கு கேட்டனர். முடிவில் ரூ.30 லட்சத்துக்கு அந்த போட்டோ ஏலம் போனது.
இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 10 மடங்கு அதிகமாகும். அதை லூஷான் மவுன்டெய்ன் என்ற சுற்றுலா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது

பால்மா இறக்குமதியை தடைசெய்யும்


நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை தடைசெய்வது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மைக் காலத்தில் நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த ஆராய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கு வந்த நியூஸிலாந்தின் இரண்டு அமைச்சர்கள் தமது பால்மாக்களின் இறக்குமதியை தடைசெய்ய வேண்டாம் என்று இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் தொடர்பில் சிங்கப்பூரில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பால்மாக்களில் அடங்கியுள்ள கதிரியக்க தாக்கங்களினால் நீரிழிவு உட்பட்ட நோய்கள் ஏற்படும் என்று மருத்துவத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்தோருக்கு விதிக்கப்பட்ட புதிய??


கனடாவிற்கு புலம்பெயர்ந்து வருவோர்கள், தம் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அழைத்து வர விரும்பினால் அவர்களைப் பராமரிக்கத் தேவையான வருமானம் இருந்தால் மட்டுமே அரசு அனுமதி வழங்கும் என்று புலம் பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி(Jason Kenney) தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு அரசு பணம் செலவழிக்க வேண்டியிருப்பதால், சுகாதார நிதி ஒதுக்கீட்டில் 44 சதவீதம் இவர்களுக்கே செலவாகிறது.
எனவே இனி புலம்பெயர்ந்து வருவோர்கள் வயதானவர்களை வீட்டில் வைத்திருக்க விரும்பினால் அவர்களுக்கான செலவை செய்ய தகுதி படைத்தவராக இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
குறைந்த பட்ச வருமானத்தை விட முப்பது சதவீதம் கூடுதலாக சம்பாதிப்பவராகவும், மூன்று வருடங்களாக வருமான வரி செலுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.
தற்பொழுது முதியவர்களின் மருத்துவ செலவுகளைப் பத்தாண்டுகள் வரை ஏற்றுக் கொள்ள முடிந்த பிள்ளைகளால் மட்டுமே பெற்றோரையோ, தாத்தா பாட்டியையோ வைத்திருக்க அனுமதி உண்டு.
ஆனால் இனிமேல் அவர்களின் இருபதாண்டு மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள தகுதி படைத்த பிள்ளைகளே, முதியவர்களை வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
உடன் பிறந்தவரை கனடா அழைத்து வர புலம்பெயர்ந்தவர்கள் விரும்பினால் அவரை "சார்ந்திருப்பவர்" என்ற அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு தீர்மானித்துள்ளது

தேர்தல்: நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் வெற்றி


பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வெற்றி பெற்றனர்.
பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வாக்குபதிவு முடிந்தவுடன் நேற்று மாலை 6 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப், சர்ஹோதா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இரு தொகுதிகளில் போட்டியிட்ட தெரிக் இ-இன்சப் கட்சி தலைவர் பெஷாவரில் இம்ரான் கான் வெற்றி பெற்றார். ஆனால் லாகூர் தொகுதயில் தோல்வியடைந்தார்.