Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 24 ஜூன், 2013

பிரித்தானியா செல்லும் ஆசிய நாட்டவர்கள் 3000 பவுண்ட்களை

 
 
பிணையாக செலுத்த புதிய திட்டம்  பொருளாதார தேக்க நிலை காரணமாக உலக நாடுகள் அந்நிய நாட்டவர்களை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றுவதும் உள்நாட்டவருக்கே வேலை என்ற திட்டத்தையும் மெல்ல ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இங்கிலாந்தும் ஏற்கனவே, இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.
தற்போது சட்டத்திற்குப் புறம்பாகத் தங்குபவர்களை ஒடுக்கும்விதமாக விசா பெறுவதன் விதிமுறைகளை மேலும் கடினமாக்குகின்றது. வரும் நவம்பர் மாதம் முதல், இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல விசா பெறுபவர்கள் காப்புத் தொகையாக அந்த நாட்டு பணத்தின்படி 3,000 பவுண்ட் (2.70லட்சம் ) செலுத்தவேண்டும்.
விசா காலம் முடிந்தபின் குறிப்பிட்ட நபர் இங்கிலாந்தை விட்டு வெளியேறாவிட்டால் காப்புத் தொகை திருப்பித் தரப்படமாட்டாது. இதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக அங்கேயே தங்கிவிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று இங்கிலாந்து கருதுகின்றது.
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய ஆறு நாடுகளுக்கு இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கேயே தங்கிவிடுவதைத் தடுக்கும் வகையிலேயே தங்களுடைய குடியேற்ற அனுமதி முறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், நாட்டிற்குத் தேவையான, திறமையானவர்களை அவர்கள் நாடு வரவேற்கவே செய்கின்றது என்றும் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் தெரசா மே கூறியுள்ளார்.
கடந்த 2011-12ஆம் ஆண்டில், இங்கிலாந்திற்கு படிப்பதற்காகவோ அல்லது வேலைக்காகவோ செல்லுபவர்கள் விசா பெறுவது 20 சதவிகிதம் குறைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக, கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் இங்கிலாந்தில் வந்து தங்கும் அயல்நாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் வெறும் 74,000 என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது

அண்டை நாட்டினரை விட மிகவும் பணம் படைத்தவர்களாக திகழும்


ஜேர்மனியின் அண்டை நாடுகிளில் வசிப்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை விட ஜேர்மனி நாட்டின் மையத்தில் வசிப்பவர்களே அதிக பணம் படைத்தவர்களாக திகழ்கின்றனர் என ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மன் பட்ஜ் வங்கி நடத்திய ஆய்வில்(German Bundesbank) ஜேர்மன் மக்களை விட அண்டை நாடுகளில் வசிப்பவர்கள் சராசரி விகிதத்தின் படி அதிக ஏழைகளாக உள்ளனர்.
வீட்டுவருமானம், வங்கியிருப்பு, வயது, வேலை மற்றும் கல்வி, ஆகிய அடிப்படையில் ஜேர்மனியர்கள் மற்றும் ஜேர்மன் அல்லாதவரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சராசரியாக அண்டைநாடுகளில் வசிப்பவர்களை விட ஜேர்மன் நாட்டினர் 10000யூரோ அதிமம் சம்பாதிக்கின்றனர். அண்டைநாட்டில் வசிப்பவர்களின் சராசரி நபரின் சம்பளம் 34000யூரோ யெனில், ஜேர்மன் நாட்டில் வசிக்கும் சராசரி கீழ்வர்க்க நபரின் சம்பளம் 44000யூரோவாக உயர்ந்து காணப்படுகின்றது.
அதிக வசதிபடைத்தவர்களுடன் ஒப்பிடுகையில் இதன் மதிப்பு இன்னும் அதிக அளவில் வேறுபட்டு காணப்படுகின்றது. அண்டைநாட்டினரின் சம்பளமானது 24000யூரோவாகவும், ஜேர்மன் நாட்டில் வசிப்பவரின் சம்பளமானது 78000யூரோவாகவும் உள்ளது.
அண்டைநாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மன் நாட்டில் வசிப்பவர்கள் 81 சதவீதம் பேர் சொந்த வீடு மற்றும் வாகனத்துடன் மிகவும் வசதியாக வாழ்வதாக புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன.