siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 29 மே, 2013

இடுப்பில் கட்டியிருந்த குண்டைடு ?



அல் கொய்தா தீவிரவாத இயக்டகத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன.
இந்நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்து தான் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதையும் மறுத்துள்ள இவர், ஒசாமாவின் உடல் பாகத்தை தற்கொலைப்படை தாக்குதலில் சிதைக்கப்பட்டதைப் போல் துண்டு துண்டாக வெட்டி அமெரிக்க படையினர் அடையாளங்களை அழித்து மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

ஒசாமாவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்த போது நான் அந்த வீட்டில் இல்லை. எனினும், சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் மூலம் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்கர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 'பெல்ட்'டை எப்போதும் அணிந்திருந்தார் என்றும் நபீல் நயீம் அப்துல் பத்தா கூறினார்.


முயற்சித்தவருக்கு அதிர்ச்சி ??


பேயைக் கண்டறிவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த கமெராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கமெராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார்.

ஆனால் அந்தக் கமெராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக அவரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனால் அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அவருடைய காதலியான டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண், ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சம்பவத்தின் போது சிறுவனுக்கு வயது 16 என்று நிரூபணமானது.

எனினும் இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென அப்பெண் கூறியுள்ளார். விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவரை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குழந்தையை பிரசவித்து குப்பைத்தொட்டியில் வீசிய ?



பிறந்த தனது குழந்தையை கொன்ற குற்றத்திற்காக 25 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ஒரு தாய் குழந்தையை பிரசவித்ததாகவும் அந்த குழந்தை எங்கே என்ன ஆனது என்பது தெரியாதென வைத்தியசாலை மருத்துவர்கள்  பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கொலை துப்பறியும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை துப்பறிவாளர்களுக்கு கிடைத்த தடயங்களின்படி சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தனது கர்ப்பத்தை மறைத்தாகவும் பின்னர் வீட்டில் குழந்தையை O'connor Drive and Bermondsey Road பகுதியில் உடைகள் நன்கொடையாக போடும் பெட்டிக்குள் போட்டதாக கூறப்பட்டுள்ளது.

குழந்தையை பெட்டிக்குள் போட்ட பின்னர் அப்பெண் வயிற்றில் இரத்த தோற்றத்துடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ ஊழியர்கள் நச்சுக்கொடியை கண்டுபிடித்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிசாரின் கூற்றுப்படி தெரியவருகின்றது.

மேலும் சந்தேக நபரான அஞ்சலினா ஸ்பனிடிஸ், ரொறொன்ரோ வைத்தியசாலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.