குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.
வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த பிக்கு தீ குளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் குறித்த பிக்குவை பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் கண்டி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
வெள்ளி, 24 மே, 2013
ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக இலங்கையர் மீது
பிரித்தானியாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ரோடிடொன் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் நபருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
50 வயதான சுப்ரமணியம் என்பவர் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமாக புகலிடக் கோரிக்கையாளர்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விமான தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் பலி: ஒபாமா
அப்போது முதன்முதலாக ராணுவ நடவடிக்கையில் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். எதிரிகளைத் தாக்கும் வண்ணம், முறைப்படுத்தப்பட்ட ஆளில்லாத ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் நான்கு அமெரிக்கர்கள் பாகிஸ்தானிலும், ஏமனிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், இது குறித்து அரசு சட்டதரனி எரிக் ஹோல்டர் எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அல் அவ்லாகி என்ற தீவிர இஸ்லாமிய கணக்கர் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு, ஏமனில் இத்தகைய தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே வருடம் சமீர் கான் என்ற மற்றொரு அமெரிக்கரும் இதே வகையான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
டென்வரில் வாழ்ந்து வந்த அவ்லாகியின் 16 வயது மகனும் இதே போன்று கொல்லப்பட்டதாக அரசு சட்டதரனி எரிக் ஹோல்டர், செனட்டின் நீதித்துறைக் குழுவின் தலைவர் பாட்ரிக் லீஹிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் அவலாகி தவிர, மற்ற மூவரும் எதிர்பாராதவிதமாக இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்றும் அது குறித்து அமெரிக்க அரசு அறிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கொல்லப்பட்ட மற்றொரு நபர் குறித்த தகவலும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் குவாண்டிகோவில் உள்ள கப்பல்படைத்தளத்தை தாக்க முயன்று, பின்னர் பாகிஸ்தானின் பழங்குடியைச் சேர்ந்த ஜிகாதி தீவிரவாதிகளுடன் சேர்ந்த ஜுடே கெனான் முகமது என்பவரே இத்தகைய ஆளில்லாத ராணுவ விமானத்தால் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவி ஏற்றவுடன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டசபை உறுப்பினர்களுக்குத் தெரியவேண்டும் என்று ஒபாமா கருதியதால் தான் அனைத்து விபரங்களையும் தெரிவித்துள்ளதாகவும் எரிக் ஹோல்டர் குறிப்பிட்டுள்ளார்
செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில்
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
விண்வெளியில் ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்டு செயலிழந்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் ஒன்றின் மீது இந்த பெகாசஸ் செயற்கைக் கோள் மோதியதிலிருந்து அந்நாட்டின் விண்வெளி நிலையத்திற்கு சரியாக சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று அம்மையம் தெரிவித்துள்ளது.
ஆயினும், தொடர்ந்து விண்வெளியில் சுற்றி வருவதால் அது பழுதடைந்தது குறித்து இன்னும் சரிவரத் தகவல் தெரியவில்லை.
பூமியைச் சுற்றி வருகின்ற செயற்கைப் பொருட்களைக் கண்காணிக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கூட்டு விண்வெளி செயல்பாட்டு நிர்வாக மையம், ரஷ்ய ராக்கெட்டுடன் நேரடியான மோதல் எதுவுமில்லை என்றும் அதன் சிதறிய துண்டுகளுடன் பின்னர் மோதியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஈக்குவடார் நாட்டின் விண்வெளி நிலையத் தலைவரான ரோன்னி நடேர், பெகாசஸ் செயல்பாட்டில் இருப்பதாகவும் அந்நாட்டு மக்களுக்கான செயற்கைக்கோள் இயங்கி வருவதாகவும் இணையதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர்?
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஊல்விச் இராணுவ முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று பிசியான லண்டன் சாலையில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
கொலையாளியை பொதுமக்களே மடக்கி பிடித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் மைக்கேல் எடிபோலஜா(28) என்று தெரிய வந்துள்ளது.
பிரிட்டன் இராணுவத்தினரால் முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதற்குப் பழிவாங்கவே இத்தாக்குதலை நடத்தினேன் என்று தாக்குதலுக்குப்பின் எடிபோலஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு நிலை குறித்து ஆராய அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் கமரூன் கூறுகையில், பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது.
புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல் பிரிட்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்; இஸ்லாம் மதத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். இத்தாக்குதல் பிரிட்டன் மக்களை மிகவும் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்




