Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 15 மே, 2013

வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு


கடந்த வருடம் 1,585 சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள்(Black Money Transaction) நடைபெற்றுள்ளதை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டில் சந்தேகத்துக்குரிய வகையில் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக கருதப்படும் கணக்குகளை ஆய்வு செய்ததில் 1,585 வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவற்றில் 15 வங்கிகளில் பரிவர்த்தனைகள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ ரூ. 20 ஆயிரம் கோடி என்று தெரிகிறது. ஆறு பரிவர்த்தனைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 10 ஆயிரம் கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கி விதிமுறைகளின் ரகசியத் தன்மையினால் உலகின் பல பாகங்களிலிருந்தும் இங்கு கருப்பு பணம் பதுக்கப்படுகிறது. மேலும் பயங்கரவாதம், போதை மருந்து போன்ற செயல்களுக்கும் சுவிஸ் வங்கிகள் மூலம் பணம் சுழற்சி செய்யப்படுகிறது.
கருப்பு பண சொர்க்கம் என்று தங்கள் நாடு அழைக்கப்படும் களங்கத்தைப் போக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மேலும் வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி வருகிறது
 

பாகிஸ்தான் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்


இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் கோட் லாக்பாத் சிறையில் 1400 கைதிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
சிறை அதிகாரிகளின் விரோத மனப்பான்மையைக் கண்டித்து கைதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை 3.30 மணிக்கு தங்களை எழுப்பி சிறைக்குள் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்புவதாகவும், சிறையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும் போராடும் கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று சிறை கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.
சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டதையடுத்து, சிறையில் உள்ள கொடிய குற்றவாளிகள் மற்ற கைதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனி செல்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இந்திய கைதிகள் 30 பேர் உள்ளனர். அவர்களில் யாராவது உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளாரா? என்பது தகவல் வெளியாகவில்லை.
 

பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ,..


பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அமோக வெற்றி பெற்று அடுத்த பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் ஆகிறார்.
இந்நிலையில் அமெரிக்க  ஜனாதிபதி பராக் ஒபாமா, நவாஸ் ஷெரீப்புடன் புகைப்படத்தில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், மே 11ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக சீட்டுகள் பெற்று ஆட்சி அமைக்கவுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜனாதிபதி ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே பரஸ்பர வளர்ச்சி குறித்து இரு நாடுகளும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதில் நீண்ட கால வரலாறு உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்த விடயங்களில், ஜனநாயக முறைப்படி அமையவுள்ள இந்த அரசுக்கு மேலும் அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்
 

தீவிரவாதிகளின் எழுச்சியால் அவசரநிலைப்

 
ஆப்பிரிக்கா கண்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிரவாதிகள் அரசுக்கெதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தனமையை பலவீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர்.
இதனால், ஜனாதிபதி குட்லக் ஜொனாதன் நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்துள்ளார். மேலும் அதிகமான துருப்புகளை அங்கு அனுப்பவும் உறுதியளித்துள்ளார்.
தீவிரவாதிகள் தங்கியிருப்பதற்கான தடயங்கள் தெரியும் இடங்களை நிர்மூலமாக்கவும் உத்தரவிட்டார்.
இச்செய்தியானது அந்நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது
 

அறுவடைக்குச் செல்லும் நேபாள மக்கள்


உலகளாவிய அளவில் ஆண்மை எழுச்சியை அதிகரிக்கவல்ல அருமருந்தாக "வயாக்ரா" மாத்திரை கருதப்படுகிறது.
இந்த மாத்திரைக்கு இணையான ஆண்மை சக்தியை தரக்கூடிய அறியவகை பூஞ்சை நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரத்தில் விளைகிறது.
ஆரம்பத்தில் கம்பளிப் பூச்சியின் உடலைப் பற்றி, சில நாட்களில் கம்பளிப் பூச்சியை அழித்துவிட்டு "யார்ச்சகும்பா" எனப்படும் இந்த பூஞ்சை வளரத் தொடங்குகிறது. இவ்வகை பூஞ்சைகளுக்கு சீனா, மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.
நீரில் இந்த பூஞ்சையை போட்டு கொதிக்க வைத்து தேனீர், சூப் போன்றவை தயாரித்து பருகினால் ஆண்மை வீரியமும், ஒருசில வகை புற்று நோயில் இருந்து நிவாரணமும் கிடைக்கிறது என ஆசியாவில் வாழும் அனேக மக்கள் நம்புகின்றனர்.
இவ்வகை பூஞ்சை கிலோ ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை விலை போகின்றன. இவற்றின் மகசூல் வசந்த காலத்தில்தான் அதிகம் என்பதால், இந்த இமயமலை வயாக்ராவை அறுவடை செய்ய உரிய பருவத்தில் நேபாள மக்கள் இமயமலை அடிவாரத்தை முற்றுகையிட தொடங்கி விடுகிறார்கள்.
பள்ளிகளில் படிக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளையும் இவர்கள் வயாக்ரா வேட்டைக்கு அழைத்து சென்று விடுவதால், இமயமலை அடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சுமார் 8 ஆயிரம் நேபாள மாணவர்கள் பணம் சம்பாதிக்கும் குறியில் வகுப்புகளை புறக்கணித்து விடுகின்றனர்.
வெள்ளியின் விலைக்கும், தங்கத்தின் விலைக்கும் இடைப்பட்ட விலையில் இந்த யார்ச்சகம்பா பூஞ்சை விலை போவதால், ஓர் பருவ காலத்தின்போது மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
"முதுமையில் இருக்கும் நபர்களுக்கு ஊக்க மருந்தை அறுவடை செய்யும் தேடலில், இளமை பருவத்தே பயிர் செய்ய வேண்டிய கல்வியை மாணவர்கள் கெடுத்துக் கொள்வது வேதனையான விஷயம்" என்கிறார், நேபாளத்தின் ஜார்கோட் மாவட்ட கல்வி அதிகாரியான பிரகாஷ் சுபேதி