siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 25 மே, 2013

மதுபான விற்பனைக்கு தடை விதித்த துருக்கி


 துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள துருக்கி நாடு, மதச்சார்பற்ற நாடாக விளங்குகிறது. அந்நாட்டின் இளைஞர்கள் மதுபானங்கள் மீது ஆர்வம் கொள்வதைத் தடுக்கும் வகையில், மதுபான விற்பனை மற்றும் விளம்பரத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவைகளில் தினமும், இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை மதுபானம் விற்கக் கூடாது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், மசூதிகள் அருகில் மதுபான கடைகள் திறக்கக் கூடாது.
இளைஞர்களுக்கு மதுபானங்கள் வழங்கக் கூடாது, தொலைக்காட்சிகளில், மதுபான விளம்பரங்களை காட்டக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கான சட்ட திருத்தங்கள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்ட திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்டமாகவுள்ளது
 

சுமார் இருபது ஹரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம்


அட்லாண்டிக் கனடா பகுதியை வருகின்ற யூன் மாதம் முதல் அடுத்தடுத்து 13 முதல் 20 அரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடாவின் அரிக்கேன் மையமும், அமெரிக்காவில் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக மையமும் அறிவித்துள்ளது.
இது குறித்து கனடா மையத்தின் திட்டக் கண்காணிப்பாளர் கிறிஸ் போகர்ட்டி(Chris Fogarty) கூறுகையில், வருகின்ற யூன் மாதம் முதல் வீச போகும் அரிக்கேன் புயல்களில் மூன்று முதல் ஆறு புயல்கள் பெரும் புயல்களாகவும், அடுத்த பதினோரு புயல்கள் சாதாரணமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க நிறுவனம் புயல் பற்றிய தனது அறிக்கையில், வருடந்தோறும் ஆறு அரிக்கேன் புயல்களும், மற்ற மூன்று பெரும் புயல்களுடன் மணிக்கு 175 கி.மீற்றர் வரை வீசும் புயல்காற்றும் உண்டு என்று தெரிவித்துள்ளது.
 

உலகில் 26 கோடி பேர் சாதி பாகுபாட்டின்,.,


உலக முழுவதும் சாதி அடிப்படையில் மக்களை பிரித்து அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதை கணக்கிட ஐ.நா. அமைப்பு தன்னார்வ தொண்டர்களை நியமித்து ஆராய்ந்தது.
அவர்கள் உலக முழுவதும் 26 கோடி மக்களுக்கு மேல் சாதிப் பிரிவினையின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகளில் மனித உரிமைகளை மீறி இவ்வாறு சாதிப்பிரிவினையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க கடுமையான சட்ட திட்டம் கொண்டு வரவேண்டு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் சாதி அடிப்படையிலான பாரபட்சம் பரவிக்கொண்டும், வேர் ஊற்றிக்கொண்டும் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தலித்துகள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என்று அறியப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
 

பாதியிலேயே தரையிறங்கிய விமானம்:


 பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து பி,கே709 என்ற பாகிஸ்தான் சர்வதேச விமானம் நேற்று காலை 9.35 மணிக்கு பிரிட்டன் மான்செஸ்டர் நகர் நோக்கி புறப்பட்டு சென்றது.
பிரிட்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கு மான்செஸ்டர் செல்ல வேண்டிய அந்த விமானத்தில் 297 பயணிகள் இருந்தனர். மான்செஸ்டர் நகரை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த செய்தியை அடுத்து பிரிட்டன் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை இடைமறித்தன.
பின்னர் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இறக்குவதற்கு பதில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த விமானம் அங்கு தரையிறக்கம் செய்யப்பட்டது. உடனடியாக அங்கு தயாராக இருந்த பொலிசார் அதிரடியாக பாகிஸ்தான் விமானத்திற்குள் புகுந்து சோதனையிட்டனர்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் 30 மற்றும் 41 வயது மதிக்கத்தக்க இருவரைக் கைது செய்தனர். பிரிட்டனை சேர்ந்த அவர்கள் இருவரும் குற்றவாளிகளா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அவர்களிடமிருந்து எந்தவித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் அச்சுறுத்தல்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து விமானத்தை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விமானத்தை இறக்கியிருப்பதாக விமானி தெரிவித்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
ஆனால், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக பாகிஸ்தானிய விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வந்த இரு விமானங்கள் இது போன்று சோதனைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது
 

பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் ஆவி நடமாட்டமா?

 
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக ஷின்சோ அபே பொறுப்பேற்றார்.
6 மாதங்கள் ஆகியும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இல்லத்துக்கு அவர் குடிபெயரவில்லை.
பிரதமரின் அரசு இல்லத்தில் ஆவி நடமாடுவதாகவும், அதன் காரணமாக அந்த இல்லத்துக்கு குடிபெயர அபே மறுத்து வருவதாகவும் புரளி நிலவுகிறது.
இது உண்மையா? என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அமைச்சரவைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பிரதமரின் செயல் அலுவலகத்தின் இரண்டாவது வாயிலாக இந்த இல்லம் விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த இல்லத்துக்கு குடிபெயர காலதாமதம் செய்வதால், அவசர காலத்தில் பிரதமர் விரைவாக செயல்படுவதற்கு தடையாக அமையும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கேள்விக்கு அபே தலைமையிலான அமைச்சரவை நேற்று எழுத்துப் பூர்வமாக பதில் அனுப்பி உள்ளது.
அதில், அரசு இல்லத்துக்கு பிரதமர் குடிபெயராமல் இருப்பதற்கு ஆவி நடமாட்டம்தான் காரணம் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என கூறப்பட்டுள்ளது
 

சர்ச்சையை உருவாக்கியுள்ள லண்டன் வூலிச்

லண்டனின் வூலிச் பகுதியில் கடந்த புதனன்று வீதியில் வைத்து பிரிட்டிஷ் படைவீரர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை முன்கூட்டியே தடுத்திருக்கலாம் என்ற கருத்தை பிரித்தானிய அரசு நிராகரித்துள்ளது.
கொலையாளிகளிடமிருந்து முன்கூட்டியே வெளிப்பட்ட சமிக்ஞைகளை அதிகாரிகள் தவறவிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சம்பவ இடத்தில் பிடிபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் இரண்டுபேரும் பிரித்தானிய எம்-ஐ-5 புலனாய்வுப் பிரிவினரால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அவர்களைத் தொடர்ந்தும் கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
'எல்லாநேரத்திலும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியாது, வன்முறைகளில் ஈடுபட நினைக்கும் தனிப்பட்ட நபர்களினால் சுதந்திரமான சமூக கட்டமைப்பு தான் பாதிக்கப்படுகிறது' என்று மூத்த அமைச்சர் எரிக் பிக்கிள்ஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் தொடர்பிலும் பிரித்தானிய பாதுகாப்பு புலனாய்வுத் துறையினருக்கு என்ன தகவல்கள் தெரிந்திருந்தன என்று அந்நாட்டு நாடாளுமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரித்தானிய ஃபுசிலியர்ஸ் றோயல் றெஜிமெண்டின் இரண்டாவது படைப்பிரிவைச் சேர்ந்த லீ ரிக்பி என்பவரே வைத்து கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
குறித்த இராணுவ வீரர் 22 வயதானவர் என்பதுடன் ஆப்கானிலும் பணியாற்றியுள்ளார்.
இஸ்லாமிய கோஷங்களை எழுப்பிய இருவரால் பட்டப் பகலில் இந்த இராணுவ வீரர் இறைச்சி வெட்டும் கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய பிறகு, அந்த இருவரும் தப்பியோட முயற்சிக்கவில்லையெனவும் பொலிஸார் வந்த போது அவர்களை நோக்கி இந்த இருவரும் ஓடியுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாகிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
தற்போது அவர்கள் இருவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரது பேரும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் ஒருவர் கிழக்கு லண்டனின் ரொம்போர்டைச் சேர்ந்த 28 வயதான மைக்கல் அடிபொலாஜோ எனவும் மற்றையவர் தன் கிழக்கு லண்டனின் கிரீன் விச்சைச் சேர்ந்த மைக்கல் அடிபோவ்ல் எனவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..