siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 28 ஜூன், 2013

விவசாயிகள் மீது தாக்குதல் 22பேர் காயம்?


  மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 22பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக தமிழர்கள் விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இப்பகுதியில் உள்ள காணிகளை பிடித்தும் பலரிடம் ஆசை வார்த்தை காட்டி காணிகளை வாங்கியுள்ள முஸ்லிம்கள் சிலர் இப்பகுதியில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகக்கு தடைகளை ஏற்படுத்திவருவதுடன் அவர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கைகளையும் தடுத்துவந்தனர்.
இது தொடர்பில் கடந்த ஆண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இது தொடர்பில் இப்பகுதியில் முறுகல் நிலையேற்பட்டு இராணுவத்தின் தலையீட்டின் காரணமாக அந்த முறுகல் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற பெருமளவான முஸ்லிம் குண்டர்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது 22 விவசாயிகள் காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்,
தமது பகுதிக்கான தண்ணீர் வரும்பகுதியை சில முஸ்லிம் விவசாயிகள் அடைத்துவைத்து தமது பகுதிக்கு அதனை திரும்பியிருந்தனர்.இதனை திறந்துவிடுமாறு பல்வேறு தடவைகள் கோரியபோதிலும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்இதண்ணீர் இல்லாத காரணத்தினால் எமது விவசாய நடவடிக்கைகள் முடங்கிப்போகின.
இதனை கருத்தில்கொண்டு இன்று அப்பகுதியில் விவசாயம் செய்யும் நாங்கள் அப்பகுதிக்கு சென்று தண்ணீர் கட்டப்பட்டுள்ள பகுதியில் திறந்துவிட முயற்சி செய்தோம்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த பெருமளவானோர் எம்மீது தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் நடத்தியவர்களில் அதிகமானோர் அப்பகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் அப்பகுதியில் ஈடுபடுவதில்லை.திட்டமிட்ட வகையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்துவதன் மூலம் இப்பகுதியில் உள்ள காணிகளை தமிழர்கள் விற்றுவிட்டுச்செல்வார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்

தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்

 
 
  ரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் வடக்கின் அதிகாரப்பகிர்வினைப் பற்றி மட்டும் பேசுகின்றனரே தவிர, வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி பேசுவதாக இல்லை. வடக்கில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பிரயோகிப்பதா இல்லையா என்பதை விட வடக்கின் தமிழர்களை (பாதுகாக்க அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
நேற்று நிப்பொன் ஹோட்டலில் சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று வடக்கு வாழ் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை கவனத்திற்கொள்ளாது வடக்கில் 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துவது தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்வாதார
பிரச்சினைகள் பற்றி கதைக்கவோ, தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கவோ எவரும் இல்லை. அரசாங்கமும் சரி தமிழ் கட்சிகளும் சரி அவரவர் நிலைப்பாடுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்.
இன்று வரையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி எவரும் கதைக்கவுமில்லை. இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பில் எந்தத் தீர்வும் எடுக்கப்படவும் இல்லை. யுத்தம் முடிவடைந்து நான்கு வருட காலமாகியும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றவில்லை. மீண்டும் இராணுவக் குவிப்பே இடம்பெறுகின்றது.
வடக்கில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாய், தந்தையரை இழந்தும் பிள்ளைகள், கணவனை இழந்தும் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். 50 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வடக்கில் உள்ள மீனவர்கள் தொடர்ந்தும் இதுவரையும் ஒரு தீர்வு காணப்படவில்லை.
மேலும், வடக்கிலுள்ள தமிழர்களுக்கு தமது மொழியிலேயே அவர்களின் கருமங்களை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இன்று வரையிலும் அப்பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அவை தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு இன்றும் வட பகுதிகளில் கட்டுப்பாடுகள், பலாத்காரம், ஆட்கடத்தல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. இவை தொடர்பில் அப் பகுதி கட்சிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறந்த கல்வி முறைமைகள் இல்லாதுள்ளது.
யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு வழங்கப்பட்ட தமிழர்கள் இன்னமும் இராணுவக்கட்டுப்பாடுடனேயே உள்ளனர். இன்னும் பலர் சிறையில் இருக்கின்றனர். யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எனவே, இவ்வாறு அப்பதவி மக்களுக்கு பல அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதா? இனியாவது அரசாங்கம் இவை தொடர்பாக பேசுமா?
சிறுபான்மை மக்களுக்கு சேவைகளை வழங்க அவர்களைப் பாதுகாக்க கிடைத்த சந்தர்ப்பத்தினை அரசு தவறவிட்டுவிட்டது. ஆகவே, இனிமேலாவது அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களை மதிக்கும் செயற்பாட்டினை அரசு செய்ய வேண்டும்.
யார் ஆட்சிக்கு வருகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் வடக்கு மக்களை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமாகும்.

13ஆவது திருத்தம் நடைமுறையில் இருப்பின் மீண்டும் புலித் தீவிரவாதம் உருவாகுமென அரசாங்கம் நினைக்கின்றது. 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இதில் எவை இருந்தும் பிரயோசனமற்றதே. முதலில் மக்களைப் பற்றி யோசிக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான ஓர் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்