siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 17 மே, 2013

தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை:


ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இவர் அளித்த ஊடகப் பேட்டியில், கணவர் இறந்த பின்னர் தனித்து வாழும் பெண்களால் தோட்டத்தைப் பராமரிக்க முடியாது, எந்த வேலையையும் செய்ய இயலாது, எதைச் சொன்னாலும் எரிச்சல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியிலிருந்து வந்திருக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நஃபீசா ஓ(Nafize Ö) என்பவருக்கு வீடு ஒதுக்கித் தர முடியாது என்று ஹேன்ஸ் தெரிவித்ததால் அந்தப் பெண் மிகவும் கோபப்பட்டுள்ளார்.
இது குறித்து நஃபீசா கூறுகையில், நான் நான்கு பிள்ளைகளை வளர்க்கிறேன். என்னால் ஆறு ஆண்களின் வேலையைச் செய்ய முடியும். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு வீடு கிடையாது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனையை ஹேன்சுடன் பேசி  தீர்த்து வைப்பதாகக் ஹேம்பர்க் தோட்டக்காரர் கழகத்தினைச் சேர்ந்த டிர்க் சீல்மேன்(Dirk Sielmann) என்பவர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு ??


வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் அதை அவர் ரகசியமாக வைத்து இருந்தார். இந்நிலையில் திடீரென 2012ம் ஆண்டு யூலையில் தனது மனைவியுடன் பொது மக்கள் மத்தியில் தோன்றி அதிர்ச்சியளித்தார்.
அதற்கு முன்னரே இத்தம்பதிக்கு 2010ம் ஆண்டே ஒரு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தற்போது ஜனாதிபதி கிம்-ஜாங்-யுன்னுக்கு அவரது ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக சுவிட்சர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து மிகவும் விலை உயர்ந்த குழந்தை உணவு பொருட்கள் வடகொரியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஜனாதிபதி யுன் தனது குழந்தைகளுக்காவே இந்த உணவு பொருட்களை இறக்குமதி செய்து வட கொரியாவில் விற்க அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மரணம் அடைந்த முன்னாள் ஜனாதிபதியும், கிம் ஜாங்-யுன் தந்தையுமான கிம் ஜாங்-இல்லுக்கு மனைவி தவிர சட்டத்துக்கு விரோதமாக 3 காதலிகள் இருந்தனர்.
கிம் ஜாங்-யுன் தவிர அவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது கிம் ஜாங்- யுன்னும் இந்த விடயத்தில் தனது தந்தை வழியை பின்பற்றுவதாக செய்தி வெளியாகி உள்ளது

கனடாவில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்


கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும்.
கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டில், 986 தட்டுகள் இது போன்று தெரிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது.
மேலும் முன்னர் இருந்ததைவிட, தற்பொழுது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்று கிரிஸ் ருட்கொவ்ச்கி என்ற விஞ்ஞான எழுத்தாளர் கூறுகின்றார்.
இத்தகைய தட்டுகள் மாறுபட்ட வடிவங்களில் தென்படுகின்றன. அதாவது முக்கோண வடிவிலோ, ஒளிப்பிழம்பு போன்றோ, வட்டவடிவ பறக்கும் தட்டாகவோ போன்ற பல்வேறு மாறுபட்ட தோற்றங்கள் மக்களுக்குத் தென்படுகின்றன.
10 வயது சிறுவன் ஒருவன் தான் பார்த்தைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு நிமிடம் கண்ணுக்குத் தெரிந்த அது, பின்னர் வானத்தில் மிக வேகமாகப் பறந்து சென்றது என்று கூறுகின்றான்.
இத்தகைய பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில், நாசா விண்வெளிமையம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வட்டவடிவ தட்டு போன்ற ஒரு அமைப்பு வானவில் நிறத்தில் வெளிச்சத்தை இறைத்தவாறு பூமியின் மேற்பரப்பில் வட்டமிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

மக்களுக்காக கண்ணீர் சிந்திய அவுஸ்திரேலிய


அவுஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்.
இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தால் ஏற்பட கூடிய நன்மைகளை விளக்கினார்.
மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்து கில்லார்டு பேசி கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட ஜூலியா, குயின்ஸ்லேண்டர்ஸ் நகர மக்கள் தங்களது கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதார்.
ஜூலியா பேசி முடித்து அமர்ந்த பின்னர், தொழிலாளர் கட்சியினர் மற்றும் மாற்று திறனாளி வழக்கறிஞர்கள் 20 பேர் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த.,


பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் பெப்ரவரி மாதம் 18ம் திகதி அன்று நடைபெற்ற இந்தக் கொள்ளை, பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளையாகும்.
விமானம் சூரிச்சுக்குப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், இந்தக் கொள்ளையர்கள் சரக்குப் பெட்டகத்தைத் திறக்கும் படி மிரட்டி அதில் ஏற்பட்டிருந்த வைரங்களையும், ரொக்கப் பணத்தையும் ஏராளமாகத் திருடிச் சென்றனர்.
அவர்கள் கொள்ளையடித்த ரொக்கப்பணத்தில் பெரும் பகுதியை பொலிசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது